இது ஒரு வித்தியாசமான தமிழ் புதிர்.. ரொம்ப சுலபம் தான்.
1. முதலில் கலைந்து இருக்கும் ஆறு வார்த்தைகளை ஒழுங்கு செய்ய வேண்டும். அவை ஆறு அர்த்தமுள்ள வார்த்தைகளைத் தரும்.
2. Refresh Final Answer Boxes என்பதைக் கிளிக் செய்தால், ஆறு வார்த்தைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட (அவை நிறம் மாற்றப்பட்டிருக்கும்) எழுத்துக்கள் கீழே வரும்.
3. கீழே உள்ளவைகளை ஒழுங்கு செய்தால் ஒரு வரி கிடைக்கும். அது தான் கடைசி விடை. இப்போது Completed என்பதைக் கிளிக் செய்தால் அருகில் உள்ள பாக்ஸில் விடை முழுவதும் வரும். அதை காப்பி பேஸ்ட் செய்து கமெண்ட் பாக்ஸில் அல்லது dginnah@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
4. எழுத்துக்களை மாற்ற கட்டத்தில் மவுஸால் லேசாக தட்டி அடுத்த கட்டத்துக்கு மாற்றி விடலாம்.
மிக சுலபமான புதிரே இருக்கின்றது. விளையாடுவது சுலபம்.. சுவாரஸ்யத்திற்கு உத்திரவாதம்.
வாழ்த்துக்கள்!
. . தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விஜய் டிவிக்குப் பிறகு விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டது மக்கள் டிவி. சினிமா, சீரியல்கள் அவை சார்ந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்பதே இல்லை. மானாட மயிலாடா போன்ற நிகழ்ச்சிகள் வரும் நேரங்களில் அந்த பக்கமே செல்வதில்லை.
மக்கள் தொலைக்காட்சியில் வரும் நிகழ்ச்சிகளில் விரும்பிப் பார்ப்பது சொல் விளையாட்டு மற்றும் தமிழ் பேசு தங்கக் காசு மற்றும் செய்திப்பகுதி. அய்யா தொலைக்காட்சி என்பதால் மருத்துவர் ஐயாவின் புகழ் பாடுவதாக இருந்தாலும் பொதுவாக செய்திகளை விரும்பிப் பார்ப்பேன்.
இதில் முக்கியமாக சொல்ல வந்ததது சொல் விளையாட்டு என்ற நிகழ்ச்சி பற்றித்தான். நேரடி ஒளிபரப்பாகவும், தொலைபேசியில் பேசும் வகையிலும் இருக்கும் நிகழ்ச்சி இது. மொத்தம் மூன்று சுற்றுக்களைக் கொண்டது. முதல் சுற்றில் தொலைக்காட்சி திரையில் வரும் குடுவையில் எழுத்துக்கள் பல இலக்கின்றி ஓடிக் கொண்டு இருக்கும். அவைகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் கிடைக்கும் வாக்கியத்தை சொன்னால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறலாம்.
இரண்டாம் சுற்றில் திரையில் சில எழுத்துக்கள் தோன்றும். அவைகளை வைத்து குறைந்தபட்சம் பத்து வார்த்தைகள் சொல்ல வேண்டும். அதில் வெற்றி பெற்றால் பசுமைத் தாயகம் உள்ளிட்ட புத்தகங்கள் பரிசாக கிடைக்கும்.
மூன்றாம் சுற்றில் ஒரு புகைப்படத்தில் மீது ஒளிவட்டம் வரும். அதில் இருக்கும் பிரபலத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பட்டுப் புடவை பரிசாக கிடைக்கும்.
இந்த சொல் விளையாட்டின் சிறப்பம்சம் அதன் தொகுப்பாளர் கார்த்திகா தான். கார்த்திகா திரைப்பட இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள். நல்ல அழகு தமிழில் எப்போதும் சிரிப்புடன் அவர் நிகழ்ச்சியை நடத்துவது மிகவும் ரசிக்கத் தக்கதாக இருக்கும். தற்போதைய தொலைக்காட்சி காம்பியர்களில் நன்றாக நடத்தக் கூடியவர்.அதனால் தான் தொகுப்பாளர்களில் கார்த்திகாவை மிகவும் பிடிக்கும். (தீபா வெங்கட் நல்லா இல்லியான்னு கேக்கப்படாது... அபி அப்பா கோச்சுப்பார்)
எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல மாதங்களாக முயற்சி செய்து வருகிறேன். இதற்காகவே செல் பேசியில் எப்போதும் பணம் வைத்திருப்பேன். இதுவரை ஒருதடவை கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. சில நேரங்களில் குடுவையில் இருக்கும் எழுத்துக்களைக் கூட்டி பெருக்கி சரியான வாக்கியத்தை வைத்து முயற்சி செய்தால் அதற்குள் நமது எதிரி யாராவது சொல்லி விடுவார்கள். அதனால் இப்போதெல்லாம் பதில் தெரிகிறதோ இல்லையோ முயற்சி செய்கிறேன்.
என்றாவது ஒருநாள் கண்டிப்பாக பேசுவேன். விக்கிரமாதித்தன் போல் முயன்று பேசியே தீருவேன்.
வள்ளுவன் சொன்ன ‘முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்’ என்று வாக்கு என்றென்றும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நண்பர் சுந்தரின் இந்த கவிதையை இங்கு தருவது பொறுத்தமாக இருக்கும்.
எழுத்துக்களை குடுவையினுள் அடைத்துவிட்டு வாசிக்க சொல்கிறாய் என் மனது குடுவையினுள் இல்லை என்பது உணராமல் !
கட்டத்துக்குள் ஒரு சில எழுத்துக்கள் வார்த்தைகளை உருவாக்க சொல்கிறாள் என் மனதை கட்டம் கட்டியவள் !
நீ எப்போழுது வார்த்தையை உருவாக்க சொன்னாலும் "என்னவள் " என்றே சொல்வேன் !
யார் புகைப்படத்தையோ மறைத்து விளையாடுகிறாய் ! என் புகைப்படம் எப்போழுது ஒளித்து விளையாடுவாய் ?
உனக்கு பிடித்ததை பரிசாக கொடுப்பதால், உனக்கே திருப்பி தருவேன் என்கிற நம்பிக்கை உனக்கு !
டிஸ்கி : இந்த பதிவைப் பார்த்து விட்டு அண்ணியிடம் வத்தி வைப்பேன் என்று கமெண்ட் போடும் ‘புல்லுருவி’ ஸ்பைத் தம்பிகள் தயவுசெய்து கமெண்ட் போட வேண்டாம்.... ;)))