Sunday, October 23, 2011

உள்ளாட்சித் தேர்தல்

ஏதோ ஒரு சூழலில் வெளிநாடுக்கு செல்ல நேரிட்டது... இன்று அதே போன்ற ஒரு சூழலில் வெளிநாட்டை விட்டு கிளம்ப வேண்டியும் வந்து விட்டது. இந்தியா வந்து சில வாரங்கள் கழிந்த நிலையில் புதிய முயற்சிகளுக்கான உத்வேகத்துடன் முற்றிலும் புதிய பரீச்சார்த்த முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கின்றது. எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்று நினைக்கலாம்.

##########################################

தமிழகத்தில் தொடர்ச்சியாக இருப்பது எப்பவும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். வெட்டிப் பேச்சு, வெட்டி அரட்டை என்று காலத்தைக் கழிக்க முடிகின்றது. அதற்கு தோதுவாக வந்த உள்ளாட்சித் தேர்தலும் செம தீனியாகி விட்டது. அவ்வளவாக இணையத்தில் உலாவ வாய்ப்பு கிடைப்பதில்லை என்றாலும் மொபைல் கூகுள் ரீடரில் பதிவுகளைப் படிக்க முடிகின்றது. எல்லாம் பழைய பதிவர்களின் பதிவுகள். புதியதாக நன்றாக எழுதுபவர்களை (?) அடையாளம் காண முடிவதில்லை. தமிழ் மணத்தை எப்போதாவது திறந்த அடுத்து திறக்கவே கூடாது என்பது போன்ற பதிவுகள் தான் நிற்கின்றன.

############################

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருந்தன. எதிர்பார்த்தது போல... அதிமுகவின் பண பலத்திற்கு முன் திமுகவால் ஒன்றும் செய்ய முடியாது. எங்கள் வீட்டில் 6 ஓட்டுக்கு கவரில் அதிமுக சார்பில் கவரில் 1800 பட்டுவாடா செய்யப்பட்டது. வேண்டாம் என்று வம்படியாக மறுக்க வேண்டி இருந்தது. ‘மேலிடத்தில் இருந்து தரச் சொல்லி உத்தரவு. வாங்கிக் கொள்ளுங்கள். யாருக்கு வேண்டுமானால் ஓட்டுப் போட்டுக் கொள்ளுங்கள்’ என்பது போல் கூறினர். இருந்தும் வாங்க மறுத்ததால் விரோதிகள் போல் பார்த்துச் சென்று விட்டனர். ஓட்டுக்கு காசு வாங்கினால் தான் தமிழன் போல்.... திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் சொந்த காசை செலவழித்து கையை சுட்டுக் கொண்டது தெரிந்தது.

###################################

மதுரையில் அஞ்சா நெஞ்சர் , கேப்டன் எல்லாம் வாங்கிய அடி இங்கு அவர்கள் எல்லாம் டம்மி பீசுகள் என்பதை வெளிக்காட்டி இருக்கிறது. ஓட்டு என்பது காசுக்கோ,கட்சிக்கோ, தனிநபர் செல்வாக்குக் தானே தவிர, கட்டப் பஞ்சாயத்துக்கோ பயமுறுத்தலுக்கோ அல்ல என்பது தெரிகின்றது. காசு வாங்கிக் கொண்டு அந்த கட்சிக்கு ஓட்டுப் போட வில்லை எல்லாம் தெய்வக் குத்தம் என்பது போல் கூட கேட்க முடிகின்றது... இரண்டு மூன்று பேர் காசு கொடுத்து இருந்தால் அதிகம் காசு கொடுத்தவருக்கு ஓட்டு .. .. என்ன கொடுமையோ... :(

#################################

பல வார்டு கவுன்சிலர் இடங்களில் சுயேட்சைக்கு இரண்டாம் இடத்தை வழங்கி விட்டு மூன்றாம், நான்காம் இடங்களுக்கு திமுக தள்ளப்பட்டு இருப்பதைக் காண முடிகின்றது. உள்கட்சி அரசியல் காரணகா தெளிவில்லாத, மக்கள் செல்வாக்கில்லாத தலைவர்கள் இருக்கும் வரை திமுக இப்படித் தான் இருக்கும். இனி அம்மா ஒரு அகோர ஆட்சி நடத்தினால் மட்டுமே திமுக ஜெயிக்க இயலும். திமுக தலைவர்களின் திறமையினால் அல்ல...

###########################################


உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு தினமும் 4 லிருந்து 5 மணி நேரம் வரை பவர் கட் இருக்கின்றது. இது எப்போது முடியும் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் வெயில் குறைந்து பல பகுதிகளில் மழை ஆரம்பித்து இருக்கின்றது. பல காரணங்கள் கூறப்பட்டாலும் , வருங்காலங்களில் மின்சாரத் தேவையை சரி செய்ய ஏதாவது செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா முழுதும் இருக்கும் மாநில அரசுகளும், மத்திய அரசும் இருக்கின்றது. அணு உலை தான் சரியான் முடிவு என்பதில் இருந்து அரசாங்கள் வெளியே வர வேண்டும். அணு மின்சாரம் இந்தியாவிற்கு தேவை இல்லை. மரபு வழியிலான மாற்று ஏற்பாடுகளுக்கு அரசாங்கம் இறங்க வேண்டும்.

இனி அடிக்கடி சந்திக்கலாம்.