Sunday, November 11, 2007

குர்ஆன் ஏன் அரபியில் அருளப்பட்டது?

உலகம் முழுவதற்கும் வழிகாட்ட அருளப்படும் வேதம் அரபு மொழியில் ஏன் அருளப்பட வேண்டும் என்று சிலர் கருதலாம்.
அரபு மொழி தான் தேவ மொழி என்பதோ அது தான் உலகிலேயே உயர்ந்த மொழி என்பதோ இதற்குக் காரணம் அல்ல. எல்லா மொழிகளும் சமமானவை என்றே இஸ்லாம் கூறுகிறது. மொழியின் அடிப்படையில் எவரும் உயர்வு தாழ்வு கற்பிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கொள்கை.
இஸ்லாம் அரபு மக்களுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள அனைத்து மொழி பேசுவோருக்காகவும் அருளப்பட்ட வாழ்க்கை நெறியாகும். பல்வேறு மொழி பேசும் மக்களுக்கு ஒரு வழிகாட்டு நெறியைக் கொடுத்து ஒரு வழிகாட்டியை அனுப்பும் போது ஏதாவது ஒரு மொழியில் தான் கொடுத்தனுப்ப முடியும். எந்த மொழியில் அந்த வழிகாட்டு நெறி இருந்தாலும் மற்ற மொழியைப் பேசுவோர் இது குறித்து கேள்வி எழுப்புவார்கள்.
யாராலும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாதவாறு இதற்கு ஒரு ஏற்பாடு செய்ய முடியாது. அரபு மொழிக்குப் பதிலாக தமிழ் மொழியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டிருந்தால் இதே கேள்வியை மற்ற மொழி பேசும் மக்கள் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.
எனவே உலக ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு செய்யப்படும் காரியங்களில் மொழி உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக ஒருமைப்பாட்டைச் சிதைத்து விடக் கூடாது.
நாம் வாழுகின்ற இந்திய நாட்டில் பல்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் நமது நாட்டிற்கு ஒரு தேசிய கீதத்தை வங்காள மொழியில் உருவாக்கி அதை அனைத்து மொழியினரும் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொண்டிருப்பதால் இந்தியாவிலேயே முதன்மையான மொழி வங்காள மொழி தான் என்றோ மற்ற மொழிகள் தரம் குறைந்தவை என்றோ ஆகாது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக மொழி உணர்வை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு, அந்நிய மொழியை ஏற்றுக் கொள்ளும் போது உலக ஒருமைப்பாட்டுக்காகவும், உலக மக்கள் அனைவரும் ஒரே நல்வழியை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் மிகச் சில விஷயங்களில் மொழி உணர்வை ஒதுக்கி வைப்பதால் மனித குலத்துக்கு எந்தக் கேடும் ஏற்படாது. மாறாக உலகளாவிய ஒற்றுமை எனும் மாபெரும் நன்மை தான் ஏற்படும்.
ஏதாவது ஒரு மொழியில் தான் உலகளாவிய ஒரு தலைவரை அனுப்ப முடியும் என்ற அடிப்படையில் தான் நபிகள் நாயகத்திற்குத் தெரிந்த அவர்களுடைய தாய் மொழியான அரபு மொழியில் குர்ஆன் அருளப்பட்டது. உலகிலேயே அரபு மொழி தான் சிறந்த மொழி என்பதற்காக அரபு மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை.

Friday, October 19, 2007

நல்லாசிரியரைப் பாருங்கள்

கேரள மாநிலம் குற்றீச்சலைச் சேர்ந்தவர் ஆசிரியை லலிதா. 1997 ல் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர் கடந்த பத்து ஆண்டுகளாக ஆசிரியை தொழில் செய்து வருகிறார். இவர் வேலை செய்யும் இடம் தான் விஷேசம். என்னவென்று கேட்கிறீர்களா? இவர் கல்வி கற்பித்துக் கொடுப்பது மலை வாழ் ஆதிவாசிகளுக்கு. இவர் வேலை செய்யும் இடத்திற்கு பேருந்து வசதி கூட கிடையாது. எனவே இவர் சுமார் 12 கி.மீ தூரம் நடந்து தனது பள்ளிக்கு செல்கிறார். இந்த மலை வாழ் மக்கள் முதல் முதலாக இந்த தலைமுறையில் தான் கல்வி கற்கின்றனர். இந்த ஆசிரியை பாராட்டப்பட வேண்டியவர் தானே?

மாதங்கி கவிதைகள்





பெண் குழந்தை

இரண்டாவது பிரசவத்திலும்
ஆண் குழந்தை
என்று குமுறி அழுதவளே!

காத்திரு
உன் அன்பையெல்லாம்
சேர்த்திரு.

உன்னிடம்
இரண்டு பெண்கள்
நிச்சயம் வருவார்கள்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப்
பின்பு.

சமத்துவம்

எங்கள் வீட்டில்
இருவருக்கும்
முடிவெடுக்க
உரிமை உண்டு.

வீடு, நிலம், சேமிப்பு
இதெல்லாம்
அவர் பொறுப்பு.

பள்ளிக்கூடச் செலவுகள்
படுக்கைத் தலையணை உறைகள்,
துணிமணி தேர்வுசெய்வது
நான் என்றாயே தோழி

திருமணமானவுடன்
உன் பொருளாதாரப் பட்டத்தையும்
உன் வீட்டில்
விட்டுவிட்டாயா?

அறியாமை

இந்த வரிகளை நீங்கள்

வாசிக்கும் தருணம்

எங்காவது மழை பெய்யலாம்

யாராவது அன்னா அக்மதோவா படிக்கலாம்

யாரோ சரவணன் கடன் கேக்கலாம்

வாகனம் பழுதாகலாம்

யாராவது கல்யாணம் பண்ணலாம்

பட்டாம் பூச்சியின் படபடப்போடு

மரணம் யார் மீதாவது

பறந்து போகலாம்

ஆண் பிள்ளையாய் எவனாவது

மனைவியை அடிக்கலாம்

எது வேண்டுமானால் நிகழலாம்

என்றாலும்

அடுத்த கவிதையின் முதல் வரியை

நான் எழுதுவேன்

அடுத்த பக்கத்துக்கு நீங்கள்

செல்வீர்கள்

தவற விட்டவை

ஏராளமுண்டு என்னிடம்

மகனின் இருப்பை

பால்யத்தின் தத்துவத்தை

மனசின் தட்டானை

முகவரியற்ற தண்டவாளத்தின்

தனிமையை……………..

கூழாங்கற்களின் மேல்

பரவிச் செல்லும் நீரைப் போல்

சேகரித்து வைத்தவை

என்னைத் தவிர

வேறோன்றுமில்லை

பகலே இல்லாத இரவை

யார் நேசிப்பது

வெயில் அற்ற மழையில்

யார் நனைவது?

எப்போதாவது தோன்றினால்

மட்டுமே வானவில்

நீ நடந்து போகும் வழியில்

கசங்கி விழும் வெயில்

வழி விடுகிறது நினைவுகளாய்

உனக்கும் எனக்குமான

நிகழ்காலத்துக்குள்

எப்படி வந்தன

கடந்த கால நிழல்கள்

வலைப்பின்னல் போல்

உன் பொய்கள்

முகமுடி கிழியும்

வார்த்தைகளின் இடுக்குகளில்

சிதைகிறது என் மேலான நேசம்

மரனக் கிடங்கில் புன்னகைக்க

வேண்டுமென வேண்டிக்கொள்

முடிந்தால் நாளையாவது? - ஆ.வி ... தமயந்தி


Thursday, October 18, 2007

யாரப்பா இதில கெட்டிக்காரன் ?

அய்யா இந்த கதையைக் கேளுங்க,
நம்ம தமிழ்நாட்டுல லாட்டரி சீட்டை ஒழிச்சுட்டாங்களாம்ப்பா, சரி நல்ல விஷயம் தானே, அதுவும் நடந்து பல வருஷம் ஆச்சேனு சொல்றீங்களா! அங்க தானே சாமி விஷயமே இருக்கு. இப்ப தமிழ்நாட்ல திரும்பவும் லாட்டரியைக் கொண்டு வந்துட்டாங்கப்பா! அட கூறுகெட்ட கூமுட்டை. எங்கடா லாட்டரி விக்கிறாங்கன்னு கேளுங்க சாமி.
அதை அரசாங்கமே விக்கிறாங்க. தினமும் ராத்திரிக்கு நீங்கத் தூங்கப் போவீங்களாம்ல அதுக்கு முன்னாடி கலைஞர் டீவியைப் பாக்கனுமாம். அதில ஒரு நிகழ்ச்சி இருக்காம். பேரு சுத்த தமிழ்ல பிட் டு வின்னாம். என்க்கு ஒரு மண்ணும் விளங்கலை. உங்க செல்பேசில இருந்து நீங்க எவ்வளவு பந்தயம் கட்டப் போறிங்கன்னு சொல்லனுமாம். ஒரு தடவை குறுஞ்செய்தி அனுப்பினா 3 ரூபா மட்டும் போகுமாம். எத்தனை தடவை வேண்டுமானாலுல் அனுப்பலாமாம். ஒவ்வோரு தடவைக்கும் 3 ரூபா தானாம். தமிழ்நாட்ல இருக்கிற நாமேல்லாம் சரமாரியா குறுஞ்செய்தி அனுப்பினா கடைசில ஒரு ஆளுக்கு மட்டும் செல்பேசி ஒன்னைக் குடுத்துட்டு மத்த காசை எடுத்துட்டு அவன் வட நாட்டுக்கு போயிருவானாம். அப்ப இது லாட்டரி தான? மக்கா எல்லாரும் நாளைக்கு கலைஞர் டீ.வியை பாத்துட்டு குறுஞ்செய்தி அனுப்பனும். சரியா.

Saturday, August 18, 2007

பிறந்த குழந்தை கொன்ற தந்தை!! 17

பிறந்த குழந்தை கொன்ற தந்தை!!
புதன்கிழமை, அக்டோபர் 17, 2007 RSS



கடையநல்லூர்:

மனைவியுடன் அடிக்கடி சண்டை வருவதற்கும், ராசியில்லாததற்கும் பிறந்த குழந்தைதான் காரணம் என்று நினைத்ததால் ஆத்திரத்தில் குழந்தையை நானே கழுத்தை நெரித்துக் கொன்றேன் என்று குழந்தையின் தந்தை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் ரயில்வே பீடர் ரோட்டை சேர்ந்தவர் முத்துப்பாண்டி. இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேல்சாமி மகள் மகேஷ்வரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் சில நாட்கள் மட்டுமே இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதன் பிறகு கணவன் மனைவி இடையே தேவையில்லாமல் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவசத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அவருக்கு சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ஸ்ரீமதி என பெயரிட்டனர்.

குழந்தை பிறந்து 4 மாதமே ஆன நிலையில் மனைவியையும், குழந்தையையும் தனது வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக முத்துபாண்டி நேற்று முன்தினம் மாமனார் வீட்டிற்கு வந்தார். சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளதால் இன்னும் ஒரு சில மாதங்கள் கழித்து அவரை அழைத்து செல்லலாம் என்று மகேஷ்வரியின் உறவினர்கள் முத்துபாண்டியிடம் கூறினர்.

இந்நிலையில் நேற்று காலை மீண்டும் மனைவி வீட்டிற்கு சென்ற முத்துப்பாண்டி தனது வீட்டிற்கு வருமாறு மகேஷ்வரியை அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. உறவினர்கள் தலையிட்டு சமரசப்படுத்தினர்.

பின்னர் முத்துப்பாண்டி குழந்தையை மட்டும் தனது வீட்டிற்கு தூக்கி சென்றார். குழந்தையுடன் சென்ற கணவர் வெகுநேரமாகியும் வராததால் அதிர்ச்சியடைந்த மகேஷ்வரி உறவினர்களை அனுப்பி குழந்தையை தூக்கி வருமாறு கூறினார். இதையடுத்து முத்துபாண்டி வீட்டிற்கு உறவினர்கள் சென்றனர். அங்கு மூக்கில் ரத்தம் கசிந்த நிலையில் குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உறவினர்கள் போலீசில் புகார் கூறியதால், கடையநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துபாண்டியை கைது செய்தனர். விசாரணையில் போலீசாரிடம் முத்துப்பாண்டி அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,

மனைவி மகேஷ்வரி கருவுற்றிருக்கும் போதே குழந்தை ஜனித்த நேரம் சரியில்லை. கருவை கலைத்து விடுவோம் என்று கூறினேன். அதற்கு அவளும், அவளது குடும்பத்தாரும் சம்மதிக்கவில்லை. குழந்தை உருவானதில் இருந்தே எனக்கும், மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குழந்தை பிறந்ததும் ஜாதகம் பார்த்ததில் ஜோசியர் குழந்தை பிறந்த நேரத்தால் உங்கள் இருவருக்கும் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.

இந்நிலையில் ஏற்கனவே கடந்த 15ம் தேதி மனைவியையும் குழந்தையையும் அழைக்க சென்றேன். இன்னும் சில மாதங்கள் ஆகட்டும் என்று மாமனாரும், மாமியாரும் கூறி விட்டனர்.

மீண்டும் நேற்று அழைக்க சென்றேன். ஏமாற்றமே மிஞ்சியது. ஜோசியர் கூறியபடி மனைவியையும் என்னையும் பிரிப்பது குழந்தைதான் என்று நினைத்து குழந்தை மீது ஆத்திரம் வந்தது.

இந்த குழந்தை இருந்தால் குடும்பத்திற்கு நல்லதல்ல என்று நினைத்ததால் குழந்தையை என்னுடைய வீட்டிற்கு எடுத்து வந்து கழுத்தை நெரித்து கொன்றேன் ஓன வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.