Friday, October 19, 2007

அறியாமை

இந்த வரிகளை நீங்கள்

வாசிக்கும் தருணம்

எங்காவது மழை பெய்யலாம்

யாராவது அன்னா அக்மதோவா படிக்கலாம்

யாரோ சரவணன் கடன் கேக்கலாம்

வாகனம் பழுதாகலாம்

யாராவது கல்யாணம் பண்ணலாம்

பட்டாம் பூச்சியின் படபடப்போடு

மரணம் யார் மீதாவது

பறந்து போகலாம்

ஆண் பிள்ளையாய் எவனாவது

மனைவியை அடிக்கலாம்

எது வேண்டுமானால் நிகழலாம்

என்றாலும்

அடுத்த கவிதையின் முதல் வரியை

நான் எழுதுவேன்

அடுத்த பக்கத்துக்கு நீங்கள்

செல்வீர்கள்

தவற விட்டவை

ஏராளமுண்டு என்னிடம்

மகனின் இருப்பை

பால்யத்தின் தத்துவத்தை

மனசின் தட்டானை

முகவரியற்ற தண்டவாளத்தின்

தனிமையை……………..

கூழாங்கற்களின் மேல்

பரவிச் செல்லும் நீரைப் போல்

சேகரித்து வைத்தவை

என்னைத் தவிர

வேறோன்றுமில்லை

பகலே இல்லாத இரவை

யார் நேசிப்பது

வெயில் அற்ற மழையில்

யார் நனைவது?

எப்போதாவது தோன்றினால்

மட்டுமே வானவில்

நீ நடந்து போகும் வழியில்

கசங்கி விழும் வெயில்

வழி விடுகிறது நினைவுகளாய்

உனக்கும் எனக்குமான

நிகழ்காலத்துக்குள்

எப்படி வந்தன

கடந்த கால நிழல்கள்

வலைப்பின்னல் போல்

உன் பொய்கள்

முகமுடி கிழியும்

வார்த்தைகளின் இடுக்குகளில்

சிதைகிறது என் மேலான நேசம்

மரனக் கிடங்கில் புன்னகைக்க

வேண்டுமென வேண்டிக்கொள்

முடிந்தால் நாளையாவது? - ஆ.வி ... தமயந்தி


No comments: