Showing posts with label ஆணீயம். Show all posts
Showing posts with label ஆணீயம். Show all posts

Tuesday, April 28, 2009

விடுபட்ட இரு மூத்த பதிவர்களின் சிறப்பு பேட்டி

.

சமீபத்தில் வலைச்சரம் எழுதிய போது பல மூத்த பதிவர்களின் பதிவுகளுக்கு அறிமுகம் செய்ய இயலாமல் போனது வருத்தம் அளித்தது. அதை ஈடுகட்டும் விதத்தில் இன்று இரு மூத்த பதிவர்களின் சிறப்பு பேட்டி இங்கு வெளியிடப்படுகின்றன. இனி ஓவர் டூ பேட்டி வித் ஆதாம், ஏவாள்...

நாம் : முதலில் இந்த சிறப்பு பேட்டிக்கு ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. முதலில் நீங்கள் இருவரும் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

ஆதாம் : என் பெயர் ஆதாம். இவள்....

ஏவாள் : இருங்க.. உங்களுக்கு சொல்லத் தெரியாது. இவர் பெயர் ஆதாம். என் பெயர் ஏவாள். நாங்க கடந்த 47000 ஆண்டுகளுக்கு முன்னாடியே பதிவு எழுதத் தொடங்கி விட்டோம். உலகிலேயே நான் முதல் முதல் பதிவர் என்பதில் எங்களுக்கு மிக்க பெருமை.... (ஆதாமைப் பார்த்து) அப்படித்தானேங்க...

ஆதாம் : ஆமா! ஆமா!

நாம் : முதலில் நீங்க இரண்டு பேர் தான இருந்திருப்பீர்கள்! உங்க பதிவை யார் வந்து படிப்பாங்க? யார் பின்னூட்டம் போடுவாங்க?

ஆதாம் : அதாவது..

ஏவாள் : இருங்க! நானே சொல்கிறேன். அவருக்கு பதிவும் எழுதத் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. ஒரு விட்ஜெட் போடக் கூடத் தெரியாதுன்னா பாத்துக்கங்க... நான் தான் எல்லாம் சொல்லித் தந்தேன். ஆனாலும் அவர் பதிவை நானும், என் பதிவை அவரும் படித்து பின்னூட்டம் போட்டுக் கொள்வேம். அப்புறம் எனக்கு குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் ஆனதும் எல்லாரும் மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டுக்குவோம். அப்படித்தானே?

ஆதாம் : No Mam.. Yes Mam... Sorry Mam

நாம் : உங்க குடும்பத்துக்குள்ளேயே பின்னூட்டம் போடுவதால் அப்ப மட்டுறுத்தலெல்லாம் தேவைப்பட்டிருக்காதே?

ஆதாம் : என் பதிவுக்கு முதலில் மட்டுறுத்தல் செய்யவில்லை? ஆனால்.....

ஏவாள் : கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? நான் சொல்லிக்கிறேன். இவருக்கு ஒரு மொக்கை பதிவோ, இல்லை கும்மி பதிவோ கூடப் போடத் தெரியாது. அதனால் மட்டுறுத்தல் தேவைப்படலை. எனது பதிவுக்கும் முதலில் மட்டுறுத்தல் தேவைப்படவில்லை. ஆனால் ஒருநாள் எனது பதிவுக்கு மொத்தமாக ஒரே நேரத்தில் 100 அசிங்கமா கமெண்ட் இவர் பெயரில் போட்டுட்டாங்க. நானும் இவர் தான் நம்ம மேல உள்ள கோபத்தில் பின்னூட்டம் போட்டு விட்டாரோ என்று கோபத்தில் அடித்து கூட விட்டேன். மண்டையில் தழும்பு கூட இருக்கு... (ஆதாமைப் பார்த்து) காட்டுங்கங்க...

(ஆதாம் பலி ஆடு போல் குனிந்து தலையில் இருக்கும் இரண்டு அங்குல தழும்பைக் காட்டுகிறார்)

ஏவாள் : அப்புறம் எலி குட்டி சோத்னை செய்ததில் அது போலியின் வேலை என்று தெரிந்தது?

நாம் : (அதிர்ச்சியுடன்) என்னது போலியா?

ஆதாம் : ஆமாங்க! அது ஒரு பெரிய கதை..

ஏவாள் : உங்களால வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க முடியாதா? . (ஆதாம் துண்டை எடுத்து வாய்க்கு முன் வைத்து மூடிக் கொள்கிறார்) அப்புறம் பார்த்தால் அது சாத்தானோட வேலை. இவரோட பேரோடு ஒரு a அதிகமா சேர்த்து பதிவைத் தொடங்கி இருந்திருக்கிறான். அப்புறம் தான் மட்டுறுத்தல் செய்தோம்.

நாம் : சரி! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வருகிறோம்.

(நாம் தெருமுனையை அடைவதற்கு முன் ஆதாம் ஓடோடி நம்மிடம் வந்தார்.

நாம்: ஏன் என்ன ஆச்சு? ஏன் இப்படி மூச்சு இறைக்க ஓடி வருகிறார்.

ஆதாம் : எங்களை இறைவன் படைத்த நாள் முதலே இவள் தான் பேசிக்கிட்டே இருக்கிறாள். நான் கேட்டுக் கிட்டே இருக்கிறேன். சொர்க்கத்தில் இருக்கும் போது கூட அதே கதை தான். சொர்க்கத்துக் கனியை சாப்பிடாதே என்று சொல்லக் கூட என்னை விடலை. இவளால் தான் நாங்க பூமிக்கே வர வேண்டி வந்தது

நாம் : உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சொர்க்கத்தில் என்ன கனியைச் சாப்பிட்டீர்கள்? ஆப்பிள் என்று எல்லாரும் சொல்கிறார்களே? (அதற்குள் தெருவில் ஏவாள் வருவதைப் பார்த்ததும் ஆதாம் தலை தெறிக்க ஓடுகிறார்)

நாமும் வீட்டில் துவைக்க ஊற வைத்த மனைவியின் ஆடைகளும், துவைக்காவிட்டால் கிடைக்கப் போகும் தண்டனையையும் நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தோம்.

டிஸ்கி : இந்த பேட்டிக்கு ஏற்பாடு செய்த ஆப்ரகாம், நோவா, மோசே ஆக்யோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புது டிஸ்கி : ஒன்லி மீள் பதிவு

Sunday, October 19, 2008

oru pathivarukku varan paarkkum padalam மற்றும் கணிணி முகப்பு தொடர் விளையாட்டு



நண்பர் தமிழன் வித்தியாசமான டேக்குக்கு அழைப்பு விடுத்து இருந்தார். நமது கணிணியில் இருக்கும் டெஸ்க் டாப் ஸ்கீரினை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து காட்டனுமாம். என்னய்யா இது கொடுமயா இருக்கு.... சரி நானும் போட்டுட்டேன். இதுதான் என்னோட ஸ்கிரீன். எந்த விதமான போர்ஜரியும் பண்ணாம அப்படியே எடுத்துட்டேன்.

பொதுவாக எந்த உருவப் படங்களையும் ஸ்கிரீனில் வைக்க மாட்டேன். வீட்டில் கூட எந்த புகைப்படமும் சுவரில் இருக்காது.

ஸ்கிரீனில் காலியா தான் இருக்கனும். அப்ப தான் டெஸ்க் டாப்பில் இருப்பதை சுலபமாக தேட முடியும்

ஒரு பேச்சலர் ரூமுக்கு இருக்கும் அடையாளங்கள் எல்லாம் என் ஸ்கிரினுக்கும் இருக்கும். தேவையில்லாத எல்லாமும் கிடைக்கும். அப்பப்ப சுத்தப்படுத்துவேன். அடுத்த வாரமே திரும்ப குப்பை குடவுனா மாறி விடும். இப்ப குப்பை கொடவுனா இன்னும் மாறதப்ப எடுத்தது. இதுவே இப்படின்னா? குப்பையா இருக்கும் போது??? ;))

அடுத்து நான் அழைப்பு விடுப்பது
1. சிங்கை அண்ணன் நிஜமா நல்லவன்
2. பாசக்கார தங்கச்சி ஸ்ரீமதி
3. பிரியமுள்ள தம்பி சுடர்
4. அன்புள்ள தங்கை மது... (மச்சானோட டெஸ்க்டாப் ஸ்கிரீனை சுட்டு போட்டா கூட ஒத்துக்குவோம்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஒரு பதிவருக்கு வரன் தேடும் படலம்

காட்சி 1

“சுந்தர்! இது அதாண்டா அந்த பொண்ணோட போட்டோ! நல்ல படிப்பு படிச்சு இருக்கா! அழகாவும் இருக்கா! கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை. கை நிறைய சம்பளம் வேற வாங்கறாளாம்”

“போட்டோவைப் பார்த்து எப்படிம்மா தீர்மானிக்க சொல்றீங்க... இன்றைய மாடர்ன் உலகத்துக்கு தகுந்த பெண்ணா இருக்கனும்மா”

“என்னமோப்பா எனக்கு புரியலை. நல்ல குடும்பமா இருக்கு. நம்ம ஜாதிக்காரங்க.. தூரத்து முறையுல் உறவு கூட வருது. அவங்க குல தெய்வமும், நம்ம குல தெய்வமும் ஒன்னு தான்”

“என்னம்மா இன்னும் பட்டிக்காடா இருக்கீங்க! இந்த நவீன உலகத்துல உலக விஷயங்கள் நிறைய தெரிஞ்சு வச்சுருக்குற பெண்ணான்னு பாருங்கம்மா”

“உன்னை மாதிரி கம்ப்யூட்டரில் வேலை செய்யுற பொண்தானே? உனக்கு பிடிச்சா மாதிரி தான் இருக்கும். அண்ணா நகரில் பெரிய வீடு இருக்கு. இன்னும் இரண்டு விடு வேற இருக்காம். வாடகைக்கு விட்டு இருக்காங்களாம். கார் கூட இருக்குது. நல்ல இடமா தெரியுதுப்பா”

“அப்படியாம்மா... எனக்கும் நீங்க சொல்றதைப் பார்த்தா நல்ல இடமா இருக்கும் போல இருக்கு.”

“ஆமா சுந்தர். போட்டோவோட கம்ப்யூட்டர் அட்ரஸ் கூட கொடுத்து இருக்காங்க நீ வேணா பேசிப்ப்பாத்துக்க. அப்புறமா பொண்ணு பார்க்க போகலாம்”

“ம்ம்ம்.. இது அந்த பெண்ணோட இ மெயில் அட்ரஸ்ம்மா. பேசிப் பார்க்கிறேன்ம்மா”

காட்சி 2

sunder : வணக்கம்
Sent at 12:05 PM on Sunday
suha : hai. Who r u?
sunder: என் பெயர் சுந்தர். வரன் பார்க்கும் விஷயமா போட்டோவும், இ மெயிலும் உங்க அப்பா மூலமா கொடுத்தாங்க
Sent at 12:10 PM on Sunday
suha : O... good
sunder: m நீங்க எங்க வேலை பார்க்குறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
Sent at 12:14 PM on Sunday
suha: O..sure. TCS il programmer. irandu varushma irukken. neenga?
sunder: நான் விப்ரோவில் Project Manager! ஐந்து வருடமாச்சு
suha: O.. nice job
sunder:அதென்ன அமெரிக்க தேர்தல் பற்றி ஏதோ எழுதி இருக்கீங்க?
Sent at 12:19 PM on Sunday
suha: I am a blogger. ennoda blog la american electonil Mccainukku atharavaa pathivu pottu irukken
Sunder: ஓ.. அரசியலில் எல்லாம் ஆர்வம் இருக்கா?
suha: brb
Sunder: Ok
Sent at 12:20 PM on Sunday

suha: m... sollunga... friends kooppittanga.. canteen poitten
Sunder: பரவாயில்லைங்க... அரசியல பதிவெல்லாம் போட்டு இருக்கீங்களே? அவ்வளவு ஆர்வமா?
Sent at 12:28 PM on Sunday
suha: Yes, aamaa, arasiyal, matham, samuga piracinikal patri yellaam niraya pathivu ezuthuven.
Sunder: தமிழ் ப்ளாக்ன்னா ரொம்ப பிரச்சினை எல்லாம் வருமே?
Suha: atukkaga namma karuththai sollama irukka mudiyumaa? pirachinakalai kandu odi poka koodathu. ethirthu poraadanum. aththaan innaikku namma samkukaththukku thevaiyaana onnu
Sunder: நல்லா பேசுறிங்க... சரி அப்புறமா பார்க்கலாம். கொஞ்சம் வேலை இருக்கு. ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க... வணக்கம்.
suha: No problem. Bye.

காட்சி 3


“சுந்தர் என்னடா இப்படி சொல்ற? நல்ல குடும்பமா இருக்குன்னு நான் சொன்னதுக்கு நீயும் அப்படித்தாம்மா தெரியுதுன்னு சொன்ன”

“இல்லம்மா.. இந்த பொண்ணு வேணாம்மா”

“என்னடா ஆச்சு உனக்கு?. அந்த பொண்ணை பார்க்கக் கூட போகலையே. அதுக்குள்ள வேண்டாம்ன்னு சொல்ற?”

“இல்லம்மா.. இந்த பெண் வேண்டாம்மா... வேற நல்ல பெண்ணா பார்க்கலாம். கொஞ்சமா படிச்சு, வேலைக்கு போகாம இருந்தாலும் பரவாயில்லைம்மா”

“என்னவோப்பா! இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை. சரி புரோக்கர் வரட்டும். வேற இடம் பார்க்க சொல்லலாம்”