Sunday, May 11, 2008

இனிதே நிறைவுற்ற தஞ்சை தவ்ஹீத் எழுச்சி மாநாடு

தமிழக சட்டசபை முற்றுகை - TNTJ தீர்மானம்
தஞ்சையில் மே 10 மற்றும் 11 ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடந்தது. உலகின் பல பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்காக முஸ்லிம்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் TNTJ யின் பல மார்க்க அறிஞர்களும் உரை நிகழ்த்தினர். மற்றும் இஸ்லாத்தை விளக்கும் கண்காட்சிகளும், சமூக முன்னேற்றத்திற்கான அரங்கங்களும் அமைக்கப்பட்டிருந்தன. கடைசி நாளான இன்று அதன் நிறைவாக பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாக முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றிய தமிழக அரசு அதை சரி வர நிறைவேற்றாததைக் கண்டித்து சட்டமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் போது சட்டசபை முற்றுகை போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




1 comment:

Thamiz Priyan said...

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயன்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... :)