Thursday, June 18, 2009

‘ஸ்பிரிங், சம்மர், ஃபால், வின்டர்... அண்ட் ஸ்பிரிங்’

சமீபத்தில் சென்னையில் பதிவர்களுக்காக சிறப்புக் காட்சியாக திரையிடப்பட்ட கொரிய திரைப்படம் 2003 ல் வந்த கிம்-கி-டுக் இயக்கிய Spring, Summer, Fall, Winter and Spring. சென்னை பதிவர்கள் மட்டும் தான் பார்க்கனுமா... நாமலும் பாத்தாச்சு.

சிம்பிளான கதை : சாதாரண சீடன் குருவாக மாறும் கதை.. அவ்வளவு தான்.. படம் சுமார் 1:45 மணி நேரம் ஓடுகின்றது. படத்தில் பிரமிக்க வைத்தது ஒளிப்பதிவு. படத்தின் தலைப்புக்கு தகுந்தாற் போல் நான்கு கால நிலையிலும் படமாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கால நிலையும் கச்சிதமாக படமாக்கப்பட்டுள்ளது. ஆச்சர்யமான விஷயம்.. ஒவ்வொரு சீனுக்கும் அதற்குத் தகுந்தாற் போல் வெளிச்சம் வரும் வரை காத்துக் கொண்டு இருந்து எடுக்கப்பட்ட விதம்.. அற்புதம்.

படம் குறித்து நண்பர் பைத்தியக்காரன் @ சிவராமன் எழுதிய பதிவைப் படித்தால் கதையைப் புரிந்து கொள்ளலாம்.
http://naayakan.blogspot.com/2008/02/blog-post.html

கிம்-கி-டுக் குறித்து லக்கிலுக் எழுதிய பதிவு.

http://www.luckylookonline.com/2009/05/blog-post_6571.html

படத்தின் வசனம் ரொம்ப கம்மி. கடைசியில் அரை மணி நேரத்திற்கு படத்தில் வசனமே தேவையில்லை. கடைசியில் முழு வசனத்தையும் கொடுத்துள்ளேன். பொறுமையுள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.







படத்தின் முழு வசனங்கள்.
Spring, Summer, Fall, Winter...And Spring...

00:01:13
Spring Wake up - Master! - Yes, my boy? Where do you want to go? I want to pick herbs for medicine Then let us go. Come along I'm going to pick herbs now, Master. Watch out for snakes. - Wait for me, Master. - Yes I've picked a lot of herbs, Master. Really? You've picked a lot? Careful! Stop! Throw this away, my child. Why? It looks the same, Even though it looks the same, this is a deadly plant. The other one can save lives. It still looks the same. How can I know? look closely. Here at the tip
you can see a white line. If you ate this plant, you'd die. You mustn't pick this sort of plant next time. - Is this one alright to eat? - Yes, this one is good. Master, there is a stone on my back. Please take it off. - Does it torment you? - Yes, Master Didn't you also do it to the fish? Yes, Master. Didn't you also do it to the frog?Yes, Master. Didn't you also do it to the snake? Yes, Master. Stand up! Walk around! I can't walk, it's too heavy. How do you think the fish, the frog and the snake endured it? It was wrong to do it, Go and find all the animals. and release them from the stones. Then I will release you too. But if any of the animals, the fish, the frog or the snake is dead, you will carry the stone in your heart, for the rest of your life.

00:21:05
Summer You look so very healthy. This tree is over years old. You will become as healthy as this tree. Greetings. Come in. Will she recover, wise one? I believe that her soul is suffering. When she finds peace in her soul, her body will return to health. Please take care of her! Excuse me! You are not allowed to sit on that. The master will be angry with you. Why are you praying all of a sudden? Would you like to come along? Softly! It must prepared with a true heart. Drink!It will clear your head. The boat is floating away! Stop it!
Stop it! Have you recovered now? Yes, I have completely recovered. Strange. When I can't see you, I go insane. What is wrong with me? Cold! It's cold! What shall I do? I did wrong, Master. Forgive me. That happens by itself. It is just nature. Are you still sick?No! Then it was the right medicine. Now that you have recovered, you can leave this place. No, Master! She can't! Lust awakens the desire to possess. And that awakens the intent to murder. Get in

00:51:23
Fall
That was tiring, huh?MAN, 30, FLEES AFTER MURDERING WIFE. You have grown a lot! Get in! So? Have you led a happy life up till now? Tell me something interesting about your life. The world of men has grown. agonizing for you, hasn't it? Leave alone, Master. Can you not see that I am suffering? What causes you to suffer? My only sin was to love. I wanted nothing except her. So? She went with another man. Ah, that was it. How can that be? She said that she'd love only me. - And then? - I couldn't bear it any more Didn't you know beforehand. how the world of men is? Sometimes we have to let go of things we like.
What you like, others will also like! But still, how could she do that? The bitch! - Is it so unbearable for you?- Yes!Master! Master! Young fool! Young fool!Though you can so easily kill, you yourself cannot be easily killed. Carve out all of these characters with the knife And while you cut out each one, drive out the anger from your heart. Holy one! Holy one!We've come to investigate something- Drop the knife! - Otherwise I'll shoot!What are you doing?
Continue cutting!Prajnaparamita Sutra. It helps restore inner peace. Please let him finish
How long will it take? Until tomorrow morning. - No connection b- No? It's quite a deep valley, isn't it? What?They make white paint from these mussels Stand up. It's time to go
Detective Choi, let's go as we are. Detective Chi, the boat won't go forwards. Ah, now it's moving

01:18:59
Winter


01:38:42
And Spring

Tuesday, June 16, 2009

திருடி நம்பர் ஒன்

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். ஓரளவு இருக்கைகள் நிறைந்து இருந்தன. அரை மணி நேரப் பயணம் தான். மதுரையில் இருந்து வரும் வண்டியில் தான் இருக்கை கிடைக்கும் என்பதால் அந்த தனியார் வண்டியில் ஏறி இருந்தோம். இருவர் அமரும் சீட்டில் மகளை வைத்துக் கொண்டு மனைவி ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்க நான் உள்பகுதியில் அமர்ந்து இருந்தேன். மனைவி, குழந்தையுடன் செல்லும் போது எப்போதுமே கொஞ்சம் கவனமாக இருப்பது வழக்கம்.

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தை விட்டு வண்டி கிளம்பத் தயாராக இருந்த போது தான் முன் பகுதியில் அந்த பெண்மணி ஏறினாள். வண்டி முழுவதும் இருக்கைகள் நிறைந்து இருந்தன. நேராக என்னிடம் வந்த அவள் பின்னால் இருக்கும் மூவர் இருக்கையில் இருக்கும் ஒரு காலி இடத்தைக் கை காட்டி அங்கே போய் அமரச் சொன்னார். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு பெண் அமர்வது போன்ற இருக்கை ஏதும் காலி இல்லை. அந்த மூவர் இருக்கையில் ஏற்கனவே தடியான இரு ஆண்கள் அமர்ந்து இருந்தனர். வேறு வழி இல்லை.. மனைவியிடம் சொல்லி விட்டு மூவர் இருக்கைக்கு சென்றேன். அங்கிருந்த இருவருக்கும் இடையிலேயே எனக்கு இருக்கை கிடைத்தது.

இப்போது தான் அந்த பெண்மணியை நன்றாக பார்த்தேன். வயது 35 க்குள் இருக்கும். அவளது பார்வையே சரியில்லை. ஏனோ ஒரு திருட்டு முழி இருந்தது. என் மனைவியின் அருகே அமர்ந்தவள் என் மனைவியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். தெரியாவதவர்களிடம் என் மனைவி பேச மாட்டாள். அந்த பெண்மணி வம்படியாக பேச்சுக் கொடுப்பதாகவே எனக்குப் பட்டது.

அடிமனதில் பய ஓட்டம் ஆரம்பித்து இருந்தது. சென்ற வாரம் மனைவியின் ஊரில் இதே போல் பேருந்தில் அருகே அமர்ந்த பெண்ணிடம் திருடி விட்டு கம்பி நீட்டிய பத்திரிக்கை செய்தி ஏனோ நினைவுக்கு வந்தது. கழுத்தில், காதில் நகை போட்டிருக்கின்றாள். இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக மாற்றப்பட்ட வளையல்களை வேறு போட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் இன்னும் டென்சன் அதிகமாக ஆரம்பித்து இருந்தது. நகையின் எடையில் எந்த மாற்றமும் இல்லாமல், மாற்றிக் கொண்டு வந்ததன் மூலம் பல ஆயிரம் ரூபாய்களை விழுங்கி இருந்தவை அந்த வளையல்கள். என் அம்மாவிடம் திட்டு வாங்க முடியாது என்பதால் நெக்லஸை வேறு போட்டுக் கொண்டு வந்து இருக்கிறாள்.

அந்த பெண்ணுடன் என் மனைவி பேச ஆரம்பித்து இருப்பது தெரிந்தது. என்ன இவள்? பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் யாரென்றே தெரியாத பெண்ணுடன் எப்படி பேசிக் கொண்டு இருக்கிறாள். எரிச்சலாக வந்தது. பேருந்து நிலையத்தை விட்டு பேருந்து வெளியேறும் நேரம் 20 பேருக்கு மேல் நின்று கொண்டு வந்தனர். அவர்கள் வேறு பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு இருந்தனர்.

இடையில் கிடைத்த கேப்பில் பார்த்த போது, இப்போது அந்த பெண்மணியின் மடியில் என் மகள். பஸ்ஸில் அமர்ந்ததும் தூங்கி விடுவாள். எப்படி கொடுத்தாள் இவள்? கோபம் முட்டிக் கொண்டு வந்தது. மகள் கழுத்தில் செயினும், காலில் தங்க கொழுசும் உள்ளது.

வண்டி தேவதானபட்டியைக் கடந்து இருந்தது. ஆட்கள் இன்னும் ஏறி வண்டி நிறைந்து இருந்தது. கொஞ்சம் எழுந்தே பார்க்க முடிந்தது. நான் பார்ப்பதைக் கூட கவனியாமல் இருவரும் முழு அரட்டையில் இருந்தனர். பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்ன நடக்குமோ என்று .. எதுவாக இருந்தாலும் அந்த பெண் இறங்கும் போது மனைவியிடம் சென்று நகைகளை சரிபார்க்க சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு முன் உள்ள நிறுத்தத்திலேயே அந்த பெண் இறங்க நாங்கள் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். வேகமாக அந்த பெண் என்னை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இறங்கிச் செல்ல என்னை அடுத்த இருந்த ஆளை முட்டித் தள்ளி மனைவியின் இருக்கையை அடைவதற்குள் அந்த பெண் இறங்கி, வண்டியும் கிளம்பி இருந்தது.

காதுக்கு அருகில் சென்று திட்ட ஆரம்பித்து இருந்தேன்.. மனைவியின் முகத்தில் ஒரே சிரிப்பு.. ”என்னங்க நீங்க... அவங்க உங்க அப்பாவோட பிரண்டு பிரான்ஸிஸ் அங்கிள் மகள்.. நம்ம கல்யாணத்து கூட வந்து இருந்தாங்களே? ”

“அப்படியா? நான் கவனிக்கலியே” என்றேன் பரிதாபத்துடன்.. “ ஆமா.. கல்யாணத்து அன்றைக்கு யாரைத் தான் பார்த்தீங்க.. பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க..” மனைவி சொல்ல உண்மையில் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு இருந்தேன்.

Friday, June 12, 2009

அறுபதாம் கல்யாணத்திற்கு வாங்க ( உரையாடல் போட்டிக்கான கதை)

"வாய்யா ! வா! என்ன திடீர்னு இந்த பக்கம்.. எப்பவுமே கூட இருக்கிற ஆளு தானே.. ஸ்பெஷலா வெளியே இருந்து வந்து உட்கார்ந்து இருக்க”

“ஒரு அழைப்பு கொடுக்க வந்தேன் ... நீங்க ரொம்ப முக்கியமான ஆளாச்சே.. அதான் ஸ்பெஷலா கூப்பிடலாமுன்னு”

“அதுவும் சரி தான்... சொல்லு.. என்ன விஷயம்?”

“எனக்கு அடுத்த வாரம் சஷ்டியப்த பூர்த்தி விழா ஏற்பாடு பண்ணி இருக்காங்க... எனக்கு இதில் எல்லாம் விருப்பம் இல்லைன்னாலும் என்னோட பசங்க, பேரக் குழந்தைகளுக்காக இதையெல்லாம் ஒத்துக்க வேண்டி இருக்கே.... என்னோட கனவு வாழ்க்கையில் அடுத்த மாதத்தோடு 60 வயசு முடியுது..கண்டிப்பா வரனும்”

“என்னோட நெற்றியில் ஏதாவது இருக்கா பாருங்க..”

“நெற்றியில்.....ம்ம்ம் ஒன்றுமில்லை.. புருவத்திற்கு மேல் ஒரு சிறு தழும்பு மட்டும் உள்ளது”

“அதில்லை... நெற்றியில் இளிச்சவாயன், ஏமாளி இப்படி ஏதாவது எழுதி இருக்கா?

“என்ன இப்படி சொல்றீங்க?”

“ஆமா.. நீ பிறந்தது முதல் 30 வருடமா என்னிடமே இருக்குற மனசாட்சி நீ.. என்னிடமே அறுபதாம் கல்யாணம் என்கிறாயே?”


“ம்ம்ம் அதுவும் உண்மை தான். உங்களுக்கு தெரியாதது இல்ல..”

“இருந்தாலும் நீயே சொல்லு என்ன விஷயம்ன்னு”

“எல்லாமே ஒரு கனவு வாழ்க்கையா இருக்கு.. இன்றைக்கும் எனக்கு நன்றாக நினைவில் இருக்கு. அவளை சந்தித்த அந்த முதல் கணங்கள்.. இந்தி தேர்வுகள் பிப், ஆகஸ்ட் இரண்டாம் சனி, ஞாயிறில் தான் நடக்கும்.. அப்படியான ஒரு 1991 ஆகஸ்ட் 11 ந்தேதி.. ஞாயிற்றுக் கிழமை தான் அவளைப் பார்த்தேன். என்னோட பிரவேசிகா தேர்வுக்கான நேரம். நான் தேர்வு எழுதும் இடத்தில் தான் அவளும் தேர்வு எழுதினாள். முதலில் பார்த்ததுமே ஏனோ ஒரு பிடிப்பு ஏற்ப்பட்டு விட்டு இருந்தது.”

“ம்”

“முதலில் கூப்பிட்டதே ‘அண்ணா’ என்று தான்.. இப்போதும் பேசும் போது சொல்லி கிண்டல் செய்வாள். Viva தேர்வுக்கு எனக்கு அடுத்து அவளது பெயர். சீக்கிரம் போக வேண்டுமென்பதற்காக என்னிடம் வந்து அவள் முதலில் போக அனுமதி கேட்டாள்.. விடலையே நானு.. ஆண் வர்க்க திமிர் அப்பமே..”

“தெரிந்தது தானே.. மேலே சொல்”

“1979 ல் பிறந்த எனக்கு அப்ப என்ன வயசு இருக்கும்ன்னு நீங்களே பார்த்துக்கங்க.. அடுத்த விசாரத் வகுப்பு போகும் போது பார்த்தால் அவளும் எங்க வகுப்பிலேயே சேர்ந்து இருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி... அப்போது ஆரம்பித்தது அந்த பிணைப்பு. கண்களால் கவிதைகளைப் பகிர்ந்து கொண்ட நேரம். அடுத்த இரண்டு ஆண்டுகள் இறக்கைகளைக் கட்டிக் கொண்டு பறந்து கொண்டு இருந்த காலம். அவளது சிரிப்பும், முகமும் என்னை அவளை நோக்கி மேலும் மேலும் இழுத்துச் சென்றது. சொல்லாமலேயே இருமனங்கள் இணைந்தன. வாழ்க்கையின் ஏதோ புரியாத எல்லைகளை அடைந்து விட்டதாக நினைத்துக் கொண்டேன்.. அவள் பிரிந்து செல்லும் வரை.”

“நல்லவேளை... அந்த பொண்ணு தப்பிச்சிட்டா”

“ஆமா.. பிரவீன் முடிந்ததும் அவள் பறந்து விட்டாள். 1993 ஆகஸ்ட்டுக்குப் பிறகு இன்று வரை அவளைக் காணும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. எங்கோ மாயமாகி விட்டாள். அவளது சதை, இரத்தம், எலும்பாலான உடல் மட்டுமே என்னை விட்டுப் பிரிந்து இருந்தது. ஆனால் அவளுடனான எனது கனவு வாழ்வுக்கு எந்த தடையும் இருக்கவில்லை. ஒரு மானசீக உறவாக, நல்ல நிலத்தில் இடப்பட்ட விதையாக, அந்த நினைவுகள் ஒரு விருட்சமாக மாறி இருந்தன. அவ்விருட்சம் நிலத்தில் ஆழப் புதையப் போகும் ஒரு பரந்து விரிந்த ஆலமரமாக ஊன்றப் போவதை அறியாமலேயே இருந்தேன்.”

“ம்ம்ம் சுவாரஸ்யமாகத் தான் இருக்கு.. மேல சொல்லு”

“அவளுடைய கண்களோடு பேசிக் கொண்டு இருந்த அந்த நாட்களை நினைவில் வைத்துக் கொண்டே எனது வாழ்வு கழிந்தது. ரம்மியமான வாழ்க்கை. அவளுடனான எனது பிணைப்பை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. எனக்குத் தெரிந்த பல மொழிகளிலும் அதற்கான வார்த்தையைத் தேடி களைத்துப் போய் விட்டேன். காதல், பாசம், நேசம் போன்ற வார்த்தைகள் எல்லாம் ஏதோ குறைவுடையவையாகவே எனக்கு தோன்றுகின்றது.”

“அந்த உறவு விருட்சம் மெல்ல மெல்ல வளர்ந்து செடியாகி, மரமாகி, பூத்துக் குலுங்க ஆரம்பித்து இருந்தது. இலையுதிர்காலமும், வசந்தகாலமும் மாறி மாறி வரத் துவங்கி இருந்தன. எப்போது எப்படி எங்கு துவங்கியது என்று சொல்லத் தெரியவில்லை. அவளை நினைக்காத கணங்கள் கடினமானதாக இருந்தன. அவளது நினைவுகள் என்னை விட்டு அகலாமல் இருக்க எனது கணிணியில் கடவுச்சொல்லாகவே அவளது பெயர் மாறி இருந்தது.”

“என்ன இழவோ.. இலக்கியம் மாதிரி என்னவோ பின்னாத்தற.. நேரா மேட்டருக்கு வா”

“வேலை நிமித்தம் 1998 ல் துபாயில் போய் இறங்கினேன் என் கனவு வாழ்க்கையையும் மனதில் நிறைத்தபடி.. பெற்றோர்களின் தீவிர எதிர்ப்பை முறியடித்து.. அவர்கள் முழு சம்மதத்துடன் திருமணம், பின்னர் குழந்தைகள் என கண ஜோராக வாழ்க்கை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்ந்தது. என்னவளின் விருப்பத்திற்குத் தகுந்தாற் போல் இழைத்து இழைத்து கட்டப்பட்ட வீடு.. வீட்டின் முன் தோட்டம், மொட்டை மாடி ஊஞ்சல்கள் என நினைவுகளில் மறக்காதவை.”

“நான் வேலையில் இருந்து களைத்துப் போய் வரும் போது வியர்வையை அவள் துடைத்து விடும் தருணங்கள், மழையில் வேண்டுமென்றே நனைந்து கொண்டு வந்து அவளது முந்தானையில் துடைத்துக் கொள்வதற்காக ஒளிந்து கொள்ளும் தருணங்கள், காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்தாலும் அவளிடம் செல்லமான திட்டு வாங்கிக் கொண்டே எழ வேண்டுமென்பதற்காக போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் கணங்கள் என பெட்ரோலும், ஆயில் வாசனையுமான எனது கணங்கள் அவளது நினைவில் மல்லிகை, ரோஜாவின் நறுமணங்களுடன் கனவில் நகர்ந்தன.”

“வெயிட்..வெயிட்... இதெல்லாம் என்னது? கற்பனையிலேயே இம்புட்டு வாழ்க்கையா வாழ்ந்த?”

“ஆமாம்.. தனிமையாக இருக்கும் நேரங்களில் எல்லாம் நான் தனிமையை சிறிது கூட உணரவில்லை. இருவரும் இணைந்து சுற்றிய ஊர்கள், ஜாலியாக சுற்றிய வெளிநாடுகள் என அசை போட வைக்கும் நினைவுகள். அவளது மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு தொலைகாட்சி பார்க்கும் அந்த கணங்களும், அவளது கை விரல்களின் கோதுதல்களில் லயித்து உறங்கி விடும் பொழுதுகளும், அவ்வாறு தூங்கிப் போய் எழும் போது அவள் காட்டும் பொய்க் கோபமும், மொட்டை மாடி மழைத் தூறல் நனைதல்களும், அதீத உணர்ச்சிகளுடனான மதிய நேர கூடல்களும் நெஞ்சை நிறைத்து இருக்கின்றன.”

“எனக்கே ஒரு மாதிரி இருக்குய்யா... மேல சொல்லு”

“இரண்டு குழந்தைகள்.. ஆண் ஒன்றும், பெண் ஒன்றுமாக.. குழலினிது யாழ் இனிது என்பர் குழந்தைகளின் மழலைச் சொல் கேளாதவர் என்பது நம் மூத்தோர் சொன்னது. முற்றிலும் உண்மை. நான் குழந்தைகளை கண்டிக்கும் போது அவளும், அவள் குழந்தைகளைக் கண்டிக்கும் போது நானும் குழந்தைகளுக்காக பரிந்து பேசுவதும், பின்னர் ரகசியமாக சமிக்ஞை செய்து கொள்வதும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் சில உணர்வுகள்.”

“ம்”

“உடல் ரீதியான எந்த தேவைகளும், நினைவுகளும் அற்றதாகவே அந்த வாழ்க்கை இருந்தது. அவளுக்கு பிடிக்காதவைகளை நான் செய்வதில்லை. எனக்குப் பிடிக்காதவைகளை அவள் செய்வதில்லை. புகை, மது, சூது,பிற மாது போன்றவை அவளுக்கு முற்றிலும் விருப்பமில்லாதவை. அவளுக்கு பிடிக்காது என்பதற்காக இவைகளை விட்டும் முற்றிலும் விலகி இருந்தேன். எனது கனவு வாழ்வில் மட்டும் இன்றி நிஜத்திலும் அவளுக்காக இவைகளை விட்டும் தள்ளியே இருந்தேன். ஒரு அறிஞன் கூறுவான் “ ஒருவன் தவறு செய்யவில்லை என்று கூறினால், அவனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று பொருள்”. ஆனால் மேற்சொன்னவைகளுக்கு வாய்ப்புகள் தானாகவே வந்த போதும் எந்த சிறு குழப்பமும் இல்லாமல் அவைகளை உதறித் தள்ளினேன்.. எல்லாம் எனது கண்ணம்மாவிற்காக.. ஆங்.. சொல்ல மறந்து விட்டேன்.. என்னவளை செல்லமாக கண்ணம்மா என்று தான் கூப்பிடுவேன். எனக்கும், அவளுக்கும் பாரதியை மிகவும் பிடிக்கும்.”

“பாரதியின் அடிமையா நீ.. அதான் இப்படி கற்பனையில மிதக்குற”

“ஆம்.. இருவருக்கும் இடையே அவ்வப்போது நடக்கும் ஊடல்களுடன் சண்டை நடக்கும். எனக்கு அவளுக்கு பிடித்த மாதிரி வாங்கித் தரும் சட்டைகளும், அவளுக்கு பிடிக்காத கலரில் எனக்கு பிடித்த மாதிரி வாங்கித் தரும் நீல நிற சேலைகளும் சண்டைகளை வளர்க்கும்.. ஒரு விதமான இன்ப அனுபவங்களோடு.. எனக்காக அவள் வாங்கி வந்த கல்கி, அசோகமித்திரன், JK, சுந்தர ராமசாமி, முதல் கொண்டு சுஜாதா, வைரமுத்து வரையிலானவைகளும், அவளுக்காக நான் வாங்கிய Mills & Boon, Ayn Rand, Jeffery Archer, Sidney Sheldon, J._K.Rowling போன்றவை எங்களது வீட்டை நிறைத்து வைத்திருக்கும்.”

“வாவ்... ரசனையான தம்பதிகளா இருந்து இருக்கீங்களே..”

“இரண்டு குழந்தைகளையும் படிக்க வைத்து நல்ல வேலையில் அமர்த்தி திருமணமும் செய்து கொடுத்தாகி விட்டது. இருவரின் மூலமும் எங்களுக்கு பேரக் குழந்தைகள் உள்ளனர். வாழ்க்கை இன்பகரமாக சென்று கொண்டு இருந்தது.. 2005 வரை..”

“ஏன்? என்னாச்சு?”

“அப்போது தான் நிகழ்காலம் உறைக்க ஆரம்பித்தது. உலக வாழ்க்கையும், கனவு வாழ்க்கையும் இணையாதாமே... வீட்டில் எனக்கு பெண் பார்க்கத் துவங்கி இருந்தனர். அவர்களிடம் சொல்லவா முடியும்.. எனது கனவு வாழ்க்கையில் பேரக் குழந்தைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என்று.. இந்த ஜென்மத்தில் அவளை மறக்க முடியும் என்று தோன்றவில்லை.. அவள் எங்கிருக்கின்றாள் என்று தெரிந்திருந்தாலும் பார்க்க வேண்டுமென்றோ, பேச வேண்டுமென்றோ தோன்றாத அளவில் அவள் என்னுள் தொடச்சியான கணங்களில் நிறைந்து இருக்கின்றாள்”

“திருமணமும் நடந்தது. நிஜ வாழ்க்கைத் திருமணம் என்னை ஏமாற்றிடவில்லை. அன்பான கணவனாக மனைவிக்கும், பாசமுள்ள தந்தையாக மகனுக்கும் வாழ்கின்றேன்.”

“அடப்பாவி.. நல்லவேளை அப்பவாவது நிகழ்காலத்திற்கு வந்தியே”

“அதே நேரத்தில் கனவு வாழ்க்கை எந்த குறையும் இலலாமல் இன்று சஷ்டியப்த பூர்த்தி வரை வந்து விட்டது. கண்டிப்பாக அதற்கு வந்து விடுங்கள்”

“நான் இல்லாமலா.. கண்டிப்பா உன் கூடவே எப்போதும் போல் இருப்பேன்.. ஜமாய்!.. வாழ்த்துக்கள்.. உன்னிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது இந்த வரிகள் நினைவுக்கு வருகின்றது”

“சொல்லுங்களேன்”

“நகுலனின் டைரியில் இருந்து..
27-12-73
வரிகள்

எப்பொழுதும் உன் நினைவு - நீ எங்கேயோ இருக்கிறாய் - நான் எங்கேயோ இருக்கிறேன் - நீ மணமானவள் - நான் மணமாகாதவன் - நான் உன்னைக் காதலித்தேன் என்பதில் தவறில்லை.. (இப்போதும் காதலிக்கிறேன் - என்று சொல்வதில் பொய்யில்லை) -அதைப் போலவே நீ என்னைக் காதலிக்கவில்லை, என்னிடம் அன்பு காட்டவில்லை, அலக்ஷியம் செய்கிறாய் என்று சொல்வதும் தவறு. நம்மிடையே உள்ள உறவு தான் என்ன?...
என்றோ ஒருநாள் உன்னை நான் பார்த்தேன். அன்று என் கதை முடிந்தது.”

முற்றும்.

(உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

Thursday, June 11, 2009

32 கடல், மலை தாண்டி பதிவு போடும் முறை


கடைசியில் 32 கேள்விகள் விளையாட்டு நம்மிடமே வந்து விட்டது. .சரி நேரா மேட்டருக்கு போய்டலாம்..

01. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

முதல் முதலில் இணையத்தில் நுழைந்த போது யூனிகோட் தமிழ், கணிணியில் தெரிய வைக்கத் தெரியாமல் அவதிப்பட்டேன்... பின்னர் தேடுபொறி மூலம் ஒரு தமிழ் கூகுள் குழுமத்தில் நுழைந்த போது புனைப்பெயர் தர வேண்டி வந்தது.. ஏதோ ஒரு மயக்கத்தில் தமிழ் பிரியன் என்று கொடுத்தேன்... இதுவே இன்று நிலைத்து விட்டது. எனது பெயர் எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

கல்யாணத்துக்கு முன்னாடி வரை எத்தனை வருடத்துக்கு முன்னாடி அழுதேன் என்று யோசிப்பேன்... கல்யாணத்துக்கு அப்புறம் ரொம்பவே நம்ம உறவுகள் நம்மை அழ வச்சு பழக்கிட்டாங்க.. அதனால் அழுகை எல்லாம் ரொம்ப சாதாரணம் ஆயிடுச்சு .. வைரத்தை வைரத்தால் அறுப்பது போல் நான் சோகமாக இருக்கும் நேரங்களில் சில குறிப்பிட்ட சோகமான படங்களைப் பார்ப்பேன். அதில் மூழ்கி விடும் போது நம்ம கவலை எல்லாம் பஞ்சு மாதிரி பறந்து பூடும் .... பத்து நாட்களுக்கு முன் தன்மாத்ரா படம் மறுபடியும் பார்த்தேன்.. அப்ப அழுதேன்.


3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்கு ரொம்ப பிடிக்கும்... தமிழ், ஆங்கிலம் இரண்டும்.. படிப்பவர்களுக்கு பிடிக்குமான்னு தெரியல.

4).பிடித்த மதிய உணவு என்ன?
நன்றாக ஆறின சோறு, புளிக்காத தயிர், அதோட ஆட்டுக் கறியில் நெஞ்சுக்கறியை மிளகு சீரகம் போட்டு சுக்கா செய்து கொடுத்தால் சந்தோசமா சாப்பிடுவேன். அப்படியே கொஞ்சம் வெங்காயம், இரண்டு துண்டு எலுமிச்சம் பழமும்... :)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
இந்த கேள்வியை நிறைய பேர் குழப்பி இருக்காங்க.. நான் என்னையே போன்ற ஒருவனுடன் நட்பு வச்சுக்க முடியுமா என்பது தான் இதன் சாராம்சம் என்று நினைக்கின்றேன். Same frequency கிடைக்காம தானே அலைகின்றோம்.. உடனே நட்பு வச்சுக்குவேன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
யோசிக்காம பதில் சொல்வேன்.. அருவி தான் என்று.. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உருண்டு பிறண்டு வளர்ந்தவனுக்கு அருவியை விட மனதை மயக்கும் இடம் இருக்குமா என்ன?

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அவருடைய தோற்றத்தைத் தான் பார்ப்பதாக நினைக்கிறேன். சில முக்கிய நேரங்களில் கண்களைப் பார்த்துப் பேசும் வழக்கம் இருக்கிறது.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் : தாராள மனம் (ஹிஹிஹி நம்பனும்), நேரந்தவறாமை.
பிடிக்காத விஷயம் : எல்லாரிடமும் ரொம்ப மென்மையாக நடந்து கொள்வது... (மாற்ற முடியலீங்க..)

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
பிடித்தது : எந்த சூழலில் பொய் சொல்லாமல் இருப்பது, பாசத்தைக் கொட்டுவது
பிடிக்காதது : அவளிடம் மட்டும் சொல்லி விடுவேன்.

10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
கண்டிப்பாக மனைவி, மகனுடன்.. :)

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
வெள்ளைக் கலர் கை வைத்த பனியன்(புதுசுங்க.. எங்கயும் கிழிய வில்லை இன்னும்), கட்டம் போட்ட லுங்கி.. அறைக்கு வந்ததும் உடை மாற்றி விடுவேன்... :)

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
சில காலமாக “தும்பி வா தும்பக் குடத்தின்” என்ற வாணி விஸ்வநாத் பாடிய மலையாள பாடல் தான் பேவரைட்டாக இருக்கின்றது.

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வான நீலம் தான் பிடிக்கும்... ஆனால் அதில் எழுதினால் படிக்க முடியுமான்னு தெரியலியே.. :)

14.பிடித்த மணம்?
மல்லிகைப் பூ மலரும் நேரம் வரும் சுகந்தமான மணம்.. ;-)

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?

கண்மணி டீச்சர் - நாலு மாசமா பதிவுலகை விட்டு காணாம போய் இருக்காங்க.. எங்க பதிவுலக குரு.. திரும்ப பதிவு போட ஒரு அழைப்பா இருக்கட்டும்.

காதல் கறுப்பி தமிழன் - இவனுக்குள்ள என்னமோ இருக்குய்யா என்று எப்பவும் நான் யோசிக்கும் நண்பன்(ர் - நல்லா இல்லீங்க.. :) )

நாணல் - நல்ல திறமை உள்ள என் சகோதரி.. வித்தியாசமான படைப்புகளை எப்போதும் இவரிடம் இருந்து எதிர்பார்ப்பேன். அடுத்த கவிதாயினி போஸ்ட்டுக்கு தகுதியானவர்.. இவருக்கு நேரம் கிடைத்தால் சிறப்பான படைப்புகளை எதிர்பார்க்கலாம்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
நம்ம ஆயில்யன் அண்ணன்... மரியாதைக்குரியவர். இவரது பதிவில் எதை எடுக்க எதை விட... எல்லாமே பொறுப்பான பதிவுகளா இருக்கும். ஈஸ்ட் ஆர் வெஸ்ட் ஆயில் அண்ணா இஸ் த பெஸ்ட் அப்படின்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காங்க
1ம் இல்லை பதிவுகளில் எல்லாத்தையும் அடக்கி விடுவார்.

17. பிடித்த விளையாட்டு?
கிரிக்கெட்

18.கண்ணாடி அணிபவரா?
கண்டிப்பா இல்லை.. கண் இன்னும் நல்லா இருக்கு.. :) 6/6

19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
பாச உணர்வுகளை எதார்த்தமாக எந்த சினிமாத் தனமும் இல்லாமல் வழங்கும் படங்களை விரும்பிப் பார்ப்பேன். பாடல் காட்சி, சண்டைக் காட்சிகளை கண்டிப்பாக ஸ்கிப் செய்து விடுவேன்.

20.கடைசியாகப் பார்த்த படம்?
சென்ற வெள்ளி மாலையில் - Calcutta News - ப்ளஸ்ஸி (Blessy) க்காக பதிவிறக்கிப் பார்த்தேன்... கொஞ்சம் ஏமாற்றம் தான்.. ப்ளஸ்ஸிக்கு எப்பவும் உணர்வுகளை வசனங்களில் இல்லாமல் காட்சிகளாக தருவதில் ஆர்வம் அதிகம். தன்மாத்ரா, கால்ச்சா, பலுங்கு போன்ற படங்களைப் பார்த்தால் தெரியும். கல்கத்தா நியூஸில் கொஞ்சம் சறுக்கல் அவருக்கு...

21.பிடித்த பருவ காலம் எது?
கோடையும் இல்லாமல், குளிரும் இல்லாமல் மிதமாக இருக்கும் சீதோசனம் பிடிக்கும்.. அதோடு கார் காலம்.

22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:
நம்புவீர்களா என்று தெரியவில்லை.. நவீனன் டைரி - நகுலன் எழுதியது. முதல் தடவை படித்து விட்டு என்ன சொல்ல வருகின்றார் என்பது புரியாததால் இரண்டாவது தடவை படிக்க ஆரம்பித்துள்ளேன்.. இந்த தடவையாவது புரியனும்.. ஆனால் படிக்கும் போது ஒரு வெறி வருகின்றது.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
அடிக்கடி மாற்றும் வழக்கம் இல்லை.. எப்பவும் விண்டோஸில் இருக்கும் அடிவானம் தான் இருக்கும்.. சமீபமாக சில நாட்களாக எனக்கு இருப்பது போலவே நெற்றியில் புருவத்திற்கு மேல் சிறு வெட்டுக் காய தழும்பு இருக்கும் ஒரு பெண்ணின் முகம் மட்டும் உள்ளது.. யார் என்பது சஸ்பென்ஸ்.


24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
அப்படிப் பிரிக்கத் தெரியவில்லை... அதிக சத்தமுள்ள இயந்திரங்களிலேயே வேலை செய்வதால் பிடிக்காத சத்தம் ஏதுமிருப்பதாக தெரியவில்லை... சில நேரங்களில் மட்டும் ஆஆஆஆஆஆ என்று வாயை முழுவதும் திறந்து கொட்டாவி விடும் சத்தம் எரிச்சலை ஊட்டும்.

பிடித்தது : குழந்தைகளின் மழலை..

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
துபாய், சவுதி அரேபியா

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் துறை படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையென்றாலும், அத்துறைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக வேலை செய்து வருவகின்றேன். எங்களது துறை சார்ந்த மெக்கானிக்கல் இயந்திரங்களுக்கான எலக்ட்ரிக்கல் கண்ட்ரோல்களில் ஏற்படும் நுணுக்கமான பிரச்சினைகளை துரிதமாக சரி செய்யும் ஆற்றலை இறைவன் வழங்கியுள்ளான். அதோடு புதிதாக கண்ட்ரோல் சர்க்யூட்களை டிசைன் செய்து, அதை நானே ஆட்டோகேட் மூலம் வரைந்து, களத்திலும் செயல்வடிவம் கொடுக்க முடிகின்றது என்பதும் வல்ல இறைவனின் கருணை தான்.

27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
புறம் பேசுவதும், கோள் சொல்வதும். :(

28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
மற்றவர்களின் குறைகளை அவர்களிடமே சொல்லி விடுவது

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
இன்னும் பார்க்கவில்லை.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?
நான் நானாக இருக்கவே ஆசை...

31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
ஊரில் இருக்கும் போது கணிணியில் இருப்பது மனைவிக்கு பிடிக்காது. எனவே அதிகப்படியாக செய்யக் கூடியது அதுவாகத் தான் இருக்கனும்...
மனைவி சொல்வது : உங்களுக்கு முதல் மனைவி உங்க கணிணி தானே.. ;-))

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
எல்லா சுதந்திரங்களும், இன்பங்களும், லாகிரி வஸ்துகளும் சுலபமாக கிடைக்கும் போதும், கடும் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று எனக்கு நானே போட்டுக் கொள்ளும் கற்பனைக் கோட்டுக்குள் இருப்பது என்று நினைக்கிறேன்.

Friday, June 5, 2009

ஓட்டுப் போட விமான சீட்டும், பணமும், விடுமுறையும், லெபனான் தேர்தலும்

நம்ம ஊர்களில் இடைத்தேர்தல்களில் ஓட்டுப் போட பணத்தை அள்ளி விடுவது வழக்கம்.. அது மெல்ல மெல்ல மறுவி எல்லா தேர்தல்களிலும் பணம் தண்ணீராக செலவிடப்படுகின்றது. அதிகபட்சமாக ஓட்டுக்கு 5000 வரை தரும் அளவுக்கு ஜ(ப)ணநாயகம் வளர்ந்து உள்ளது.. அதே போல் ஊரை விட்டு வெளியூரில் இருப்பவர்களை ஓட்டுப் போடுவதற்காக அழைத்து வருவதும் நடக்கின்றது.

இப்போது நான் குறிப்பிடுவது வேறு வகையானது. தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக விமான டிக்கெட், சம்பளத்துடன் விடுமுறை, அலவுன்ஸ் எல்லாம் வழங்கப்படுகின்றது இங்கு.. நான் வேலை செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் மறைந்த லெபனான் நாட்டின் பிரதமர் ரஃபீக் ஹரீரி அவர்கள். சில ஆண்டுகளுக்கு முன் சிரிய ஆதரவு ஹிஸ்புல்லாஹ் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவுக்குப் பின் அவரது மகனும் எங்கள் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவருமான சாத் ஹரிரி (Saad Hariri) அரசியலைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் ஜூன் 7 ந்தேதி லெபனானில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் சாத் ஹரிரியின் கட்சியும் போட்டியிடுகின்றது. அத் தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சவுதி அரேபியா முழுவதும் எங்கள் நிறுவனத்தில் பணி புரியும் லெபனானிகள் லெபனான் செல்கின்றனர். ஒரு வார காலம் விடுமுறை, விமான சீட்டு, Out Station allowance அனைத்தும் வழங்கப்படுகின்றது. அத்தோடு இந்த ஒரு வார காலம் பணியில் இருந்து வேலை நிமித்தம் சென்றதாகவே கணக்கிலும் எடுத்துக் கொள்ளப்படுமாம்.

இத் தேர்தலில் March 14 Movement என்ற பெயரில் (Future Movement கூட்டணி) மேற்கத்திய ஆதரவு அணியில் சாத் ஹரிரியும், March 8 Movement என்ற பெயரில் சிரிய, ஈரானிய ஆதரவு அணியும் போட்டியிடுகின்றன. சிரியாவின் இராணுவ ஆதிக்கத்தில் முற்றிலும் சிதைந்து போய் இருக்கும் அழகான தேசமான லெபனானை மீண்டும் தன் ஆதிக்க்கத்தில் வைக்க சிரியா March 8 அணியை வெற்றி பெற வைக்க சிரியா முயற்சிக்கின்றது.




ஹிஸ்புல்லாஹ் ஆதரவு அர்ஸ்லான் தலால்

March 14 Movement அணி வெற்றி பெற்றால் தான் ஜனநாயகம் தழைக்கும் என்றும், மேலும் லெபனனை மறு புணர் நிர்மானம் செய்ய உலக நாடுகள் உதவியும் செய்யும் என்றும் அமெரிக்கா சூசகமாக அறிவித்துள்ளது.



ரஃபீக் ஹரிரியும், சாத் ஹரிரியும்

Saad Hariri தலைமையிலான March 14 Movement வெற்றி பெறுவது எங்க நிறுவனத்திற்கு நல்ல சாதகாமான நிலையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.