Friday, December 5, 2008

"பூ ”வும் வாரணம் ஆயிரமும், மறுவீட்டுக்கு போன கதையும்

சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு முழு தமிழ் படமாக போன வாரம் வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். படம் பார்த்தால் விமர்சனம் எழுதனும் என்று நினைப்பதில்லை. ஆனால் சமீரா அழகாக இருந்தார். ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது..... ;) . சூர்யா தனது காதலிக்காக கடுமையாக உழைத்து இரண்டே ஆண்டுகளில், வீட்டுக் கடன் எல்லாவற்றையும் அடைக்கின்றார். அதை அடுத்து தனது காதலியைத் தேடி அமெரிக்காவிற்கும் செல்கின்றார். கொஞ்சம் லூசுத்தனமா இருக்கோ? எனக்கு இதெல்லாம் லூசுத்தனமா இல்ல.... அதே மாதிரி நமக்குள்ளயும் ஒரு காலத்தில் நெருப்பு இருந்துச்சு..

கடல் கடந்து காதலியை தேடிப் போகனும்னு... ஆனால் கடல் கடந்து கூலி வேலைக்கு தான் போக முடிஞ்சது... ஆனா 10 வருசமா இருந்தும் எனக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட கட்ட முடியல... சினிமாவுக்கு தான் ஒரு பாடலில் எல்லாம் இம்புட்டு பணம் சம்பாதிக்க முடியும் போலன்னு நினைச்சுக்கிட்டேன். இதுக்கு தான் டீசண்டாவே இருக்கக் கூடாதோ?..;))))



படம் நன்றி : http://www.sameerareddy.info/
*****************************************************************************

வரும் 7 ந்தேதி முதல் 12 ந்தேதி வரை ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை உள்ளது. விடுமுறைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால் எதாவது படம் பார்க்கலாம் என நினைத்து ’பூ’ பதிவிறக்கினேன். (இந்த நாட்டில் திரையரங்கம் இல்லாததால் வேறு வழி இல்லை. மன்னிக்கனும்). ஏனோ நேற்று வார இறுதி என்பதால் இந்த படத்தை நேற்று இரவே பார்த்து விட்டேன்.

நம் சமூகத்தில் எப்பவுமே ஆண்களின் பழைய காதல்கள் ஒரு அழகான நினைவுகளாகவும், பெண்களின் பழைய காதல்களை ஒரு அசிங்கமாகவும் நினைக்கின்றோம். ஒரு திருமணமான பெண்ணின் பழைய காதலை சொல்லும் முயற்சி இது. நல்லா இருக்கு...:)

***********************************************************

மகனுக்கு இரண்டு வயது, இரண்டு மாதம் முடிந்துள்ளது. வீட்டுக்கு தொலை பேசும் போது அவ்வப்போது பேசுவான். தங்கமணி சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்வான். அவனுக்கு கற்றுத் தரும் 1,2,3 .. ABCD சொல்கின்றான்.

அழகாக அஸ்ஸலாமு அலைக்கும் சொல்வான். அத்தா நல்லா இருக்கீங்களா என்று கேட்பான். நல்ல மூடில் இருந்தால் குல்குவல்லாகு அஹது (திருக்குர்ஆனின் ஒரு பகுதி) சொல்வான். சில நேரங்களில் அல்லாஹூம்ம ரப்பனா ஆத்தினா (பிரார்த்தனை) சொல்வான். தூங்குவதற்கு பெட் சென்றதும், அவனாகவே ”அல்லாஹூம்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா” என்று சொல்லி விடுவானாம். (தூங்குவதற்கு முன் சொல்வது)

நேற்று போனை அவனிடம் கொடுத்ததும் அவனாகவே “அத்தா, உடம்பை பார்த்துக்கங்க. அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்லிட்டு தங்கமணியிடம் போனைக் கொடுத்து விட்டு போய் விட்டான். போன் பேசி முடிக்கும் போது இதே வார்த்தைகளைக் கூறுவது தங்கமணியின் வழக்கம். அதை அப்படியே கவனித்து சொல்லி விட்டான். ஏன் என்றால் தலைவர் விளையாட்டில் பிஸியாக இருந்தாராம். அதனால் பேச்சை விரைவாக முடித்து ஓடுகின்றாராம்....:))

*****************************************************************************

கல்யாணம் ஆன சில தினங்களில் மறுவீடு செல்வது எங்கள் பகுதி வழக்கம். திருமணம் முடிந்தது முதல் முறையாக தம்பதியர் இருவரும் பெண்ணின் வீட்டுக்கு செல்வது மறுவீடு. திருமணமான மூன்றாம் நாள் நானும் மறுவீடுக்கு சென்றேன். ஏற்கனவே பெண் பார்ப்பதற்காக சென்று இருந்ததால் எனக்கு ஊர் புதிதாக இல்லை. (நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் ஊர். காலை 2 , மதியம் 1, மாலை 2 என ஊருக்குள் பஸ் வரும். இல்லையெனில் மெயின் ரோட்டில் இறங்கி 3 கி.மீ தூரம் போகனும்...;)))) என்ன செய்ய )

முஸ்லிம்களின் வழக்கத்தில் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்க்க இயலாது. ஆனால் நாங்கள் உண்மையான இஸ்லாமிய முறையைப் பேண வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்கள் என்பதால் பெண் பார்க்க சென்றோம். ... சரி அந்த கதையெல்லாம் வேறு ஒரு நாள் சொல்லலாம். இப்ப வேற ஒன்னு சொல்கிறேன்.

மறுவீடு சென்றதும் வீட்டில் கோழிக் கறி எடுத்து பிரியாணி. 11 மணிக்கே வாசனை மூக்கைத் துளைத்தது. கிச்சனை நோட்டம் விட்ட போது கோழிக் கால் கூட பொரிப்பது தெரிந்தது. மதியம் தொழுகைக்குப் பின் சாப்பிட அமர்ந்தோம். சுடச்சுட பிரியாணி தட்டில் வந்தது. அதோடு பொரித்த கோழிகாலும்... இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டனுடானுட்டு உட்கார்ந்து இருக்கேன். அருகில் இருந்த மச்சானும்(தங்கமணியின் சகோதரர்), தங்கமணியும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

நான் டிவியைப் பார்த்துக் கொண்டே அடுக்களையையும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தேன். தங்கமணியும் ’சாப்பிடுங்க’ என்று வழியுறுத்த ’சூடா இருக்கு’ என்று சொல்லி வைத்தேன். நேரமாகிக் கொண்டே இருந்தது. பிரியாணியும் ஆறத் துவங்கி இருந்தது. நானும் எம்புட்டு நேரம் தான் பசிக்காத மாதிரி நடிக்கிறது?.... நைஸா தங்கமணியிடம் கேட்டேன்.

“ பிரியாணி இருக்கு... ஆனா ஊத்தி தின்ன தால்ச்சா, பருப்புக் கறி(தால்) எதுவும் இல்லியே?” அதுக்கு தங்கமணி “ எங்க ஊர்ல எல்லாம் பிரியாணி செஞ்சா வேற ஊத்திக்க எல்லாம் எதுவும் செய்ய மாட்டோம்” என்று சொல்லி விட்டாள். ஒரு வெங்காய சட்னி கூட இல்ல...:( என்னயா இது நமக்கு வந்த சோதனைன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் என்ன சுவையான பிரியாணியை கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டியதாப் போச்சுது.. இப்பவரை தங்கமணி இதைச் சொல்லி கலாய்ப்பது உண்டு...:)))

அதற்குப் பிறகு நான் சென்றால் நாங்கள் சாப்பிடும் ஸ்டைலிலேயே சமையல் செய்கின்றார்கள்.
( நானானிம்மா, ராமலக்ஷ்மி அக்கா கவனிக்க : சொதி, அடை எல்லாம் இதுவரை அங்க செஞ்சு தந்ததே இல்லீங்க...:( ;))) )

109 comments:

Anonymous said...

அடப்பாவமே, பிரியாணிக்கு ஒரு தயிர் வெங்காயப்பச்சடி கூட குடுக்காம விட்டுட்டாங்களா !!!

Anonymous said...

பூ படம் பாக்கணும்னு விமரிசனம் படிச்சதுல தோணுது.
ஹையா Me the first

ஆயில்யன் said...

மீ த மூணு!

ஆயில்யன் said...

//ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது//

ரியலி!!!

பட் நினைவுகள் எப்பவுமே வெளிப்பட்டுக்கொண்டுதானே இருக்கும் அதுதான நியதி! (ஆமாம் அந்த அ.வீ.பெ சூர்யா மாதிரி ஒரு ஆளு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டாரா?)

ஆயில்யன் said...

//ஆனா 10 வருசமா இருந்தும் எனக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட கட்ட முடியல..//

”இது என்னோட இடம்ன்னு சொல்லிக்கிற பிளாக்கு மட்டுமில்ல பிளாட்டும் கூட கூடிய சீக்கிரம் வாங்கிடுவீங்க பாஸ் நோ பீலிங்க்ஸ் !

ஆயில்யன் said...

//அவனுக்கு கற்றுத் தரும் 1,2,3 .. ABCD சொல்கின்றான்//

வெரிகுட்!
வெரிகுட்!

(ஒரு வேளை எனக்கு வாய்ப்பு கிடைச்சா ஊருக்கு வந்து பயபுள்ளைக்கி ஏபிசிடி அப்பா தாடி சொல்லிக்கொடுக்கிறேன் ஒ.கேய்ய்ய்!)

ஆயில்யன் said...

//(நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் ஊர். காலை 2 , மதியம் 1, மாலை 2 என ஊருக்குள் பஸ் வரும். இல்லையெனில் மெயின் ரோட்டில் இறங்கி 3 கி.மீ தூரம் போகனும்...;)))) என்ன செய்ய )
///

ஒண்ணும் கஷ்டமேயில்ல!
ஏழு கடல் ஏழு மலை தாண்டியெல்லாம் கூட போயி இளவரசியை ஹைஜாக் பண்ணி வந்திருக்கிற கதைகள் இருக்குதே!!!

ஆயில்யன் said...

//நான் டிவியைப் பார்த்துக் கொண்டே அடுக்களையையும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தேன்//

திருட்டுபயபுள்ள!

ஆயில்யன் said...

//எங்க ஊர்ல எல்லாம் பிரியாணி செஞ்சா வேற ஊத்திக்க எல்லாம் எதுவும் செய்ய மாட்டோம்” என்று சொல்லி விட்டாள்.//


ஆஹா அந்த ஊருப்பக்கம் யாரும் போகாதீங்கப்பா பிரியாணிக்கு ஒரு தால்ச்சா கூட கிடையாதாம்!

ஆயில்யன் said...

//இப்பவரை தங்கமணி இதைச் சொல்லி கலாய்ப்பது உண்டு//

”தால்ச்சா கேட்டு என் ராசா தவிச்சு போயில குந்தியிருந்தாரு “ அப்படின்னா பாஸ்:))))

சென்ஷி said...

நல்லாருக்குங்க :)

Anonymous said...

உங்களுக்கு எல்லாம் பிரியாணி சமைச்சு போடுறது ரொம்ப அதிகம்.இதுல ஊத்தி தின்ன இன்னொரு கறி வேண்டுமா? :)
அண்ணிகிட்ட சொல்லி ஊருக்கு போன உங்களுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்த சொல்லனும்.

வால்பையன் said...

//சமீரா அழகாக இருந்தார். ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது.//

சமீராவைப் பார்த்து பக்கத்து வீட்டு பொண்ணுன்னு சொன்னது நீங்க மட்டும் தான்.
ஒருவேளை சமீரா மாதிரியே பக்கத்து வீட்டுல ஒரு பொண்ணு இருக்குதோ என்னவோ

நட்புடன் ஜமால் said...

\\கடல் கடந்து காதலியை தேடிப் போகனும்னு... ஆனால் கடல் கடந்து கூலி வேலைக்கு தான் போக முடிஞ்சது... ஆனா 10 வருசமா இருந்தும் எனக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட கட்ட முடியல... சினிமாவுக்கு தான் ஒரு பாடலில் எல்லாம் இம்புட்டு பணம் சம்பாதிக்க முடியும் போலன்னு நினைச்சுக்கிட்டேன். இதுக்கு தான் டீசண்டாவே இருக்கக் கூடாதோ?..;))))\\

அதுதான் சினிமா “தல”

நட்புடன் ஜமால் said...

\\ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது\\

இன்னும் இருக்கா

ஈர்ப்பை கேட்க்கலை

ரமேஷ் வைத்யா said...

பையன் சொல்லும் விஷயங்களில் அடைப்புக் குறி விளக்கம் இல்லையென்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வால்பையன் ஒன்று சொன்னாலும் நன்று சொல்லியிருக்கிறார். ஆயில் இன்று இங்கே கும்ம முடிவெடுத்து விட்டாரா? (பி.கு. நான் உங்களுக்குத் தெரிந்தவன்தான்.)

வால்பையன் said...

//
மகனுக்கு இரண்டு வயது, இரண்டு மாதம் முடிந்துள்ளது. வீட்டுக்கு தொலை பேசும் போது அவ்வப்போது பேசுவான். தங்கமணி சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்வான். அவனுக்கு கற்றுத் தரும் 1,2,3 .. ABCD சொல்கின்றான்//

இதுவரை சந்தோசமான செய்தி தான், இதற்கு கீழே உள்ள பாராவில் என்ன சந்தோசம் இருக்கிறது,
உங்களது முஸ்லீம் மக்களுக்கு என் மகனை தீவிர முஸ்லீமாக வளர்க்கிறேன் என்று தகவல் சொல்கிறீர்களா?
நல்ல மனிதனாக வளர்க்க எதாவது செய்யலாமே?

வால்பையன் said...

//முஸ்லிம்களின் வழக்கத்தில் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்க்க இயலாது. ஆனால் நாங்கள் உண்மையான இஸ்லாமிய முறையைப் பேண வேண்டும்//

முஸ்லீம் வேறு.
இஸ்லாம் வேறா
கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?
நான் இரண்டும் ஒன்று தான் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்

ரமேஷ் வைத்யா said...

யுவர் டியர் சன் தூள் கிளப்புகிறானே... அடேயப்பா என்னா போஸு... என்னா லுக்கு..!

Thamiz Priyan said...

///வால்பையன் said...
//
மகனுக்கு இரண்டு வயது, இரண்டு மாதம் முடிந்துள்ளது. வீட்டுக்கு தொலை பேசும் போது அவ்வப்போது பேசுவான். தங்கமணி சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்வான். அவனுக்கு கற்றுத் தரும் 1,2,3 .. ABCD சொல்கின்றான்//
இதுவரை சந்தோசமான செய்தி தான், இதற்கு கீழே உள்ள பாராவில் என்ன சந்தோசம் இருக்கிறது,
உங்களது முஸ்லீம் மக்களுக்கு என் மகனை தீவிர முஸ்லீமாக வளர்க்கிறேன் என்று தகவல் சொல்கிறீர்களா?
நல்ல மனிதனாக வளர்க்க எதாவது செய்யலாமே?///

நான் எவ்வாறு ஒழுக்கமாக வளர்க்கப்பட்டேனோ அதே போல் தான் என் மகனும் வளர்க்கப்படுகின்றான். தீவிர முஸ்லிமாக வளர்க்கப்பட்டால் அவன் நல்லவனாகவே வளர்வான். அதில் சந்தேகமே இல்லை. தீவிரவாதியாக (இதைத் தானே சொல்ல வந்தீங்க)மாற இம்மியளவும் வாய்ப்பு இல்லை. டாஸ்மார்க்க்கு கூட போக வாய்ப்பு இல்லை என்பதையும் உங்களுக்கு மேலதிகமாக சொல்லிக் கொள்கின்றேன்.

முரளிகண்ணன் said...

மறுவீடு பிரியாணி மேட்டர் சூப்பர்

Thamiz Priyan said...

///வால்பையன் said...

//முஸ்லிம்களின் வழக்கத்தில் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்க்க இயலாது. ஆனால் நாங்கள் உண்மையான இஸ்லாமிய முறையைப் பேண வேண்டும்//

முஸ்லீம் வேறு.
இஸ்லாம் வேறா
கொஞ்சம் விளக்கமாக சொல்லமுடியுமா?
நான் இரண்டும் ஒன்று தான் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்///

நான் முஸ்லிம்களின் வழக்கம் என்று தான் சொன்னேன். இன்னும் சொல்வதானால் தமிழக முஸ்லிம்களின் வழக்கம் என்று கூட சொல்லலாம்... ஒரு வரைமுறை சட்டத்திற்கும், நடைமுறைக்கும் சில வேறுபாடுகளை நம் மக்களே கொண்டு இருப்பார்கள். அதே போல் தான் இதுவும். திருமணத்திற்கு முன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சம்மதம் சொல்வது வரைமுறை. ஆனால் பின்பற்றப் படுவதில்லை என்பது நடைமுறை. அதைத் தான் சொன்னேன்..:)

டாஸ் மார்க் சரக்கில் உடல்நலத்திற்கு கேடு என எழுதப்பட்டு இருக்கும். அது சட்டம். மனித மனத்திற்கும் தெரியும் அது கேடு தான் என்று. ஆனால் உதாசீனம் செய்வது நமது மக்களின் நடைமுறை...
(யோவ்! நீங்க கேட்டா எனக்கு உதாரணம் எல்லாம் எங்க இருந்து வருது பாருய்யா...அவ்வ்வ்வ் )

வால்பையன் said...

//டாஸ்மார்க்க்கு கூட போக வாய்ப்பு இல்லை என்பதையும் உங்களுக்கு மேலதிகமாக சொல்லிக் கொள்கின்றேன். //

இப்படி பொசுக்குன்னு சொல்லிபுட்டா எப்படி?
தமிழக அரசே அதை நம்பி தானே இருக்கு

வால்பையன் said...

//(யோவ்! நீங்க கேட்டா எனக்கு உதாரணம் எல்லாம் எங்க இருந்து வருது பாருய்யா...அவ்வ்வ்வ் ) //

இதுக்கு தான் பூவோடு சேர்ந்து நாறும் மணக்கும்னு அப்பவே பழமொழி சொல்லியிருக்காங்க!

ஹி ஹி ஹி

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அடுத்த வீட்டு பொண்ணுன்னா ஈர்ப்பா? .. ஓஹோ.. அப்படியா சேதி? :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

என் பையனும் நல்ல மூடுன்னா நல்லா இருக்கீங்க? (இருக்கீங்களான்னு கேக்கறானாம்).. இல்லன்னா ஹலோ ... பை ன்னு சொல்லிட்டு போயிடுவான் ..பிசி மேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

துளசி க்ளாஸ்ல படிச்சிட்டு இருக்கறதால .. தனிக்கதை அப்பற்ம் போடரேன்னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டிங்களா நீங்களும்..

சந்தனமுல்லை said...

தலைவர் பெரிய ஆளாயிட்டு வராரு போல!! எங்க ஊர்ல பிரியாணிக்கு கத்தரிக்கய் சால்னா, தயிர் வெங்காயம் பச்சடி கண்டிப்பா உண்டு. ஆனா பிரியாணியை அப்படியே சாப்பிடுவதே தனி டேஸ்ட்!! அப்புறம் கடைசியா ஒரு இனிப்பு இருக்குமே..பால் சுண்ட வைச்சி இல்லனா சைனா கிராஸ்-ல !! ம்ம்..ஆம்பூர் ஞாபகம் வந்துடுச்சி..இல்லல்ல..பிரியாணி ஞாபகம் வந்துடுச்சி!

மதிபாலா said...

நன்றாக இருந்தது.

அமிர்தவர்ஷினி அம்மா said...

நம் சமூகத்தில் எப்பவுமே ஆண்களின் பழைய காதல்கள் ஒரு அழகான நினைவுகளாகவும், பெண்களின் பழைய காதல்களை ஒரு அசிங்கமாகவும் நினைக்கின்றோம். //

மிகச் சரியான உண்மைதான்

சுடச்சுட பிரியாணி தட்டில் வந்தது. அதோடு பொரித்த கோழிகாலும்... //
உங்களுக்கு வசந்தா மெஸ் ஞாபகம் வந்துச்சா

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏன் என்றால் தலைவர் விளையாட்டில் பிஸியாக இருந்தாராம். அதனால் பேச்சை விரைவாக முடித்து ஓடுகின்றாராம்....:))

கலக்குங்க எசமான் கலக்குங்க.

அமிர்தவர்ஷினி அம்மா said...

\\ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது\\

இன்னும் இருக்கா

ஈர்ப்பை கேட்க்கலை

ஏன் ஜமால்

அமிர்தவர்ஷினி அம்மா said...

எங்க ஊர்ல பிரியாணிக்கு கத்தரிக்கய் சால்னா, தயிர் வெங்காயம் பச்சடி கண்டிப்பா உண்டு. ஆனா பிரியாணியை அப்படியே சாப்பிடுவதே தனி டேஸ்ட்!! அப்புறம் கடைசியா ஒரு இனிப்பு இருக்குமே..பால் சுண்ட வைச்சி இல்லனா சைனா கிராஸ்-ல !! ம்ம்..ஆம்பூர் ஞாபகம் வந்துடுச்சி..இல்லல்ல..பிரியாணி ஞாபகம் வந்துடுச்சி//

அதான் பப்புவுக்கு மக்கப் பேடா கொடுத்துட்டு, பிரியாணியை ஓரங்கட்டீனீங்களே.

ராமலக்ஷ்மி said...

என் தங்கை பெண் மூட் இருந்தால் நிறைய நேரம் பேசுவாள். விளையாட்டு பிஸியில் இருந்தால் “ஹாய் பெரிம்மா. அம்மாவைக் கூப்பிடவா?” என்பாள்:)).

திருமணம் முடிந்ததும் ‘எங்க வீட்டில இப்படியாக்கும்’ என சொல்லாத மாப்பிள்ளைகளே இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்:))! நாங்கதான் மாறிக்கறோம்:))!

அமித்து அம்மா சொன்ன மாதிரி தயிர் வெங்காயப் பச்சடிதான் பிரியாணிக்கு நாங்க வைக்கும் காம்பினேஷன்.

சொதியும் அடையும்தானே? நானானி அம்மா அழகா பதிவு போட்டிருக்காங்களே? நீங்க ஊருக்கு வரும் முன் செய்து பழகச் சொல்லுங்க. ப்ளாக் எல்லாம் படிப்பாங்கதானே:)?

நான்வெஜ் சாப்பிடுபவர்கள், சொதியில் நாங்க கத்திரிக்காய் போடுவது போல சின்ன [ஏதோ பேரு] மீன்களைப் பொறித்துப் போடுவாங்க, குறிப்பா தூத்துக்குடி பக்கம். ஒருமுறை டிவி ஒளிபரப்பில் பார்த்தேன்.

மங்களூர் சிவா said...

/
சமீரா அழகாக இருந்தார். ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது..... ;)
/

உங்க பக்கத்து வீட்டுல இம்புட்டு 'அழகா' 'அளவா' ஒரு பிகரா?? அண்ணே எப்ப ஊருக்கு வரட்டும்????

:))))

மங்களூர் சிவா said...

/
நமக்குள்ளயும் ஒரு காலத்தில் நெருப்பு இருந்துச்சு..
கடல் கடந்து காதலியை தேடிப் போகனும்னு... ஆனால் கடல் கடந்து கூலி வேலைக்கு தான் போக முடிஞ்சது
/

:)))))))

மங்களூர் சிவா said...

பையன் நல்லா பேசறானா?

குட் குட்

மங்களூர் சிவா said...

/
இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டனுடானுட்டு உட்கார்ந்து இருக்கேன். அருகில் இருந்த மச்சானும்(தங்கமணியின் சகோதரர்), தங்கமணியும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
/

எதாச்சும் மிச்சம் சொச்சம் வைச்சாங்களா உங்களுக்கு????

மங்களூர் சிவா said...

/
ஆயில்யன் said...

//ஆனா 10 வருசமா இருந்தும் எனக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட கட்ட முடியல..//

”இது என்னோட இடம்ன்னு சொல்லிக்கிற பிளாக்கு மட்டுமில்ல பிளாட்டும் கூட கூடிய சீக்கிரம் வாங்கிடுவீங்க பாஸ் நோ பீலிங்க்ஸ் !
/

ரிப்ப்பீட்டு

அத்திரி said...

//நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் ஊர். காலை 2 , மதியம் 1, மாலை 2 என ஊருக்குள் பஸ் வரும். இல்லையெனில் மெயின் ரோட்டில் இறங்கி 3 கி.மீ தூரம் போகனும்...;)))) என்ன செய்ய )//

நீங்கள் குறிப்பிட்டுள்ள பேருந்து நேரங்களும் எங்க ஊர் பஸ் நேரங்களும் ஒத்துபோகுது

ஜாக்கிரதை.?????????!!!!!!!!!!!!!!!!!


//“ பிரியாணி இருக்கு... ஆனா ஊத்தி தின்ன தால்ச்சா, பருப்புக் கறி(தால்) எதுவும் இல்லியே?” அதுக்கு தங்கமணி “ எங்க ஊர்ல எல்லாம் பிரியாணி செஞ்சா வேற ஊத்திக்க எல்லாம் எதுவும் செய்ய மாட்டோம்” என்று சொல்லி விட்டாள்//


அப்பவே கூச்சப்படாம கேட்டிருக்கீங்களே?/??!!!

நானானி said...

உங்க அருமை மகன் செல்லக் குறும்பையெல்லாம் அருகிலிருந்து ரசிக்க முடியாதது பத்தி எனக்கு வருத்தமாயிருந்தது. 'போனா வராது பொழுது போன கிடைக்காது' மாதிரிதான் மழலைப்பருவம்!

பிரியாணிக்கு சைட் டிஷ் வைக்கலேன்னா ரங்கமணி, 'என்ன ஜூலிக்கு வைக்கிற மாதிரி வைக்கிற?'என்பார்.
ஜூலி எங்க வீட்டில் முன்பிருந்த பாமரேனியன். அதனால் கிரேவியில்லாமல் பிரியாணியோ புலாவோ கிடையாது.
எனக்கும் 'பூ'படம் பாக்கணும்முன்னு ஆசை.
அடுத்தமுறை பீவியிடம் சொல்லி அடையும் சொதியும் செய்யச்சொல்லி சாப்பிடுங்கள்.
விரைவில் சொந்த வீட்டில் குடிபுக மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!

Vidhya Chandrasekaran said...

\\ராமலக்ஷ்மி said...
திருமணம் முடிந்ததும் ‘எங்க வீட்டில இப்படியாக்கும்’ என சொல்லாத மாப்பிள்ளைகளே இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்:))! நாங்கதான் மாறிக்கறோம்:))!\\

இந்த ரங்கமணிகளே இப்படித்தாங்க:)

வெண்பூ said...

யோவ்.. உன்ன நம்பி பொண்ணையே கொடுத்திருக்குறாங்க.. நீ என்னடான்னா பச்சடி குடுக்குலன்னு கவலப்படுற... :))))))

வெண்பூ said...

ஆஹா.. என் பையனுக்கு 2 வருசம் 3 மாசம் ஆகுது.. இன்னும் நல்லா பேச ஆரம்பிக்கல. ஆனா ஏபிசிடி, 1234 எல்லாம் சொல்றான்.. மழலைய விட்ட பெட்டர் ம்யூசிக் எதாவது இருக்கா என்னா...

Anonymous said...

வெண்பூ அதத்தான் வள்ளுவர் குழலினிது யாழினிதுன்னு ஒரு குறள்ல சொல்லியிருக்கார்.


//யோவ்.. உன்ன நம்பி பொண்ணையே கொடுத்திருக்குறாங்க.. நீ என்னடான்னா பச்சடி குடுக்குலன்னு கவலப்படுற... :))))))//

சூப்பரு.

rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்கள மாதிரி பிரியாணிக்கிட்டல்லாம் , என்ன தனியா இருக்க, சைடிஷ்ஷ கூட்டிட்டு வான்னு, நான் திமிரு பண்ண மாட்டேன். எனக்கு மட்டும் பிரியாணி போட்டீங்கன்னா, சம்மந்தியே தெரிச்சிக்கிட்டு ஓடுற அளவுல தெறமயக் காமிச்சு ஜெய்ச்சிடுவேன்

கானா பிரபா said...

;-) பிரியாணி காவியம்னு தலைப்பு போட்டிருக்கலாம்

மங்களூர் சிவா said...

/
வெண்பூ said...

யோவ்.. உன்ன நம்பி பொண்ணையே கொடுத்திருக்குறாங்க.. நீ என்னடான்னா பச்சடி குடுக்குலன்னு கவலப்படுற... :))))))
/

இப்பிடி நம்மளே நம்ம தேத்திக்க வேண்டியதுதான். என்ன வெண்பூ கரெக்ட்தானே !?!?

Thamira said...

haiyyaa.. me the 50.!

கடல் கடந்து காதலியை தேடிப் போகனும்னு... ஆனால் கடல் கடந்து கூலி வேலைக்கு தான் போக முடிஞ்சது... //

ரசித்தேன்.

தொழுகைக்குப் பின் சாப்பிட அமர்ந்தோம். சுடச்சுட பிரியாணி தட்டில் வந்தது. அதோடு பொரித்த கோழிகாலும்... //

ஜொள்விட்டுக்கொண்டே ரசித்தேன்.

தமிழன்-கறுப்பி... said...

படங்களைப்பத்தின கருத்தை நான் இப்ப சொல்றதா இல்லை வாரணம் ஆயிரம் பொறுமையா பாக்கணும்னு இருக்கேன்...அதே மாதிரி பூவும்...

தமிழன்-கறுப்பி... said...

பாடல்கள் சிலது பார்த்த வரைக்கும் சமீராவை ரசிக்காமல் இருக்க முடியவில்லை...

தமிழன்-கறுப்பி... said...

//
ஆனா 10 வருசமா இருந்தும் எனக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட கட்ட முடியல..
//

எல்லாம் நடக்கும்ணே கொஞ்ச நாள்தான் இன்னும்...
நீங்களே இப்படி சொன்னா எப்படி? நாங்கள்லாம் இன்னும் இருக்கணும் இங்க...!

தமிழன்-கறுப்பி... said...

பையன் அடிக்கடி பேசறானா சந்தோசம்...:)

தமிழன்-கறுப்பி... said...

உங்களுக்கு பிரியாணி தந்ததே பெரிய விசயம்...இதுல....;)

தமிழ் தோழி said...

அடப்பாவமே, பிரியாணிக்கு ஒரு தயிர் வெங்காயப்பச்சடி கூட குடுக்காம விட்டுட்டாங்களா !!!
பாவம் :))))

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்

நல்லா இருக்கு - பூ பாத்ததும் வாரணம் ஆயிரம் பாத்ததும்

அப்புறம் தான் கதயே வருது

பய நல்லா பேசறானா - சந்தோசம் - ரொம்ப சந்தோசம் - நானும் வ.கு போறப்ப ( அடிக்கடி அந்தப் பக்கம் போறோம்ல ) பேசிட்டு வாழ்த்திட்டு வரேன்.

இறை நம்பிக்கை சிறு வயதில் வளர்ப்பது எளிது . எங்கள் பேரன் பேத்திக்கெல்லாம் நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.

பொண்ணு பாக்கப் போன கத எப்ப்பொ ? நான் அப்படியே கொஞ்ச நேரம் கொசுவத்தி சுத்தினேன்.

மறு வீடு போய் பிரியாணிக்கு சட் டிஷ் இல்லாம சாப்பிட்டியாக்கும். பரவா இல்ல - அதிகாரம் பண்ணி ஆர்ப்பாட்டம் பண்ணாம - தங்கமணி சொன்ன வுடனே சரின்னு தலய ஆட்டிட்டு பிரியாணியயும் காலையும் ஒரு வெட்டு வெட்டினியாக்கும்

ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் மகனுக்கும் மனைவிக்கும்

cheena (சீனா) said...

//உங்க பக்கத்து வீட்டுல இம்புட்டு 'அழகா' 'அளவா' ஒரு பிகரா?? அண்ணே எப்ப ஊருக்கு வரட்டும்???? //

யோவ் மங்களூரு - நீ தமிழ்பிரியன் ஊருக்குப் போறியா - அடுத்த வூட்ட்டப் பாக்கப் போறியா - ஏன்பா வூட்ல தங்க்ஸ் இல்லையா ? பூரிக்கட்ட வாங்கப் போய்ட்டாங்களா

Thamiz Priyan said...

///சின்ன அம்மிணி said...

அடப்பாவமே, பிரியாணிக்கு ஒரு தயிர் வெங்காயப்பச்சடி கூட குடுக்காம விட்டுட்டாங்களா !!!///
ஆமாங்கம்மணி..:(

Thamiz Priyan said...

///சின்ன அம்மிணி said...

பூ படம் பாக்கணும்னு விமரிசனம் படிச்சதுல தோணுது.
ஹையா Me the first///
ஆமா நீங்க தான் பர்ஸ்ட்ட்ட்ட்டூ... கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

மீ த மூணு!///
ஆமா நீங்க தான்.. மூணு..;))

Thamiz Priyan said...

//ஆயில்யன் said...
//ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது//
ரியலி!!!
பட் நினைவுகள் எப்பவுமே வெளிப்பட்டுக்கொண்டுதானே இருக்கும் அதுதான நியதி! (ஆமாம் அந்த அ.வீ.பெ சூர்யா மாதிரி ஒரு ஆளு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டு போய்ட்டாரா?)///
ஹிஹிஹிஹீ அதை எல்லாம் வெளியே சொல்ல மாட்டோம்ல..;))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//ஆனா 10 வருசமா இருந்தும் எனக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட கட்ட முடியல..//
”இது என்னோட இடம்ன்னு சொல்லிக்கிற பிளாக்கு மட்டுமில்ல பிளாட்டும் கூட கூடிய சீக்கிரம் வாங்கிடுவீங்க பாஸ் நோ பீலிங்க்ஸ் !////

நன்றி அண்ணே! பிளாட்டு வாங்கியாச்சு..(எங்க தலைலயா? என்று கேட்கக் கூடாது...;)) ) இனி அடுத்து வீடு கட்ட வேண்டியதுதான்..:)

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//அவனுக்கு கற்றுத் தரும் 1,2,3 .. ABCD சொல்கின்றான்//
வெரிகுட்!
வெரிகுட்!
(ஒரு வேளை எனக்கு வாய்ப்பு கிடைச்சா ஊருக்கு வந்து பயபுள்ளைக்கி ஏபிசிடி அப்பா தாடி சொல்லிக்கொடுக்கிறேன் ஒ.கேய்ய்ய்!)//

அதெல்லாம் என்னைப் பார்த்தாலே அப்பா தாடி சொல்லிடுவான்..:))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//(நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் ஊர். காலை 2 , மதியம் 1, மாலை 2 என ஊருக்குள் பஸ் வரும். இல்லையெனில் மெயின் ரோட்டில் இறங்கி 3 கி.மீ தூரம் போகனும்...;)))) என்ன செய்ய )
///
ஒண்ணும் கஷ்டமேயில்ல!
ஏழு கடல் ஏழு மலை தாண்டியெல்லாம் கூட போயி இளவரசியை ஹைஜாக் பண்ணி வந்திருக்கிற கதைகள் இருக்குதே!!!///

ஆமா அண்ணே! தூரம் பிரச்சினையே இல்லை... நல்ல மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
//எங்க ஊர்ல எல்லாம் பிரியாணி செஞ்சா வேற ஊத்திக்க எல்லாம் எதுவும் செய்ய மாட்டோம்” என்று சொல்லி விட்டாள்.//
ஆஹா அந்த ஊருப்பக்கம் யாரும் போகாதீங்கப்பா பிரியாணிக்கு ஒரு தால்ச்சா கூட கிடையாதாம்!///

அது அப்ப... இப்ப நாங்க போய் மாத்திட்டோம்ல..:)))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//நான் டிவியைப் பார்த்துக் கொண்டே அடுக்களையையும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தேன்//

திருட்டுபயபுள்ள!/////
ஹிஹிஹிஹி உங்க தம்பியாச்சே..உங்களை மாதிரி தானே இருப்பேன்..;))

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

//இப்பவரை தங்கமணி இதைச் சொல்லி கலாய்ப்பது உண்டு//

”தால்ச்சா கேட்டு என் ராசா தவிச்சு போயில குந்தியிருந்தாரு “ அப்படின்னா பாஸ்:))))///
ஹிஹிஹிஹி

Thamiz Priyan said...

///சென்ஷி said...

நல்லாருக்குங்க :)///
நன்றி அண்ணே!

Thamiz Priyan said...

///............ said...

உங்களுக்கு எல்லாம் பிரியாணி சமைச்சு போடுறது ரொம்ப அதிகம்.இதுல ஊத்தி தின்ன இன்னொரு கறி வேண்டுமா? :)
அண்ணிகிட்ட சொல்லி ஊருக்கு போன உங்களுக்கு கஞ்சி காய்ச்சி ஊத்த சொல்லனும்.////
அடப்பாவி தங்கச்சி.. அண்ணனுக்கு சப்போர்ட் செய்யாம அண்ணிக்கு சப்போர்ட் பண்றியே.. இரு இரு ஊருக்கு வரும் போது கஞ்சியும் ஊறுகாயும் தர்ரேன்.

Thamiz Priyan said...

///வால்பையன் said...

//சமீரா அழகாக இருந்தார். ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது.//

சமீராவைப் பார்த்து பக்கத்து வீட்டு பொண்ணுன்னு சொன்னது நீங்க மட்டும் தான்.
ஒருவேளை சமீரா மாதிரியே பக்கத்து வீட்டுல ஒரு பொண்ணு இருக்குதோ என்னவோ////

அதுக்கெல்லாம் ஒரு ரசிப்புத் தன்மை வேணும் சாரே..;)))

Thamiz Priyan said...

///அதிரை ஜமால் said...
\\கடல் கடந்து காதலியை தேடிப் போகனும்னு... ஆனால் கடல் கடந்து கூலி வேலைக்கு தான் போக முடிஞ்சது... ஆனா 10 வருசமா இருந்தும் எனக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட கட்ட முடியல... சினிமாவுக்கு தான் ஒரு பாடலில் எல்லாம் இம்புட்டு பணம் சம்பாதிக்க முடியும் போலன்னு நினைச்சுக்கிட்டேன். இதுக்கு தான் டீசண்டாவே இருக்கக் கூடாதோ?..;))))\\
அதுதான் சினிமா “தல”///

:( ஆமாங்க ஜமால்!

Thamiz Priyan said...

///அதிரை ஜமால் said...
\\ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது\\
இன்னும் இருக்கா
ஈர்ப்பை கேட்க்கலை///
எத்தனை பேருய்யா இப்படி கிளம்பி இருக்கீங்க..:)))

Thamiz Priyan said...

///கிழஞ்செழியன் said...
பையன் சொல்லும் விஷயங்களில் அடைப்புக் குறி விளக்கம் இல்லையென்றால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். வால்பையன் ஒன்று சொன்னாலும் நன்று சொல்லியிருக்கிறார். ஆயில் இன்று இங்கே கும்ம முடிவெடுத்து விட்டாரா? (பி.கு. நான் உங்களுக்குத் தெரிந்தவன்தான்.)///

வாங்க தல.. நீங்க வருவதற்கு முன்னாடியே நம்ம மண்ணின் வாசம் வருதே.. இனி கவனமா இருக்கேன் தல....:)

Thamiz Priyan said...

/// கிழஞ்செழியன் said...

யுவர் டியர் சன் தூள் கிளப்புகிறானே... அடேயப்பா என்னா போஸு... என்னா லுக்கு..!///
நன்றி தல!

Thamiz Priyan said...

///முரளிகண்ணன் said...

மறுவீடு பிரியாணி மேட்டர் சூப்பர்////
நன்றி அண்ணே!..;))

Thamiz Priyan said...

///வால்பையன் said...
//டாஸ்மார்க்க்கு கூட போக வாய்ப்பு இல்லை என்பதையும் உங்களுக்கு மேலதிகமாக சொல்லிக் கொள்கின்றேன். //
இப்படி பொசுக்குன்னு சொல்லிபுட்டா எப்படி?
தமிழக அரசே அதை நம்பி தானே இருக்கு////
நீங்க எல்லாம் போகலைன்னா அதை மூடிப் போட்டு அரசு வேலை வழியை தேடிக்குமோங்க..:))

Thamiz Priyan said...

//முத்துலெட்சுமி-கயல்விழி said...

அடுத்த வீட்டு பொண்ணுன்னா ஈர்ப்பா? .. ஓஹோ.. அப்படியா சேதி? :)////
அக்கா! அடுத்த வீடுன்னு இல்ல... அடுத்த தெருவா இருந்தாலும்... ஒரு சகோதரிக்கான உணர்வு வருதுல்ல...(தலை தப்பிச்சதுப்பா)

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

என் பையனும் நல்ல மூடுன்னா நல்லா இருக்கீங்க? (இருக்கீங்களான்னு கேக்கறானாம்).. இல்லன்னா ஹலோ ... பை ன்னு சொல்லிட்டு போயிடுவான் ..பிசி மேன்..////
ஆமாம் அக்கா! ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன செய்ய இதையெல்லாம் பார்க்க கொடுத்து வைக்கல..:(

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...

துளசி க்ளாஸ்ல படிச்சிட்டு இருக்கறதால .. தனிக்கதை அப்பற்ம் போடரேன்னெல்லாம் சொல்ல ஆரம்பிச்சிட்டிங்களா நீங்களும்..///
குரு எப்படியோ சிஷ்யனும் அப்படியே...:)
கதை நிறைய இருக்குக்கா.. சொல்வதற்கு.

Thamiz Priyan said...

///சந்தனமுல்லை said...
தலைவர் பெரிய ஆளாயிட்டு வராரு போல!! எங்க ஊர்ல பிரியாணிக்கு கத்தரிக்கய் சால்னா, தயிர் வெங்காயம் பச்சடி கண்டிப்பா உண்டு. ஆனா பிரியாணியை அப்படியே சாப்பிடுவதே தனி டேஸ்ட்!! அப்புறம் கடைசியா ஒரு இனிப்பு இருக்குமே..பால் சுண்ட வைச்சி இல்லனா சைனா கிராஸ்-ல !! ம்ம்..ஆம்பூர் ஞாபகம் வந்துடுச்சி..இல்லல்ல..பிரியாணி ஞாபகம் வந்துடுச்சி!///

ஆமாம் தங்கச்சி! ஆளு பெரிய ஆளாகிட்டு வருகிறார்..:) எங்க ஊரில் எல்லாம் பிரியாணிக்கு தால்ச்சா வைப்போம்.. அங்க இல்ல... அதான் பிரச்சினை..:)

ஆம்பூர் பிரியாணி எங்களுக்கு பிடிக்கும்.. எப்ப செஞ்சு தரப் போறீங்க..;)

Thamiz Priyan said...

///மதிபாலா said...

நன்றாக இருந்தது.////
நன்றி மதிபாலா!

Thamiz Priyan said...

///அமிர்தவர்ஷினி அம்மா said...
நம் சமூகத்தில் எப்பவுமே ஆண்களின் பழைய காதல்கள் ஒரு அழகான நினைவுகளாகவும், பெண்களின் பழைய காதல்களை ஒரு அசிங்கமாகவும் நினைக்கின்றோம். //
மிகச் சரியான உண்மைதான்
சுடச்சுட பிரியாணி தட்டில் வந்தது. அதோடு பொரித்த கோழிகாலும்... //
உங்களுக்கு வசந்தா மெஸ் ஞாபகம் வந்துச்சா///

ஆமா... பூ வில் இதை அழகாக சொல்லி இருப்பார்கள் எந்த விகாரமும் இல்லாமல்..:)

வசந்தா மெஸ் உங்களுக்கும் நினைவில் இருக்கா..;))) அது வெறும் கால்..இது தொடைன்னு வச்சுக்கலாம்.

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

என் தங்கை பெண் மூட் இருந்தால் நிறைய நேரம் பேசுவாள். விளையாட்டு பிஸியில் இருந்தால் “ஹாய் பெரிம்மா. அம்மாவைக் கூப்பிடவா?” என்பாள்:)).

திருமணம் முடிந்ததும் ‘எங்க வீட்டில இப்படியாக்கும்’ என சொல்லாத மாப்பிள்ளைகளே இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்:))! நாங்கதான் மாறிக்கறோம்:))!

அமித்து அம்மா சொன்ன மாதிரி தயிர் வெங்காயப் பச்சடிதான் பிரியாணிக்கு நாங்க வைக்கும் காம்பினேஷன்.

சொதியும் அடையும்தானே? நானானி அம்மா அழகா பதிவு போட்டிருக்காங்களே? நீங்க ஊருக்கு வரும் முன் செய்து பழகச் சொல்லுங்க. ப்ளாக் எல்லாம் படிப்பாங்கதானே:)?

நான்வெஜ் சாப்பிடுபவர்கள், சொதியில் நாங்க கத்திரிக்காய் போடுவது போல சின்ன [ஏதோ பேரு] மீன்களைப் பொறித்துப் போடுவாங்க, குறிப்பா தூத்துக்குடி பக்கம். ஒருமுறை டிவி ஒளிபரப்பில் பார்த்தேன்.///

அக்கா, நாங்க புதுசா கல்யாணம் முடிச்சு.. உங்களோட புதிய சமையல் பரீட்சைக்கு எல்லாம் எலியா பயன்படுகின்றோமே.. அதைவிடவா பெரிய தியாகம் இருக்க முடியும்....

சும்மா... பெண்களுடைய தியாகங்கள் அளப்பரியவை! என்றுமே அதற்கு மதிப்பு தருகின்றேன்.

கணிணி கூட தெரியாது. ப்ளாக் எங்க படிக்க... யூ நோ ஒன்திங்.. நான் கதை, கட்டுரை(?)யெல்லாம் எழுதுவேன்னு சொன்னா நம்ப மாட்டேங்கறாக்கா...:((

Thamiz Priyan said...

///மங்களூர் சிவா said...
/
சமீரா அழகாக இருந்தார். ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது..... ;)
/
உங்க பக்கத்து வீட்டுல இம்புட்டு 'அழகா' 'அளவா' ஒரு பிகரா?? அண்ணே எப்ப ஊருக்கு வரட்டும்????
:))))///

இருங்க அண்ணிக்கு போன் செஞ்சு சொல்றேன்.

அடுத்த வீட்டு பெண் என்றாலே பக்கத்து வீட்டு சகோதரி மாதிரி அர்த்தம் அண்ணே..;))

Thamiz Priyan said...

///மங்களூர் சிவா said...

/
நமக்குள்ளயும் ஒரு காலத்தில் நெருப்பு இருந்துச்சு..
கடல் கடந்து காதலியை தேடிப் போகனும்னு... ஆனால் கடல் கடந்து கூலி வேலைக்கு தான் போக முடிஞ்சது
/

:)))))))///

ஹிஹிஹிஹிஹி

Thamiz Priyan said...

///அமிர்தவர்ஷினி அம்மா said...
ஏன் என்றால் தலைவர் விளையாட்டில் பிஸியாக இருந்தாராம். அதனால் பேச்சை விரைவாக முடித்து ஓடுகின்றாராம்....:))
கலக்குங்க எசமான் கலக்குங்க.////
நன்றி அக்கா!

Thamiz Priyan said...

//அமிர்தவர்ஷினி அம்மா said...

எங்க ஊர்ல பிரியாணிக்கு கத்தரிக்கய் சால்னா, தயிர் வெங்காயம் பச்சடி கண்டிப்பா உண்டு. ஆனா பிரியாணியை அப்படியே சாப்பிடுவதே தனி டேஸ்ட்!! அப்புறம் கடைசியா ஒரு இனிப்பு இருக்குமே..பால் சுண்ட வைச்சி இல்லனா சைனா கிராஸ்-ல !! ம்ம்..ஆம்பூர் ஞாபகம் வந்துடுச்சி..இல்லல்ல..பிரியாணி ஞாபகம் வந்துடுச்சி//

அதான் பப்புவுக்கு மக்கப் பேடா கொடுத்துட்டு, பிரியாணியை ஓரங்கட்டீனீங்களே.///

ஆமாக்கா.. இந்த தங்கச்சியை என்னன்னு கேளுங்க..:))

Thamiz Priyan said...

////மங்களூர் சிவா said...

பையன் நல்லா பேசறானா?

குட் குட்///
ஆமா தல! நன்றி!

Thamiz Priyan said...

///மங்களூர் சிவா said...
/
இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டனுடானுட்டு உட்கார்ந்து இருக்கேன். அருகில் இருந்த மச்சானும்(தங்கமணியின் சகோதரர்), தங்கமணியும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.
/
எதாச்சும் மிச்சம் சொச்சம் வைச்சாங்களா உங்களுக்கு????///

அதெல்லாம் நம்ம பங்கை எடுத்துட்டு தான் அவங்களுக்கு தர்ரது,...:))

Thamiz Priyan said...

///அத்திரி said...

//நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் ஊர். காலை 2 , மதியம் 1, மாலை 2 என ஊருக்குள் பஸ் வரும். இல்லையெனில் மெயின் ரோட்டில் இறங்கி 3 கி.மீ தூரம் போகனும்...;)))) என்ன செய்ய )//

நீங்கள் குறிப்பிட்டுள்ள பேருந்து நேரங்களும் எங்க ஊர் பஸ் நேரங்களும் ஒத்துபோகுது

ஜாக்கிரதை.?????????!!!!!!!!!!!!!!!!!///

மாப்ளே! உங்க ஊரா இருந்தா அதுக்கு பயந்துடுவோமா? நீங்க தான் எங்களைப் பாத்து பயப்படனும்... பொண்ணு நீங்க தான் கொடுத்து இருக்கீக..;))

Thamiz Priyan said...

///அத்திரி said..
//“ பிரியாணி இருக்கு... ஆனா ஊத்தி தின்ன தால்ச்சா, பருப்புக் கறி(தால்) எதுவும் இல்லியே?” அதுக்கு தங்கமணி “ எங்க ஊர்ல எல்லாம் பிரியாணி செஞ்சா வேற ஊத்திக்க எல்லாம் எதுவும் செய்ய மாட்டோம்” என்று சொல்லி விட்டாள்//
அப்பவே கூச்சப்படாம கேட்டிருக்கீங்களே?/??!!!///

ஹிஹிஹி நாம இந்த ஒரு விஷயத்துல மட்டும் கூச்சமே பார்க்க மாட்டோம்ல..;)

Thamiz Priyan said...

///நானானி said...

உங்க அருமை மகன் செல்லக் குறும்பையெல்லாம் அருகிலிருந்து ரசிக்க முடியாதது பத்தி எனக்கு வருத்தமாயிருந்தது. 'போனா வராது பொழுது போன கிடைக்காது' மாதிரிதான் மழலைப்பருவம்!////
ஆமாம் அம்மா! :(

Thamiz Priyan said...

///நானானி said..
பிரியாணிக்கு சைட் டிஷ் வைக்கலேன்னா ரங்கமணி, 'என்ன ஜூலிக்கு வைக்கிற மாதிரி வைக்கிற?'என்பார்.
ஜூலி எங்க வீட்டில் முன்பிருந்த பாமரேனியன். அதனால் கிரேவியில்லாமல் பிரியாணியோ புலாவோ கிடையாது.
எனக்கும் 'பூ'படம் பாக்கணும்முன்னு ஆசை.
அடுத்தமுறை பீவியிடம் சொல்லி அடையும் சொதியும் செய்யச்சொல்லி சாப்பிடுங்கள்.
விரைவில் சொந்த வீட்டில் குடிபுக மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!///

பூ படம் கண்டிப்பா பாருங்கம்மா..:)
போனிலேயே செய்முறை எல்லாம் சொல்லிப் பார்த்துட்டேன். அதெல்லாம் செஞ்சு தர முடியாதாம். செஞ்சு தருவதை மட்டும் சாப்பிட்டு போயிடனுமாம்..(ஜூலி எபெக்ட் வருதுல்ல..;)) )

Thamiz Priyan said...

///நானானி said...
.
விரைவில் சொந்த வீட்டில் குடிபுக மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!///
நன்றிம்மா!

Thamiz Priyan said...

//நிஜமா நல்லவன் said...

:)//
:)

Thamiz Priyan said...

///வித்யா said...
\\ராமலக்ஷ்மி said...
திருமணம் முடிந்ததும் ‘எங்க வீட்டில இப்படியாக்கும்’ என சொல்லாத மாப்பிள்ளைகளே இருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்:))! நாங்கதான் மாறிக்கறோம்:))!\\
இந்த ரங்கமணிகளே இப்படித்தாங்க:)///

என்னய்யா இது ரங்கூஸூக்கு வந்த சோதனை... உங்க கிட்ட மாட்டிக்கிட்டு எங்க ம்ச்சான் படற கஷ்டத்தை மறைக்க இப்படி சொல்வது புரியுது வித்யாக்கா..;))

Thamiz Priyan said...

///வெண்பூ said...

யோவ்.. உன்ன நம்பி பொண்ணையே கொடுத்திருக்குறாங்க.. நீ என்னடான்னா பச்சடி குடுக்குலன்னு கவலப்படுற... :))))))////
அண்ணே! தம்பிக்கு சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நினைச்சா எல்லாம் அண்ணிக்கு சப்போர்ட் பண்றீங்களே...அவ்வ்வ்வ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///வெண்பூ said...
ஆஹா.. என் பையனுக்கு 2 வருசம் 3 மாசம் ஆகுது.. இன்னும் நல்லா பேச ஆரம்பிக்கல. ஆனா ஏபிசிடி, 1234 எல்லாம் சொல்றான்.. மழலைய விட்ட பெட்டர் ம்யூசிக் எதாவது இருக்கா என்னா...///
ஆதர்ஷ் குட்டிப் பையன் தானே... இன்னும் நல்லா பேசுவான்...மழலையை விட பெரிய இன்பமேதுமில்லை..:)

Thamiz Priyan said...

///வடகரை வேலன் said...
வெண்பூ அதத்தான் வள்ளுவர் குழலினிது யாழினிதுன்னு ஒரு குறள்ல சொல்லியிருக்கார்.
//யோவ்.. உன்ன நம்பி பொண்ணையே கொடுத்திருக்குறாங்க.. நீ என்னடான்னா பச்சடி குடுக்குலன்னு கவலப்படுற... :))))))//
சூப்பரு.///

ஆமாங்க வேலன் சார்! மழலை இனிது!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீங்களுமா?

Thamiz Priyan said...

/// rapp said...

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்கள மாதிரி பிரியாணிக்கிட்டல்லாம் , என்ன தனியா இருக்க, சைடிஷ்ஷ கூட்டிட்டு வான்னு, நான் திமிரு பண்ண மாட்டேன். எனக்கு மட்டும் பிரியாணி போட்டீங்கன்னா, சம்மந்தியே தெரிச்சிக்கிட்டு ஓடுற அளவுல தெறமயக் காமிச்சு ஜெய்ச்சிடுவேன்///

அம்மாடியோவ்..இந்த சம்பந்திகிட்ட கவனமா இருக்கனும்ப்பா... நல்ல பிள்ளையா இருக்கேன்னு பொண்ணு எடுத்தா சம்பந்தி வந்து கட்டுவாராமே..அவ்வ்வ்வ்

Thamiz Priyan said...

///கானா பிரபா said...

;-) பிரியாணி காவியம்னு தலைப்பு போட்டிருக்கலாம்///
நன்றி தல!

Thamiz Priyan said...

///மங்களூர் சிவா said...
/
வெண்பூ said...
யோவ்.. உன்ன நம்பி பொண்ணையே கொடுத்திருக்குறாங்க.. நீ என்னடான்னா பச்சடி குடுக்குலன்னு கவலப்படுற... :))))))
/
இப்பிடி நம்மளே நம்ம தேத்திக்க வேண்டியதுதான். என்ன வெண்பூ கரெக்ட்தானே !?!?///
ஹிஹிஹி அண்ணே! சப்போட்டுக்கு நன்றி! வாங்க வருத்தப்படும் ரங்கமணிகள் சங்கம் ஆரம்பிக்கலாம். மெம்பர்கள் நிறைய வருவாங்க போல இருக்கு...;))

Thamiz Priyan said...

///தாமிரா said...
haiyyaa.. me the 50.!
கடல் கடந்து காதலியை தேடிப் போகனும்னு... ஆனால் கடல் கடந்து கூலி வேலைக்கு தான் போக முடிஞ்சது... //
ரசித்தேன்.
தொழுகைக்குப் பின் சாப்பிட அமர்ந்தோம். சுடச்சுட பிரியாணி தட்டில் வந்தது. அதோடு பொரித்த கோழிகாலும்... //
ஜொள்விட்டுக்கொண்டே ரசித்தேன்.///

நன்றி தாமிரா அண்ணே!

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

படங்களைப்பத்தின கருத்தை நான் இப்ப சொல்றதா இல்லை வாரணம் ஆயிரம் பொறுமையா பாக்கணும்னு இருக்கேன்...அதே மாதிரி பூவும்...///
இரண்டும் நீங்க கண்டிப்பாக பார்க்க வேண்டும் தல..:)

Thamiz Priyan said...

///தமிழன்-கறுப்பி... said...

பாடல்கள் சிலது பார்த்த வரைக்கும் சமீராவை ரசிக்காமல் இருக்க முடியவில்லை...///
:)

Thamiz Priyan said...

//தமிழன்-கறுப்பி... said...

உங்களுக்கு பிரியாணி தந்ததே பெரிய விசயம்...இதுல....;)///
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் நீயுமாய்யா..;(

Thamiz Priyan said...

/// தமிழ் தோழி said...

அடப்பாவமே, பிரியாணிக்கு ஒரு தயிர் வெங்காயப்பச்சடி கூட குடுக்காம விட்டுட்டாங்களா !!!
பாவம் :))))///
நீங்களாவது கவலைப்படுறிங்களே..:)

Thamiz Priyan said...

/// cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன்

நல்லா இருக்கு - பூ பாத்ததும் வாரணம் ஆயிரம் பாத்ததும்

அப்புறம் தான் கதயே வருது

பய நல்லா பேசறானா - சந்தோசம் - ரொம்ப சந்தோசம் - நானும் வ.கு போறப்ப ( அடிக்கடி அந்தப் பக்கம் போறோம்ல ) பேசிட்டு வாழ்த்திட்டு வரேன்.

இறை நம்பிக்கை சிறு வயதில் வளர்ப்பது எளிது . எங்கள் பேரன் பேத்திக்கெல்லாம் நிறைய சொல்லிக் கொடுத்திருக்கிறோம்.

பொண்ணு பாக்கப் போன கத எப்ப்பொ ? நான் அப்படியே கொஞ்ச நேரம் கொசுவத்தி சுத்தினேன்.

மறு வீடு போய் பிரியாணிக்கு சட் டிஷ் இல்லாம சாப்பிட்டியாக்கும். பரவா இல்ல - அதிகாரம் பண்ணி ஆர்ப்பாட்டம் பண்ணாம - தங்கமணி சொன்ன வுடனே சரின்னு தலய ஆட்டிட்டு பிரியாணியயும் காலையும் ஒரு வெட்டு வெட்டினியாக்கும்

ம்ம்ம்ம் - நல்வாழ்த்துகள் மகனுக்கும் மனைவிக்கும்///
நன்றிகள் சீனா சார்!

Thamiz Priyan said...

///cheena (சீனா) said...
//உங்க பக்கத்து வீட்டுல இம்புட்டு 'அழகா' 'அளவா' ஒரு பிகரா?? அண்ணே எப்ப ஊருக்கு வரட்டும்???? //
யோவ் மங்களூரு - நீ தமிழ்பிரியன் ஊருக்குப் போறியா - அடுத்த வூட்ட்டப் பாக்கப் போறியா - ஏன்பா வூட்ல தங்க்ஸ் இல்லையா ? பூரிக்கட்ட வாங்கப் போய்ட்டாங்களா///

ஆமா சீனா சார்.. சொன்னா புரிய மாட்டுது.. அண்ணிக்கு தெரிஞ்சா சேதாரம் அதிகமா இருக்கும்னு..;))