
பையா படம் பார்த்தேன்... கார்த்தி நல்லா தான் நடித்து உள்ளார். இந்த படத்தின் நாயகி தமன்னா.. இவருக்காக தூத்துகுடியில் ரசிகர் மன்றம் அமைக்கப்பட்டு கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் எல்லாம் நடைபெற்று இருக்கின்றதாம்... சீக்கிரமே கோவில் கட்டுவாங்களான்னு தெரியல.. ;-)) தமன்னா நடித்து நான் பார்த்த முதல் படம் ஆனந்த தாண்டவம்.. குரு சுஜாதாவினுடைய பிரிவோம் சந்திப்போம் நாவலைப் படமாக்கி இருந்தார்கள்.. அப்படத்த்தில் பார்த்த போதே அந்த புள்ளை மீது ஒரு பரிதாபமான லுக் தான் வந்தது.. பையா பார்த்தும் ஏதும் மாற்றமில்லை.
வயாசியிடுச்சோ..;-)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தின் ஷார்ஜாவில் லுங்கி கட்டி வெளியே செல்வது தடுக்கப்பட்டுள்ளதாம்.. அப்படி சென்றவரை போலிசார் கைது செய்தும் இருக்கிறார்களாம்.. கைலி\லுங்கி என்றாலே வட நாட்டவர்கள் முதல் கொண்டு ஒரு இளக்காரம் தான் இருக்கும்.. ஷார்ஜாவில் இருந்த போது நான் இருந்த இடத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தொழுகைக்காக ரோலா தமிழ் பள்ளிக்கு வெள்ளை லிங்கியோடு வரும் வழக்கம் இருந்தது....
மற்ற நாட்டவர்களின் ஆடைகளோடு ஒப்பிடும் போது லுங்கி ஒரு நல்ல ஆடையாகவே இருந்திருக்கின்றது... அது அந்த கலாச்சாரத்திற்கு எப்படி மாற்றமானதாக இருக்கும் என்று தெரியவில்லை... அரபுகள் அணியும் தோப் போன்ற அமைப்பில் தான் லுங்கியும் இருக்கின்றது..
அரை நிர்வாணமாகவும், தொடை தெரியும் சாட்ஸ்களுடன் திரியும் மேற்கத்திய கலாச்சாரவர்களின் ஆடைகளுடன் ஒப்பிடும் போது லுங்கி எவ்வளவோ பெஸ்ட்.
இது தொடர்பான டிபிசிடியின் பழைய சுட்டி ஒன்று.
கல்ஃப்நியூஸ் செய்தி.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பிரியாணி... ஊரில் இருக்கும் போது ருசித்துச் சாப்பிடுவது... வளைகுடா வந்த பிறகு ருசியான சாப்பாடு என்பது எட்டாக்கனியாத் தான் இருக்கும்... சில,பல ஹோட்டல்கள் இருந்தாலும் ஏனோ ஊரின் சமையல் ருசி வருவதே இல்லை... அதனால் சில சமயங்களில் நாமே களத்தில் இறங்கி விடுவது வழக்கம். அப்படித் தான் இரு வாரங்களுக்கு முன்பு களத்தில் இறங்கி வழக்கம் போல் சக பதிவர்களிடம் உதவி கேட்டால் எல்லாரும் பயந்து ஓடி விட்டார்கள்... எல்லாம் பிரியாணி என்ற பெயரில் புளியோதரை செய்து கொடுமை செய்பவர்கள் போல் இருக்கின்றது.. பாவம் தங்க மச்சான்கள்.. .;-)))
நேற்று நானே களத்தில் இறங்கி விட்டேன்... மட்டனை கொஞ்சம் மஞ்சள் தூள், உப்பு போட்டு குக்கரில் ஏற்றி 8 விசில் வைத்து வேக வைத்துக் கொண்டேன். பின்னர் பட்டை, ஏலம், கிராம்பை சுட்ட எண்ணையில் போட்டு, அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு போட்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு வதக்கி, மசாலா, உப்பு எல்லாம் சேர்த்து பின்னர் வெறும் கறியை போட்டு, அதில் அரிசியைப் போல் ஒன்றரை மடங்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, பின்னர் அரிசியைப் போட்டு (அரிசியை முதலில் வேக வைக்கவில்லை) நன்றாக கிளறி தண்ணீர் வற்றியதும் தம் போட்டோம்.
20 நிமிடங்களுக்கு சிம்மில் வைத்து விட்டு அதற்குப் பிறகு கொஞ்சம் நேரம் கழித்து சாப்பிட்டோம். நல்லா தான் இருந்தது.. முதல் முயற்சி.. தம் போட்ட போட்டோ பாருங்க.. எம்புட்டு டெக்னிக் கைவசம் இருக்கு பாருங்க... ;-))

இரவு பிரியாணி சாப்பிட்ட அனைவரும் இந்த பதிவு போடும் வரை நலமாகவே இருப்பதால் இனி அடிக்கடி பிரியாணி டெஸ்ட்டிங் செய்யலாம் என்று ஐடியா.