Tuesday, September 30, 2008

வெடி தேங்காய்! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆஹா என்ன ருசி!

.



இன்று மை பிரண்ட் அக்கா ஒரு பதிவு போட்டாங்க... லெமாங் என்ற உணவுப் பொருளைப் பற்றி... அதைப் படித்ததும் அது மாதிரி நாமலும் ஏதோ சாப்பிட்டு பழக்கம் இருக்கேன்னு யோசிச்சேன்.. கொஞ்சம் மண்டையைக் குடைந்ததும் தான் நினைவுக்கு வந்தது... அது தான்... வெடி தேங்காய். டுமில் குப்பம் சுண்டக் கஞ்சி ரேஞ்சுக்கு இது எங்கள் பகுதியில் சிறப்பு வாய்ந்தது

அதென்ன வெடி தேங்காய்? தேங்காய்க்குள் வெடி வைக்கும் ஏதாவது பயங்கரவாதமா என்று கேட்டுடாதீங்க... நாங்க எல்லாம் நல்ல பசங்களாக்கும். வெடி தேங்காய் என்பது ஒரு வகையான வித்தியாசமான உணவு... இதை செய்ய உங்களுடன் தம்மடிக்கும் நண்பனும் இருக்க வேண்டும். இன்னைக்கு இதை எப்படி செய்வது என்று பார்ப்பதற்கு முன்னால் உங்களை எல்லாம் 15 வருடங்களுக்கு முன்னால் கூட்டிச் செல்கிறேன்... காலச்சக்கரத்தில் பிரயாணித்து எல்லோரும் என்னோடு வாங்க....



சக்கரத்தில் சுழன்றாச்சா?... ஓகே... அப்ப எனக்கு 14, 15 வயசு இருக்கும் (இப்பவும் அவ்வளவு தான் ஆகுது). எங்க ஸ்கூலைச் சுற்றி நிறைய தென்னை மரம் இருக்கும்... ஸ்கூலுக்கு வெளியேவும் நிறைய இருக்கும்.. எங்களோட முழு நேர பொழுது போக்கே அந்த தேங்காய்களை திருடித் தின்பது தான்.

வெறும் தேங்காய்களை மட்டும் திருடி தின்னு ஒரு கட்டத்தில் அழுத்துப் போச்சு.. அப்ப தான் நம்ம முன்னோர்களில் ஒரு ஐடியா நினைவுக்கு வந்தது. அதுதான் வெடி தேங்காய். வெடி தேங்காய் செய்ய தேவையானவை

நன்றாக சிவப்பு கலரில் இருக்கும் நெத்து தேங்காய் - 1

மளிகைக் கடையில் திருடிய அரிசி - ஒரு கோப்பை

கரட்டுக் கரும்பில் செய்த வெல்லம் - ஒரு கோப்பை

வீட்டில் திருடிய பொரிகடலை - ஒரு கோப்பை

செட்டியாரிடம் ஓசி வாங்கிய புளி - சிறிதளது

குரூப்பில் தம்மடிப்பவனின் தீப்பெட்டி

கோனூசி மற்றும் விறகு, செத்தை, சருகு



நல்லா நெத்து தேங்காயாய் பார்த்து திருடி இருக்க வேண்டும்... சிவப்பாய் இருப்பதெல்லாம் நெத்து அல்ல.. (அதைக் கண்டுபிடிக்கும் முறை குறித்து வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்). தேங்காயின் மட்டையை உரித்து, அதன் குடுமி(?)யையும் நீக்கி விட வேண்டும்.

குடுமியை நீக்கிப் பார்த்தால் அதில் மூன்று கண்(?) இருக்கும். அந்த மூன்று கண்ணையும் முதலில் கோனூசி கொண்டு தோண்டி விட வேண்டும். அதில் இருக்கும் தண்ணீர் முழுவதையும் குடித்து விட வேண்டும். இப்போது கண்ணை இன்னும் நன்றாக தோண்டி சிறு வழி ஏற்படுத்த வேண்டும்.



இதை ஒருவன் செய்து கொண்டு இருக்கும் நேரத்தில் இன்னொருவன் அரிசி, வெல்லம், பொரிகடலை இவைகளை ஒன்றாக போட்டு கலக்க வேண்டும். இந்த கலவையை அந்த கண்களின் வழியே உள்ளே போட வேண்டும். இந்த வேலைக்கு மிகவும் பொறுமையான ஒரு ஆள் தேவை.. ஏனெனில் மிகவும் பொறுமையும், கவனமும் தேவைப்படும்.

முழுவதும் நிறைந்த பிறகு அந்த கண்களின் ஓட்டையை ஓசி வாங்கி வந்திருக்கும் புளியை வைத்து அடைக்க வேண்டும். இப்போது தேங்காயைக் குலுக்கினால் எந்த சத்தமும் வரக் கூடாது. வந்தால் அதில் இன்னும் இடம் இருக்கிறது என்று அர்ததம். புளியை எடுத்து விட்டு மீண்டும் அதில் கலவையை திணிக்க வேண்டும்.. (இந்த கேப்பில் கலவையை மற்றவர்கள் காலி செய்து விடக் கூடும். எனவே கவனம் தேவை)

புளியால் கண் அடைக்கப்பட்ட தேங்காயை தீ பற்ற வைத்து நெருப்பில் இட வேண்டும். ஒன்லி விறகு, செத்தை, சருகுகளைக் கொண்டு மட்டுமே நெருப்பு மூட்ட வேண்டும். நெருப்பை வேகமாக எரிக்கக் கூடாது. இல்லையெனில் ஓடு மட்டும் வெந்து வெடித்து விடும். மிதமாக கங்குகளில் அதை எரிக்க வேண்டும். ஒரு கட்டத்தில் உள்ளிருக்கும் தேங்காய் முழுவதும் வெந்து விடும். அதைக் கண்டுபிடிக்க நல்ல திறமையும் வேண்டும். ஒரு விதமாக “க்ராக்” என்ற ஒலி வரும் அதுதான் அடையாளம். உடனே வெளியே எடுத்து விட வேண்டும்.

வெளியே வைத்து தேங்காய் மேல் ஓட்டைப் பிரித்து உள்ளிருக்கும் கலவையுடன் தேங்காயை தின்றால்......வாவ்! ஓ..இது தான் தேவர்களும் ,அசுரர்களும் சேர்ந்து கடைந்து எடுத்து தேவர்கள் மட்டுமே உண்ட அமிர்தமோ என எண்ணத் தோன்றும் “வெடி தேங்காய்”

டிஸ்கி 1 : இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் திருடப்பட்டதாக இருக்க வேண்டியது மிக முக்கியம். இல்லையெனில் உண்மையான சுவை வராது.

டிஸ்கி 2 : நெருப்பில் சுட்டு முடிக்கும் போது அருகில் இருக்கும் நண்பர்களின் கைகளை இறுகப் பற்றிக் கொள்ளுங்கள். ஏனெனில் உடன் இருக்கும் புல்லுறுவி நண்பர்களில் எவனாவது தேங்காயை எடுத்துக் கொண்டு ஓடி விட வாய்ப்பு உண்டு.

டிஸ்கி 3 : கீழே Vote என்று இருப்பதை அழுத்தி விட்டுச் செல்லவும்

Monday, September 29, 2008

ஈத் - அடுத்த வீட்டுக்காரர் சாப்பிட்டாரா என்று முதலில் கவனியுங்கள்!


சிறப்புமிக்க ரமழான் மாதம் நிறைவடையப் போகின்றது. பகல் முழுவதும் உணவு, நீர் என எந்த உணவும் இல்லாமல் பசித்து நோன்பு இருந்து, இரவு நேரங்களில் இறைவனைத் தொழுது இறைஞ்சும் மகத்துவமிக்க மாதம் முடிந்த மறுநாள் தான் ஈத் பெருநாள்.

ரம்ஜான் பண்டிகை என்றும், ஈகைத் திருநாள் என்றும், மக்களால் அழைக்கப்படும் இந்த நாள் தான் முஸ்லிம்களின் முக்கியத் திருநாட்களில் ஒன்று. (மொத்தமே வருடத்திற்கு இரண்டு பெருநாள் தான்.. ஒன்று ஈகைத்திருநாள், மற்றொன்று தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை)

அதென்ன ஈகைத் திருநாள்? ரமழான் மாதம் முழுவதும் அதிகமான தான தர்மங்களை செய்ய இஸ்லாம் அறிவுறுத்துகின்றது. ஏனெனில் ரமழானில் செய்யப்படும் நன்மைகளுக்கு அதிகமாக கூலி கிடைக்கும். இந்த மாதத்தில் தான் திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது. ரமழான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் தான் ஈகைத் திருநாள். இந்த நாளில் தரக்கூடிய தர்மம் தான் பெருநாள் தர்மம் எனப்படும் ஃபித்ரா.

ஃபித்ரா என்பது நாம் பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் அதே வேளையில் நம்மை சுற்றியுள்ளவர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டது. பெருநாள் அன்று யாரும் உணவுக்கு கஷ்டப்படக் கூடாது என்ற நோக்கில், ஒவ்வொரு முஸ்லிமும் (பிறந்த குழந்தை உள்பட) சுமார் 21/2 கிலோ தானியம் ஏழைகளுக்கு தர்மம செய்வது கட்டாயமான ஒன்று.

ஆனால் வீட்டிற்கு வரும் பிச்சைக்காரர்களுக்கு 50 பைசா, ஒரு ரூபாய் போடுவது தான் தர்மம் என தவறாக நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதே போல் மசூதிகளில் இமாம்களுக்கு ஃபித்ரா பணத்தை சென்று தருகின்றனர். ஃபித்ரா ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் இதுவல்ல.

உங்கள் வீட்டிற்கு அருகில், தெருவில், பக்கத்து தெருவில் அல்லது ஊரில் உள்ள நோன்பை கொண்டாட இயல வசதி இல்லாதவர்களுக்கு தருவதுதான் ஃபித்ரா. உண்மையான ஏழைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு ஃபித்ரா கொடுத்து இனிமையாக ரமழானைக் கொண்டாடுவோமாக! இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டுமாக!

உதிரித் தகவல்:
இஸ்லாமிய சட்டங்களின் படி ஐந்து முக்கிய கடமைகளில் முக்கியமானது ஜகாத் எனப்படும் கட்டாய தர்மம். ஒவ்வொரு வருடமும் தம்மிடம் உள்ள பணம், நகை, சொத்துக்களைக் கணக்கிட்டு (குடி இருக்கும் வீட்டைத் தவிர்த்து) அதன் மொத்த மதிப்பு 89 கிராம் தங்கத்துக்கான மதிப்பை விட அதிகமாக இருந்தால் அதில் 2 1/2 சதவீதம் ஜகாத்தாக தர வேண்டும்.

எடுத்துக்காட்டாக ஒருவரிடம் இரண்டு லட்சம் ரூபாய் இருந்தால் அவர் அதற்கு ஒரு வருடம் முடியும் போது 5000 ரூபாய் கட்டாயமாக தர்மம் செய்ய வேண்டும். இல்லையெனில் கடுமையான தண்டனைகளை பெற வேண்டி வரும்.

ஒவ்வொருவரும் இது போல் கணக்கிட்டு கொடுத்து வந்தால் சமூகத்தில் இருக்கும் ஏழ்மை மிக விரைவில் விலகி விடும். இறைவன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக!
நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

Tuesday, September 23, 2008

க,ஹ, क, ख, ग्, घ, ك،ح،خ،ق،ه மற்றும் ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதா தா..

.
பாக்யராஜின் ஒரு படத்தில் கதாநாயகர்களில் ஒருவர் இந்தி மொழி கற்றுக் கொள்வார். இந்தி கற்றுத்தரும் ஆசிரியரின் பெண்ணாகிய இராதிகாவை காதலிக்கும் முயற்சியிலேயே அதற்கு வருவார். பின்னர் ராதிகா தன்னைப் பற்றி ஏதோ சொல்ல வாத்தியாரை, அடித்து பெண்டை நிமிர்த்து விடுவார்.

நல்ல காமெடியாக இருக்கும்... அந்த இந்தி ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் ஒரு வசனம் நம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம். “ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதா தா”... இந்த வசனத்தைக் கேட்டதுமே நாம் அனைவரும் சிரித்து விடுவோம்.

மொழிகள் பலவிதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம். அதைக் கற்றுக் கொள்பவர்களின் ஆர்வத்தைப் பொறுத்து விரைவாகக் கற்றுக் கொள்ள முடியும். கற்றுக் கொடுப்பவரும் சரியானவராக இருக்க வேண்டும். மொழியைக் கற்றுக் கொள்வதில் இருக்கும் பெரிய பிரச்சினை அதன் உச்சரிப்பு. அந்த குறிப்பிட்ட மொழி பேசக் கூடியவர்களின் பேசும் உச்சரிப்பு அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்கு அது போல் உச்சரித்தால் தான் புரிந்து கொள்ள முடியும்... எனக்கு எழுத, படிக்க தெரிந்த மூன்று மொழிகளை இதற்காக எடுத்துக் கொள்கிறேன்... தமிழ், இந்தி, அரபி.



இந்தி பேசக் கூடியவர்கள் தமிழ் கற்றுக் கொள்வது மிகவும் குறைவு. தமிழகத்தில் வேலை நிமித்தம் வரும் போது மட்டுமே அது அவர்களுக்கு பயன்படும். அந்த வீதத்தோடு தமிழ் பேசக் கூடியவர்களில் இந்தி கற்றுக் கொள்பவர்களைக் கணக்கிட்டால் மிக அதிகம். தமிழ் நாட்டில் இருந்து அதிக அளவில் வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டி வருகின்றது. இது தவிர்த்து நாங்கள் இருக்கும் வளைகுடா நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஆப்கன் ஆகிய நாட்டினருக்கு இடையேயான பொது மொழியாக இந்தி இருக்கிறது. எனவே இங்கு செல்லக் கூடியவர்கள் இந்தி மொழி கற்றுக் கொள்ளும் கட்டாயத்திற்கு ஆளாகின்றனர்.

உச்சரிப்பு பிரச்சினை என்பது எல்லா மொழிகளுக்கும் இருக்கிறது. அதில் தமிழும் விதிவிலக்கல்ல.... எடுத்துக்காட்டாக ஒரு எழுத்தை மட்டும் வைக்கிறேன்.. அது ‘க’ என்பது. தமிழில் க என்ற உச்சரிப்பில் உள்ள ஒரே எழுத்து. சில நேரங்களில் ‘ஹ’ என்பதையும் பயன்படுத்துகிறோம்.

ஆனால் இந்தி மொழியில் ‘க’ உச்சரிப்பில் 5 எழுத்துக்கள் உள்ளன. क (ka), ख (kha), ग(ga), घ(gha), மற்றும் ह(ha) ஆகியவை... நாம் இதில் இரண்டை மட்டும் பயன்படுத்துகிறோம். இதனால் ख (kha), ग(ga), घ(gha) ஆகிய எழுத்துக்களின் உச்சரிப்புக்கு நமது நாக்குகள் பழகுவதில்லை. அந்த திரைப்பட வசனத்தில் காவ் (கிராமம்) என்ற வார்த்தையை ghaav (गाव्) என்று வாசிக்க வேண்டும். அதே போல் ரகுதா தா (வசித்து வந்தான்) என்ற வார்த்தையில் ‘த’ இரண்டு விதமாக வரும். (இந்தியில் ‘த’விலும் நான்கு த உள்ளது)

இன்னும் சொல்வதானால் சாதம் என்பதற்கு இந்தியில் खाना (khaanaa) என்று சொல்ல வேண்டும். பாடல் என்பதற்கு गाना (gaanaa) என்று சொல்ல வேண்டும். இந்த உச்சரிப்பில் க மட்டுமே இருப்பதால் பல நேரங்களில் குழம்ப நேரிடுகின்றது. விதிவிலக்காக அனைத்து உச்சரிப்பையும் சரியாகச் சொல்லக் கூடிய தேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.

அதே நேரத்தில் தமிழில் ல, ள, ழ என்று மூன்று எழுத்துக்கள் உள்ளன. ஆனால் இந்தி ல (ल) என்று ஒரு எழுத்து தான்.... அவர்கள் இந்த லகரத்தை உச்சரிக்கும் போது வேதனையாக இருக்கும்... ஒரு படத்தில் விவேக் காமெடியில் ஒரு தமிழ் பெண் சொல்வார்... “வாலைப்பளத் தோள் வலுக்கு வாளிபன் கீலே விலுந்தான்”.. அதே கதை தான்... இதைப் போலவே இந்தியில் ஓ என்ற எழுத்தும் கிடையாது... ஒ, என்பதற்கும் ஓ என்பதற்கும் ஒரே ஒ (ओ) தான்.. விதிவிலக்காக அனைத்து உச்சரிப்பையும் சரியாகச் சொல்லக் கூடிய தேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.



அடுத்து அரபியில் எடுத்துக் கொண்டால் அதில் தட்டையான எழுத்துக்கள் கிடையாது. எடுத்துக்காட்டாக ‘ட’ என்ற எழுத்தே அரபி பேசக் கூடியவர்களுக்கு வராது. ஏனெனில் அவர்கள் மொழியில் ட என்ற எழுத்தே கிடையாது. டாக்டர் என்ற சொல்லச் சொன்னால் தோக்தர் என்று தான் சொல்வார்கள். வளைகுடாப் பகுதியில் இருப்பவர்களுக்கு இது விளங்கும். பில்டிங் என்பதை பில்திங் என்றே சொல்வார்கள். விதிவிலக்காக அனைத்து உச்சரிப்பையும் சரியாகச் சொல்லக் கூடிய தேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.

அதே போல் நாம் எடுத்துக்கொண்ட ‘க; உச்சரிப்புக்கு வந்தால் அரபியிலும் 5 எழுத்துக்கள் உள்ளன. ك،ح،خ،ق،ه இவைகளை இந்தி போலும் வாசிக்க இயலாது.

இந்தியில்

क (ka), என்பதை சாதாரணமாக நாம் உச்சரிக்கும் க போல் சொல்லலாம். நாக்கின் நடுப்பகுதியை மேல் நோக்கி உயர்த்தி, குரல் வாயின் நடுப்பகுதியில் இருந்து வர வேண்டும்.

ख (kha), நாக்கின் நடுப்பகுதியை மேல் நோக்கி உயர்த்தி, குரல் வாயின் உள் பகுதியில் இருந்து அழுத்தமாக வர வேண்டும்.

ग(ga), நாக்கின் உள்பகுதியை மேல் நோக்கி உயர்த்தி, குரல் சிறு நாக்குப் பகுதியில் இருந்து லேசாக வர வேண்டும்.

घ(gha), நாக்கின் உள்பகுதியை மேல் நோக்கி உயர்த்தி, குரல் சிறு நாக்குப் பகுதியில் இருந்து அழுத்தமாக வர வேண்டும்.

ह (ha) தொண்டைப் பகுதியில் இருந்து வெறும் காற்றாகவே வந்தால் போதுமானது.

அரபியில்

ه இந்த ஹ எழுத்தை உச்சரிக்கும் போது, இரு உதடுகளையும் சேர்க்கக் கூடாது. பற்களையும் சேர்க்கக் கூடாது.நாவை மேலே உயர்த்தவும் கூடாது. குரல் அடித்தொண்டையிலிருந்து மெல்லியதாக ஒலிக்க வேண்டும், அழுத்தமாக ஒலிக்கக்கூடாது. கிட்டத்தட்ட ஹ போல.. வயிற்றில் இருந்து காற்று மட்டும் வர வேண்டும். அழுத்தினால் எழுத்து மாறி விடும்.

ك இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் பிற்பகுதி மேல்வாயைத் தொட்டிருக்க வேண்டும். குரல் மிக மெல்லியதாக இருக்க வேண்டும்.

ق இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, பற்களையும் சேர்க்கக்கூடாது. நாவின் கடைசிப் பகுதியைக் கொண்டு உள்வாயின் மேற்பகுதியைச் சற்று அழுத்த வேண்டும். குரல் வாய் நிரம்ப ஒலிக்க வேண்டும்.


ح இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, இரு பற்களையும் சேர்க்கக்கூடாது.நாவின் கடைசிப்பகுதி மட்டும் சற்று மேலே உயர்ந்திருக்க வேண்டும். குரல் நடுத்தொண்டையிலிருந்து அழுத்தமாக ஒலிக்க வேண்டும்.

خ இரு உதடுகளையும் சேர்க்கக்கூடாது, இரு பற்களையும் சேர்க்கக்கூடாது.நாக்கின் இறுதிப் பகுதியை மட்டும் சற்று உயர்த்த வேண்டும். குரலை இலேசான காறலின் போதுள்ள கரகரப்புடன் வெளிப்படுத்த வேண்டும்.

இப்ப கடைசியா எல்லோருக்கும் தேர்வு... எங்கே எல்லோரும் சத்தமா சொல்லுங்க





क (ka),

ख (kha),

ग(ga),

घ(gha),


ह(ha)


ك

ح

خ

ق

ه

Friday, September 19, 2008

அமெரிக்க அதிபர் தேர்தலும், கலவையான சிந்தனைகளும்... 19-09-2008

. .
கலவை 1

அமெரிக்க அதிபர் தேர்தல் கடைசி கட்டத்தில் இருக்கின்றது. ஜனநாயக கட்சியின் சார்பில் ஒபாமாவும், குடியரசு கட்சியின் சார்பில் மெக்கெய்னும் களத்தில் உள்ளனர். உலகில் அடுத்து நான்கு ஆண்டுகள் நிகழப் போவதை நிர்ணயிக்கும் தேர்தலாகவே இதைக் கருதுகிறேன். பொருளாதார சிக்கலில் இருக்கும் அமெரிக்காவை அவ்வளவு சுலபமாக மீட்க முடியுமா எனத் தெரியவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் வரிகளைக் கூட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய பொது புத்திகள் ஒபாமாவையே ஆதரிக்கின்றன. ஆனால் எனக்கு மெக்கெய்ன் தான் (புஷ் கட்சி என்றால் புரியும்) ஆட்சிக்கு வர வேண்டும்.. ஏன்?.. பதிவை எழுதி டிராப்ட்டில் போட்டு வச்சாச்சு.. தேர்தலுக்கு முன் அதை வெளியிடுவோம்ல.. ;)

ஆனால் நான் மிகவும் பயத்துடன் எதிர்நோக்கி இருக்கும் விடயம்... இத் தேர்தலில் உச்ச கட்டமாக நிகழ விருக்கும் ஏதோ ஒரு சம்பவம்... சாராப் பெலினின் திடீர் பிரமோசன், மனச்சிதைவுள்ள குழந்தை, 17 வயது கர்ப்பிணிப் பெண், அவளது வருங்கால கணவன்(?) போன்றவை எல்லாம் பரபரப்பை ஏற்படுத்தாது என்பது என் கருத்து.

ஒபாமாவை அனைவரும் ஆதரித்தாலும். இஸ்ரேல் போன்ற அடிமட்ட வேலைகளில் உலகில் முண்ணனியில் இருக்கும் நாட்டின் அமைப்புகள் மெக்கெய்னையே விரும்பும். ஏனெனில் ஒபாமா அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதாக வாக்களித்துள்ளார்.... அதை இஸ்ரேல் விரும்பாது

எனவே தேர்தலில் கடைசி கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்த, மக்களின் கவனத்தை திசை திருப்ப, எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டாலும் கவலைப்படாமல், ஏதாவது அதிக பட்சமான உள்ளடி வேலையில் ஈடுபடும்... பின்லேடனின் விடியோவாக மட்டும் இந்த தடவை இருக்காது.. அதற்கும் மேல் ஏதோ.. பயப்படுகிறேன்..அதற்கு அமெரிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.... கவனச்சிதைவு இல்லாமல் இருந்தால் அமெரிக்கா தப்பி விடும்.

இங்குள்ள அரப் நியூஸில் வந்த கார்ட்டூன் உங்கள் பார்வைக்கு... கிளிக்கி பெரிதாகப் பார்க்கவும்



கலவை 2
எங்களது நிறுவனத்தில் ஐடி பிரிவின் சார்பில் புதிதாக கணக்கீடுகள் செய்யப்படும் படிவங்கள் (Log Sheets) தரப்பட்டுள்ளன. சில வருடங்களுக்குப் பின் அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. எங்களது பணி சம்பந்தமான தினசரி, வாராந்திர, மாதமிருமுறை, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு என தனித்தாயாக பராமரிப்பு பணிகள் உள்ளன.

அவைகளை உள்ளீடு செய்வதற்கு இவைகளைப் பயன்படுத்த வேண்டும்.. பெரிய நெட்வொர்க்கில் இயங்கும் எங்களது நிறுவனத்தின் கணிணி பிரிவில் இருந்து வந்திருக்கும் அந்த படிவங்களைப் பார்க்கும் போது அழாத குறை தான். எக்ஸலில் தயாரிக்கப்பட்ட அந்த படிவங்களின் கட்டங்களில் Alignment மிகவும் மோசமாக இருக்கிறது. மூன்று எழுத்துக்கள் எழுத வேண்டிய இடங்களுக்கு ஒரு எழுத்துக்கான இடம் மட்டுமே விடப்பட்டுள்ளது. ஆறு எழுத்துக்களுக்கு மூன்று எழுத்துக்களுக்கான கட்டம் விடப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில் நான்கு எழுத்துக்கான இடத்திற்கு 14 எழுத்துக்கான இடம் உள்ளது.

மேலே உள்ள கட்டத்திற்கான வார்த்தை மடங்கி கீழே உள்ள கட்டத்திற்குள் பாதி சென்று விட்டது. மொத்தத்தில் கடித்து குதறி வைத்துள்ளார்கள். இதை எங்கள் ஐடி டேமேஜர் வேறு அப்ரூவ் செய்துள்ளார். என்னாலேயே இதை அழகாக உருவாக்கி இருக்க முடியும். எங்கள் பகுதி மேனேஜரிடம் இது பற்றி புகார் செய்த போது “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? அவர்கள் எப்படி அனுப்புகின்றார்களோ அப்படியே அதில் எழுது” என்று சொல்லி விட்டார்... என்ன கொடும இது

கலவை 3
எனது சகோதரி மகன் அருகில் உள்ள பட்டிவீரன்பட்டி என்ற ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றான். அவனுக்கு புதிதாக லிப்கோ ஆங்கிலம்- தமிழ் அகராதி வாங்கிக் கொடுத்தேன். அவனால் அதில் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமமாக இருக்கின்றது. எனவே வாரம் இங்கிருந்து அவனுக்கு அவனது பாடத்தில் இருந்து 10 வார்த்தைகளை தேந்தெடுத்து அனுப்பி விடுவேன். (பாடப்புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன)

ஞாயிற்றுக் கிழமை மாலையில் அதற்கான தமிழ் மொழி பெயர்ப்பை போன் செய்து கேட்டுக் கொள்வேன்.. இப்போது மிக விரைவாக அகராதி பார்க்க கற்றுக் கொண்டு விட்டான். ஆனால் அவனது பாடத்தில் இருந்து, தரும் வார்த்தைகளையே அவனால் உச்சரிக்கை இயல்வதில்லை. (தமிழ் மீடியம்)... ஒன்பதாவது படிக்கும் ஒரு சிறுவனால் ஆங்கிலத்தை வாசிக்க இயலவில்லை எனும் போது வருத்தமாக இருக்கிறது நமது கல்வி முறையை நினைக்கையில்... இதே நிலையில் தான் நானும் இருந்திருப்பேன் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது... ;)

கலவை 4
எனது பெயரில் எங்களது ஊரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கி சேவை உள்ளது. (NRE Account - Canara Bank) கடந்த பத்து ஆண்டுகளாக இந்த சேவையை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை எனது வங்கிக்கணக்கு பற்றிய எந்த விவரங்களையும் எனக்கு அவர்கள் அனுப்பியது இல்லை.

எனது முகவரி மாற்றம் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் அவர்களின் கோப்பில் ஏற்றவில்லை. இது சம்பந்தமாக அந்த வங்கியின் முகவரிக்கு எழுதிய கடிதங்கள், மின்னஞ்சல்கள் விழலுக்கு இறைத்த நீராகவே போய் விட்டன. ஊருக்கு செல்லும் போது பாஸ்புக்கைக் கொடுத்து மட்டுமே எனது கணக்கில் உள்ள பணத்தை தெரிந்து கொள்ள முடிகின்றது. அந்த கிளையில் இன்டர்நெட் பேங்கிங் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனது கேள்வி... NRE வங்கிக் கணக்குக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்ற முறை உள்ளதா? எனது மின்னஞ்சலைக் கொடுத்தும் அதற்கு அனுப்பவும் மறுக்கின்றனர்.. இதற்கு என்ன செய்யலாம்? யாராவது ஐடியானந்தாக்கள் உதவுங்கள்... :)

கலவை 5
சமீபத்தில் பதிவர் அதிஷாவின் சகோதரி மகள்களுக்கு கோவை மருதமலையில் மொட்டை அடித்து, காது குத்தப்பட்டது. தாய் மாமா மடியில் அமர வைத்து காது குத்துவது மரபு... அதே போல் தாய் மாமாவுக்கு துணை மொட்டை அடிப்பதும் வழக்கம்... ஆனால் அதிஷா மொட்டைக்கு டிமிக்கு கொடுத்து விட்டு, மொக்கைப் போட்டுக் கொண்டு இருக்கிறான்.

எனவே அதிஷாவிற்கு பதிலாக இன்னொரு தாய்மாமா தமிழ் பிரியன் நேற்றுமெக்காவில் போட்ட மொட்டை... நல்லா இருக்கா பாருங்க... சந்தனம் தான் கிடைக்கலை... டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))

Thursday, September 18, 2008

ரமழான் மாதம் - நோன்புக் கஞ்சி நினைவுகளும், செய்முறையும்

.
மற்ற மாதத்தின் பெயர்களை நினைவில் வைத்திருக்கின்றார்களோ இல்லையோ ரமழான் மாதத்தின் பெயரை முஸ்லீம்கள் அனைவரும் நினைவில் இருந்தி இருப்பார்கள். ஏனெனில் அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்று, இரவுகளில் நின்று வணங்கி, தர்மங்களை அதிகமதிகம் வழங்கி, மாத இறுதியில் ஈகைத் திருநாளைக் கொண்டாடுவார்கள். நோன்பு கஞ்சி என்பதும் ரமழான் என்றதும் நினைவுக்கு வரும்.

நோன்பு வைத்த ஏழைகள் நோன்பு திறக்கும் நேரத்தில், உணவுக்கு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக தமிழகத்தில் பள்ளிவாசல்களில் நோன்பு கஞ்சி இலவசமாக தர ஏற்பாடுகள் பல ஆண்டுகளாக உள்ளன. அதே போல் பள்ளிக்கு வருபவர்களுக்கும் நோன்பு கஞ்சி தந்து நோன்பை முடித்துக் கொள்ள உதவி செய்யப்படும்.

சிறு வயதில் நோன்பு இருக்கும் காலங்களில், நோன்பு கஞ்சி குடிப்பதற்காக பள்ளிவாசல்களுக்கு சென்ற காலம் உண்டு. மண் கலயங்களில் நொன்பு கஞ்சி ஊற்றி, அதற்குள் ஒரு பேரீச்சம் பழத்தை இட்டு, கலயத்தில் ஓரத்தில் புதினா சட்னியும் வைத்திருப்பார்கள். சிறுவர்களுக்கு கடைசியில் தான் தருவார்கள். அதுவும் பாதி தான் தருவார்கள்.... ஏனெனில் வயிறு நிறைந்து போய், அதையே குடிக்க இயலாமல் வைத்து விடுவார்கள்.

கொஞ்சம் பெரிதானதும் நோன்பு கஞ்சி சப்ளை செய்யும் இளைஞர் அணியிலேயே இடம் கிடைத்தது. அப்போதும் ஜாலியாக இருக்கும். நோன்பு திறப்பதற்கு முன் பரபரப்பாக கஞ்சி ஊற்றுவது, சட்னி வைப்பது, பேரீச்சம் பழம் கொடுப்பது என பிஸியாக இருப்போம். சில நாட்களில் கஞ்சி பற்றாக்குறை காரணமாக எங்களுக்கே கிடைக்காது. ஆனாலும் அதுவும் ஒருவித மகிழ்ச்சியாகவே இருக்கும்.



சென்னைக்கு சென்ற போது இனி ரமழானில் நோன்பு கஞ்சி கிடைக்காது என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் நாங்கள் இருந்த இடத்திற்கு அருகிலேயே பெரிய பள்ளிவாசல் இருந்தது. ரமழான் மாதம் முழுவதும் சூடான நோன்பு கஞ்சி கிடைத்தது.

துபாய்க்கு பிளைட் ஏறும் போதும் அதே நிலை தான்... அரபுகள் இருக்கும் நாட்டிற்கு செல்கின்றோம் என்ற நினைவுடன்... சென்று பார்த்தால் நிறுவனத்தில் 90 சதவீதம் தமிழர்களே... அப்புறம் என்ன அங்கும் நோன்பு கஞ்சி சப்ளையில் இறங்கி விட்டோம்.. ஆனால் வெளிநாடு அல்லவா? ஸ்பெஷலாக வடை, பஜ்ஜி, கேரா மில்க சூஸ், கடல் பாசி என அமர்க்களமாக இருக்கும்.

சவுதியில் வந்த போது நிறுவனம் ஒரு பிரெஞ்ச் பாணி நிறுவனம்... இருக்கும் 600 பேரில் 15 பேர் மட்டுமே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்... (2006) ரமழான் மூன்றில் தான் அங்கு சென்று சேர்ந்தேன். ’அம்புட்டு தான்டா நோன்பு கஞ்சி’ என்று இருந்த வேளையில், அங்கும் அமர்க்களமாக நோன்பு கஞ்சி கிடைத்தது. தமிழ் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் சார்பில் தினமும் தமிழக ஸ்டைல் நோன்பு கஞ்சியுடன் இப்தார் கிடைத்தது. இப்போது அங்கு தான் சங்கமம்... இறைவனின் கிருபையால்... :)

இனி நோன்பு கஞ்சி தயாரிக்கும் முறையைப் பார்க்கலாம். இது சைவ உணவு தான்... சூடாக அருந்தினால் சுவையாக இருக்கும். உடம்பை குளிர்ச்சியாக வைக்க உதவும்... வீடுகளில் செய்து மாலை நேரங்களில் அருந்தலாம்... :)

தேவையானப் பொருட்கள்
அரிசி - ஒரு கப்
கடலை பருப்பு - கால் கப்
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
கோதுமை குருணை - கால் கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 5
மல்லித் தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - அரை மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி (தேவைக்கேற்ப)
தேங்காய் - ஒரு மூடி
பட்டை - ஒன்று
கிராம்பு - 4
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
ஊரவைத்த ஜவ்வரிசி அல்லது சேமியா - சிறிதளவு கடைசியில் சேர்த்துக்கொள்ளலாம் (added by adiraixpress)

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை காம்பு எடுத்து விட்டு முழுதாக எடுத்துக் கொள்ளவும்.

தேங்காயை துருவி மிக்ஸியில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி திக்கான பால் பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி பிழிந்து தண்ணீப் பால் எடுத்துக் கொள்ளவும்.

கடலைப் பருப்பு, வெந்தயம், கோதுமை குருணை மூன்றையும் தனித்தனியாக 2 மணிநேரம் ஊற வைக்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி, பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு நிமிடம் வதக்கி விட்டு, வாணலியை மூடி, தீயை குறைத்து வைக்கவும்.

2 நிமிடம் கழித்து திறந்து ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றவும். கிராம்பு, பட்டை, நறுக்கின வெங்காயம் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

மீண்டும் ஒன்றரை தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி, நறுக்கின தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய் போட்டு 2 1/2 நிமிடம் வதக்கவும்.

எல்லாம் வதங்கிய பின்னர் இரண்டாவதாக எடுத்த தண்ணீர் தேங்காய் பாலை ஊற்றவும்.

அதனுடன் ஊற வைத்த கோதுமை குருணை, வெந்தயம், கடலைப் பருப்பு போட்டு மேலும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்.

அரிசியை களைந்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் பருப்பு வெந்து, பொங்கி நுரைத்து வரும் போது அரிசியை போட்டு 7 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு போட்டு கலக்கி மூடி விடவும். பழைய அரிசியாக இருந்தால் நிறைய தண்ணீர் சேர்க்கலாம்.

இடையிடையில் திறந்து கிளறி விடவும். கிளறாமல் இருந்தால் அடி பிடித்து விடவும். நன்கு வெந்ததும் திக்கான தேங்காய்ப்பால் அரை கப் ஊற்றி கிளறி விடவும்.

தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும். மேலே கொத்தமல்லி தழையினைத் தூவவும்.

நன்றி :arusuvai.com

Sunday, September 14, 2008

அலசல் : மின் வெட்டு, ஆற்காடு,கூடங்குளம்... இன்ன பிற



“மின் வெட்டுப் பற்றி ஆற்காட்டாரிடம் மட்டும் கேட்காதீர்கள். ஏனெனில் அவருக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது” “தி.மு.க. அடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனால் அதற்கு முக்கியமான காரணம் ஆற்காட்டார் தான்”.......

இவை இரண்டும் தமிழக அரசியலில் கேலியாக பேசப்பட்ட விடயங்கள் என்றாலும், இதில் நிறைய உண்மைகள் இருப்பதாகவே படுகின்றது... அரசியலை விட்டுவிட்டு இந்த பிரச்சினையின் ஆழத்தை ஆராயலாம்.

தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை தலைவிரித்தாடுகின்றது. தினசரி அறிவிக்கப்பட்ட மின் வெட்டு, அறிவிக்கப்படாத மின் வெட்டு என ஏதேதோ காரணங்களைச் சொல்லி தினசரி பல மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகின்றது. இதை ஒரு வித்தியாசமான பார்வையில் பார்க்கலாம்.... :)

தமிழகம் முழுவதும் உள்ள மின் தேவை சுமார் 10,000 மெகாவாட்டாக உள்ளது. இது வருடம் தோறும் 400 முதல் 600 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது அடுத்தடுத்த வரக் கூடிய ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் படிப்படியாக உயர்ந்து வருகின்றது. முன்பெல்லாம் மின்சாரம் இருக்கும் வீடுகள் அபூர்வமாக இருந்தது. பின்னர் டீவி, பிரிட்ஜ், வாசிங் மெசின் என்று தேவைகள் அதிகமாகி விட்டன.

இரண்டு குண்டு பல்புகளும், ஒரு பேனும் இருந்த வீடுகளில் இப்போது நான்கு டியூப் லைட், இரண்டு பேன், ஒரு பிரிட்ஜ், ஒரு வாசிங் மெசின் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து வீடுகளும் இது போன்ற பொருட்கள் கட்டாயமாகி விடும். அதே போல் குளிர்சாதன பெட்டிகளும் இப்போது சகஜமாகி வருகின்றன.

இவ்வாறு மின் தேவை மிகவும் அதிகமாகி வரும் வேளையில், மின் உற்பத்தியின் அளவும் அதிகரிக்க வேண்டும்.அதிகபட்ச மின் உற்பத்தியின் போது மின் வாரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 5,500 மெகாவாட் மின்சாரமும், தனியார் மின் உற்பத்தி மூலம் 1,200 மெகாவாட்டும், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 2,800 மெகாவாட்டும், இதர உற்பத்தி மூலம் 500 மெகாவாட்டும் கிடைக்கும். இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள தனியார் காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது இந்த ஆண்டின் தமிழகத்தின் முழு தேவையையும் பூர்த்தி செய்ய போதுமானது.

ஆனால் இதில் குறைவு ஏற்படும் போது தான் பிரச்சினைகள் உருவாகின்றன. நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்திற்கு அதிகமான நீர் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். பருவ மழைகள் பொய்த்துப் போவதால் குறைவு ஏற்படும். அதே போல் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் உற்பத்தியைப் பொறுத்து மாறுபடும். நெய்வேலி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கிடைக்கவில்லையெனில் மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு மின்சாரம் கிடைக்காது. அதே போல் காற்று வீசுவதும் குறைந்து விட்டாலும் மின்சாரம் கிடைக்காது. இதனால் தமிழகத்திற்கு 20 முதல் 40 சதம் வரை மின்தட்டுப்பாடு ஏற்படும்.

சரி இந்த ஆண்டு வெயில் காலம் முடிந்து விட்டது. அணைகளும் நிரம்புகின்றன. காற்றும் வீசுவதால் காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கின்றது. இனி அனைவரும் மின் பற்றாக்குறையை மறந்து விடப் போகின்றோம்.... மீண்டும் அடுத்த முறை மின் வெட்டு வரும் போது ‘குய்யோ! ‘முறையோ’ என கத்துவோம்.
அடுத்த ஆண்டு இந்த பிரச்சினையில் தீவிரம் அதிகமாகும்... 2 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். தொழிற்சாலைகள் பெருகி விட்டன. மின்சாரம் இல்லையென்றால் எந்த தொழிலும் நடக்காது என்ற நிலை வந்து விட்டது. முக்கியமாக சின்னத்திரை சீரியல்கள் பார்த்து குடும்பப் பெண்கள் கண்ணீர் வடிக்கும் அளவில் குறைவு ஏற்ப்பட்டு விடும்.

அரசு வைக்கும் தீர்வுகளும், குறைபாடுகளும்

மின் பற்றாக்குறை ஏற்படும் போது மின் வாரிய அமைச்சரும், மற்ற அரசு அதிகாரிகளும் சொன்ன சால்ஜாப்பு அணைகளில் நீர் இல்லை, காற்று இல்லை, நிலக்கரி இல்லை என்பதாகும். அடுத்த ஆண்டும் இதே நிலை ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? (அப்படி ஏற்படாமல் இருக்க பிரார்த்திப்போம்) அப்போது என்ன செய்வது?

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைச் செயலர் திரிபாதி 2009 ஆரம்பத்தில் கூடங்குளம் அணு உலை தனது முதல் மின் உற்பத்தியை ஆரம்பிக்கும் என்றும் இரண்டாம் உற்பத்தி டிசம்பரில் தொடங்கும் என்றும்,அதன் மூலம் சுமார் 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். ஏதோ கொல்லன் பட்டறையில் அடுப்பு ரெடியாகி விடும் என்பது போல் கூறி விட்டு சென்று விட்டார். 2011 ல் கூட கூடங்குளம் அணு உலை மின் உற்பத்தியை ஆரம்பிக்க இயலாது என்பது அங்கிருந்து நண்பர்கள் வாயிலாக வரும் தகவல்.

தமிழக அரசும் தனியாக ஒரு அமைச்சர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. அதிகாரிகள் சொத்தை ரிப்போர்ட்களை தாக்கல் செய்து விட்டு குழு அக்வாபீனா குடித்து விட்டு கலைந்து போகப் போகின்றது.

நாம் கொடுக்கும் தீர்வுகள்:

தீர்வு 1 :
நீர் மின்சார உற்பத்தியில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு முழு வீச்சில் அதை சரி செய்ய வேண்டும். அதிக நீர் வெளியேற்றம் உள்ள இடங்களில் மேலும் நீர் மின் உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்தி நீர் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதை ஒரு குழு எப்போதும் கண்காணிக்க வேண்டும்.

தீர்வு 2:


நெய்வேலி அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் அதிக தேவையுடைய மாநிலமான தமிழகத்திற்குள்ளேயே பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அல்லது NLC யை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

தீர்வு 3:
காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை, ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோரிடம் அதற்கு ஆர்வமூட்ட வேண்டும். காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக ஒரு காற்றாடி மூலம் 1.5 மெகாவாட் மின்சாரம் எடுக்கப்படுகின்றது. (2 மெகாவாட் எடுக்க அமைக்கப்பட்ட அம்மாவின் காற்றாடி இறக்கை உடைந்து வெடித்து சிதறியது தனிக்கதை)அதற்கு குறைந்தது 3 ஏக்கர் நிலமும், (லஞ்சமெல்லாம் சேர்த்து) சுமார் 1 கோடி பணமும் தேவைப்படலாம். பராமரிப்பு பணி வரும் போதும் அதை தாங்கும் ஆற்றல் வேண்டும். அவ்வாறு இதில் இறங்க ஆர்வமுள்ளவர்களுக்கு அரசு சகல உதவிகளும் செய்ய வேண்டும். இப்போது இருக்கும் 3500 மெகாவாட் காற்றாலை மின்சாரத்திற்கு சுமார் 10,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கும். இதே போல் சுமார் 4000 கோடி முதலீட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவலாம். இதன் மூலம் சுமார் 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். (லஞ்ச ஊழல் சேர்க்காமல்)



தீர்வு 4
மேலே உள்ளவை அனைத்தும் காரண காரியங்களைக் கொண்டு மாறக் கூடியவை. அணையில் நீர் இல்லையெனில், நிலக்கரி இல்லையெனில், காற்று இல்லையெனில் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் தொடந்து மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவல்ல விடயம் தான் அணு மின்சாரம். கூடங்குளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பல கோடி ரூபாய்களை முழுங்கி விட்டுஅணு மின்சாரம் தயாரிப்பதற்கான அணு உலை கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது.

சம்சாரம் அது மின்சாரத்தில் விசு சொல்வார்... படித்தான்... படிக்கிறான்... படித்துக் கொண்டே இருப்பான் என்று. அதே போல் தான்... எப்போது மின் உற்பத்தி ஆரம்பமாகும் என்று தெரியாது. ஆனால் விரைவில் நடக்கும் என சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்பார்கள்... :( இந்த லட்சணத்தில் மேற்கொண்டு நான்கு அணு உலைகள் அமைக்க ஏற்பாடு நடக்கின்றதாம்... கமிஷன் அதிகமா கிடைக்கும் போல இருக்கு... என்ன கொடும இது..

2011 ல் அணு உலை தயாராகும் போது, ‘அணு உலை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டன. இது ISO (உலக தரக் கட்டுப்பாடு) தரத்தில் இல்லை. எனவே இங்கு அணு மின்சாரம் தயாரிக்க இயலாது’ என்று சொன்னாலும் சொல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகத்தின் அவசர தேவையைக் கருத்தில் கொண்டு அங்கு உடனடியாக மின்சாரம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும். தூங்கிக் கொண்டு இருக்கும் வேலைகளை தட்டி எழுப்ப வேண்டிய நேரமிது.

கூடங்குளம் அணு மின் நிலையமும் கடலுக்கு மிக அருகில் இருப்பதால் சுனாமி, அல்லது புயல் ஏற்படும் நேரங்களில் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்.


இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் இன்னும் அதிகப்படியான மின் உற்பத்திக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்...

இல்லையேல் ஆற்காடு வந்தாலும், அம்மா வந்தாலும், ஆட்டுக்குட்டி வந்தாலும் பனை ஓலை விசிறியோடு திண்ணையில் உட்கார வேண்டியது தான்


மேலதிக தகவல்கள்....
1. 2007 ல் ஸ்பெயின் 3520 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவியுள்ளது.
2. ஐரோப்பாவில் 90 மில்லியன் மக்களின் மின் தேவையை காற்றாலைகள் பூர்த்தி செய்கின்றன.
3. 2007 ல் அமெரிக்கா 5240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவியுள்ளது.
4. இந்தியா முழுவதும் 2007 ல்1,730 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவப்பட்டுள்ளன.
5. 2007 ல் சீனா3450 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 150 சதவீதம் அதிகம்

மெக்கா - காபா - சில அரிய தகவல்கள்

.
.
லகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் தொழுகைக்கு முன்னோக்கும் இடமாக மெக்காவில் உள்ள காபா ஆலயம் உள்ளது. உலகில் அவர் எந்த மூலையில் இருந்தாலும், தொழுகை நடத்த வேண்டுமெனில் காபா உள்ள திசையை நோக்கியே தொழ வேண்டும்.

''அகிலத்தின் நேர் வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும், மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். (அல்குர்ஆன், 003:096)




காபா ஆலயம் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா என்னும் ஊரில் உள்ளது. இதுவே உலகின் மனிதனால் இறைவனை வணங்க கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும். உலகிற்கு அனுப்பப்பட்ட முதல் மனிதரான ஆதம் (அலை) அவர்கள் பூமியில் இறைவனை வணங்குவதற்காக இந்த ஆலயத்தை நிர்மாணித்தார்கள்.

பின்னர் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்ராஹீம் (அலை) நபி அவர்களை இந்த பள்ளியை புணர்நிர்மானம் செய்ய இறைவன் நாடுகின்றான். அதற்கான சூழலை ஏற்படுத்த இப்ராஹீம்(அலை) அவர்களின் மனைவி ஆசுரா(அலை) மற்றும் மகன் இஸ்மாயில்(அலை) ஆகியோரை அங்கு குடியேற வைக்கின்றான்.

அதுவரை மக்கள் நடமாட்டம் இல்லாத, தண்ணீர் ஏதும் இல்லாத மெக்கா பள்ளத்தாக்கில் மனைவியையும், கைக்குழந்தையாக இருந்த மகனையும் விட்டுவிட்டு இப்ராஹீம்(அலை) சென்று விடுகின்றார். இறைவனின் புறத்தில் இருந்து வந்த கட்டளை இது என்பதால் அதை ஏற்றுக் கொண்டு அந்த வானாந்தரத்தில் ஆசுரா தங்குகின்றார்.

இப்ராஹீம் (அலை) திரும்பிச் சென்றதும் தாயும், மகனும் தண்ணீருக்காக தவிக்கின்ற வேளையில், இறைவனின் கிருபையில் அங்கு தண்ணீர் ஊற்று பெருக்கெடுத்து ஓடுகின்றது. (இன்று வரை அந்த ஊற்றில் சுவையான தண்ணீர் பெருக்கெடுத்து வந்து கொண்டு இருக்கிறது. மெக்கா செல்பவர்கள் ஜம் ஜம் என்ப்படும் இந்த தண்ணீரை ஊருக்கு கொண்டு வந்து அனைவருக்கும் தருவது வழக்கம்) தண்ணீர் இருப்பதால் அந்த வழியாக வரும் பயணக்கூட்டங்கள் அங்கு தங்க துவங்கின. இதனால் தாயுக்கும், மகனுக்கும் உணவுத் தேவை சுலபமாக பூர்த்தியானது.

கைக் குழந்தையாக இருந்த இஸ்மாயில்(அலை) இளைஞனானதும் இப்ராஹீம்(அலை) திரும்பி வருகின்றார். அங்கு ஒரு ஊரே உருவாகி இருந்தது. பின்னர் தந்தையும், மகனும் இருந்து உலகின் முதல் மனிதன் ஆதம்(அலை) கட்டிய காபாவின் அடித்தளத்தில் இருந்து காபா ஆலயத்தைக் கட்டினர்.



(இப்ராஹீம்(அலை) அவர்கள் காபாவை கட்ட நின்ற இடம் இன்று மகாமே இப்ராஹீம் என அழைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது) அது முதல் இன்று வரை காபா, மக்கள் இறைவனை வழிபடும் இடமாக இருக்கின்றது. உலகம் அழியும் நாள் வரை இருக்கும்.

காபா ஆலயம் பல கட்டங்களில் சேதாரம் அடையும் போது, அப்போதைய மக்களால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக உலக மக்களிடம் இருக்கும் ஒரு வாதம்... முஸ்லிம்கள் திசையை தொழுகின்றனர் என்பது. பாரதி கூட திசை தொழு துலுக்கர் என கவி பாடியுள்ளார். இஸ்லாமிய மார்க்கத்தில் அனைத்து கடமைகளும் ஒரு ஒழுங்குக்கு உட்பட்டவை. அனைவரும் ஒரே விதமான ஓரிறைக் கொள்கையுடன் இருக்க வேண்டும். ஒரே நேரத்தில் அனைவரும் நோன்பு நோற்க வேண்டும், நோன்பை விட வேண்டும். பணம் உள்ளவர்கள் அனைவரும் அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஜகாத் என்னும் தர்மம் செய்ய வேண்டும். ஹஜ் என்னும் கிரியையை ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக செய்ய வேண்டும்.

இதே போல் தொழுகையையும் அனைவரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காபாவை நோக்கி தொழ வேண்டும் என்பதும். காபா என்பதும் உலகில் உள்ள அனைத்து பள்ளிகளைப் போல தான். காபா உள்ள திசையை நோக்குவதால் எந்த நன்மையும் ஏற்படாது. ஆனால் ஒழுங்குக்காக அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காபா இருக்கும் திசையை நோக்க வில்லையெனில் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது.

புண்ணியம் என்பது உங்கள் முகத்தை கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. மாறாக புண்ணியம் என்பது அல்லாஹ்வை நம்பி...... ..இறைவன் மீதுள்ள நேசத்தின் காரணமாக சொந்தங்களுக்கும், அனாதைகளுக்கும், (வாய்திறந்து கேட்காத) ஏழைகளுக்கும், யாசிப்பவர்களுக்கும் செலவு செய்வதாகும். மேலும் தொழுகையை கடைப்பிடித்து ஜகாத் கொடுத்து வருவதுமாகும்.... (அல் குர்அன் 2:177)

ஆனால் உலகில் கட்டப்பட்ட முதல் ஆலயம் என்பதால் அதில் செய்யும் நல்ல செயல்களுக்கு பல மடங்கு அதிக நன்மைகள் கிடைக்கின்றன.

காபா கட்டடம் என்றதும் ஏதோ அதற்குள் குறிப்பிட்ட சில பொருட்களை வைத்து வணங்குவது போல் மாயை மக்களிடம் நிலவுகின்றது. காபா கட்டடம் சுமார் 14 மீட்டர் உயரமும், 10.5 மீட்டர் நீளமும், 12 மீட்டர் அகலமும் கொண்ட கனசதுர கட்டிடமாகும். அதனுள்ளே வரிசையாக மூன்று தூண்கள் உள்ளன. ஒரு புறம் மட்டுமே கதவு உள்ளது. ஜன்னல்கள் ஏதும் இல்லை. மின் விளக்குகள் ஏதும் இல்லை. அதற்குள் சுமார் 50 பேர் தொழுகை நடத்தும் இடம் உள்ளது. காபாவின் உள்ளே முழுவதும் உயர்தர மார்பிள்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது.



காபாவின் உள்ளே இருந்து எடுக்கப்பட்ட படம்



காபாவின் கட்டமைப்பு படம்

முன்பு காபாவின் உள்ளே சென்று தொழுகை நடத்தப்பட்டு வந்தது. காபாவின் உள்ளே தொழுதால் எந்த திசையும் நோக்கலாம். மக்கள் கூட்டம் அதிகரித்த காரணத்தால் காபா திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு வரும் பல லட்சம் மக்களும் உள்ளே சென்று தொழுகை நடத்த விரும்பும் போது பல இன்னல்கள் ஏற்படும் என்பதால் காபாவின் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஓரிரு முறை சுத்தம் செய்வதற்கு மட்டும் திறக்கப்படுகின்றது. அப்போதும் உள்ளே செல்ல பணியாட்கள் தவிர வேறு யாருக்கும் அனுமதி இல்லை.



காபாவிற்குள் தொழுகைக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்ட போது

காபா ஆலயத்தை இடிக்க முயற்சித்த அப்ரஹாவுக்கும், அவரது படைகளுக்கு ஏற்ப்பட்ட அழிவை சென்ற பதிவில் பார்த்தோம். (சென்ற பதிவு). யாராலும் இந்த ஆலயத்தை இனி அழிக்க இயலாது. ஆனால் உலக அழிவுக்கு முன் இந்த ஆலயம் அழிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

''(வெளிப்பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி காபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

காபா இருக்கும் இடத்தை சுற்றி சில கிலோமீட்டர் தூரத்திற்கு புனிதமான இடம் என நபி (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தாவரங்களை பிடுங்குவது, எந்த உயிரையும் கொல்வது, (சிறு புழு, பூச்சி உள்ளிட்ட உயிரிகள் உள்பட) தவறான நடத்தைகளில் ஈடுபடுவது ஆகியவை கூடாது.

உலகில் இறைவனை வணங்க ஏற்படுத்தப்பட்ட முதல் ஆலயமான மெக்கா காபாவிற்கு சென்று, அங்கு இறைவனை தொழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் இறைவன் தந்தருள்வானாக! ஆமீன்!

காபா பற்றிய மேற்கொண்டு தகவல்களுக்கு

காபா வரலாறு - பகுதி 1-அபு முஹை
காபா வரலாறு - பகுதி 2-அபு முஹை

Update : நண்பர் சர்வேசனின் வேண்டுகோளுக்காக ஜம் ஜம் கிணறு


ஜம் ஜம் திறந்த வெளி கிணறாக இருந்த போது



ஜம் ஜம் தண்ணீர் ஊறும் இடம்


சில ஆண்டுகளுக்கு முன் வரை ஜம் ஜம் கிணறுக்கு சென்றும் பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு இருந்தது. (ஊற்று வருவதை நானும் பார்த்துள்ளேன்). அந்த கிணறு காபாவுக்கு மிக அருகில் இருப்பதால் இட வசதியைக் கருத்தில் கொண்டு மேற்பகுதி சமதளமாக்கப்பட்டுள்ளது. கீழே அதற்க்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள வழி வழியாக சென்றால் பார்க்கலாம்.

Saturday, September 13, 2008

1400 க்கு முன் - உலகின் முதல் அணு ஆயுத தாக்குதல்

.
.
நவீன உலகில் முதன் முதலில் அணு ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்கா ஜப்பானை தாக்கியதாக தெரிந்து வைத்துள்ளோம். ஆனால் அதற்கெல்லாம் முன்னால் சுமார் 1400 வருடங்களுக்கு முன்னாலேயே அணு ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

அரேபிய தீபகற்பத்தில் மெக்கா என்னும் பகுதி விவசாய நிலங்கள் இல்லாத ஒரு வறண்ட பூமியாக இருந்தது. கடுமையான வெயில் இருக்கக் கூடிய பகுதி. ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை வளர்ந்து, மாமிசம், பால் போன்றவற்றையே உண்டு வந்தனர். பாலைவனப் பகுதி என்பதால் மற்ற பகுதிகளில் பேரீச்சம் பழங்களும் கிடைத்து வந்தன. ஆனால் அந்த குறிப்பிட்ட ஊர் கடுமையான வறண்ட மலைப்பிரதேசம் என்பதால் மற்ற பகுதிகளில் இருந்தே உணவுப் பொருட்கள் அங்கு வர வேண்டி இருந்தது.

ஆனால் மெக்காவுக்கு ஒரு சிறப்பு இருந்தது. அந்த ஊரில் தான் அந்த தீபகற்பத்திற்கே முக்கியமாக கருதப்படும் வழிபாட்டுத் தளம் காபா இருந்தது. பல பகுதிகளிலும் இருந்து மக்கள் அங்கு வந்து வழிபாடுகள் செய்வது வழக்கம். இந்நிலையில் அரேபிய தீபகற்பத்தின் ஒரு புறம் இருந்த யமன் என்ற பகுதி அபிசீனிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. அந்த பகுதியை அப்ரஹா என்ற ஆளுநர், அபிசீனிய மன்னரின் கட்டளைப்படி ஆண்டு வந்தார்.

யமன் தேசத்தில் மிகுந்த பொருட் செலவில் அப்ரஹா அழகான வழிபாட்டுத் தலத்தைக் கட்டினார். அரேபிய தீபகற்பம் முழுவதும் அரபுகள் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் அவர்கள் மெக்காவுக்கே வழிபாடு நடத்த வருவது வழக்கம். அப்ரஹாவால் இந்த வழக்கத்தை மாற்றி, யமனை நோக்கி மக்களை திருப்ப செய்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.

இதனால் ஆத்திரமடைந்த அப்ரஹா மெக்காவில் உள்ள காபா ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கும் எண்ணத்துடன் ஏராளமான யானைகள் மற்றும் 60,000 வீரர்களைக் கொண்ட பெரும் படையுடன் கிளம்பி வந்தார். (அபீசினியா ஆப்ரிக்க கண்டத்தில் உள்ளதால் அங்கிருந்து யானைப் படையைக் கொண்டு வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது).அரபு தேசம் முழுவதும் இந்த செய்தி காட்டுத் தீயாய் பரவியது. சிறு சிறு குழுக்களாக இருந்த அரபு மக்கள் அந்த படையுடன் போரிட இயலாமல் தோல்வியையே தழுவ நேரிட்டது.

இந்நிலையில் அந்த பெரும்படை மெக்காவை நெருங்கி தனது கூடாரங்களை அமைத்தது. அப்ரஹா தனது வீரர்களை வேவு பார்க்க அனுப்பி வைத்தார். மெக்காவில் போருக்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. வரும் வழியில் மேய்ந்து கொண்டிருந்த மெக்கா நகர முக்கியஸ்தர்களின் ஆடு, ஒட்டகங்களை அவர்கள் பிடித்துக் கொண்டு வந்து விடுகின்றனர். (இந்த முறை தமிழ் இலக்கியங்களில் நிரை கவர்தல் என அழைக்கப்படும்)

இதை அறிந்த அந்த பிரமுகர் தனது ஆடு, ஒட்டகங்களை மீட்க அப்ரஹாவிடம் வருகின்றனர். அப்ரஹா அவரிடம் பேசும் போது “இந்த ஆடு,ஒட்டகங்கள் என்னுடையது. அவைகளை திருப்பி அளித்து விடுங்கள். இந்த ஆலயம் இறைவனுக்கு சொந்தமானது. அவன் விரும்பினால் அதை பாதுகாத்துக் கொள்வான்” என்று கூறி விடுகின்றார். பெரும் போருக்கு ஆயத்தமாக வந்திருந்த அப்ரஹாவிறகு இது ஏமாற்றமாக ஆகி விடுகின்றது.

மறுநாள் தனது பெரும்படையுடன் மெக்காவில் உள்ள காபா ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்க அப்ரஹா கிளம்புகின்றார். அப்போது தான் அந்த அணு ஆயுத தாக்குதல் நிகழ்த்தப்படுகின்றது. அபாபீல் என்ற சிறு பறவைகள் தமது கால், அலகுகளில் கொண்டு வந்த, களிமண்ணால் ஆன செறிவூட்டப்பட்ட சிறு குண்டுகளை வீசுகின்றன. அவை தரையில் இருக்கும் யானைப்படைகளின் மீது விழுந்ததும், வெடித்து சிதற ஆரம்பித்தன. யானைகள் மீது அந்த களிமண் கட்டிகள் விழுந்ததும் தரையோடு புதைந்து போயின. வீரர்களின் உடல்கள் முழுவதும் சதைகள் உருகி ஓடத் துவங்கி விட்டன. மீதமுள்ள யானைகள் அனைத்தும் அலறி அடித்துக் கொண்டு தனது படைகளையே துவம்சம் செய்தன.

இவை அனைத்தும் உண்மையில் நடந்தவை. இந்த நிகழ்ச்சி மெக்காவில் முகமது நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் நடந்துள்ளன. இந்த நிகழ்ச்சி அரேபியர்களின் வரலாற்று புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்வை 1400 ஆண்டுகளுக்கும் மேலாக, எந்த மாற்றங்களுக்கும் உட்படாமல் வைக்கப்பட்டுள்ள திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது.

(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் அறியவில்லையா?

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா?

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான்.

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன.

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான்.
(திருக்குர்ஆன், 105:001-005)

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَبِ الْفِيلِ

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ

تَرْمِيهِمْ بِحِجَارَةٍ مِنْ سِجِّيلٍ
فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَأْكُولٍ



இந்த நிகழ்வின் இறுதியில் அந்த படைகளின் நிலையை விளக்கும் திருக்குர்ஆன் மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் ஆகி விட்டதாக கூறுகின்றது. சாதாரணமாக வைக்கோல் ஒரு ஒழுங்கற்ற நிலையில் தான் இருக்கும். மென்று தின்னப்பட்ட வைக்கோலின் நிலை ஹிரோசிமாவின் நிலையைக் கண்ணுக்கு கொண்டு வரும்.

Friday, September 12, 2008

பாதியில் ஓடி வந்த சினிமாக்களும், கலவையான சிந்தனைகளும் - 12 - 09 - 2008

.
கலவை 1


ஐரோப்பாவின் ஒரு பகுதியில் அணு ஆராய்ச்சியாளர்கள் பலர் இணைந்து Large Hadron Collider (LHC) என்னும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். பூமிக்கு அடியில் சுமார் 27 கி.மீ தூரத்தில் - 270 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இணைவது போல் வட்டமான பாதை அமைத்து குழாய்கள் மூலம் இரு வேறு திசைகளில் புரோட்டான் கதிர்களை செலுத்தி அவை இரண்டும் அடிமட்ட இடத்தில் சந்தித்து வெடித்துக் கொள்ள செய்யும் ஆய்வு இது. இயற்பியல் துறையில் மிகப் பெரிய ஆய்வாகக் கருதப்படும் இந்த ஆய்வின் மூலம் பெருவெடிப்புக் கொள்கைக்கு ஆதாரங்கள் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. பெருவெடிப்புக் கொள்கை என்பதை நாம் இருக்கும் பூமி உள்ளிட்ட கோள்கள், சூரியன் இவை போல் உள்ள அனைத்து பால் வெளி மண்டலங்களில் உள்ள சூரியன்களும், கோள்களும் ஒரு பெரிய மூலத்தில் வெடித்து பிரிந்தவை என்பதே...

அதாவது 'வாயுக்களும், தூசுக்களும் ஒன்றாகச் சேர்ந்து உருவான பொருள்கள் மிக அடர்த்தியான ஒரு பொருளுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. அப்பொருள் ஒரு வானியல் காரணத்தாலும் அழுத்தத்தாலும் இரசாயன மாற்றத்தாலும் திடீரென வெடித்துச் சிதறி அண்டம் முழுவதும் ஒரே தூசு மண்டலமாக பரவியது. ஒரே புகை மூட்டமாக இருந்த அந்த தூசுகள் வாயுக்கள் ஈர்ப்பு விசையின் காரணமாக படிப் படியாக பெரிதாகி பூமி மற்றும் விண்ணில் காணப்படுகின்ற சூரியன், சற்திரன் மற்றும் அனைத்துக் கிரகங்களையும் நட்சத்திரங்களையும் தோற்றுவித்தது.'

இந்த புரோட்டான்களின் மோதலால் விளையும் விளைவுகளைக் கொண்டு பெருவெடிப்பு பற்றி அறிந்து கொள்ள முடியும் எனக் கருதப்படுகின்றது... ஆனால் இதன் மூலம் உயிரிகளின் உருவாக்கம் பற்றி அறிந்து கொள்ள முடியுமா என்று தெரியவில்லை.

இஸ்லாமிய நம்பிக்கையின் படி நான் இதன் மூலம் உணர்ந்து கொள்வது இதுதான்...

'பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான்'
-குர்ஆன் 41:10,11

'வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் நம்மை மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? -குர்ஆன் 21:30

வானம் என நாம் சொல்லும் பரந்த வெளி உள்ளிட்டவைகள் பெரு வெடிப்பு மூலம் உருவானவை என்றே நம்பப்படுகின்றது... வானம், பூமி போன்ற கோள்கள், சூரியன் போன்ற நட்சத்திரங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புகை மண்டலம் போன்றதில் இருந்து வெடித்தே உருவானவை என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

பால் வெளியில் நட்சத்திரங்கள்,வாயுக்கள், கோள்கள், அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4% ஆகும். பிரபஞ்சத்தில் 23% கரும்பொருளாகவும் 73% கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் கூறுகின்றது.

இன்னும் விளக்கினால் வானம் என்பது ஒரு வெற்றிடம் அல்ல.. அது ஒரு காலியிடமும் அல்ல... திண்மமான பொருள் என்பது தான் பொருள் எனபது அல்ல. அண்டவெளியே ஒரு விதமான ஊடகம் தான்... :)... புரிகின்றதா?... ;)

நன்றி : சுவனப் பிரியன், விஞ்ஞானக் குருவி

கலவை 2

கடந்த வாரத்தின் ஒரு மதியத்தில் வேலை முடிந்து வந்து கணிணி முன் அமர்ந்து, தமிழ் மணம் பார்த்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று அறையில் சாம்பிராணியின் சுகந்த மணம் வீசத் தொடங்கியது. அடுத்த அறையில் இருப்பவர் மாலை வேலைகளில் ஊதுபத்தி கொழுத்துவது வழக்கமாதலால் விட்டு விட்டேன். ஆனால் ரமழான் காலங்களில் பகல் பொழுதில் இது வாசனைகளை பெரும்பாலோர் விரும்ப மாட்டார்கள். இந்த எண்ணத்துடன் அமர்ந்திருக்க திடீரென்று கணிணி ’ஆப்’ ஆகி மீண்டும் ’ஆன்’ ஆகியது. சட்டென்று மனதின் உள்ளுக்குள் தூங்கிக் கொண்டு இருந்த மின்சாரப் பணியாளன் விழித்துக் கொள்ள CPU வின் வெப்பத்தை வெளியேற்றும் காற்றாடிய்யில் கை வைத்தால் அனலைக் கக்கியது. உடனடியாக மின்சார இணைப்பைத் துண்டித்து விட்டு பார்த்தால் அந்த சுகந்த வாசனை என் கணிணிக்குள் இருந்து தான் வந்து கொண்டிருந்தது, அப்புறம் என்ன தண்டத்தை அழுது விட்டு, இப்போது கணிணியை குளிர்சாதனப் பெட்டிக்கு முன் வைத்துள்ளேன்..... இப்போது சமர்த்தாக இருக்கின்றது.

கலவை 3

நண்பர் தாமிரா பாதியில் எழுந்து வந்த சினிமா படங்களைக் குறித்து எழுத டேக் செய்திருந்தார். நான் 1998 க்குப் பிறகு திரையரங்கிற்கு சென்றதில்லை. அதற்கு முன் பாதியில் வெளியே வந்த திரைப்படங்களை யோசித்ததில் இந்த மூன்றும் சிக்கின.

நாடோடி மன்னன்
நணபன் ஒருவனின் வற்புறுத்தலுக்காக பழைய படம் பார்க்க வேண்டும் என்று சென்றது. பாடாவதியான பிரிண்ட்... பாதி படம் பார்ப்பதற்குள் நிறைய இடங்களில் பிலிம் அறுந்து போனது. வெட்டி ஒட்டி ஓட்டினார்கள். வெறுத்துப் போய்பாதியிலேயே ஓடி வந்து விட்டோம்.

Alexandra
ஒரு ஆங்கிலப்படம்

உதவிக்கு வரலாமா?
கார்த்திக் மற்றும் மூன்று கதாநாயகிகள் நடித்த படம். ரசிகா(சங்கீதா) மற்றும் காமெடிக்காக போய் மண்டை காய்ந்து போய் பாதியிலேயே ஓடி வந்து விட்டேன்...:)

கலவை 4

தமிழ் மணத்தில் வரும் பதிவுகள் இப்போதெல்லாம் பல தரங்களில் கிடைக்கின்றன. சில வகைப் பதிவுகள் போரடிப்பதாக இருந்தாலும், பல பதிவுகள் ஆச்சர்யமூட்டுவதாக இருக்கின்றன. நிறைய பதிவர்களிடம் நல்ல தேர்ச்சி தெரிவது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் பின்னூட்டங்களைப் பார்க்கும் போது சில பதிவுகள் மனநிறைவாக இருப்பதில்லை. நல்ல ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் எழுதப்பட்ட பதிவுகளில் நம் மக்கள் சென்று கும்மி விடுகின்றனர். பதிவுக்கும் பின்னூட்டங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் சென்று விடுகின்றது. அதே போல் அதே பதிவர் மொக்கையாக எழுதப்படும் பதிவுகளை விட்டு விடுகின்றனர். நாம் பின்னூட்டக் கும்மியடிப்பதற்கு முன் அந்த பதிவு அதற்கு தோதுவானதா என யோசித்துக் கொள்ளுங்கள். நல்ல பதிவு என்று ஒரிரு கமெண்டுடன் நிறுத்திக் கொள்ளுங்கள். அல்லது மறுநாள் வந்து கும்முங்கள். இது என்னுடைய வேண்டுகோள். நானும் ஒரு கும்மி விரும்பி என்பதை அழுத்தம் திருத்தமாக ’தல’ நிஜமா நல்லவனின் இரத்தத்தில் சொல்லிக் கொள்கிறேன்.



கலவை 5

சமீபத்திய ஒரு பதிவில் உங்களது வம்சத்தில் தொடர்ச்சி எதுவரை தெரியும் என ஒரு சர்வே வைத்திருந்தோம்...அதில் வந்த முடிவுகள்..

தாத்தா வரை தெரியும் என 27 சத ஓட்டுக்களும், தாத்தாவின் அப்பா வரை தெரியும் என 36 சத ஓட்டுக்களும், தாத்தாவின் தாத்தா வரை தெரியும் என 18 சத ஓட்டுக்களும், அதற்கு மேல் தெரியும் என 11 மற்றும் 10 சத ஓட்டுக்களும் கிடைத்துள்ளன... மேலும் விபரங்களுக்கு

Wednesday, September 10, 2008

சாபமாகிப் போன பெற்றோர்கள் பிள்ளைகள் உறவு - கால ஓட்டத்தில் காணாமல் போன அன்பு

.
.

தற்போதைய அவசர உலகத்தின் அதி வேகமான, பொருளாதாரத்தை மட்டுமே நம்பிக்கையாகக் கொண்ட கால ஓட்டத்தில் மறந்து விட்ட, அல்லது மறக்க வைக்கப்பட்ட விடயங்களைத் தொடர்ச்சியாக பதிவர்கள் தொடர் விளையாட்டில் எழுதி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சகோதரப் பதிவர் வடகரை வேலன் அவர்களின் இந்த இடுகையில் என்னையும் டேக் செய்து இருந்தார். எனது பார்வையில் கால ஓட்டத்தில் நான் எடுத்துக் கொண்ட விடயங்கள் இருந்தனவா? என்று தெரியாத சூழலிலும் இந்த இடுகையின் விடயத்தை கருப் பொருளாக எடுத்துக் கொண்டுள்ளேன்.

இன்றைய ரெடிமேடான பாஸ்ட் புட் உலகில் மாறி விட்டதாக நான் கருதும் பெரிய விடயம் பெற்றோர் - குழந்தைகளுக்கு இடையேயான உறவுதான். குழந்தைகள் என்ற சிறு வயது குழந்தைகளைச் சொல்லவில்லை. பெற்றோர்களின் பிள்ளைகள் அனைவரும் அவர்களுக்கு குழந்தைகள்.

நான் எடுத்துக் கொண்ட விடயத்தை சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வெகுவாக தொட்டு சென்று இருப்பார்கள். ஆனாலும் அதில் கமர்சியலான விடயங்களே நமக்கு காட்டப்பட்டதாகவும், செண்டிமெண்டான விடயங்கள் விடுபட்டதாகவுமே நான் கருதுகின்றேன்.

இரத்த உறவுகளில் மிகவும் பெரிய உறவு பெற்றோர் குழந்தைகள் உறவே. இந்த இரு சாராருக்கும் இடையே உள்ள கடமைகள், உரிமைகள் இவற்றால் விளைவுகள் பிரச்சினைகள் அனைத்தும் ஒவ்வொரு வீட்டிலும் இருப்பவையே.

முன்னரெல்லாம் பள்ளிப்படிப்பு என்பது காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை என்று இருக்கும். அதே போல் பெற்றோர்களுக்கும் வேலை செய்பவர்களாக இருப்பின் காலை 9 முதல் 5 மணி வரையே இருக்கும். இருட்டி விட்டால் வீடு தான். சொந்த தொழில் செய்பவர்கள் கூட இரவு 8 மணிக்கு எல்லாம் கடையை மூடி விட்டு வந்து விடுவார்கள்.

ஆனால் இன்றைய ஏட்டுச் சுரைக்காய் படிப்புக்கான உலகில் காலை 7:30 க்கு பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மாலை 5 மணி வரை பள்லியில் இருக்கின்றனர். அதற்குப் பிறகு சிறப்பு வகுப்புகள், கணிணி வகுப்புகள், வேற்று மொழி வகுப்புகள், நடன வகுப்புகள், கராத்தே வகுப்புகள் என இரவு 8,9 மணி வரை பிஸியாகவே இருக்கின்றனர்.

பெற்றோர்களும் இரவு 10,11 மணிக்கு பணி முடிந்து திரும்புதலும் அதிகரித்துள்ளன. வியாபார நிறுவனங்கள் இரவு 12 மணி வரை திறந்து இருக்கின்றன. இரவு முழுவதும் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நகர வாழ்க்கை என்ற வியாதி இன்று கிராமங்களையும் தொட்டு விட்டன. மாலை நேரங்களில் வீட்டிற்கு வெளியே முற்றங்களில் பிள்ளைகளை விட்டு விட்டு ஊரில் இருப்பவர்களுடன் கதைகள் பேசிக் களித்துக் கொண்டிருந்த நம் வீட்டுப் பெண்கள் அந்த வேளைகளில் சின்னத்திரை சீரியல்களில் மூழ்கி கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கின்றனர். குடும்ப உறவுகளுக்குள் கொலை, பழி வாங்குதல், திட்டுமிட்டு கெடுதி செய்தல் போன்றவை மாலை வேளைகளில் வீட்டில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

காலை நேரங்களில் குழந்தைகள் பள்ளிக்கு கிளம்பும் நேரங்களில் பெற்றோர்கள் நன்றாக உறங்கிக் கொண்டு இருப்பதைக் காண முடிகின்றது. இப்படியான சூழலில்களில் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்குமான இடைவெளிகள் பெருகிக் கொண்டே வருகின்றன. தந்தையைப் பார்த்து பேசுவதே பல குழந்தைகளுக்கு அபூர்வமாகி விட்டன.

பெற்றோர்களின் மனநிலையிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மகன் அல்லது மகளுக்கு நல்ல ஆடை, தரமான கல்வி, பாக்கெட் மணி இவைகளை கொடுப்பது தான் கடமை என்ற நிலைக்கு வந்து விட்டனர். குழந்தைகளுக்கு ரோல் மாடலாக இருப்பதற்கு தகுதி பெற்றவர்கள் பெற்றோர் மட்டுமே.

ஆனால் இன்றைய சூழலில் பிள்ளைகளின் விருப்பு, வெறுப்புகளைப் பற்றி சிந்திக்க பெற்றோர்களுக்கு நேரமில்லை அல்லது அவர்களே முடிவுகளை எடுத்து விட்டு பிள்ளைகளின் மீது தங்களது முடிவுகளைத் திணிக்கின்றனர். இவைகள் இன்றைய சமூக சூழலில் ஆபத்தாக முடியப் போகின்றன, சுதந்திரம் என்ற பெயரிலும், பிரைவசி என்ற பெயரிலும் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் இடையே விழுந்துள்ள இடைவெளியானது நமது சமூகத்திற்கு கேடாக முடியப் போகின்றன.

சமீபத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் 12 வயதுக்கு மேற்ப்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கு மன அழுத்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சமூக மாற்றங்களாலேயே இது நிகழ்ந்துள்ளது. இந்த சமூக நோய் நம் நாட்டிலும் படிப்படியாக ஆரம்பமாகி விட்டது.

பொதுவாக பிரச்சினைகளி உருவாகும் போது அனைவரும் பெற்றோர்களின் கருத்துக்களுக்கே துணை நிற்கின்றனர். பிள்ளைகளுக்கும் மனம் இருக்கின்றது என்பதை மறந்து விடுகின்றனர். அவர்களுடைய ஆசாபாசங்கள் அனைத்தும் குழி தோண்டி புதைக்கப்பட்டு விடுகின்றன. சந்தோஷ் சுப்ரமணீயத்தின் பிரகாஷ் ராஜ் போல் அனைவரும் பேசிய உடன் திருந்தி விடுவது இல்லை.

சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு... எனது நண்பர் ஒருவன் நிறைய உறுப்பினர்களைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவன். கொஞ்சம் அமைதியானவன். அதே நேரம் நல்ல திறமைசாலி. அவனது அமைதியான சுபாவமே அவனுக்கு எதிரியாக மாறி விட்டது. மந்தகாசமானவன், எதற்கும் லாயக்கில்லாதன், சோம்பேறி, என்று வீட்டில் இருப்பவர்களால் எப்போதும் திட்டுகளுடனேயே வளர்ந்தவன். இதுவே அவனது மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டது.

ஆனாலும் வாழ்க்கைச் சக்கரத்தின் சுழற்சியால் அந்த குடும்பத்தில் நன்றாக சம்பாதித்து வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடியவனாக மாறி விட்டான். ஆனாலும் அவனது அடி மனதில் அவனது அவமானங்கள் மட்டும் மாறாமல் இருந்து வந்தது. அவனுக்கு திருமணமும் ஆகி குழந்தைகளும் ஆகி இருந்த நேரம், வீட்டில் நிலவிய சிறுசிறு சச்சரவுகள், மற்றும் குடும்பம் பெரிதாகிக் கொண்டே சென்றதால் நிலவிய இடப்பற்றாக்குறைகள் அவனை வேறு வீட்டிற்கு தனியாக போக வேண்டிய நிலைக்கு தள்ளியது.

முதலில் பெற்றோர்களிடம் பேசி அதற்கான ஏற்பாடுகளையும் செய்தான். ஆனால் வீடு மாறிப் போகும் நேரத்தில், குடும்பத்தில் இருக்கும் சில புல்லுருவிகள் தங்களது வேலைக் காட்டி விட்டனர். இதனால் வீட்டிற்குள் எழுந்த சிறு சண்டையில் எனது நண்பன் பொங்கி விட்டான். தனது மனதில் பல ஆண்டுகளாக இருந்த ஆற்றாமைகளை ச.சுபரமணிய ஜெயம் ரவி போல கொட்டி விட்டான். அந்த அரை மணி நேரப் பேச்சு அவனது வாழ்க்கையையே புரட்டிப் போட்டு விட்டது.

அவனது பெற்றோர்கள் அவனது உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், வளர்த்தோம், படிக்க வைத்தோம், திருமணம் முடித்து வைத்தோம், இப்படி சொல்லி விட்டானே?.. இவன் நாசமாகப் போக, விளங்காமல் போக என்று சாபங்களை அள்ளி வீசி விட்டனர். அது மட்டுமின்றி இவற்றிற்கு காரணம் அவனது மனைவி தான் என்று கூறி அவளது ஒழுக்கத்திற்கு குந்தகம் விளைவிப்பது போன்று பேசி விட்டனர்.

அது மட்டுமின்றி சொந்த பந்தங்கள் அனைவரிடமும் அவனைப் பற்றி தரக்குறைவாகவும், அவமானப் படுத்துவது போலவும் பேசி வந்தனர். ஏற்கனவே சென்டிமென்டான என் நண்பர் இந்த நிகழ்ச்சிகளால் பெரிதும் மனமுடைந்து போனான். உறவினர்களின் விசேஷங்களுக்கு போனால் கூட அவன் ஏதோ ஒரு கொலைக் குற்றவாளி போலவே பார்க்கப்பட்டான். கடைசியில் அவனுக்கு கவுன்சிலிங் செய்து சரி செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

நான் சொல்ல வருவது அனைத்து பெற்றோர்களையும் அல்ல.... பெற்ற பிள்ளைகளின் மனதைக் கூட அறிய இயலாத பெற்றோர்களைப் பற்றியே. இதில் பிள்ளைகள் எல்லாம் சரியானவர்கள் எனவும் சொல்ல வரவில்லை. அவர்களிடமும் தவறு இருக்கலாம். ஆனால் பிள்ளைகளை வளர்க்கும் முறை பெற்றோர்களுக்கு உரியது. வெறும் படிப்பு, ஆடைகள் மட்டுமே பிள்ளைகளுக்கு நாம் தர வேண்டியது என்ற கருத்தில் இருந்து மாற வேண்டும். அன்பும், அரவணைப்பும், அனைவரையும் சமமாக நடத்துவதுமே அவர்களை நன்றாக மிளிரச் செய்யும். பெற்றோர்களுக்கு வயதாகும் போது அவர்களிடம் பாசத்தை மிகவும் அதிகரிக்கச் செய்யும்.

இறுதியாக சொல்ல வருவது இது தான்..... பணம், வியாபாரம் என்று அலைந்து பிள்ளைகளுக்கு செலுத்த வேண்டிய அன்பில் கோட்டை விட்டு விடக் கூடாது. அவர்களுக்கு முக்கியமான ரோல் மாடம் பெற்றோர்கள் தான். பிள்ளைகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். அவர்களது மனதில் இருக்கும் ஆசைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். பொருளாதார ரீதியில் நம்மால் முடியாததை அவர்களுக்கு உணர்த்தினாலே புரிந்து கொள்வார்கள். அன்பை அளிக்க ஏதும் பணம் தேவையில்லை.

டிஸ்கி : எழுத வந்ததற்கும் எழுதியதற்கும் தொடர்பு இல்லாததைப் போல் உணர்கிறேன்.... ஆனால் சொல்ல வந்த கருத்தை சொல்லி விட்டேன். கால ஓட்டத்தின் அதிவேக சுழற்சியில் பெற்றோர்கள், பிள்ளைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்துக் கொண்டே போவது நமது சமூகத்தை ஒரு மன அழுத்தக்காரர்களின் சமூகமாக மாற்றி வைத்து விடும் என்பதே அது.

இந்த தொடர் ஓட்ட ஜோதியை நண்பர்கள் ஆயில்யன், நிஜமா நல்லவன் ஆகியோர் தொடர வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

Monday, September 8, 2008

அழைப்பு : சவுதி ஜெத்தாவில் முதல் பதிவர்கள் சந்திப்பு


அன்பிற்கினிய வலையுலக நண்பர்களே!
உலகில் பல கோடியில் இருக்கும் தமிழ் பதிவர்களும் அவ்வப்போது சந்தித்து கொண்டு தங்களுக்குள் கருத்து(?) பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். அவைகள் பதிவர் சந்திப்புகளாக மிளிர்கின்றன.

அதன் தொடர்ச்சியாக நாங்கள் இருக்கும் சவுதி அரேபியாவில் பதிவர்கள் சந்திப்பை நடத்த தீர்மானித்துள்ளோம். நாங்கள் என்பது தமிழ் பிரியனாகிய நானும், காதல் இளவரசனும், பெண்மையிடம் தோற்றுப் போய் இங்கு தஞ்சம் புகுந்துள்ள கவிஞர் தமிழன்... ஆகிய இருவர் மட்டுமே.... ;)

ரமழான் நோன்புகள் வரும் செப்டம்பர் 29 அல்லது 30 தேதியில் முடியும். அதனைத் தொடர்ந்து வரும் ஈகைப் பெருநாள் விடுமுறைகளில் இந்த சந்திப்பை வைத்துக் கொள்ளலாம் என எண்ணியுள்ளோம். (அக்டோபர் 1 வியாழன்).

ஜித்தாவில் இருந்து ஒரு திசையில் 200 கி.மீ தொலைவில் இருக்கும் நானும், மற்றொரு திசையில் 150 கி.மீ தொலைவில் இருக்கும் தமிழனும்... பொதுவாக ஜித்தா மாநகரில் சந்திக்க தீர்மானித்துள்ளோம். இந்த சந்திப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் எனது மின்னஞ்சலில் தொட்ர்பு கொள்ளலாம்... dginnah@gmail.com

பங்கு கொள்ள மேலும் பதிவர்கள் விரும்பும்பட்சத்தில் அனைவரின் வசதியைக் கருத்தில் கொண்டு தேதி மற்றும் இடத்தை தீர்மானித்துக் கொள்ளலாம்....

எச்சரிக்கை
தமிழனும், தமிழ் பிரியனும் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதால் இது தமிழை இணையத்தில் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் முயற்சி என நினைத்து வந்து ஏமாற வேண்டாம். இது முழுக்க முழுக்க மொக்கை, கும்மி சந்திப்பு தான்... ;)

Friday, September 5, 2008

கலவையான சிந்தனை - 05 - 09 - 2008


.
கலவை 1

கடந்த சில மாதங்களாக காலை நேரங்களில் சோர்வாகவும், தலை சுற்றலும் இருந்து வருகின்றது. எங்கள் நிறுவனத்தின் மருத்துவரை அணுக மாய்ச்சல்பட்டுக் கொண்டு இருந்தேன். சென்ற வாரம் அவரைப் பார்த்த போது இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகக் கூறினார். ( 95/ 70 mmHg). உப்பு போட்டு (?) நன்றாக சாப்பிடுமாறும், நிறைய தண்ணீர் குடிக்குமாறும், உடற்பயிற்சிகள் மேற்கொள்ளுமாறும் கூறியுள்ளார். நானும் இவைகளில் கவனம் செலுத்துவதாக கூறி வந்து விட்டேன். மேலும் மனதளவில் குடும்ப கவலைகள் ஏதுமில்லாமல் இருக்கவும் கூறினார்............ பார்ப்போம்....:)

கலவை 2
இரண்டு தொழில் நுட்ப நண்பர்கள் பேசிக் கொண்டு இருந்தனர்

நண்பர் 1 : எதையாவது அளவீடு செய்யும் முறை தெரியுமா?

நண்பர் 2 : எது? இந்த லிட்டர், கிலோ போலவா?

நண்பர் 1 : ஆமாம். அது போல தான் வேற ஏதாவது தெரியுமா?

நண்பர் 2 : (யோசனையுடன்) மீட்டர், ஸ்கொயர் மீட்டர், செல்சியஸ்...ம்ம்ம்ம்ம்

நண்பர் 1 : போதும்.... இப்ப 100 லிட்டர் பாலும் , 100 லிட்டர் பாலும் சேர்ந்தா என்ன ஆகும்?

நண்பர் 2 : 200 லிட்டர் பாலாகிடும்

நண்பர் 1: 100 கிலோ அரிசியும், 100 கிலோ அரிசியும்சேர்ந்தா?

நண்பர் 2 : 200 கிலோ அரிசி

நண்பர் 1 : 100 மீட்டர் நீளமும் , 100 மீட்டர் நீளமும் சேர்ந்தா?

நண்பர் 2 : 200 மீட்டர் நீளம்

நண்பர் 1 : 100 சதுர அடி இடமும், 100 சதுர அடி இடமும் சேர்ந்தா?

நண்பர் 2 : 200 சதுர அடி இடம்

நண்பர் 1 : ஒரே அளவுள்ள குழாயில் வரும் 100 செல்சியஸ் தண்ணீரும் , 100 செல்சியஸ் தண்ணீரும் அதே அளவுள்ள குழாய் வழியாக இணைந்து வெளியேறும் போது?
நண்பர் 2 : 100 செல்சியஸ் தண்ணீர் தான்

நண்பர் 1 : ஏன் 200 செல்சியஸ் இல்லாம 100 தான் இருக்கும்?

(இதுக்கு விடை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லி விட்டு போகலாம்)

கலவை 3

பொதுவாக நான் கண்ணீர் சிந்துவதில்லை. எந்த காரணிகளும் என்னை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஆனால் ஓரிரண்டு ஆண்டுகளாக அதில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது. இரக்கம், வருத்தம், நினைவுகள் என மனதை பாதிக்கின்றன. ஆனாலும் திரைப்படங்களைப் பார்க்கும் போது இவை ஏற்படுவதில்லை. அதே போல் பதிவுகளும் என்னை உணர்ச்சி வசப்படச் செய்வதில்லை.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பதிவுகளில் இருக்கிறேன். பழைய பதிவர்களின் பதிவுகள், மூத்த பதிவர்களின் பதிவுகள், புதிய பதிவர்களின் பதிவுகள் என ஓரளவு வாசிப்பனுபவம் உள்ளது. அதில் இரண்டு இடுகைகள் மட்டுமே கண்ணீரை சாரை சாரையாக வரவழைத்து விட்டன. அவைகள் இரண்டும் உண்மையில் நம் பதிவர்களின் வாழ்வில் நடந்த கொடூரங்கள். ஒன்று அனுராதா அம்மா அவர்களின் கடைசி கணங்களின் பதிவு. இன்னொன்று அண்ணாச்சியின் ஒரு பதிவு.

கலவை 4

சமீபத்தில் ஒரு மூத்த வலையுலக நண்பருடன் சாட் செய்த போது இடுகைக்கு தலைப்பு வைப்பது தொடர்பாக பேசினோம். அப்போது அந்த நண்பர் எதிர்மறைச் சொற்களை வைக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். எனக்கு இந்த அமங்கலச் சொற்கள் (இல்லை, அற்ற, இயலாத, முடியாத, அல்லது கவலையான, சோகம் தரும் சொற்கள்) என்பதில் நம்பிக்கை இல்லை என்றாலும் நண்பரின் கருத்துக்காக தலைப்பை மாற்றி வைத்தேன்.

அந்த பேச்சினூடே எனது திருமண அழைப்பிதழ் நினைவுக்கு வந்தது. பொதுவாக முஸ்லிம்கள் நிக்காஹ் என்னும் திருமண அழைப்பிதழ் என்றே தலைப்பிடுவார்கள். ஆனால் எனது திருமணத்திற்கு வரதட்சணையற்ற நபிவழி திருமண அழைப்பிதழ் ஆனால் என்றே அடித்தோம். வரதட்சணை என்ற பெயரில் பணமோ, பொருளோ, வீட்டு உபயோகப் பொருட்களோ (பீரோ, கட்டில், இத்யாதிகள்) எதுவும் வாங்கவில்லை.

எங்களது செலவில் திருமணம் முடித்து, வந்தவர்கள் அனைவருக்கும் எங்களது செலவிலேயே திருமண விருந்தும் அளித்தோம். அதையும் அழைப்பிதழில் தெரியப்படுத்தி இருந்தோம்.





மாற்றங்கள் மட்டுமே மாற்றம் இல்லாதவை.




கொசுறுக் கலவை

உலக நாடுகளின் கரன்சி நோட்டுகள்... பார்க்கவாவது செய்யலாமே!





டிஸ்கி 1 : வியாழன், வெள்ளி இரண்டு நாளும் புனித மெக்கா, மதினாவுக்கு புனித பயணம் மேற்கொள்வதால் இந்த இடுகை நண்பர் ஆயில்யனால் வெளியிடப்பட்டுள்ளது. நண்பருக்கு நன்றிகள்!
டிஸ்கி 2 : முதலில் உள்ள படம் நோன்பு மாதங்களில் பெரும்பாலான வளைகுடா நிறுவன ஊழியர்களின் அலுவலக பணி!

Wednesday, September 3, 2008

सुहानी रात ढल चुकी! न जाने तुम कब आओगी

திரைப்படப் பாடல்கள் கேட்கும் பழக்கம் மிகவும் குறைவு. இந்தி மொழிப் பாடல்களை அவ்வப்போது கேட்பது உண்டு. (புதிய டப்பாங் குத்துகள் அல்ல)
அவ்வப்போது கேட்கும் பாடல். குறிப்பாக அமைதியான ஏகாந்த இரவுகளில் கேட்கும் பாடல்.
கேட்டுப் பாருங்கள்.

Film : Dulari
Year : 1949
Singer : Mohd Rafi
Music : Naushad

Suhani Raat Dhal Chuki, Na Jaane Tum Kab Aavoge,
Jahan Ki Rut Badal Chuki, Na Jaane Tum Kab Aavoge,

Nazare Apni Mastiyan, Luta Lutake Sogaye,
Sitaare Apni Roshani, Dikha Dikhake Sogaye,
Har Ek Shamma Jal Chuki, Na Jaane Tum Kab Aavoge,

Tadap Rahen Hein Ham Yahan, Tumhare Intazaar Mein,
Khisan Ka Rang, Aa-chala Hai, Mausam-e-bahaar Mein, (2)
Hawa Bhi Rukh Badal Chuki, Na Jaane Tum Kab Aavoge,

Suhani Raat Dhal Chuki, Na Jaane Tum Kab Aavoge,
Jahan Ki Rut Badal Chuki, Na Jaane Tum Kab Aavoge

Tuesday, September 2, 2008

அறிவியல் கதை - இந்திய தேச பிரிவினைக்கு யார் காரணம்?

அந்த கருத்தரங்கமே அதகளமாகிக் கொண்டு இருந்தது. அறிவியல் ஆய்வாளர் தமிழ் எழிலன் அப்போது தான் மேடைக்கு வந்து இருந்தார். உள்ளே பத்திரிக்கையாளார்களும், ஆய்வாளர்களும் மிகவும் பரபரப்பாக இருந்தனர். இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப வேண்டி பல தொலைக்காட்சி சேனல்களும் தங்களது குடை தாங்கிய வாகனங்களை வெளியே நிறுத்தி இருந்தன.

புகைப்படக்காரர்களின் தொடர்ச்சியான ஒளி உமிழ்தல்களால் குளிர் சாதன வசதியையும் மீறி அந்த கருத்தரங்கம் வெப்பமாக இருப்பதை உணர முடிந்தது. ஒலி வாங்கிக்கு முன் வந்த தமிழ் எழிலன் தனது தொண்டையை செருமினார். அந்த செருமலுக்கு கட்டுப்பட்டு சலசலப்பு உடனே அடங்கியது. தமிழ் எழிலன் பேசத் தொடங்கினார்.

என் இனிய உலக மக்களுக்கு, எனது அன்பான வணக்கங்கள்! நாங்கள் மேற் கொண்டுள்ள இந்த முயற்சி ஒரு வித்தியாசமானது. முயற்சிகள் என்பது பொதுவாக புதிய விடயங்களைக் கண்டுபிடிப்பதே. ஆனால் எங்களது இந்த முயற்சி பழையவைகளை கண்டுபிடிப்பதாகும்.


பழைய விடயங்களைக் கண்டுபிடிப்பதிலும் பல வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் மண்ணில் புதைந்து போன ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போன நூற்றாண்டில் தமிழகத்தின் கீழ் பகுதியில் கடல் கோளினால் மூழ்கடிக்கப்பட்ட லெமூரியா கண்டம் கண்டுபிடிக்கப்பட்டு நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


அதே போல் எங்களது கண்டுபிடிப்பது மாயமாகி விட்ட, வரவே இயலாத என்று பல நூற்றாண்டுகளாக கருதப்பட்ட விடயங்களை கண்டுபிடித்து உங்களுக்கு தருவது தான் எங்களது ஆராய்ச்சிகள்.


உங்களுக்கு சுருக்கமாக எங்களது ஆராய்ச்சியை விளக்குகிறேன். நாம் பேசக் கூடிய பேச்சு உங்களுக்கு வந்து சென்றடைவது அறிவியல் விடயம் தான். நான் பேசும் பேச்சுக்கள் ஒலி அலைகளாக மாறி உங்களை வந்து அடைகின்றது. இது இங்கு உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியே வரும். இல்லையென்றால் ஒவ்வொருவருக்கும் நான் பேசுவது வெவ்வேறாக வந்தால் நான் பேசுவதை புரிந்து கொள்ள இயலாது.


இந்த ஒலி அலைகள் உங்களை வந்து அடைய ஒரு ஊடகம் தேவை. அந்த ஊடகமாக செயல்படுவது தான் காற்று. இங்கு பத்து பேர் இருந்தாலும், ஆயிரம் பேர் இருந்தாலும் நான் பேசும் ஒலியின் அளவைப் பொறுத்து அனைவரையும் சென்றடையும்.


இந்த ஒலி அலைகள் காற்றில் மிதந்து வந்து உங்களைச் சென்றடைகின்றன. இன்று நான் பேசிய பேச்சின் ஒலி அலைகள் பல ஆண்டுகளுக்கு இங்கு காற்றின் சுழற்சிக்கு தகுந்தாற் போல் இருக்கும். எதிரொலி என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதை வைத்து வவ்வால் போன்றவை சுவர்களில் மோதாமல் பறக்கின்றன. இனி விடயத்திற்கு வருகிறோம்.


பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் காற்றில் கலந்து கிடக்கின்றன. இவைகளை காற்றில் இருந்து பிரித்து எடுத்தால், பழைய காலத்தில் பேசிய பேச்சுக்களை நாம் அறிந்து கொள்ளலாம்.


சமீபத்தில் இது போல் பல பேச்சுக்களை நாம் பிரித்து எடுத்துள்ளோம். சென்ற இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள் செய்து கொண்ட பேரங்கள், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் நடந்த உடன்படிக்கைகளை எல்லாம் நாம் உங்களுக்கு அளித்து ஆச்சர்யமளித்துள்ளோம். பல அறிய வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் உங்களுக்கு காட்டியுள்ளோம்.


நாங்கள் பல மாதங்களாக கடும் முயற்சி செய்து இந்த விடயத்தைக் கண்டுபிடித்துள்ளோம். அதாவது 1947 க்கு முன் இந்தியா என்பது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் சீனாவிடம் இருந்து சமீபத்தில் கைப்பற்றப்பட்ட கஷ்மீரின் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பின்னர் சுதந்திர போராட்டங்களின் உச்சத்தில் அது இந்தியா, மற்றும் பாகிஸ்தான் என்ற இரண்டாக பிரிக்கப்பட்டது.


இதற்கு பலரும் பல தலைவர்களை காரணமாகச் சொல்கின்றனர். ஆனால் உண்மையான காரணங்களைக் கண்டறிய வேண்டும் என்பதற்காக காற்றில் பரவிக் கிடக்கும் கார்பன் துகள்களில் இருந்து, பிரிவினைக்கு காரணமானவர்கள் யார்? அவர்கள் பேசிய பேச்சுக்கள் என்ன? என்பதை எல்லாம் தெளிவாக எடுத்து விட்டோம்.


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒலிப்பேழையே நான் மட்டுமே கேட்டுள்ளேன். இதை உலகில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் கேட்க வேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்புக்கும், நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.


இது வரை பேசி விட்டு அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டார். தனது முகத்தில் வழியும் முத்து முத்தான வியர்வைகளை துடைத்துக் கொண்டாள். தனது அருகில் இருந்த கணிணியில் இருந்து பழைய பேச்சுக்கள் அடங்கிய கோப்பை ஒலிபரப்ப ஆரம்பித்தார். கொஞ்சம் கரகரப்பாக ஆரம்பித்த ஒலிகள் சிறிது நேரத்தில் தெளிவாக வர ஆரம்பித்தன.


இதற்குள் வெளியே துப்பாக்கிகளின் ஓசைகள் கேட்க ஆரம்பித்து இருந்தன. திமுதிமுவென உள்ளே நுழைந்த 20 பேர் அடங்கிய அந்த குழுவினரின் கரங்களில் அதி நவீன துப்பாக்கிகள் இருந்தன. வந்தவர்கள் பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் வெளியே விரட்டினர்.


அவர்களின் தலைவர் போல் இருந்தவர் நேராக தமிழ் எழிலனுக்கு முன் வந்து கைகளில் விலங்குகளை இட்டார். பின்னர் மைக்கிற்கு முன் வந்த அவர் “ அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! நாங்கள் மத்திய புலனாய்வுத்துறைச் சார்ந்தவர்கள். இதுவரை அறிவியல் அறிஞர் தமிழ் எழிலன் பல அற்புத கண்டுபிடிப்புகளைத் தந்துள்ளார்கள். ஆனால் இப்போது அவரது மூளையில் ஏற்பட்ட கோளாறுகளால் இது போன்று பிதற்றி உங்களை ஏமாற்றி விட்டார். ஆகவே இவரை கைது செய்து பைத்தியக்கார மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றோம். தடங்கலுக்கு வருந்துகிறோம்”


தமிழ் எழிலன் “நான் சொல்வது அனைத்தும் உண்மை... அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னை பைத்தியம் என்கின்றனர். விடுங்கள்! எனது அறிய கண்டுபிடிப்பை உலகுக்கு சொல்ல வேண்டும்” எனக் கதற ஆரம்பித்து இருந்தார்.


புலனாய்வுத் தலைவர் தன்னிடம் இருந்த இயந்திரத் துப்பாக்கியால் அந்த கணிணியை சரமாரியாக சுட, அதில் இருந்த வரலாற்று உண்மைகள் எரியத் தொடங்கி இருந்தன.