Monday, July 7, 2008

கண்ணில் வைரம் மின்னும் பூனையார் - PIT போட்டி

.

எங்கள் ஊரில் சிறுவர்கள் விளையாடும் போது ஒன்னும் உதவாத உதவாக்கரைகளை ஆட்டத்தில் சேர்க்க மாட்டார்கள். அது போல தான் PIT போட்டிக்கு நம்ம புகைப்படங்கள். நி.நல்லவன் அண்ணன் மாதிரி காசு போட்டெல்லாம் கேமரா வாங்கலை. செல் போனை வைத்து எடுப்பது தான் எல்லாம்..... :))))
இருட்டை வைத்து PIT போட்டிக்கு போட்டோ எடுக்க இருட்டான இடங்களில் எல்லாம் பேய் மாதிரி சுத்தி போட்டோ எடுத்ததில் தேறியது இவை தான்.

1. இந்த பூனையை போட்டோவுக்கு போஸ் கொடுக்க செய்வதற்கு பொறிச்ச கோழியும், வறுத்த மீனும் கேக்குது.... என்ன கொடுமைங்க இது....


2. பணி செய்யும் இடத்தில் இயந்திர அறையில் நண்பர் ஒருவர் இருட்டில் வெளிச்சத்துடன் விளையாடிக் கொண்டு இருந்த போது கிளிக்க்கியது.

3. இவர் கொஞ்சம் சமத்தானவர். கோழி மீனெல்லாம் கேக்கலை. ஆனா போஸ் கொடுக்காம ஓடி ஓடி போனவர்.


இதில் முதலில் உள்ள பூனையார் தான் போட்டிக்கு.

42 comments:

நிஜமா நல்லவன் said...

Aahaa super....

நிஜமா நல்லவன் said...

First photo kalakkals....

VIKNESHWARAN ADAKKALAM said...

//தமிழ் பிரியன்//

தமிழ் பிரியனா இல்லை தமிழ்ப் பிரியனா??

உங்கள் திருப்புமுனை அசத்தல்ங்க... நானும் அதை தான் கேட்கிறேன்... தப்பித்தது யார்??? அதை பற்றி ஒரு 40 பதிவு போட்டுங்களேன்... :)))

இம்சை said...

வந்துட்டோம்ல வந்துட்டோம்ல.... கலக்குரியே ராசா... வாழ்த்துக்கள்

நானானி said...

இவ்வளவு அழகாக போஸ் கொடுத்ததுக்கு வறுத்தமீனும் கோழியும் என்ன...பிரியாணியே போட்டிருக்கலாம்.
உங்களுக்கு எவ்வளவு பேர் வாங்கிக் கொடுக்கப்போவுது.....!
பூனை குறுக்கே போனால்தான் கெடுதல்,
போஸ் கொடுத்தால் நல்லதுதான்....
தமிழ்பிரியன்!!
வாழ்த்துக்கள்!!

ரசிகன் said...

சூப்பர்... கண்கள் ஜொலிக்குது:)

M.Rishan Shareef said...

ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே....
இதுக்குத்தான் நாலஞ்சு நாளா பூனையைத் தேடி அலைஞ்சீங்களா ?
நானேதோ நீங்க பூனைக் கறியெல்லாம் கூடச் சாப்பிடுவீங்கன்னு தப்பாப் புரிஞ்சிட்டேன்..

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வித்தியாசமான படம்.. :)

தமிழன்-கறுப்பி... said...

படம் நல்லாருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

முதலாவது பூனையின் கண்கள் சரியா பிடிபட்டிருக்கு...

தமிழன்-கறுப்பி... said...

@ ரிஷான்..

///
ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே....
இதுக்குத்தான் நாலஞ்சு நாளா பூனையைத் தேடி அலைஞ்சீங்களா ?
நானேதோ நீங்க பூனைக் கறியெல்லாம் கூடச் சாப்பிடுவீங்கன்னு தப்பாப் புரிஞ்சிட்டேன்..///

ரிப்பீட்டு...

ஆயில்யன் said...

சூப்பரூண்ணே! :))))))))

ஆனாலும் அந்த கோழியும் மீனும் கொஞ்சம் பாவம்தான் :(

cheena (சீனா) said...

தமிழ்பிரியன்

பூனை அசத்தல் - முதல் பரிடு ஜின்னாவிற்கே

நல்வாழ்த்துகள்

(பூனைக்கறி எல்லாம் சாப்பிட வேனாம்)

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே என்னோட கமென்ட்டெல்லாம் எங்க போச்சு...

Kavi said...

பூனையை பார்த்தா பயமா இருக்கு... :o

வல்லிசிம்ஹன் said...

பூனையும் சூப்பர். வேலை செய்கிறாரே அந்தப் படமும் நல்லா இருக்கு.
பூனை சம்த்தோ சம்த்து.
அதை படம் எடுத்த உங்களுக்கும் பொறுமைதான். வாழ்த்துகள் தமிழ்ப்பிரியன்.

கோபிநாத் said...

கடைசி படம் சூப்பரு ;)

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

Aahaa super....///
அண்ணே! பிரமிச்சுப் போய்ட்டீங்களே... :)

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

First photo kalakkals....///
நன்றிண்ணே!

Thamiz Priyan said...

///VIKNESHWARAN said...

//தமிழ் பிரியன்//

தமிழ் பிரியனா இல்லை தமிழ்ப் பிரியனா?? ///
தமிழ் பிரியன் தான்.... தமிழ்ப்பிரியன் என்ற பெயரில் ஒரு சக பதிவர் இருக்கிறார்... ;)

Thamiz Priyan said...

/// இம்சை said...

வந்துட்டோம்ல வந்துட்டோம்ல.... கலக்குரியே ராசா... வாழ்த்துக்கள்//
வாங்க ராசா! நன்றி ராசா!... :)

Thamiz Priyan said...

//VIKNESHWARAN said...
உங்கள் திருப்புமுனை அசத்தல்ங்க... நானும் அதை தான் கேட்கிறேன்... தப்பித்தது யார்??? அதை பற்றி ஒரு 40 பதிவு போட்டுங்களேன்... :)///
விக்கி! நக்கலா.... இதுக்கு தான்யா சிங்கதை சீண்டக் கூடாதுன்னு சொல்றது... பாத்தீங்களா இந்த கொடுமையை... ;)

Thamiz Priyan said...

///நானானி said...

இவ்வளவு அழகாக போஸ் கொடுத்ததுக்கு வறுத்தமீனும் கோழியும் என்ன...பிரியாணியே போட்டிருக்கலாம்.
உங்களுக்கு எவ்வளவு பேர் வாங்கிக் கொடுக்கப்போவுது.....!
பூனை குறுக்கே போனால்தான் கெடுதல்,
போஸ் கொடுத்தால் நல்லதுதான்....
தமிழ்பிரியன்!!
வாழ்த்துக்கள்!!///
வாங்கம்மா! நல்லாவா போஸ் கொடுத்திருக்கு... அப்ப நாளைக்கு பிரியாணி போட்டுடலாம்...:)
நன்றிம்மா!

Thamiz Priyan said...

///ரசிகன் said...

சூப்பர்... கண்கள் ஜொலிக்குது:)///
ரசிகரே ரசிச்சாச்சுன்னா... ஓகே ரைட்

Thamiz Priyan said...

///எம்.ரிஷான் ஷெரீப் said...

ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே....
இதுக்குத்தான் நாலஞ்சு நாளா பூனையைத் தேடி அலைஞ்சீங்களா ?
நானேதோ நீங்க பூனைக் கறியெல்லாம் கூடச் சாப்பிடுவீங்கன்னு தப்பாப் புரிஞ்சிட்டேன்..///
ரிசான் பாய்! கொல வெறி இன்னும் அடங்கலையா உங்களுக்கு.....
நன்றி தல... :)))

Thamiz Priyan said...

//கயல்விழி முத்துலெட்சுமி said...

வித்தியாசமான படம்.. :)///
நன்றிக்கா!

Thamiz Priyan said...

///தமிழன்... said...

படம் நல்லாருக்கு...///
நன்றி காதல் கறுப்பா!

Thamiz Priyan said...

///தமிழன்... said...

முதலாவது பூனையின் கண்கள் சரியா பிடிபட்டிருக்கு...///
அப்படியாண்ணே! நன்றி!

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...

சூப்பரூண்ணே! :))))))))

ஆனாலும் அந்த கோழியும் மீனும் கொஞ்சம் பாவம்தான் :(///
கடைசியில் பூனைக்கு கொடுக்காமல் சாப்பிட்டதை சொல்றீங்களா?.... :))))

Thamiz Priyan said...

/// cheena (சீனா) said...
தமிழ்பிரியன்
பூனை அசத்தல் - முதல் பரிடு ஜின்னாவிற்கே
நல்வாழ்த்துகள்
(பூனைக்கறி எல்லாம் சாப்பிட வேனாம்)///
நான் புடிச்ச படத்துக்கு வேற யாருக்கோ பரிசா? என்ன சீனா சார் நியாயம்... இதைக் கேட்க யாருமே இல்லையா.... :))))
வாழ்த்துக்கு நன்றிகள் ஐயா!

Thamiz Priyan said...

///தமிழன்... said...

அண்ணே என்னோட கமென்ட்டெல்லாம் எங்க போச்சு.///
அதான் போட்டாச்சே,,,.,.. ;))

Thamiz Priyan said...

///ஓவியா said...

பூனையை பார்த்தா பயமா இருக்கு... :o///
மெய்யாலுமா.... :)))

Thamiz Priyan said...

///வல்லிசிம்ஹன் said...

பூனையும் சூப்பர். வேலை செய்கிறாரே அந்தப் படமும் நல்லா இருக்கு.
பூனை சம்த்தோ சம்த்து.
அதை படம் எடுத்த உங்களுக்கும் பொறுமைதான். வாழ்த்துகள் தமிழ்ப்பிரியன்.///
நன்றி வல்லிம்மா!

Thamiz Priyan said...

///கோபிநாத் said...

கடைசி படம் சூப்பரு ;)///
கோபி அண்ணே! மெய்யாலுமா? முதல் படத்தை கொடுத்தட்டுனே..... :)

Unknown said...

:-) first one super...!!

புகழன் said...

இரண்டாம் பூனை நன்றாக இருக்கிறது.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்

Thamiz Priyan said...

///Sri said...

:-) first one super...!! ///
நன்றிக்கா!

Thamiz Priyan said...

///புகழன் said...

இரண்டாம் பூனை நன்றாக இருக்கிறது.
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்///
நன்றி புகழன்.. :)

நிலாக்காலம் said...

முதல் பூனை நல்லா இருக்கு.. =D>

Thamiz Priyan said...

//நிலாக்காலம் said...

முதல் பூனை நல்லா இருக்கு.. =D>///
நன்றி முழு நிலவே!

KARTHIK said...

3 வது படம் அருமைங்க
வாழ்த்துக்கள்

Thamiz Priyan said...

//கார்த்திக் said...

3 வது படம் அருமைங்க
வாழ்த்துக்கள்///
நன்றி கார்த்திக்!