Thursday, April 24, 2008

சங்கம்னா இரண்டாமே.... இலக்கியத்தில் ‘இரண்டு'

வருத்தப்படாத வாலிபர்கள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு கொண்டாட்டங்களுக்கு 'இரண்டு” என்பதை மையமாகக் கொண்டு போட்டி நடக்குதாம். நமக்கும் இதில் கலந்து கொள்ள எழுந்த ஆசையில் தேறியது இது தான்....

தமிழ் இலக்கியங்களில் 'இரண்டு'

.... முதலில் திருக்குறள்

தானம் தவம்ரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின். 19

(19. இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்பு ஆகிய இரண்டுக்கும் தடங்கலாகும்(.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப வ்விரண் டும்

கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392

(392. எண், எழுத்து எனப்படும் இரண்டு அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர். 393

(393. கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவர்களுக்கு முகத்தில் இருக்கும் இரண்டு் கண்களும் புண் என்றே கருதப்படும்.)

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்

ல்லாதாள் பெண்காமுற் றற்று. 402

(402. கல்லாதவனின் சொல்கேட்க விரும்புவது, இரண்டு மார்பகங்களுமே இல்லாத பெண்மீது மையல் கொள்வதற்கு ஒப்பானது.)

மனந்துய்மை செய்வினை துய்மை ரண்டும்

னந்துய்மை துவா வரும். 455

(455. ஒருவன் கொண்டுள்ள தொடர்பு தூய்மையானதாக இருந்தால்தான் அவனுடைய மனம் செயல் ஆகிய இரண்டும் தூய்மையானவையாக இருக்கும்.)

ஒற்றும் உரைசான்ற நுலும் வையிரண்டும்

தெற்றென்க மன்னவன் கண். 581

(581. நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றர், நீதியுரைக்கும் அறநூல் ஆகிய இரண்டும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.)

ஊறொரால் உற்றபின் ஒல்காமை வ்விரண்டின்

ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662

(662. இடையூறு வருவதற்கு முன்பே அதனை நீக்கிட முனைவது, மீறி வந்து விடுமேயானால் மனம் தளராது இருப்பது ஆகிய இரண்டு வழிகளுமே அறிவுடையோர் கொள்கையாம்.)

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்

தீயெச்சம் போலத் தெறும். 674

(674. எற்ற செயல், எதிர்கொண்ட பகை ஆகிய இரண்டையும் முற்றாக முடிக்காமல் விட்டுவிட்டால் அது நெருப்பை அரை குறையாக அணைத்தது போலக் கேடு விளைவிக்கும்.)

ஒண்பொருள் காழ்ப்ப யற்றியார்க்கு எண்பொருள்

ஏனை ரண்டும் ஒருங்கு. 760

(760. அறம், பொருள், இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழிகளில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் எளிதில் வந்து சேரும்)

தன்துணை ன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்

ன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 875

(875. தனது பகைவர்கள் இரண்டு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்(.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வ்விரண்டும்

பண்புடைமை என்னும் வழக்கு. 992

(992. அன்புடையவராக இருப்பது மற்றும் , உயர்ந்த குடியில் பிறந்த இலக்கணத்துக்கு உரியவராக இருப்பது முதலிய இரண்டும் தான் பண்புடைமை எனக் கூறப்படுகிற சிறந்த நெறியாகும்.)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனரண்டின்

நீள்வினையால் நீளும் குடி. 1022

(1022. ஆழ்ந்த அறிவு, விடாமுயற்சி ஆகிய இரண்டும் கொண்டு ஒருவன் அயராது பாடுபட்டால், அவனைச் சேர்ந்துள்ள குடிமக்களின் பெருமை உயரும்.)

காமம் விடுஒன்றோ நாண்வடு நன்னெஞ்சே

யானோ பொறேன்வ் விரண்டு. 1247

(1247. நல்ல நெஞ்சமே! ஒன்று காதலால் துடிப்பதையாவது விட்டு விடு; அல்லது அதனைத் துணிந்து சொல்ல முடியாமல் தடுக்கும் நாணத்தையாவது விட்டு விடு. இந்த இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் தாங்கிக் கொள்ள என்னால் முடியாது. )

தமிழ் இலக்கியம் என்று சொல்லி விட்டு புறநானூறை விட்டு விட்டால் எனக்கு மனது ஆறாது. எனவே....

................ புறநானூற்றில் இரண்டு

96. அவன் செல்லும் ஊர்!

பாடியவர்: ஔவையார்.

பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி.

திணை : பாடாண். துறை: இயன் மொழி.

அலர்பூந் தும்பை அம்பகட்டு மார்பின்,

திரண்டுநீடு தடக்கை, என்னை இளையோற்கு

இரண்டு எழுந் தனவால், பகையே; ஒன்றே,

பூப்போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,

நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,

விழவு இன்று ஆயினும், படு பதம் பிழை யாது,

மைஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்

கைமான் கொள்ளு மோ? என

உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

109. மூவேந்தர் முன் கபிலர்!

பாடியவர்: கபிலர்.

பாடப்பட்டோன்: வேள் பாரி.

திணை: நொச்சி. துறை: மகண் மறுத்தல்.

அளிதோ தானே, பாரியது பறம்பே!

நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,

உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு லீழ்க்கும்மே;

நான்கே, அணிநிற ஒரி பாய்தலின், மீது அழிந்து,

திணி நெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.

வான் கண் அற்று, அதன் மலையே; வானத்து

மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,

மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,

புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,

தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;

யான்அறி குவென், அது கொள்ளும் ஆறே;

சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,

விரையொலி கூந்தல் நும் விறலியர் பின் வர,

ஆடினிர் பாடினிர் செலினே,

நாடும் குன்றும் ஒருங்குஈ யும்மே.

156. இரண்டு நன்கு உடைத்தே!

பாடியவர் : மோசிகீரனார்.

பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான்.

திணை: பாடாண். துறை: இயன்மொழி.

ஒன்றுநன் குடைய பிறர் குன்றம்; என்றும்

இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்;

நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்

தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று

நிறையருந் தானை வேந்தரைத்

திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே.

166. யாமும் செல்வோம்!

பாடியவர்: ஆவூர் மூலங் கிழார்.

பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெணியன் விண்ணந்தாயன்.

திணை: வாகை. துறை: பார்பபன வாகை.

நன் றாய்ந்த நீள் நிமிர்சடை

முது முதல்வன் வாய் போகாது,

ஒன்று புரிந்த ஈரி ரண்டின்,

ஆறுணர்ந்த ஒரு முதுநூல்

இகல் கண்டோர் மிகல் சாய்மார்,

மெய் அன்ன பொய் உணர்ந்து,

பொய் ஓராது மெய் கொளீஇ,

மூவேழ் துறைபும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக!

வினைக்கு வேண்டி நீ பூண்ட

புலப் புல்வாய்க் கலைப் பச்சை

சுவல் பூண்ஞான் மிசைப் பொலிய;

மறம் கடிந்த அருங் கற்பின்,

அறம் புகழ்ந்த வலை சூடிச்,

சிறு நுதல், பேர் அகல் அல்குல்,

சில சொல்லின் பல கூந்தல், நின்

நிலைக் கொத்தநின் துணைத் துணைவியர்

தமக்கு அமைந்த தொழில் கேட்பக்;

காடு என்றா நாடுஎன்று ஆங்கு

ஈரேழின் இடம் முட்டாது,

நீர் நாண நெய் வழங்கியும்,

எண் நாணப் பல வேட்டும்,

மண் நாணப் புகழ் பரப்பியும்,

அருங் கடிப் பெருங் காலை,

விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை,

என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது

பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,

பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,

உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்;

செல்வல் அத்தை யானே; செல்லாது,

மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்

கழைவளர் இமயம்போல,

நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?

189. உண்பதும் உடுப்பதும்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்

திணை: பொதுவியல் துறை: பொருண்மொழிக் காஞ்சி

(செல்வத்துப் பயனே ஈதலென்பதை வலியுறுத்தும் செய்யுள் இது.)

தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி

வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்,

நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்

கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும்,

உண்பது நாழி ; உடுப்பவை இரண்டே;

பிறவும் எல்லாம் ஓரொக் குமே;

அதனால், செல்வத்துப் பயனே ஈதல்;

துய்ப்பேம் எனினே, தப்புந பலவே.

196. குறுமகள் உள்ளிச் செல்வல்!

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.

பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.

திணை: பாடாண். துறை: பரிசில் கடா நிலை.

ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்

ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும்,

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;

ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது

இல்லென மறுத்தலும், இரண்டும், வல்லே;

இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்

புகழ்குறை படூஉம் வாயில் அத்தை

அனைத்தா கியர், இனி; இதுவே எனைத்தும்

சேய்த்துக் காணாது கண்டனம் ; அதனால்,

நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்,

வெயிலென முனியேன், பனியென மடியேன்,

கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை,

நாணலது இல்லாக் கற்பின் வாணுதல்

மெல்லியல் குறுமகள் உள்ளிச்

செல்வல் அத்தை ; சிறக்க, நின் நாளே!

260. கேண்மதி பாண!

பாடியவர்: வடமோதங்கிழார்

திணை: கரந்தை (பாடாண் திணையுமாம்) துறை: கையறுநிலை செருவிடை வீழ்தல்;

கையறு நிலையுமாம்; பாண்பாட்டுமாம்; பாடாண் பாட்டுமாம்.

வளரத் தொடினும், வௌவுபு திரிந்து,

விளரி உறுதரும் தீந்தொடை நினையாத்

தளரும் நெஞ்சம் தலைஇ; மனையோள்

உளரும் கூந்தல் நோக்கி, களர

கள்ளி நீழற் கடவுள் வாழ்த்திப்

பசிபடு மருங்குலை, கசிபு, கைதொழாஅக்,

காணலென் கொல் ? என வினவினை வரூஉம்

பாண ! கேண்மதி, யாணரது நிலையே;

புரவுத்தொடுத்து உண்குவை ஆயினும், இரவுஎழுந்து,

எவ்வம் கொள்வை ஆயினும், இரண்டும்,

கையுள போலும் கடிதுஅண் மையவே;

முன்ஊர்ப் பூசலின் தோன்றித் தன்னூர்

நெடுநிரை தழீஇய மீளி யாளர்

விடுகணை நீத்தம் துடிபுணை யாக,

வென்றி தந்து, கொன்றுகோள் விடுத்து,

வையகம் புலம்ப வளைஇய பாம்பின்

வைஎயிற்று உய்ந்த மதியின், மறவர்

கையகத்து உய்ந்த கன்றுடைப் பல்லான்

நிரையொடு வந்த உரைய னாகி,

உரிகளை அரவ மானத், தானே

அரிதுசெல் உலகில் சென்றனன் ; உடம்பே,

கானச் சிற்றியாற்று அருங்கரைக் கால்உற்றுக்,

கம்பமொடு துளங்கிய இலக்கம் போல,

அம்பொடு துளங்க ஆண்டுஒழிந் தன்றே;

உயர்இசை வெறுப்பத் தோன்றிய பெயரே,

மடஞ்சால் மஞ்ஞை அணிமயிர் சூட்டி,

இடம்பிறர் கொள்ளாச் சிறுவழிப்,

படஞ்செய் பந்தர்க் கல்மிசை யதுவே.

288. மொய்த்தன பருந்தே!

பாடியவர்: கழாத்தலையார்

திணை: தும்பை துறை: மூதின் முல்லை

மண்கொள வரிந்த வைந்நுதி மறுப்பின்

அண்ணல் நல்ஏறு இரண்டு உடன் மடுத்து,

வென்றதன் பச்சை சீவாது போர்த்த

திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க,

ஆர்அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,

நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,

அருகுகை .. .. .. .. .. .. மன்ற

குருதியொடு துயல்வரும் மார்பின்

முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.

304. எம்முன் தப்பியோன்!

பாடியவர்: அரிசில்கிழார்

திணை: தும்பை துறை : குதிரை மறம்

கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி,

நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி,

வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி

பண்ணற்கு விரைதி, நீயே;நெருநை

எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஓராங்கு

நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப்,

புன்வயிறு அருத்தலும் செல்லான், வன்மான்

கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,

வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்

இலங்கு இரும் பாசறை நடுங்கின்று;

இரண்டா காது அவன் கூறியது எனவே.

344. இரண்டினுள் ஒன்று!

பாடியவர்: அடைநெடுங் கல்வியார் பாடப்பட்டோன்: பெயர் தெரிந்திலது.

திணை: காஞ்சி துறை : மகட்பாற் காஞ்சி

(திணை, வாகையும், துறை, மூதின் முல்லையும் கூறப்படும்.)

செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,

செறிவளை மகளிர், பறந்தெழுந்து,

துறைநணி மருதத்து இறுக்கும் ஊரொடு,

நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ;

புகைபடு கூர்எரி பரப்பிப் பகைசெய்து,

பண்பில் ஆண்மை தருதல் ஒன்றோ;

இரண்டினுள் ஒன்றா காமையோ அரிதே,

காஞ்சிப் பனிமுறி ஆரங் கண்ணி. . .-

கணிமே வந்தவள் அல்குல்அவ் வரியே.

புறநானூற்றைக் குறிப்பிட்டாலும் தொல்காப்பியத்தில் தான் எத்த்த்த்த்னை இரண்டு..........

............. தொல் காப்பியத்தில் 'இரண்டு'

ரண்டு றந்து சைக்கும் தொடர்மொழி உளப்பட

மூன்றே மொழி நிலை தோன்றிய நெறியே. 12

பன்னீர் உயிரும் தம் நிலை திரியா

மிடற்றுப் பிறந்த வளியின் சைக்கும். 2

அவற்றுள்,

அ ஆ ஆயிரண்டு அங்காந்து யலும். 3

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற

றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும். 12

நுனி நா அணரி அண்ணம் வருட

ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 13

ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்

லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும். 14

மூன்று தலை ட்ட முப்பதிற்று எழுத்தின்

ரண்டு தலை ட்ட முதல் ஆகு ருபஃது

அறு நான்கு ஈறொடு நெறி நின்று யலும்

எல்லா மொழிக்கும் றுதியும் முதலும்

மெய்யே உயிர் என்று ஆயீர் யல. 1

உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயர் என்று

ஆயிரண்டு என்ப பெயர் நிலைச் சுட்டே. 15

புள்ளி றுதியும் உயிர் று கிளவியும்

வல்லெழுத்து மிகுதி சொல்லிய முறையான்

தம்மின் ஆகிய தொழிற்சொல் முன் வரின்

மெய்ம்மை ஆகலும் உறழத் தோன்றலும்

அம் முறை ரண்டும் உரியவை உளவே

வேற்றுமை மருங்கின் போற்றல் வேண்டும். 14

பலர் அறி சொல் முன் யாவர் என்னும்

பெயரிடை வகரம் கெடுதலும் ஏனை

ஒன்று அறி சொல் முன் யாது என் வினா டை

ஒன்றிய வகரம் வருதலும் ரண்டும்

மருவின் பாத்தியின் திரியுமன் பயின்றே. 30

தாம் நாம் என்னும் மகர றுதியும்

யாம் என் றுதியும் அதன் ஓரன்ன

ஆ எ ஆகும் யாம் என் றுதி

ஆவயின் யகர மெய் கெடுதல் வேண்டும்

ஏனை ரண்டும் நெடு முதல் குறுகும். 16

வேற்றுமை ஆயின் ஏனை ரண்டும்

தோற்றம் வேண்டும் அக்கு என் சாரியை- 34

தேன் என் கிளவி வல்லெழுத்து யையின்

மேல் நிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்

ஆ முறை ரண்டும் உரிமையும் உடைத்தே

உண்டு என் கிளவி உண்மை செப்பின்

முந்தை றுதி மெய்யொடும் கெடுதலும்

மேல் நிலை ஒற்றே ளகாரம் ஆதலும்

ஆ முறை ரண்டும் உரிமையும் உடைத்தே

வல்லெழுத்து வரூஉம் காலையான. 25

ஒன்று முதல் ஆக எட்டன் றுதி

எல்லா எண்ணும் பத்தன் முன் வரின்

குற்றியலுகரம் மெய்யொடும் கெடுமே

முற்ற ன் வரூஉம் ரண்டு அலங்கடையே. 28

பத்தன் ஒற்றுக் கெட னகாரம் ரட்டல்

ஒத்தது என்ப ரண்டு வரு காலை. 29

டை நிலை ரகரம் ரண்டு என் எண்ணிற்கு

நடை மருங்கு ன்றே பொருள்வயினான. 34

ரண்டு முதல் ஒன்பான் றுதி முன்னர்

வழங்கு யல் மா என் கிளவி தோன்றின்

மகர அளவொடு நிகரலும் உரித்தே. 74

ஏனை ரண்டும் ஏனை டத்த. 30

ரண்டன் மருங்கின் நோக்கு அல் நோக்கம் அவ்

ரண்டன் மருங்கின் ஏதுவும் ஆகும். 10

தடுமாறு தொழிற்பெயர்க்கு ரண்டும் மூன்றும்

கடி நிலை லவே பொருள்வயினான. 12

அச்சக் கிளவிக்கு ஐந்தும் ரண்டும்

எச்சம் லவே பொருள்வயினான. 17

அன்ன மரபின் ரண்டொடும் தொகை

ஆயெட்டு என்ப தொழில் முதனிலையே. 29

எஞ்சிய ரண்டின் றுதிப் பெயரே

நின்ற ஈற்று அயல் நீட்டம் வேண்டும். 27

சொல் எனப்படுப பெயரே வினை என்று

ஆயிரண்டு என்ப அறிந்திசினோரே. 4

நான்கே யற்பெயர் நான்கே சினைப்பெயர்

நான்கு என மொழிமனார் சினைமுதற்பெயரே

முறைப்பெயர்க் கிளவி ரண்டு ஆகும்மே

ஏனைப் பெயரே தம்தம் மரபின. 21

பெண்மை முறைப்பெயர் ஆண்மை முறைப்பெயர் என்று

ஆயிரண்டு என்ப முறைப்பெயர் நிலையே. 25

மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை

அப் பால் ரண்டு என மொழிமனார் புலவர். 14

அந்தில் ஆங்க அசைநிலைக் கிளவி என்று

ஆயிரண்டு ஆகும் யற்கைத்து என்ப. 19

அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி. 13

கெடவரல் பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு. 21

லம்பாடு ஒற்கம் ஆயிரண்டும் வறுமை. 62

அம் மூ டத்தான் வினையினும் குறிப்பினும்

மெய்ம்மையானும் வ் ரண்டு ஆகும்

முதல் எனப்படுவது நிலம் பொழுது ரண்டின்

யல்பு என மொழிப யல்பு உணர்ந்தோரே. 4

பலர் செலச் செல்லாக் காடு வாழ்த்தொடு

நிறை அருஞ் சிறப்பின் துறை ரண்டு உடைத்தே. 19

நாட்டம் ரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும். 5

பாங்கன் நிமித்தம் பன்னிரண்டு என்ப. 13

வெளிப்பட வரைதல் படாமை வரைதல் என்று

ஆயிரண்டு என்ப வரைதல் ஆறே. 50

தற் புகழ் கிளவி கிழவன் முன் கிளத்தல்

எத் திறத்தானும் கிழத்திக்கு ல்லை

முற்பட வகுத்த ரண்டு அலங்கடையே. 39

யலசை முதல் ரண்டு ஏனவை உரியசை. 5

மண்டிலம் குட்டம் என்று வை ரண்டும்

செந்தூக்கு யல என்மனார் புலவர். 113

செய்யுள்தாமே ரண்டு என மொழிப. 123

தரவேதானும் நால் அடி ழிபு ஆய்

ஆறு ரண்டு உயர்வும் பிறவும் பெறுமே. 129

குழவியும் மகவும் ஆயிரண்டு அல்லவை

கிழவ அல்ல மக்கட்கண்ணே. 23

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

ரண்டு அறிவதுவே அதனொடு நாவே

கோழி கூகை ஆயிரண்டு அல்லவை

சூழும் காலை அளகு எனல் அமையா. 56

நூல்களுக்கு நன்றி : தமிழ் டாட் நெட்

30 comments:

ஆயில்யன் said...

எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓ இரண்டு :)))

நிஜமா நல்லவன் said...

ஆஹா..பரிசு உங்களுக்கு தான் போலிருக்கு!

வெட்டிப்பயல் said...

சூப்பருங்க...

அப்படியே என்னை மாதிரி பிரியாதவங்களுக்கு விளக்கவுரை (கோனார் நோட்ஸ்) எழுதி போட்டீங்கனா வசதியாயிருக்கும் :-)

தமிழன்-கறுப்பி... said...

எத்தனை இரண்டு துரை...இதுக்கு தனியா போட்டி வைக்கலாம் போல...யாரு தனியா எண்ணி சொல்லுறதுன்னு...

தமிழன்-கறுப்பி... said...

சரியா எண்ணி சொலிட்டா என்ன தருவிங்க:))))
நல்ல பதிவு தல இலக்கியத்தனமா சிந்திக்கிறிங்க போல...::)))

உங்களுக்கு.சரியாத்தான் இருக்கு உங்க பெயரு:))

கோபிநாத் said...

தெய்வமே...கலக்கிட்டிங்க ;)

கோபிநாத் said...

\\வெட்டிப்பயல் said...
சூப்பருங்க...

அப்படியே என்னை மாதிரி பிரியாதவங்களுக்கு விளக்கவுரை (கோனார் நோட்ஸ்) எழுதி போட்டீங்கனா வசதியாயிருக்கும் :-)
\\\

ரீப்பிட்டே ;)

Yogi said...

உண்மையிலேயே கலக்கல்.... எப்படிங்கண்ணா உங்களால மட்டும் ??? மனசுக்குள்ள இன்விசிபிள் மோடுல ஒளிஞ்சிருந்த சிங்கம் இன்னிக்கு வெளிய வந்துடுச்சே !!!!!!!! :)

சத்யா said...

wow! nice collection! superu! jeyikka en wishes!

நிஜமா நல்லவன் said...

////பொன்வண்டு said...
உண்மையிலேயே கலக்கல்.... எப்படிங்கண்ணா உங்களால மட்டும் ??? மனசுக்குள்ள இன்விசிபிள் மோடுல ஒளிஞ்சிருந்த சிங்கம் இன்னிக்கு வெளிய வந்துடுச்சே !!!!!!!! :)////


ரீப்பிட்டே...

நிஜமா நல்லவன் said...

///வெட்டிப்பயல் said...
சூப்பருங்க...

அப்படியே என்னை மாதிரி பிரியாதவங்களுக்கு விளக்கவுரை (கோனார் நோட்ஸ்) எழுதி போட்டீங்கனா வசதியாயிருக்கும் :-)////


ரீப்பிட்டே...

Thamiz Priyan said...

/// ஆயில்யன். said...

எவ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓ இரண்டு :))) ///
எண்ணவில்லை ஆயில்யன் ;)

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

ஆஹா..பரிசு உங்களுக்கு தான் போலிருக்கு! ///
நண்பா! நம்ம மேல ஏனிந்த கொல வெறி! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///வெட்டிப்பயல் said...

சூப்பருங்க...

அப்படியே என்னை மாதிரி பிரியாதவங்களுக்கு விளக்கவுரை (கோனார் நோட்ஸ்) எழுதி போட்டீங்கனா வசதியாயிருக்கும் :-) ///
நன்றி வெட்டியாரே! நான் விளக்கவுரை எழுதினா எல்லாரும் அடிக்க வருவீங்களே?.... :)

Thamiz Priyan said...

/// தமிழன்... said...

எத்தனை இரண்டு துரை...இதுக்கு தனியா போட்டி வைக்கலாம் போல...யாரு தனியா எண்ணி சொல்லுறதுன்னு... ///
அது சரி! எப்படியோ நல்லது நடந்தா சரி தான்

Thamiz Priyan said...

///தமிழன்... said...

சரியா எண்ணி சொலிட்டா என்ன தருவிங்க:))))
நல்ல பதிவு தல இலக்கியத்தனமா சிந்திக்கிறிங்க போல...::)))

உங்களுக்கு.சரியாத்தான் இருக்கு உங்க பெயரு:)) ///
நன்றி தமிழன். நானே உங்களது பிரியன் தானே ;)

Thamiz Priyan said...

/// கோபிநாத் said...

தெய்வமே...கலக்கிட்டிங்க ;) ///
Man can't be a God. அடுத்த தடவை இது வேண்டாம் பேச்சுக்கு கூட...
வருகைக்கு நன்றி கோபி...
ஆமா இந்த மாத பதிவு எங்கே... ;)

Thamiz Priyan said...

///பொன்வண்டு said...

உண்மையிலேயே கலக்கல்.... எப்படிங்கண்ணா உங்களால மட்டும் ??? மனசுக்குள்ள இன்விசிபிள் மோடுல ஒளிஞ்சிருந்த சிங்கம் இன்னிக்கு வெளிய வந்துடுச்சே !!!!!!!! :) ///
ஹிஹிஹ்ஹி சிங்கத்தை உசுப்பி விட்டா...... அவ்வளவு தான்.... :))

Thamiz Priyan said...

///சத்யா said...

wow! nice collection! superu! jeyikka en wishes! ///
நன்றி சத்யா!

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said
வெட்டிப்பயல் said...
கோபிநாத் said...

அப்படியே என்னை மாதிரி பிரியாதவங்களுக்கு விளக்கவுரை (கோனார் நோட்ஸ்) எழுதி போட்டீங்கனா வசதியாயிருக்கும் :-) ///
முயற்சி செய்கிறேன்...

நிஜமா நல்லவன் said...

/////தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said
வெட்டிப்பயல் said...
கோபிநாத் said...

அப்படியே என்னை மாதிரி பிரியாதவங்களுக்கு விளக்கவுரை (கோனார் நோட்ஸ்) எழுதி போட்டீங்கனா வசதியாயிருக்கும் :-) ///
முயற்சி செய்கிறேன்...////


முயற்சி திருவினையாக்கும். எப்போது?

மங்களூர் சிவா said...

/
இது என்னோட இடம்.

இங்க எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!

/

பட்டா எல்லாம் இருக்கா!?!?

மங்களூர் சிவா said...

/
இது என்னோட இடம்.

இங்க எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!
/

ப்ளாட் போட்டுடலாமா??

மங்களூர் சிவா said...

/
இது என்னோட இடம்.

இங்க எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!
/

ஸ்கொயர் ஃபீட் என்னப்பா ரேட்டு!?!?

மங்களூர் சிவா said...

/
இது என்னோட இடம்.

இங்க எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க!
/

தண்ணி(!?!?) பிரச்சனை எதும் இல்லையே இந்த ஏரியால

Thamiz Priyan said...

/// மங்களூர் சிவா said... /இது என்னோட இடம். இங்க எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்! வாங்க! /

பட்டா எல்லாம் இருக்கா!?!?
ப்ளாட் போட்டுடலாமா??
ஸ்கொயர் ஃபீட் என்னப்பா ரேட்டு!?!?
தண்ணி(!?!?) பிரச்சனை எதும் இல்லையே இந்த ஏரியால ///

பிளாக்கர் தந்த பட்டா இருக்கு..
நல்ல ரேட் கிடைச்சா வித்துடலாம்..
sq/ft இரண்டு லட்சம் தான்...;)..
100 மீட்டர் தூடத்திலேயே டாஸ்மாக் இருக்கு... :)))

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

/////தமிழ் பிரியன் said...

///நிஜமா நல்லவன் said
வெட்டிப்பயல் said...
கோபிநாத் said...

அப்படியே என்னை மாதிரி பிரியாதவங்களுக்கு விளக்கவுரை (கோனார் நோட்ஸ்) எழுதி போட்டீங்கனா வசதியாயிருக்கும் :-) ///
முயற்சி செய்கிறேன்...////


முயற்சி திருவினையாக்கும். எப்போது? //
தல! திருக்குறளுக்கு விளக்கம் போட்டாச்சு. மத்ததுக்கு நான் விளக்கம் சொன்னா தமிழ் கூறும் நல்லுலகம் என்னை அடிக்க வரும்... :)
(இந்தியாவில் இருந்தாலாவது எப்படியாவது காப்பி அடிக்கலாம்.. இங்க :(

ரசிகன் said...

அவ்வ்வ்வ்.... எங்க ஸ்கூலுல தமிழ்வாத்தியார் போர்டுல பண்ணற ரவுச நம்ம தமிழ்பிரியன் மாம்ஸ் பண்ணிவைச்சிருக்கார்:P

ரசிகன் said...

நல்லவேளை 2 வது குறள்,2+2வடு குறள்.2+2+2 குறள்ன்னு போட்டிருந்தார்னா பாதி திருக்குறள் புத்தகமும் இங்கயே வந்திருக்கும்ல்ல..:))

ரசிகன் said...

புறநானூறு,அகநானூறுல்லாம் பயப்படாம கொடுத்து கலக்கியிருக்கிங்க,
வாழ்த்துக்கள் மாம்ஸ்:)