Thursday, October 18, 2007

யாரப்பா இதில கெட்டிக்காரன் ?

அய்யா இந்த கதையைக் கேளுங்க,
நம்ம தமிழ்நாட்டுல லாட்டரி சீட்டை ஒழிச்சுட்டாங்களாம்ப்பா, சரி நல்ல விஷயம் தானே, அதுவும் நடந்து பல வருஷம் ஆச்சேனு சொல்றீங்களா! அங்க தானே சாமி விஷயமே இருக்கு. இப்ப தமிழ்நாட்ல திரும்பவும் லாட்டரியைக் கொண்டு வந்துட்டாங்கப்பா! அட கூறுகெட்ட கூமுட்டை. எங்கடா லாட்டரி விக்கிறாங்கன்னு கேளுங்க சாமி.
அதை அரசாங்கமே விக்கிறாங்க. தினமும் ராத்திரிக்கு நீங்கத் தூங்கப் போவீங்களாம்ல அதுக்கு முன்னாடி கலைஞர் டீவியைப் பாக்கனுமாம். அதில ஒரு நிகழ்ச்சி இருக்காம். பேரு சுத்த தமிழ்ல பிட் டு வின்னாம். என்க்கு ஒரு மண்ணும் விளங்கலை. உங்க செல்பேசில இருந்து நீங்க எவ்வளவு பந்தயம் கட்டப் போறிங்கன்னு சொல்லனுமாம். ஒரு தடவை குறுஞ்செய்தி அனுப்பினா 3 ரூபா மட்டும் போகுமாம். எத்தனை தடவை வேண்டுமானாலுல் அனுப்பலாமாம். ஒவ்வோரு தடவைக்கும் 3 ரூபா தானாம். தமிழ்நாட்ல இருக்கிற நாமேல்லாம் சரமாரியா குறுஞ்செய்தி அனுப்பினா கடைசில ஒரு ஆளுக்கு மட்டும் செல்பேசி ஒன்னைக் குடுத்துட்டு மத்த காசை எடுத்துட்டு அவன் வட நாட்டுக்கு போயிருவானாம். அப்ப இது லாட்டரி தான? மக்கா எல்லாரும் நாளைக்கு கலைஞர் டீ.வியை பாத்துட்டு குறுஞ்செய்தி அனுப்பனும். சரியா.

No comments: