Friday, April 18, 2008

சுருட்டு சாமியாரும். பத்திரிக்கையும், சமூகமும்...

சமீபத்திய ஹிட் சாமியார்களில் முக்கியமானவர் சுருட்டு சாமியார். சென்னை மடிப்பாக்கம் ராம் நகர் பகுதியில் ஆசிரமம் வைத்திருந்தவர் பழனிச்சாமி. இவர் சுருட்டு பிடித்தும், மது அருந்தியும் குறி சொல்லியதால் சுருட்டு சாமியார் என்று அழைக்கப்பட்டார்.
ஏற்கனவே இரண்டு திருமணம் முடித்திருந்த இவர் தன்னிடம் சிஷ்யயையாக வந்த திவ்யா என்ற ஒரு ஹோமியோபதி மருத்துவரை மூன்றாவதாக திருமணம் முடித்துக் கொண்டார். இதனால் ஆத்திரமுற்ற திவ்யாவின் தந்தை முகப்பேர் காவல் நிலையத்தில் பழனிச்சாமி மீது புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் பழனிச்சாமியை திவ்யாவைக் கடத்திய, மற்றும் பெண்களை ஏமாற்றிய குற்றத்திற்காக போலிசார் கைது செய்தனர். திவ்யா சில ஆசிரமத்திலேயே தங்கி இருந்தார். இந்நிலையில் ஜாமினில் வெளிவந்த பழனிச்சாமி திவ்யாவுடன் சேர்ந்து நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர்.
இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் இந்த இருவரையும் தற்கொலைக்கு தள்ளிச் சென்றதில் பரபரப்புக்காக செய்திகளைத் திரித்து வெளியிடும் பத்திரிக்கைகள் முக்கிய பங்காற்றியுள்ளன. அவர்கள் இருவரும் மனம் ஒத்து திருமணம் செய்துள்ளனர். திவ்யாவைக் கடத்தியதாக பழனிச்சாமி கைது செய்யப்பட்ட உடன் திவ்யா தொலைகாட்சியில் அளித்த பேட்டியில் மிகத்தெளிவாக பேசினார். எனக்கு நான் படித்தவர்,இதில் முழு உடன்பாடு உள்ளது என்றும் கூறினார். ஆனாலும் அவர்களைப் பற்றிய பரபரப்பாக பத்திரிக்கைகள் எழுதி தள்ளி விட்டன. இதனால் சமூகத்தில் அவர்களுக்கு கெட்ட பெயரும், அவமானங்களுமே மிஞ்சின. இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். :(

எனக்கு ஏற்படும் சந்தேகங்கள்

1. முதல் மனைவி இருக்கும் போது, முதல் மனைவி பிடிக்காமல் போய் விடும் போது வேறு திருமணம் செய்வது தவறா? அப்படி முதல் மனைவியின் விருப்பத்தின் பேரில் தான் வேறு திருமணம் நடக்க வேண்டுமெனில் முதல் மனைவியின் சம்மதம் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படியானல் அதுக்கு தீர்வு வழக்கம் போல் ஸடவ் வெடிப்பு தானா?
2. இரண்டு பேர் மனம் ஒத்து திருமணம் செய்து கொள்ளும் போது சமூகம் ஏன் அதை ஒத்துக் கொள்வதில்லை.... இரண்டு. அதற்கு மேல் மனைவி உள்ளவர்களை கடவுள்களாக, தீர்க்கதரிசிகளாக ஏற்றுக் கொண்டுள்ளோர் உள்ள சமூகம் தானே இது...
3. மீடியாக்களுக்கு ஏனிந்த கொல வெறி... ஒவ்வொருவருடைய தனிப்பட்ட வாழ்விலும் தலையிட்டு அவர்களைத் தொந்தரவு செய்வது. டயானாவைக் கொன்றது இப்படிப்பட்ட அமெச்சுர் புகைப்படக்காரர்கள் தான். பிரேமானந்தா சாமியார் மீது வழக்குப் போட்டு இரட்டை ஆயுள் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டது. அதில் போலிசார் கண்டுபிடித்தை விட மீடியாக்கள் தான் அதிக செய்திகளைத் தந்தன். எந்த பெண்கள் அவருக்கு தண்டனை வாங்கித் தந்தார்களோ அதே பெண்கள் தான் இன்று அவரது ஆசிரமத்தை நடத்தி வருகின்றனர். போலிஸ் தங்களை மிரட்டி வாக்குமூலம் வாங்கியாதாக இன்று பேட்டி கொடுக்கின்றனர்.
4. உண்மையில் தினம் ஒரு பெண்ணுடன் சல்லாபிக்கும் பெரிய மனிதர்கள் தப்பி விடுகின்றனர். ஆனால் மனம் ஒத்து, திருமணம் செய்து வாழ நினைத்த இவர்கள் சாவடிக்கப்பட்டுள்ளனர்.
5. பத்திரிக்கைகளும், நிருபர்களும் பரபரப்புக்காக செய்திகளை அள்ளி விடுகின்றன. அதனால் ஏற்ப்படப் போகும் பாதிப்புகளைப் பற்றி தெரிந்து கொண்டே.... நமது சக பதிவர் தமிழ்நதி கூட இதற்கு ஒரு உதாரணம். ஆ.வி. கூடவா என்ற கேள்வியுடன் நம்மை திகைக்க வைக்கிறது. அவரது வருத்ததைக் கூட வெறுமனே போட்டு விட்டு அமைதியாகி விட்டது, தனது வருத்தத்தைத் தெரிவிக்காமல்...
6. கடைசியாக மணிமேகலையின் (இரண்டாம் மனைவி)வீட்டில் பழனிச்சாமியும் திவ்யாவும் உல்லாசமாக இருந்ததை சிலர் வீடியோவில் படமாக்கி விட்டதாகவும், இதுகுறித்த தகவல் பழனிச்சாமிக்கு தெரியவந்ததால் அவர் பெரும் வேதனை அடைந்தார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. வீடியோ எடுத்த அந்த கும்பல் பழனிச்சாமியிடம் அதைக் கூறி பணம் பறிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் அவரும், திவ்யாவும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வாழ்க ஜனநாயகம்... வளர்க பத்திரிக்கைகளின் சமூகநீதியும், உண்மையின் பிரதிபலிப்பும்.. :(

20 comments:

ஆயில்யன் said...

:((((
எல்லாமே நிகழகூடாத நிகழ்வுகள்தான்

கண்மணி/kanmani said...

ஒன்னும் சொல்றதுக்கில்லை.மொத்தத்தில் சாமியார்களை நம்பும் கூட்டம் இருக்கும்வரை இது போல கதைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும்

புகழன் said...

//வாழ்க ஜனநாயகம்... வளர்க பத்திரிக்கைகளின் சமூகநீதியும், உண்மையின் பிரதிபலிப்பும்..//

வாழ்க பத்திரிகை ஜனநாயகம்

நிஜமா நல்லவன் said...

நிறுத்தவோ சரி செய்யவோ வழிகள் இன்றி ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று இன்று அதலபாதாளத்தை நோக்கி சரிந்துகொண்டிருக்கிறது .

யாத்ரீகன் said...

சுருட்டு சாமியாரின் அந்தரங்க வாழ்க்கையை பரபரப்புக்கு பயன்படுத்த தயங்காத பத்திரிக்கைகள் , இப்படிப்பட்ட சாமியாரின் ஏமாற்றுதனத்தை ஏன் மக்களிடம் பரப்ப மறுக்கின்றன .. why dont they put the news in such perspectives of creating awareness for common people to be careful with such guys, instead why do they always keep writing s** stories..

சத்யா said...

hmm! ennanga solradhu! kalikaalam.

G.Ragavan said...

மொதத் தப்பே... அந்தாளு தன்னைச் சாமியாருன்னு சொல்லிக்கிட்டது. அவருடைய பெருமைகளைப் பரப்பிய அதே பத்திரிக்கைகள் அவருடைய வாழ்க்கைல நடந்த சிறுமைகளையும் பரப்பியது. மொதல்ல இனிச்சது பின்னாடி கசந்தது.

உங்க கேள்விகளுக்கு வருவோம். பிடிக்காத மனைவியோட சம்மதத்தோட இரண்டாவது கலியாணம் சரி... பிடிக்காத கணவனோட சம்மதத்தோட இரண்டாவது கலியாணம் முடியுமா? அதுக்குப் பதில் சொல்லுங்க. அப்படி யாராச்சும் சொன்னா... ஒங்க பதில் என்னவா இருக்கும்? ;)

Thamiz Priyan said...

///G.Ragavan said...உங்க கேள்விகளுக்கு வருவோம். பிடிக்காத மனைவியோட சம்மதத்தோட இரண்டாவது கலியாணம் சரி... பிடிக்காத கணவனோட சம்மதத்தோட இரண்டாவது கலியாணம் முடியுமா? அதுக்குப் பதில் சொல்லுங்க. அப்படி யாராச்சும் சொன்னா... ஒங்க பதில் என்னவா இருக்கும்? ;) ////
வருகைக்கு நன்றி ராகவன்.... :)
நான் சொல்வது விவாகரத்தைப் பற்றி என்று சிந்தியுங்களேன்... :) விவாகரத்து நீதிமன்றங்களில் நமது சமூகத்தில் காலம் கடத்தக் கூடிய செயலாக ஆகி விடுகின்றது. இது விரும்பாத பலர் மனைவியை எரிக்கக் கூட தயங்குவதில்லை. இதற்கு விருப்பம் இல்லாத மனைவியை விட்டு பிரிந்து வேறு திருமணம் செய்வது நலமாகி விடுமே? :)
:
:
:
:
தங்களது கேள்வியில் தொக்கிக் கொண்டி இருக்கும் இன்னொரு விஷயம் ஆண் பல மணம் செய்வது போல் பெண்ணும் கேட்டால் என்ன செய்வது?... ஆண்கள் பலதார மணம் செய்வதால் பிரச்சினைகள் குறைவு தான். நமது சமூகத்திலேயே கூட பல பெரிய மனிதர்கள் இரண்டு மனைவிகளுடன் சட்டபூர்வமாக வாழ்கின்றனர். ஆண்கள் பலதார மணம் சட்டபூர்வமாக செய்ய அணுமதி வேண்டும் என நான் சொல்வதற்கு பல காரணங்களைக் கூறலாம்.
1. திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த பெண்கள் திருமணம் செய்யும் பருவத்தை அடைந்த ஆண்களை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளனர். ஏனெனில் பெண்கள் ஆண்களை விட சுமார் 10 வருடங்களுக்கு முன்பே திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர்.

2. ஆண்களை விட பெண்களே மக்கள் தொகையில் அதிகமாக இருக்கிறார்கள்.

3. இறப்பு விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.

4. போர்க் களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.

5. பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு மண வாழ்வு கிடைக்காததால் விபச்சாரம் பெருகி வருகிறது.

6. பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுப்பதற்காக பெரும் தொகையை வரதட்சணையாகக் கொடுக்கும் அவலமும் அதிகரித்து வருகிறது.

7. வரதட்சணை கொடுக்க இயலாதவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயிருடன் கொலை செய்வதும், கருவிலேயே சமாதி ஆக்குவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகி வருகின்றன.

8. திருமண வாழ்வைப் புறக்கணிக்கும் பிரம்மாச்சாரிகளும் ஆண்களின் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கிறார்கள்.

9. பெற்றோரால் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்து தர முடியாது என்பதை உணரும் இளம் பெண்கள் தாமாகவே வாழ்வைத் தேடிக் கொள்வதாக எண்ணி ஏமாந்து கற்பிழந்து வருகின்றனர்.

10. தனக்குத் திருமணம் நடக்காது என்றெண்ணி தற்கொலை செய்யும் பெண்களும் அதிகரித்து வருகின்றனர்.
அதே நேரம் பெண்களூக்கு பலமணத்தை ஆதரித்தால் கடும் குழப்பங்களே விளையும்.
ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மூலம் பத்துப் பிள்ளைகள் பிறந்தால் அந்தப் பத்துப் பிள்ளைகளின் தந்தை யார்? தாய் யார்? என்பதை அறிந்து கொள்ள முடியும். பல ஆண்களிடம் உறவு வைத்துள்ள ஒரு பெண் பெற்றெடுக்கும் ஒரு பிள்ளைக்கு தாய் யார்? என்பது தான் தெரியுமே தவிர, தன் தந்தை யார்? என்பதை அறிந்து கொள்ள முடியாது.

இந்த நிலையை விட அந்தக் குழந்தைக்கு வேறு கேவலம் எதுவுமிருக்க முடியாது. இது போல் உருவாகக் கூடிய, தகப்பன் யார் என்று தெரியாத சந்ததிகள் உள்ளம் நொறுங்கி மனோ வியாதிக்கு ஆளாவார்கள்.

ஒரு ஆண் நான்கு மனைவிகள் மூலம் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்தால் அந்த நான்கு குழந்தைகளையும் பராமரிக்கும் பொறுப்பை அவன் தலையில் சுமத்தி விடலாம். அந்தக் குழந்தைகளுக்கு ஆகும் செலவுகளைக் கொடுக்குமாறு அவனை நிர்பந்திக்க முடியும். ஆனால் ஒரு பெண் நான்கு ஆண்களுடன் கூடிப் பெற்றெடுக்கும் ஒரு குழந்தைக்கு இந்த உத்திரவாதம் அளிக்க முடியுமா?

ஒவ்வொருவனும் அக்குழந்தை தன்னுடையதில்லை என்று மறுத்து விட்டால் எந்தச் சான்றின் அடிப்படையில் அவன் மீது பொறுப்பைச் சுமத்த முடியும்? அதற்குரிய செலவினங்களைக் கொடுக்குமாறு அவனை எப்படி நிர்பந்தப்படுத்த முடியும்? வளரப் போகும் அந்தக் குழந்தையின் எதிர்காலம் இருள் நிறைந்ததாக அல்லவா ஆகும்!

அது போல் ஒவ்வொருவனும் அந்தக் குழந்தை தன்னுடையது என்று உரிமை கொண்டாடினால் அந்தக் குழந்தையைக் கூறு போட்டு ஆளுக்குக் கொஞ்சம் பிரித்துக் கொடுக்க முடியுமா?

ஒருவனுக்குப் பல மனைவியர் மூலம் பல நூறு குழந்தைகள் இருந்தாலும் அவன் இறந்த பின் பல நூறு குழந்தைகளுக்கும் தந்தை இன்னார் என்று தெரிவதால் வாரிசுகள் என்ற அடிப்படையில் அவனது சொத்தில் பங்கு கேட்க முடியும்.

பல ஆண்களை மணந்தவளின் கணவர்களில் எவர் இறந்தாலும், அவளது பிள்ளைகள் தந்தையின் சொத்து என்று உரிமை கொண்டாட வழியில்லாது போகும்.

அதே போல் இரண்டாவது திருமணம் முடிப்பதால் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள் என்று கருதப்படுகின்றது.
இன்னொரு பெண்ணை இரண்டாவதாக மணப்பதால் மட்டும் முதல் மனைவி பாதிக்கப்பட மாட்டாள். மணக்காமல் வைப்பாட்டியாக வைக்கும் போதும், கணவன் பல பெண்களிடம் விபச்சாரம் செய்யும் போதும் முதல் மனைவி பாதிக்கப்படுகிறாள்.

இன்னொரு பெண்ணை மணப்பதால் ஏற்படும் பாதிப்பை விட இது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் நோயைப் பெற்று முதல் மனைவிக்குப் பரிசளிக்கும் கூடுதலான பாதிப்பு இதனால் முதல் மனைவிக்கு ஏற்படுகிறது. சில நேரங்களில் இது எய்ட்ஸ் வரை சென்று விடுகின்றது.

இரண்டாம் திருமணத்தை எதிர்ப்பவர்கள் வைப்பாட்டி வைப்பதையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமாகத் தடுக்க வேண்டும். பலதார மணத்தை மறுக்கும் எந்த நாட்டிலும் (நமது நாடு உள்பட) விபச்சாரத்துக்கோ, வைப்பாட்டி வைத்துக் கொள்வதற்கோ தடை இல்லை. அது குற்றமாகவும் கருதப்படுவதில்லை.

பெண்ணுரிமை பாதிக்கிறது என்பது தான் பலதார மணத்தை எதிர்க்கக் காரணம் என்றால் சின்ன வீட்டையும், விபச்சாரத்தையும் சட்டப்பூர்வமான குற்றம் என்று அறிவிக்க வேண்டும்.

சின்ன வீடு வைத்துக் கொள்ளும் ஆண்களையும், விபச்சாரம் செய்யும் ஆண்களையும் தடுக்க முடியவில்லை. இன்னொருத்தியின் கணவன் என்று தெரிந்தும் அவனைக் கைக்குள் போடும் பெண்களையும் தடுக்க முடியவில்லை.

;;
\
;
;'
பின்னூட்டமே பதிவை விட பெரிதாகி விட்டது. மன்னிக்கவும்.

Thamiz Priyan said...

//ஆயில்யன். said...

:((((
எல்லாமே நிகழகூடாத நிகழ்வுகள்தான் ///
எல்லாமே சுயநலம் தான் :(

Thamiz Priyan said...

///கண்மணி said...

ஒன்னும் சொல்றதுக்கில்லை.மொத்தத்தில் சாமியார்களை நம்பும் கூட்டம் இருக்கும்வரை இது போல கதைகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கும் ///
வருகைக்கு நன்றி டீச்சர்! :)

நிஜமா நல்லவன் said...

ஸ்ஸ்ப்பா கண்ண கட்டுதே.......

நிஜமா நல்லவன் said...

///நிஜமா நல்லவன் said...
ஸ்ஸ்ப்பா கண்ண கட்டுதே.......////



பதிவ படிச்சி இல்ல பின்னூட்டம் படிச்சி!

Thamiz Priyan said...

///புகழன் said...

//வாழ்க ஜனநாயகம்... வளர்க பத்திரிக்கைகளின் சமூகநீதியும், உண்மையின் பிரதிபலிப்பும்..//

வாழ்க பத்திரிகை ஜனநாயகம் ////
கண்டிப்பாக! உண்மையான பத்திரிக்கைகளின் ஜனநாயகம்.... :)

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

நிறுத்தவோ சரி செய்யவோ வழிகள் இன்றி ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்று இன்று அதலபாதாளத்தை நோக்கி சரிந்துகொண்டிருக்கிறது . ////
ஆம் நண்பா!

Thamiz Priyan said...

///யாத்திரீகன் said...

சுருட்டு சாமியாரின் அந்தரங்க வாழ்க்கையை பரபரப்புக்கு பயன்படுத்த தயங்காத பத்திரிக்கைகள் , இப்படிப்பட்ட சாமியாரின் ஏமாற்றுதனத்தை ஏன் மக்களிடம் பரப்ப மறுக்கின்றன . ////
எதையுமே பரபரப்பாக்கி காசு பார்க்கும் குணம் இருப்பதால் இருக்கலாம் :)

Thamiz Priyan said...

///சத்யா said...

hmm! ennanga solradhu! kalikaalam. ///
என்னத்த சொல்ல சத்யா!

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

///நிஜமா நல்லவன் said...
ஸ்ஸ்ப்பா கண்ண கட்டுதே.......////
பதிவ படிச்சி இல்ல பின்னூட்டம் படிச்சி! ///
நண்பா! எனக்கு மத்த சில பதிவுகளைப் பார்த்தால் தோன்றுவது! உங்களுக்குமா? சேம் பிளட்! :))))

நான் கடவுள் said...

//3. இறப்பு விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.

4. போர்க் களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.//

புள்ளி விவரப் புலி அவர்களே! இந்தத் தகவலை எங்கிருந்து எடுத்தீர்கள்? யார் ஆய்வு செய்து அறிவித்தது? நல்ல கட்டுரைக்கு நடுவில் இப்படியான பிழைகள் நேராமல் பார்த்துக் கொள்வது உங்கள் சித்தம்.

Thamiz Priyan said...

///நான் கடவுள் said...

//3. இறப்பு விகிதத்தில் ஆண்களை விட பெண்கள் குறைவாக இருக்கிறார்கள்.

4. போர்க் களங்களில் இளம் மனைவியரின் கணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் மாண்டு வருகின்றனர்.//

புள்ளி விவரப் புலி அவர்களே! இந்தத் தகவலை எங்கிருந்து எடுத்தீர்கள்? யார் ஆய்வு செய்து அறிவித்தது? நல்ல கட்டுரைக்கு நடுவில் இப்படியான பிழைகள் நேராமல் பார்த்துக் கொள்வது உங்கள் சித்தம். ///
கடவுளுக்கே விளக்க முடியுமா?....
சும்மா கடி தான் :))))))

3. நான் சொல்வது மீண்டும் திருமணம் செய்யக்கூடிய வயதுடைய ஆண், பெண்கள் மத்தியில் விகிதம்... இது உலகம் முழுவதும் அதிகம் தான்.. :)
4. இதற்கு சில லிங்க் தருகிறேன்... தகவல் டேட்டாவாகத் தேவைப்பட்டாலும் தருகிறேன்.... :)

http://worldblog.msnbc.msn.com/archive/2007/03/29/105681.aspx

http://www.cnn.com/2007/WORLD/meast/08/15/iraq.prostitution/index.html

இலங்கை யாழ்ப்பாணத்தில் விதவைகள்

G.Ragavan said...

நண்பரே, உங்கள் தகவல்களையும் கருத்துகளையும் படித்தேன். :)