Saturday, February 28, 2009

அஹம் பிரம்மாஸ்மி - ஆர்யா போல் தலைகீழ் பயிற்சி செய்வது எப்படி?


சமீபத்தில் வந்த படம் நான் கடவுள். பாலாவின் இயக்கத்தில் ஆர்யா நடித்திருக்கின்றார். இந்த படத்தில் பல காட்சிகளில் ஆர்யா ருத்ரனாக, அகோரியாக தலைகீழாக நிற்பார். இதன் மூலம் இதயத்தில் இருந்து இரத்தம் நேரடியாக மூளைக்கு பாயுமாம். சரி அதெல்லாம் இருக்கட்டும்... இதை எப்படி சாத்தியப்படுத்துவது என்பது தான்... இந்த பதிவு. வாங்க மேற்கொண்டு பார்க்கலாம்.

இதுக்கு தேவையான முக்கிய பொருட்கள் ஒரு கேமரா மட்டுமே.... முதலில் எங்காவது அமர்ந்து கொண்டு சம்மணமிட்டு ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் போட்டோ ஷாப்பில் வைத்து உங்கள் படத்தை மட்டும் தனியாக கட் செய்து வெளியே எடுத்துக் கொண்டு அதை ஏதாவது பாறை, புல் தரையுடன் தலைகீழாக இணைத்து விடுங்கள். இதற்குப் பெயர் தான் சிரசாசனம்.






போஸ் கொடுத்த அம்மணிக்கு நன்றிகள்.

டிஸ்கி 1 : ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...... மொக்கை போடுவது கூட நமக்கு ரொம்ப கஷ்டமா போச்சுங்க
டிஸ்கி 2: உண்மையில் யாருக்காவது சிரசாசனம் கத்துக்கனும்னா இங்க போய் பார்க்கலாம்.

Thursday, February 26, 2009

ஜெமோவின் ”நான் கடவுள்” - விமர்சனமல்ல - ஸ்தல புராணம்


தமிழ் பதிவுலகில் நான் கடவுள் படத்தை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விமர்சனங்கள் வந்து விட்டன. எனவே இது விமர்சனப் பதிவு அல்ல.. ஆனாலும் ஒரு விடயத்தை மட்டும் தொட்டு விட்டு விட்டு சொல்கின்றேன். பொதுவாகவே தமிழ் எழுத்தாளர்கள் மீது ஏதாவது ஒரு முத்திரை குத்தப்பட்டுவது வழக்கம். எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் இதற்கு விதிவிலக்கல்ல..

நான் கடவுள் படத்தில் நாயகியைக் கொண்டு செல்ல நாயர் வரும் போது காப்பாற்றப் படுகின்றாள். அப்போது சாமி காப்பாத்துங்க என்று ஓடுகின்றாள். இரண்டாவதாக ஒரு அலங்கோலமானவன் வரும் போது வேறு மத (கிறித்தவ) தெய்வத்தை வேண்டுகின்றாள். அப்போது அவளுக்கு பாதுகாப்பு கிடைக்காமல் சிதைக்கப்படுகின்றாள். இதன் நுண்ணரசியல் பற்றி ஒரு பதிவர் எழுதி இருந்தார்.

இந்த காட்சியைப் பற்றி எழுதும் போது ஜெயமோகன் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

இன்னொன்று சிலகாட்சிகள் வெட்டுபட்டுள்ளன. அம்சவல்லி மதமாற்றம் செய்யப்படுகிறாள். அடுத்த காட்சி வலுவானது. தாண்டவன் அவளை கொடுக்கும்படிக் கோர முப்பது வெள்ளிக்காசுக்கு காட்டிக்கொடுக்க நாங்கள் ஒன்றும் யூதாஸ்கூட்டம் இல்லைஎன்று கன்யாஸ்திரீ சொல்ல அப்படியானால் முப்பதாயிரம் வெள்ளிக்காசு?’ என்பான் தாண்டவன். அடுத்தகாட்சி அவன் இடத்தில் இருக்கும் அம்சவல்லி. அது படத்தில் இல்லை.”


இந்த காட்சி மட்டும் வைக்கப்பட்டிருந்தால் “ஜெயமோகனின் குடுமி அவிழ்ந்து விட்டது.. நன்றாக இழுத்து கட்டிக் கொள்ளுங்கள்” என நாறடித்து இருப்பார்கள் தானே.. சரி.. சரி... நமக்கு இந்த அரசியல் எல்லாம் வேண்டாம். நாம வேற பார்க்கலாம்.

படத்திற்கு நிறைய செலவானதாக படிக்க முடிந்தது. காசி, அந்த கரடு, மற்றும் பள்ளத்தில் இருக்கும் கோவில், குளிக்கும் மற்றும் சண்டை நடக்கும் கும்பக்கரை அருவி என்று நான்கு இடங்களே அதிகமான இடங்களை ஆக்கிரமித்து இருந்தன. இதில் படமாக்குவதற்கா இவ்வளவு செலவானது என்று ஆச்சரியமா இருக்கின்றது... என்னவோ .. இருக்கட்டும் பாலாவுக்கே வெளிச்சம்.

இந்த படத்தை விடுமுறை முடிந்து வந்ததும் வேகமாக பார்த்ததற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு... ஒரு காட்சி எங்கள் கடைக்கு முன் படமாக்கப்பட்டு இருந்தது தான். குருட்டுப் பெண்ணை( நாயகி பூஜா) ஒரு கிழவன் கை பிடித்து பிச்சை எடுக்க அழைத்துச் செல்வது போன்ற காட்சி தான் அது. யாருமே உணராத வண்ணம் அந்த காட்சி தத்ருபமாக எடுக்கப்பட்டது. எடுத்து முடித்ததும் படப்படிப்பு நடந்தது தெரிந்தது. ஆனால் அந்த காட்சி படத்தில் வரவே இல்லை.. ஏமாற்றம்.

காசிக்கு நாம போனதில்லை. அதனால் அது தெரியாது. அந்த பள்ளத்தில் உள்ள கோவில் காஞ்சிபுரம் அருகில் இருக்கும் ஒரு இடத்தில் எடுக்கப்பட்டதாம். நன்றாக எடுத்துள்ளார்கள்.

மலையில் உள்ள கோவில் எடுக்கப்பட்ட இடம் நமக்கு ரொம்ப பரிட்சயமான இடம். அதன் அடிவாரத்தில் தான் எங்க தீப்பெட்டி ஆபிஸ் இருந்தது. (சிறு தொழில் வளர்ச்சி வாரியம் அதிகாரிகளின் திருட்டுத் தனத்தால் நஷ்டமடைந்ததெல்லாம் எங்கள் கண்ணீர்க் கதை. இன்றும் குட்டிச்சுவர்களாக கட்டிட எச்சங்கள் இருக்கின்றன.) சின்ன வயசில் அந்த பகுதிகளில் எல்லாம் சுற்றித் திரிந்தோம். எனவே அந்த கோவில் ஒரு புதிய அனுபவத்தைத் தரவில்லை. அந்த கரட்டுக்கு மக்கள் போக்குவரத்து கூட இருக்காது... இப்போது வேண்டுமானால் இருக்கலாம்... ஏனெனில் சினிமா எடுக்கப்பட்ட இடமாக இருப்பதால்..:) அந்த அருவி மற்றும் தண்ணீர்ப் பாறைகளும் அடிக்கடி வழுக்கி விளையாடி இடம் தான்.

டிஸ்கி : இப்போது தான் ஜெயமோகனின் ஏழாம் உலகம் படித்துக் கொண்டு இருக்கின்றேன். இதை மூலமாக வைத்து தான் நான் கடவுள் படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.. படித்து விட்டு மீண்டும் பேசலாம்.

(அடிக்கடி ஏதாவது பதிவு போடனுமாமே.. அதான்.. ;) )

Wednesday, February 18, 2009

விடுமுறை முடிந்தது... இது மைக் டெஸ்ட் பண்ற நேரம்... ;)

ஆம்ப்ளிபயர் டெஸ்டிங்...!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!

ஓகே! சக்ஸஸ்!

ஸ்பீக்கர் டெஸ்டிங்..!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!
ஓகே! சக்ஸஸ்!

மைக் டெஸ்டிங்...!!!
ஹலோ!
ஹலோ!
ஹலோ!

டபுள் ஓகே! சக்ஸஸ்! சக்ஸஸ்!

விடுமுறை எல்லாம் காற்று வேகத்தில் கரைந்து விட மீண்டும் பழையபடி விட்ட இடத்துக்கு திரும்பியாச்சுங்க...
மகிழ்வுடன் கழிந்தன நாட்கள்! வீடு கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பித்தாகி விட்டது! இறைவன் நாடினால் விரைவில் கனவு நிறைவேறலாம்!
நல்ல நண்பர்களின் சந்திப்புகள்! கொஞ்சமா ஊர் சுற்றலுடன் விடுமுறை இறுதிக்கு வந்தது.

கடைசி கட்ட பரபரப்புகளால் நண்பர்களுக்கு தொலை பேச முடியவில்லை. சென்னையில் சிலரை சந்திக்க வேண்டும் என்று நினைத்து இருந்ததும் இயலாமல் போய் விட்டது. மன்னிப்பு வேண்டிக் கொள்கின்றேன். முன்பை விட இப்போது இணையத்தில் இருப்பதால் நெருக்கமாக இருப்போம் என்பதால் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றேன்.

கடைசி நேர சிக்கலால் சென்னையில் வாங்க வேண்டி இருந்த சில புத்தகங்கள் வாங்க இயலாமல் போய் விட்டது என்று வருத்தமும் கூட
சுந்தர ராமசாமி, மனுஷ்யபுத்திரன் மற்றும் சில மலையாளத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டவைகளும் வாங்க இயலாமல் போனவையில்
அடங்கும்...
ஆனாலும் சில புத்தகங்களை வாங்கி வந்துள்ளேன். எழுதுவதை விட வாசிப்பது கஷ்டமாகி விட்டது போல் ஒரு உணர்வு... ராஜேஷ் குமாரையும், கல்கி, சுஜாதாவையும் மட்டும் படித்து பழகியவனுக்கு இது எப்படி அமையும் என தெரியவில்லை.
வாங்கிய புத்தகங்கள்
சாரு நிவேதிதா - ராஸ லீலா, ஸீரோ டிகிரி
ஜெயமோகன் - காடு, ஏழாம் உலகம்

ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள்

கலீல் ஜிப்ரான் - முறிந்த சிறகுகள்

ஷோபா சக்தி - ம்

ரமேஷ் பிரேம் - கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக் குறிப்புகள், சொல் என்றொரு சொல்

விகடன் பிரசுரம் - காதல் படிக்கட்டுக்கள், ரொமான்ஸ் ரகசியங்கள்

கோபி கிருஷ்ணன் - டேபிள் டென்னிஸ்

நகுலன் - நவீனன் டைரி

கி.ராஜ நாராயணன் - கோபல்ல கிராம மக்கள்.


இவைகளை ஒரு நண்பருக்காக வாங்கி வந்து இருந்தாலும் முதலில் பொறுமையாக படித்து விட்டே அவருக்கு தர வேண்டும்.. ;))

ஜெயமோகனின் ஏழாம் உலகம் முதலில் படிக்க வேண்டுமா? அல்லது நான் கடவுள் படத்தைப் பார்த்து விட்டு ஏழாம் உலகம் படிக்க வேண்டுமா?
யாராவது உதவுங்கள் நண்பர்களே!

இரண்டு மாதம் பதிவுகளின் வாசிப்பு விடுப்பு விட்டதால் இன்னும் கூகுள் ரீடரைத் திறக்கவில்லை.. பொறுமையாக அனைத்தையும் படிக்க வேண்டும். இன்னும் பதிவர்களின் பதிவுகளைப் படிக்க ஆரம்பிக்கவில்லை.

வீட்டில் அனைவரும் நலம்..... மகன் சீராக வளர்ந்து வருகின்றான்...... ரொம்ப மிஸ் பண்றேன்...