Friday, October 19, 2007

மாதங்கி கவிதைகள்





பெண் குழந்தை

இரண்டாவது பிரசவத்திலும்
ஆண் குழந்தை
என்று குமுறி அழுதவளே!

காத்திரு
உன் அன்பையெல்லாம்
சேர்த்திரு.

உன்னிடம்
இரண்டு பெண்கள்
நிச்சயம் வருவார்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்
பின்பு.

சமத்துவம்

எங்கள் வீட்டில்
இருவருக்கும்
முடிவெடுக்க
உரிமை உண்டு.

வீடு, நிலம், சேமிப்பு
இதெல்லாம்
அவர் பொறுப்பு.

பள்ளிக்கூடச் செலவுகள்
படுக்கைத் தலையணை உறைகள்,
துணிமணி தேர்வுசெய்வது
நான் என்றாயே தோழி

திருமணமானவுடன்
உன் பொருளாதாரப் பட்டத்தையும்
உன் வீட்டில்
விட்டுவிட்டாயா?

1 comment:

Anonymous said...

bgt20081231