Saturday, July 10, 2010

அ முதல் ஃ வரை - தமிழ்ப் பழமொழிகள்

தமிழ்நாட்டு பழமொழிகள்

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
  • அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
  • அசையாத மணி அடிக்காது
  • அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
  • அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
  • அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
  • அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
  • அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
  • அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
  • அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
  • அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
  • அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
  • அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
  • அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
  • அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
  • அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
  • அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
  • அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
  • அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
  • அன்பே கடவுள்.
  • அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
  • அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
  • அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
  • அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
  • அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
  • அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
  • அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
  • அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
  • அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
  • அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
  • அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
  • அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
  • அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
  • அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
  • அதிக ஓய்வு அதிக வேதனை.
  • அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
  • அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
  • அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
  • அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
  • அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
  • அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
  • அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
  • அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
  • அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
  • அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  • அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
  • அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
  • அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
  • அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
  • அரசனும் அன்னைக்கு மகனே.
  • அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
  • அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
  • அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
  • அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
  • அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
  • அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
  • அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
  • ஆடிப்பட்டம் தேடி விதை.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே!
  • ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
  • ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
  • ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
  • ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
  • ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
  • ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
  • ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
  • ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
  • ஆறுவது சினம்.
  • ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
  • ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
  • ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
  • ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
  • ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
  • ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
  • ஆலை விழுது தாங்கியது போல.
  • ஆடு பகை குட்டி உறவா?
  • ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
  • ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
  • ஆரம்பத்தில் சூரத்துவம்.
  • ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
  • ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
  • ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
  • ஆற்றுநீர் பித்தம் போக்கும்
    குளத்து நீர் வாதம் போக்கும்
    சோற்றுநீர் எல்லாம் போக்கும்
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.

  • இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
  • இளமையில் கல்.
  • இளங்கன்று பயமறியாது.
  • இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
  • இளமையில் கல். முதுமையில் காக்கும்.
  • இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
  • இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
  • இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
  • இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
  • இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
  • இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
  • இறங்கு பொழுதில் மருந்து குடி.
  • இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
  • இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
  • இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
  • இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
  • இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
  • இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
  • இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
  • இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
  • இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
  • இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
  • இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
  • இடுக்கன் வருங்கால் நகுக.
ஈ.

  • ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
  • ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
  • ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
  • ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
  • ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.

  • உழுத நிலத்தில் பயிரிடு.
  • உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
  • உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
  • உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
  • உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  • உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
  • உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
  • உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
  • உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
  • உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
  • உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
  • உழைத்து உண்பதே உணவு.
  • உப்பிட்டவரை உள்ளவும் நினை.
  • உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு

  • ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
  • ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
  • ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
  • ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
  • ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
  • ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

  • எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
  • எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
  • எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
  • எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
  • எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
  • எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
  • எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
  • எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
  • எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
  • எண்ணம்போல் வாழ்வு.
  • எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

  • ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
  • ஏழை சொல் அம்பலம் ஏறாது.
  • ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
  • ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
  • ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
  • ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

  • ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
  • ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?

  • ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
  • ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
  • ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
  • ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
  • ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
  • ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
  • ஒழுக்கம் விழுப்பம் தரும்.
  • ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
  • ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
  • ஒத்தடம் அரை வைத்தியம்.
  • ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
  • ஒருவர் பொறுமை இருவர் நட்பு.

  • ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
  • ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
  • ஓடிப் பழகிய கால் நிற்காது.
  • ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.

  • கண்ணுக்கு இமை பகையா?
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
  • கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
  • கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
  • கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
    கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
    பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
  • கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
  • கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
  • கடுங்காற்று மழைக்கூட்டும்.
    கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
  • கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
  • கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
  • கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
  • கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
  • கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
  • கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
  • கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
  • கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
  • கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
  • கல்வி விரும்பு.
  • கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
  • கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
  • கணக்கு எழுதாதன் நிலைமை.
    கழுதை புரண்ட இடம் மாதிரி.
  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
  • கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல.
  • கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
  • கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
  • கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
  • கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
  • கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
கா

  • காலம் போகும் வார்த்தை நிற்கும்.
  • கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
  • கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
  • கார்த்திகை கன மழை.
  • கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
  • கார்த்திகை கண்டு களம் இடு.
  • கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
  • காணிச் சோம்பல் கோடி நட்டம்.
  • காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
  • காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
  • காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  • காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
  • காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
  • காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
  • காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
  • கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
  • கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
  • கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
  • கார்த்திகை கால் கோடை.
  • கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
கி

  • கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
  • கிட்டப் போயின் முட்டப் பகை.
  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
  • கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
கீ

  • கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
கு

  • குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
  • குருடனுக்கு ஒரே மதி.
  • குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
  • குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
  • குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
  • குதிரையும் கழுதையும் ஒன்றா?
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
  • குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குடி குடியைக் கெடுக்கும்.
  • குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
  • குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூ

  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
  • கூழானாலும் குளித்துக் குடி.
  • கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
  • கூலிப் படை வெட்டுமா?
  • கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
கெ

  • கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
  • கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
  • கெடுவான் கேடு நினைப்பான்.
  • கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
  • கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
கை

  • கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
  • கை பட்டால் கண்ணாடி.
  • கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கொ

  • கொடிக்கு காய் பாரமா?
  • கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
கோ

  • கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
  • கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
  • கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.
  • கோமளவல்லிக்கு ஒரு மொழி
    கோளாறுகாரிக்குப் பல மொழி
  • கோபத்திற்குக் கண்ணில்லை.
கௌ

  • கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.

  • சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
    சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
  • சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
  • சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
சா

  • சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
சி

  • சிறுதுளி பெருவெள்ளம்.
  • சிறு புண்ணையும், ஏழை உறவின்னையும் அலட்சியம் செய்யாதே.
  • சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
  • சித்திரை எள்ளைச்சிதறி விதை.
  • சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
    பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
    வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
  • சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
  • சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
  • சித்திரை மழை செல்ல மழை.
சீ

  • சீரைத் தேடின் ஏரைத்தேடு
சு

  • சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
  • சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
  • சுக்கைப் போல மருந்தில்லை.
  • சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
  • சுத்தம் சோறு போடும்.
  • சுற்றம் சூழ வாழ்
  • சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
  • சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
சூ

  • சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
  • சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
  • சூதும் வாதும் வேதனை செய்யும்
செ

  • செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
  • செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
  • செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
சே

  • சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
  • சேற்றில் முளைத்த செந்தாமரை
சோ

  • சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
  • சோம்பித் திரியேல.
  • சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?

  • தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை க்டது யாரு?
  • தண்ணீரே உணவகளின் அரசன்.
  • தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
  • பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
  • மனிதனுக்கச் சோதனை பெண்!
  • தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
  • தண்ணீரில் அடி பிடிக்கிறது.
  • தலை பகை, வால் உறவா?
  • தண்ணீர் வெந்நீரானாலும் நெருமப்பை அணைக்கும்.
  • தலைக்குத் தலை பெரிய தனம்.
  • தன் தப்பு பிறருக்குச் சத்து
  • தன் உயிர்போல் மண் உயிர் நினை.
  • தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
  • தன் கையே தனக்கு உதவி.
  • தர்மம் தலை காக்கும்.
  • தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
  • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா

  • தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
  • தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
  • தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
  • தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.
  • தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
  • தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
  • தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
  • தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
  • தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
தி

  • திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
  • திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
தீ

  • தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
  • தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
து

  • துறவிக்கு வேந்தன் துரும்பு.
  • தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
  • துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
  • தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
  • துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
  • துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
தூ

  • தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
  • தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
  • தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
  • தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
  • தூங்காதவனே நீங்காதவன்.
  • தூரமிருந்தால் சேர உறவு.
தெ
  • தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
  • தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
  • தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
  • தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
  • தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
  • தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
தை
  • தையல் சொல் கேளேல்.
  • தை பிறந்தால் வழி பிறக்கும்.
தொ
  • தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
  • பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
  • பணம் பத்தும் செய்யும்.
  • பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
  • பணம் உள்ளவனுக்கு அச்சம்;
  • பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
  • பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
  • பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
  • பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
  • பல் போனால் சொல் போச்சு.
  • பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
  • பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
  • பங்குனி மாதம் பதர் கொள்.
  • பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
  • பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
  • படுக்க படுக்க பாயும் பகை.
  • பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
  • பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.
  • பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
  • பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
  • பணம் பாதாளம் வரை பாயும்.
பா
  • பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
  • பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
பி
  • பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
  • பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
  • பிச்சை புகினும் கற்கை நன்றே!
  • பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
  • பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
பு
  • புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
  • புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.
  • புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
    சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
    யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
  • புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
  • புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.
  • புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
    முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
பூ
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
  • பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
  • பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
  • பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
பெ
  • பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
    ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
  • பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
  • பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
    சுவருக்கு மண்ணிட்டுப் பார்
  • பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
பொ
  • பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
  • பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
  • பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
  • பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார்.
  • பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
  • பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
போ
  • போகும்போது புளியமரத்தடியில் போ
  • வரும்போது வேப்பமரத்தடியல் வா.
  • நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
  • நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
  • நன்றி மறவேல்.
  • நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
  • நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.
  • நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
  • நன்மைக்கு நன்மை செய்
    தீமைக்கு நன்மையே செய்
  • நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
  • நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
  • நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
நா
  • நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
  • நாளை என்பது நட்டாற்று ஓடம்.
  • நாளை என்று ஒருநாள் உண்டா?
  • நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
  • நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
  • நாளும் அதிகாலையில் நீராடு.
  • நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
நி
  • நிலையாமை ஒன்றே நிலையானது.
நீ
  • நீலிக்கு கண்ணீர் இமையிலே.
  • நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
  • நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.
நெ
  • நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
  • நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
நொ
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
நோ

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

  • மனம் போல வாழ்வு
  • மனம் ஒரு குரங்கு
  • மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
  • மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
  • மனைவி வீட்டின் ஆபரணம்.
  • மனைவி சொல்லே மந்திரம்.
  • மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
  • மனித நேயம் வளர்ப்பதே மதம்.
  • மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
  • மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
  • மதியாதார் வாசல் மிதியாதே!
  • மனசாட்சியை ஏமாற்றாதே!
  • மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
  • மந்திரம் கால்; மதி முக்கால்.
  • மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
  • மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
  • மனிதனின் அழகு அவன் நாக்கு.
மா
  • மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
  • மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
  • மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
  • மாதா, பிதா, குரு, தெய்வம்.
மி
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மீ
  • மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
மு
  • முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
  • முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
  • முன் வைத்த காலை பின் வைக்காதே!
  • முயன்றால் முடியாதது இல்லை.
  • முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
  • முயற்சி திருவினையாக்கும்.
மூ
  • மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
  • மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
  • மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.
மை
  • மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!
  • வட்டியோடு முதலும் போச்சு.
  • வளைகிற முள் நுழையாது.
  • வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
  • வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.
  • வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.
  • வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
  • வண்டி வந்தால் வழி உண்டாகும்.
  • வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
வா
  • வாய் உள்ளவன் உள்ளே.
  • வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
  • வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
  • வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
  • வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
  • வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.
  • வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
    கடந்த காலம் ஒரு கனவு
    வருங்காலம் ஒரு பெருமூச்சு
  • வாய் அரை வைத்தியன்.
  • வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
    வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
வி
  • வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
  • விரலுக்கேற்ற வீக்கம்.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்
வீ
  • வீணை கோணினும் நாதம் கோணுமா?
வெ
  • வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
வே
வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டு வரும்

டிஸ்கி : பார்வ்ர்ட் மெயிலில் வந்தது.. திரும்ப தேடி எடுக்க இயலாது என்பதால் இங்கு பதிவேற்றம் செய்தாகி விட்டது.

4 comments:

சிவபாலன் said...

Thanks a lot!

ஆயில்யன் said...

நேத்து ஈவினிங்க் கூட நல்லாத்தானே சிரிச்சு பேசிக்கிட்டிருந்தீங்க ராசா!? - HSBல சாப்பிட்டது எதுனா ஒத்துக்கிடாம போச்சா? #விசாரிப்பு

ராமலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு.

அப்துல்மாலிக் said...

ஊஃப் மூச்சு வாங்குது தல