Showing posts with label கதை மாதிரி. Show all posts
Showing posts with label கதை மாதிரி. Show all posts

Thursday, November 29, 2012

சுழல் மோகினி

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் என் நெஞ்சை நோக்கி இறங்கிக் கொண்டு இருந்த அந்த பளபளப்பான கத்தியைத் தடுக்க இயலாமல் கத்த மட்டுமே எனக்கு முடிந்தது. அவள் கோரமான சிரிப்போடு எனது இடது பக்கத்து நெஞ்சில் கத்தியை இறக்கினாள்..
ஏதோ தொண்டையில் அடைப்பது போல் இருந்தது. நெஞ்சில் இரத்தம் தனது பீரிடும் அளவைக் காட்டிக் கொண்டு இருந்தது.
 “டேய் எவ்ளோ நேரம்டா.. தூங்குவா எந்திரிடா..”
அவள் தனது கர்ண கொடூரமான குரலில் கத்திக் கொண்டு இருப்பது காதில் கேட்டது. சட்டென்று முழிப்பு வந்தது..
 “சே.. கனவு”
இளம் குளிரான நவம்பர் மாதத்து குளிரிலும் உடல் வேர்த்து இருப்பதை உணர முடிந்தது. கண்களில் எரிச்சலும், தொண்டையில் ஒரு கரகரப்பும் சேர்ந்து இருந்தது. இடது பக்க நெஞ்சில் ஏதோ கூர்மையானதை வைத்து அழுத்திய தடம் இருந்தது.. ஆனால் இரத்தக் கறை ஏதும் இல்லை..

காலையிலேயே கொடூரமான கனவு என்னை உலுக்கி இருந்தது
“டேய்.. உன் பிரண்ட்ஸ் எல்லாம் வெளியே வெயிட் பண்றானுகடா.. எங்கேயோ அருவிக்கு போகனும்னு சொன்னீயே.. ஞாயிற்றுக் கிழமை சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க.. மதியம் சோறாக்கி வைக்கிறேன்.. இங்க சாப்பிட வந்துடுங்க” அம்மா மீண்டும்
அம்மாவுக்குத் தெரியும்.. கூட வந்து இருப்பவர்கள் இந்த ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடுவார்கள் என்று.. வேகமாக கிளம்பி கொண்டு வெளியே வந்தேன். நண்பர்கள் மூவரும் காரில் தயாராக இருந்தனர்.
“ஏண்டா தூங்குமூஞ்சி நாங்க தான் நேத்தே சொன்னம்ல.. இங்க வந்து உன்னை எழுப்ப வேண்டியதாப் போச்சு”
 “சாரிடா.. நைட் தூங்க லேட்டாகிடுச்சு.. காலையில் ரொம்ப டயர்டு வேற.. கெட்ட கனவு வந்து தூக்கத்தை கொடுத்துடுச்சு.”
கண் எரிச்சலுடன், கத்தி இறங்கிய இடத்தைத் தொட்டுப் பார்த்தேன்.. லேசாக வலிப்பது போல் இருந்தது. வண்டி வேகமாக சென்று கொண்டு இருந்தது.. அப்போது தான் திறந்து இருந்த டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கிக் கொண்டார்கள் கூடவே தீவனங்களும்...
எங்கள் ஊரில் இருந்து 20 கி.மீ தூரத்தில் மலையடிவாரத்தில் அந்த அருவி இருக்கின்றது. அவ்வளவாக ஆட்கள் வர மாட்டார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அருவியிலும், அதை ஒட்டி இருந்த தண்ணீர் கிடங்குகளிலும் குளியல் ஆரம்பமாகி இருந்தது. அதைத் தொடர்ந்து அனைவரும் மது அருந்த ஆரம்பித்து இருந்தனர்.. எனக்கு மது பழக்கம் இல்லாததால் தீவனங்களை தின்று கொண்டு இருந்தேன். கூத்தும் கும்மாளமுமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.. விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக் கொண்டு வந்தது. நல்ல மழை பெய்வதற்கான அறிகுறி இருந்தது.
நல்ல போதையில்  இருந்த நண்பர்கள் மூவரையும் தள்ளிக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றுவதற்குள் போதும் போதுமென்றாகி இருந்தது. வண்டியில் ஏறியதும் மூவரில் சரிந்து விட்டிருந்தனர். ப்ளாட்.. வழக்கமாக நடப்பது தான் என்பதால் காரை ஓட்டிக் கொண்டு வந்தேன்.
வண்டி கிளம்பியதும் மழை சடசடவென அடிக்க ஆரம்பித்து இருந்தது. மலையை விட்டு சிறிது தூரம் இறங்கி சமதளத்திற்கு வந்ததும் மழை இன்னும் வெளுக்க ஆரம்பித்து இருந்தது. திடீரென்று படார் என்ற சத்தத்துடன் பின்பக்க டயர் வெடித்திருந்தது. மழையில் நனைந்து கொண்டே இறங்கிப் பார்த்தேன். டயர் பணாலாகி இருந்தது.
சட்டையை தலைவழியே கழட்டிவாறே வைத்துக் கொண்டு டிக்கியைத் திறந்தால் ஸ்டெப்னி மட்டுமே இருந்தது. ஜாக்கி உள்ளிட்டவைகளைக் காணவில்லை. கடன்கார நண்பன்.. எவனுக்காவது அவசரத்துக்கு கொடுத்து இருப்பான்.
மழை இன்னும் வலுத்து இருந்தது. போன் சிக்னல் அனைத்தும் கட்டாகி இருந்தது. நவம்பர் மாதக் குளிரில் அருவிக்கு ஆட்கள் வருவது அபூர்வம்.. அதுவும் இப்போது திடீரென்று மழை வேறு கொட்டுகின்றது. கவ்விய இருட்டில் மின்னல் வெட்டிச் சென்றது. எங்கோ தென்னை மரத்தில் விழுந்து இருக்க வேண்டும் அருகிலேயே.. அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த தோட்டத்திற்குள் வீடும், வீட்டின் முன் காரும் தெரிந்தது.

நேரத்தை வீணாக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டே தட்டுத் தடுமாறி அந்த வீட்டை நோக்கிச் சென்றேன். மழையினால் பாதை முழுவதும் சகதிக்காடாகி இருந்தது. வீட்டில் இருந்த காலிங்பெல்லை அழுத்தினாலும் உள்ளே பெல் அடிக்கும் ஓசை ஏதும் கேட்கவில்லை. கரெண்ட் கட்டாகி இருக்கலாம் என்ற எண்ணியவாறே கதவைத் தட்டினேன்.

உடனே திறந்த கதவின் வழியே அந்த அபூர்வ தேவதையைக் கண்டேன். மன்மதனின் காதலியாக இருக்கும் சகல லட்சனங்களையும் பொருந்திய காந்தர்வி பார்த்த பார்த்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.. “ஹலோ.. என்னங்க.. யார் நீங்க. என்ன வேணும்?..இவ்ளோ மழையில் இங்க வந்து இருக்கீங்க”
அந்த பைங்கிளி தனது இதழ் திறந்து பேசியது.. இல்லை இல்லை நாதம் இசைத்தது..
 “டயரோட கார் வெடிச்சிருச்சு.. இல்லையில்லை.. ஸ்டெப்னியோட டயர் வெடிச்சிடுச்சி”
உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தேன். ஒரு பெண்ணின் அழகு இப்படி மயக்கும் என்று இன்று தான் கண்டுகொண்டேன்..
“என்னதாங்க வேணும்.. சொல்லுங்க” அந்த குயில் கிணிகிணியென ஓசை எழுப்பியது... இப்போது நிதானத்திற்கு வந்து இருந்தேன்
 “அருவிக்கு வந்தோம்ங்க.. வழியில் கார் டயர் வெடிச்சிடுச்சு.. ஸ்டெப்னி மாத்த ஜாக்கி இல்லை வண்டில.. இங்க உங்க வீட்டைப் பார்த்தேன். முன்னாடி காரும்.. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்ன்னு”
”ஓ அப்படியா.. சரி சரி உள்ளே வாங்க.. நல்லா நனைஞ்சு போய் இருக்கீங்க” அவள் வழி விட நான் உள்ளே சென்றேன். நல்ல விசாலமான ஹாலாக இருந்தது. அவள் மாம்பழ நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த சேலை அணிந்து இருந்தாள்.. வயது 25 க்குள் இருக்கும் போல் தோணியது..
அழகாக வாறிய தலை முடி. திருத்தமாக இருந்த புருவம். அழகான சிறிய பொட்டு. சோபாவில் இருந்த துண்டை எடுத்து நீட்டினாள். அதை வாங்கும் போது அவளது விரலில் என் விரல் உரச ஒரு மின்னல் அடித்தது போல் இருந்தது.
 “முதல்ல தலையை துவட்டுங்க.. ஒரு டீ போட்டுத் தர்ரேன்.. குடிங்க.. அதுக்குள் ஜாக்கி எடுத்து தர்ரேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். தலையை துவட்டிக் கொண்டே சோபாவில் அமர்ந்தேன்..
நல்ல பெரிய வீடு தான்.. வெளியே இருந்து பார்க்கும் போது பழையதாக இருந்தாலும் உள்ளே மார்டனாக இருந்தது. சிறிது நேரத்தில் அவள் டீ கோப்பையுடன் வந்தாள். டீயை வாங்கும் போது தான் கவனித்தேன். அவளது முந்தானையின் அகலம் குறைந்து போய் இருந்தது. அதோடு இடுப்புப் பகுதி இப்போது நன்றாக தெரிவது போல் மாற்றிக் கட்டியும் இருந்தாள். உள் மனதில் ஒரு சலனம் ஓடியது.
“இங்க வேறு யாரும் இல்லீங்களா?”
“என்னோட கணவர் வேலை விஷயமா மதுரை வரை போய் இருக்காங்க.. ஒரு 5 வயது மகன் இருக்கான்.. இன்னைக்கு லீவுங்கறதால அவங்க பாட்டி வீட்டுக்கு போய் இருக்கான்.. நைட் அவர் வரும் போது கூட கூட்டிட்டு வந்துடுவார்” ஒரு மோகனப் புன்னகையுடன் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள். நானும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
“டீயை முதல்ல சாப்பிடுங்க. அப்புறமா... ” என்று இழுத்தாள்..
 “கண்ணா லட்டு திங்க ஆசையா” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டே டீயை உறிஞ்சினேன். சட்டென்று கண்களைக் கொண்டு செருகியது.. கொஞ்ச நேரத்திற்கு நினைவே இல்லை. கண் எரிச்சலுடன் கண்ணைத் திறந்த போது தலை விரிகோலமாக அவள் என் மீது அமர்ந்து இருந்தாள்.

  இக்கதையில் தொடர்ச்சியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

Thursday, February 25, 2010

இயற்கையான அழகி.. என் வீட்டிற்கு எதிரே

அவளை எப்ப முதன் முதலா பார்த்தேன்னு நினைவில் இல்லை.. ஆனா பார்த்த நாள் முதலாய் மனசுக்குள் நெருப்பு பத்திக்கிச்சு.. எப்ப பார்த்தாலும் மனசுக்குள் மத்தாப்பு தான்.. அழகா இருப்பான்னு சொன்னால் அது தப்பா போய்டும்... ஏன்னா எழுத்தாளர்கள் எல்லாம் அழகான என்ற அர்த்தத்தில் சொன்ன மொக்கை பிகர்களோடு இவளையும் சேர்த்து ஒப்பீடு செய்ய வேண்டி வந்து விடும்.. இவ அதுக்கு எல்லாம் மேலே..

அதுக்காக எண் கணிதத்தின் துணையோடு பெருமிதமா அங்கங்களை வர்ணிக்கவும் முடியாது.. நார்மல் தான்.. ஆனா அழகு... கொஞ்சம் மாநிறத்தில், சிரித்துக் கொண்டே இருக்கும் ஒரு அழகி.. எவன் பார்த்தாலும் கொத்திக் கொண்டு போய் விடுவான் என்று சொல்லவும் முடியாத அழகு... மத்தவர்களுக்கு எப்படியோ எனக்கு அவள் அழகியாத் தெரிந்தாள்.

எப்படி அவளை அறிந்தேன்... என்ன பெரிய அறிதல், புரிதல் எல்லாம்.. முன் வீட்டில் புதிதாக குடி வந்து இருந்தாள். அவங்க அப்பாவுக்கு இங்க இருக்கும் ஏதோ ஒரு பன்னாட்டு பண்ணாடைக் கம்பெனியில் வேலையாம்.. மாற்றலாகி இங்க வந்து இருக்காங்க போல.. ஒரு குட்டி தம்பியும் இருக்கான் அவளுக்கு.. கதாநாயகின்னா ஒரு குட்டி தம்பியும், தங்கையும் இருக்கனும் என்பது எழுதப்படாத விதி போல..

அரசல் புரசலாக அவளை பல முறை பார்த்து இருந்தாலும் வீட்டிற்கு முன்னாடி கோலம் போடும் போது தான் அவளைப் பார்த்தேன்.. எங்க தெருவில் இருக்கும் எந்த பொண்ணும் இப்பவெல்லாம் கோலம் போடுவதே இல்லை... நான் சின்ன வயசில் இருக்கும் போது, எனது சீனியர்கள் எல்லாம் கோலம் போடும் நேரங்களில் சைக்கிளில் வலம் வருவார்கள்.... இதனால் சில நேரங்களில் பொண்ணுகளின் கடைக்கண் பார்வையும், பல நேரங்களில் நைட்டி ஆன்ட்டிகளின் திட்டுக்களையும் மானாவாரியாக அள்ளிச் செல்வார்கள்.

இப்ப இருக்கும் பொண்ணுகள் எல்லாம் பாவம் போல.. எல்லாம் காலையில் வேகவேகமா பஸ் பிடிச்சி காலேஜ், ஸ்கூல் எல்லாம் போய்ட்டு நைட் தான் வீட்டுக்கு திரும்புதுங்க.. இதில் வீட்டை பெருக்குவதாவது.. கோலமாவது...ஆங் எங்க விட்டேன்.. கோலம் போடும் போது... அப்ப தான் வீட்டு வாசலில் பேப்பர்க்காரன் விட்டு விட்டுப் போன தி ஹிந்து பேப்பரை எடுக்க வெளியே போனேன் என்று எழுதத் தான் ஆசை... ஆனா என்ன செய்ய வீட்டில் இருக்கும் பசு மாட்டை அருகில் இருக்கும் தோட்டத்திற்குள் இரை மேய பத்திக் கொண்டு போகும் போது தான் அவளைப் பார்த்தேன்.

அவளை ஏற்கனவே முன்னாடியே வர்ணிச்சாச்சு.. அதனால் நேரா மேட்டருக்கு போகலாம்... என்னன்னா அவளுக்கு என் மீது எப்படி காதல் வந்துச்சு என்பது தான்... நானே எருமை மாட்டுக்கு கருப்பு பெயிண்ட் அடிச்ச மாதிரி இருப்பேன்.. அவளுக்கு என் மீது எப்படிக் காதல் வந்தது? ஏன் எங்க ஊரு பாட்டுக்காரனில் ராமராஜனைப் பார்த்து அந்த ஒல்லியா சிகுசிகுன்னு வளர்ந்து இருக்குமே அந்த அம்மாவுக்கு காதல் வரலையா? அது மாதிரின்னு நினைச்சுக்கங்க...



அவளோட தம்பி தான் எங்க காதலுக்கு தூதவனோ என்று நினைச்சுக்காதீங்க.. அந்த படுபாவி தான் வில்லன்... இவ சிரிச்சாலே அவன் என்னை முறைப்பான்... அவகிட்ட நான் வாங்கிய முத்தத்தையோ, அவளுக்கு நான் கொடுத்த ஆங்கிலப் பட கிஸ்ஸையோ பார்த்து இருந்தான் அம்புட்டுத் தேன்... ஊரில் எனக்கு பெரிய ஆப்பா சீவி வச்சு இருப்பான்.. நல்லவேளை மாட்டலை..

அவளை நான் லவ் பண்ண ஆரம்பிச்சதில் இருந்தே ஊர்க்காரப் பயலுவலுக்கு ஒரே பொறாமை.. எல்லாம் காதிலும் புகை... எப்படித் தான் இந்த மேட்டர் ஊர்க்குள்ள பரவுதோ.. எல்லா திருவாத்தானுகளும் இதே வேலையா அலையுதானுக... கடைசியா ரெண்டு வீட்டுலயும் தெரிஞ்சு போச்சு... அவங்கப்பன் குய்யோ முறையோன்னு வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறான்.. பின்னே பக்கத்து டவுன் டாஸ்மாக் பாரில் அவன் வாங்கின குவாட்டரில் ஓசியில் முக்கால்வாசியை குடித்தவன் தான் மாப்பிள்ளைன்னா எந்த அப்பன் தான் ஒத்துக்குவான்.. ஆனா நம்ம ஆளு படு ஸ்ட்ராங்.. காதல் பட கதாநாயகி மாதிரி எல்லாம் ஓவரா போகலை,,, நீ வேணா செத்துப் போ.. நான் அவனைத் தான் கல்யாணம் கட்டுக்குவேன்னு சொல்லிடுச்சு...

அவங்கப்பனுக்கு விக்கினதுமில்லை, விரைச்சதுமில்லை.. ஸ்ட்ரக்கப் ஆயிட்டான்.. அப்புறம் என்ன வேற வழி இல்லாம எனக்கே கல்யாணம் முடிச்சுத் தருகிறேன்னு எங்க வீட்டு வாசப்படி ஏறி வந்துட்டான்.. அடுத்த வாரமே கல்யாணம்...

இதுவரை எழுத வேண்டிய சிறுகதையை எழுதி வைத்து விட்டு படித்துக் கொண்டு இருந்தேன்.. பின்னாடி இருந்து கழனித் தண்ணி மீதியை தலையில் விசிறி அடித்து விட்டு அப்பத்தா கத்தத் தொடங்கினார்.. “ஏண்டா? சல்லவாரி நாயே.. அப்ப இருந்து பசு மாடு கத்துது அதைக் கொண்டு போய் தோட்டத்துல கட்டுன்னு நாயா பேயா கத்திக்கிட்டு இருக்கே... பேப்பரிலே ஏதோ ஜில்லா கலெக்டர் பரிட்சைக்கு போறவன் மாதிரி உட்கார்ந்து கிறுக்கிகிட்டு இருக்க... ஒன்னு ஏதாவது பொஸ்தகத்தை எடுத்து படிச்சிட்டு லூசு மாதிரி மோட்டு வளையைப் பார்க்குறான்.. இல்லைன்னா எதையாவது எழுதுறான்.. என்னைக்கு தான் திருந்த போறானோ என்று புலம்பிக் கொண்டே போனாள்.

மாட்டை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வந்த போது, என் காதலி குடி இருக்கும்\இருந்த வீட்டில் பல ஆண்டுகளாக குடி இருக்கும் வள்ளிக் கிழவி வீட்டின் முன் வாசல் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்.

Sunday, August 9, 2009

அரைக் கிறுக்கன் - உயிரோடைக்காக எழுத நினைத்தது.

இச்சிறுகதை உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுத வேண்டியது. ஏதோ ஒரு இங்கிதத் தடை(?) அல்லது கூச்ச அச்சம் இதை வெளியிட தடை செய்தது. போட்டிக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில் சில வெட்டுக்களுக்குப் பிறகு இதை வெளியிட முடிவு செய்து விட்டேன். கவிதையோடு முழுதாக ஒத்துப் போகாததும் ஒரு காரணம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ப்பொழுதெல்லாம் என்னைக் கண்டதும் அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. மார்க்கெட் போய் வரும் வழியில் தான் அவன் வேலை செய்யும் மளிகைக் கடை இருக்கின்றது. மூட்டைகளை அடுக்கி வைப்பது, அட்டைப் பெட்டிகளை கட்டி வைப்பது, கடைக்கு முன்னால் பெருக்குவது என்று ஏதாவது செய்து கொண்டு இருப்பான். நல்ல ஆடைகளும் உடுத்தி இருக்கின்றான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் சில நேரங்களில் பரிதாபமும், இன்னும் சில நேரங்களில் பெருமிதமும் ஏற்படுகின்றது.


தூரத்தில் வரும் போது என்னைப் பார்க்கும் அவன் அருகில் வந்ததும் எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, ஏதாவது வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றான். இன்று வரை அவனுக்கு என்ன பெயர் என்பது தெரியவில்லை. எல்லோரும் அவனை அரைக் கிறுக்கு என்றே கூப்பிடுகின்றனர்.

அவனை முதன் முதலில் சந்தித்த அந்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. இப்பொழுது இருப்பது போல் இல்லை அன்று அவன். கிழிந்த சட்டையும், பின்பக்கம் கிழிந்திருந்த டவுசருமாக உடல் முழுவதும் அழுக்காக, பரட்டைத் தலையுடன் வீட்டு கேட்டருகே நின்று கொண்டிருந்தான். சில சிறுவர்கள் கல்லை எடுத்துக் கொண்டு அவனைத் துரத்தில் என் வீட்டுக் காம்பவுண்டிற்குள் நுழைந்து இருக்கின்றான். பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தான்.

கொஞ்சம் இருங்கள்…. தெருவைக் கடப்பதற்கு முன் இந்த பகுதியைப் பற்றி சொல்லி விட்டு அவனைப் பற்றி பார்க்கலாம். இந்த தெருவில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்களாம். எதிர் வீட்டில் இருக்கும் ஒரு பத்தினி ஒருநாள் என் வீட்டு முன் நின்று கத்திக் கொண்டு இருந்த போது கூறியது இது. நான் தெருவில் செல்லும் போது ஜொள்ளு வடிப்பது ஆண்களுக்கும், பொறாமையில் முகத்தை தோள்ப்பட்டையில் இடித்துக் கொள்வது பெண்களுக்கும் வழக்கமான ஒன்றாகி விட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது என் நிலைமையாகி விட்டது.

நான்… என்னைப் பற்றி என்ன சொல்ல?… பாலியல் தொழிலாளி என்று சொல்லவா? அல்லது தெருவில் பேசுவது போல் அசிங்கமான வார்த்தைகளில் சொல்லவா? ஒரு காஸ்ட்லியான விபச்சாரி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். இடமும், சுற்றுப்புறமும் மட்டும் தான் வேறு மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.

கோபம், தாபம், காமம், குரோதம், அகங்காரம், சோகம், விருப்பம், வெறுப்பு, தவிப்பு என பல மனநிலையில் வருபவர்களை இங்கு காணலாம். மனிதர்களில் பல வகை. சிலருக்கு அவசரத்திற்கு, சிலருக்கு கோபத்தைக் காட்ட, சிலருக்கு வெறுப்பை வெளிப்படுத்த, இன்னும் சிலருக்கு தங்களை பரீட்சார்த்த முயற்சிகளை சோதித்துப் பார்க்க… சரி போதும் அவனைப் பற்றிப் பார்க்கலாம்.

சிறுவர்களை விரட்டி விட்டு அவனைப் பார்த்தேன். ஓடி வந்ததால் மூச்சிரைத்துக் கொண்டு இருந்தான். சிறுவர்கள் அரைக் கிறுக்கன் என்று கத்திக் கொண்டு சென்றதில் தவறில்லையோ என்று தோன்றும் உருவம். தண்ணீர் என்று மெதுவாக முனங்குவது கேட்டது. வீட்டில் இருந்து சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். இங்கு வருபவர்களை இவன் நல்லவனாகத் தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

தண்ணீரை நெஞ்சில் சிந்த சிந்தக் குடித்தான். கொஞ்ச நேரம் இருந்து விட்டு சென்று விட்டான். அடுத்த இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. மூன்றாம் நாள் வந்து விட்டான். அதே கோலத்தில்.. இப்போது பசிக்குது பசிக்குது என்றான். சாப்பாடு போட்டேன். அன்று முதல் என் வீட்டின் முன் அமர்ந்து விட்டான். என் வீட்டிற்கு இரவில் வந்து செல்பவர்களை மலங்க மலங்கப் பார்த்தபடி அமர்ந்து இருப்பான்.சில நேரங்களில் மீதமான உணவைப் போடுவேன். எவனோ வந்து விட்டுவிட்டுப் போன வேட்டி சட்டையையும் கொடுத்தேன். சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு வேட்டியை அவன் உட்காரும் இடத்தில் விரித்து வைத்துக் கொண்டான்.

என்னிடம் வந்து விட்டு செல்லும் சிலர் அவனுக்கு 10, 20 என்று கொடுப்பார்கள். இங்கு வந்து செல்பவர்கள் தர்ம பிரபுக்களாக மாறி விடுகின்றனர். அவனைப் பற்றி கூறும் போது அச்சுதனைப் பற்றி கூறியே ஆக வேண்டும். அச்சுதனுக்கு 50,55 வயது இருக்கும். ஆலந்தூர் பக்கம் இரும்புக் கடை வைத்திருக்கிறார். கேரளாவின் ஒரு மூலையில் குடும்பம் இருக்கின்றது. எப்போது சென்று வருவார் என்று தெரியாது. ஆனால் என் வீட்டிற்கு வாரத்திற்கு இரண்டு முறையாவது இரவுகளில் வருவார்.

வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மனித ஜந்துக்களில் ஒருவர். அச்சுதன் வரும் போதெல்லாம் அவனுடம் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவன் ஏதும் பதில் சொல்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பான். மற்றவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கும் அவன் அச்சுதன் கொடுப்பதை மட்டும் வாங்கவே மாட்டான்.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவர் பதற்றமடைவதைக் காண முடியும். சில நேரங்களில் வரும் போது பிரியாணி பொட்டலம் வாங்கி வந்து அவனுக்கு தருவார். அவர் திரும்பும் போது எதிரில் இருக்கும் குப்பைத் தொட்டியில் பிரிக்கப்படாத பிரியாணி பொட்டலம் கிடைக்கும். அச்சுதனை அவன் மிகவும் அழுத்தமாகப் பாதித்து இருந்தான். எப்படியாவது அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பது அச்சுதனுடைய ஆசை.

அன்று அச்சுதன் என்னிடம் உன்னுடன் அவனைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னதைக் கேட்டதும் என்னால் அதிர்ச்சி தாங்க இயலவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வந்து தினசரி அமைதியாக அமர்ந்து கொண்டு இதையே சொல்லிக் கொண்டு இருந்தார். முதலில் கோபமாக இருந்தாலும், சில நாட்களில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

அன்று அச்சுதன் வரும் போதே அவனை வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தார். அச்சுதன் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள் வரை வந்தது ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த பல நிமிடங்கள் நிறைய காரியங்களை செய்ய வேண்டி இருந்தது. அவன் வீட்டிற்குள் வந்த 55 வது நிமிடம் என் மீது சீராக இயங்கிக் கொண்டு இருந்தான். அச்சுதன் சிறிது தூரத்தில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் உச்சத்தை அடைந்து இருந்தேன். அவனது இயக்கம் வேகமாகி இருந்தது. அச்சுதனை பார்த்த போது கைகால்கள் நடுங்க உட்கார்ந்து இருந்தார். முகம் முழுவதும் வெளிறிப் போய் இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டி இருந்தது. சிறிது நேரத்தில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து இருந்தார். இதை எதையும் கவனிக்காமல் அவன் தனது எல்லையை அடைந்து இருந்தார்.

சில வினாடிகள் கண்களை மூடி இருந்த அவன் வேகமாக என்னை விட்டு எழுந்து வெளியேறினான். ஜன்னல் வழியே பார்த்த போது வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு அவன் வெளியேறுவது தெரிந்தது. அச்சுதனும் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அன்றைக்குப் பிறகு அவர்கள் இருவருமே என் வீட்டிற்கு வருவதே இல்லை. எங்காவது என்னைக் காண நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்..... ஒரு வித நடுக்கத்துடன்.

Saturday, July 11, 2009

இலையில் சோறு போட்டு...



"ஏண்டி.. மெல்லமா நடந்து வரத் தெரியாதா?”
மாலதியின் பேச்சைக் கேட்கக் கூடியவள் இல்லை சின்னு. நடந்து வராமல் தாவித் தாவிக் குதித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தாள். கூடவே அவளது குட்டி நாயான டைகரும். டைகர் அவர்களது குப்பத்தில் இருந்த ஒரு நாய் போட்ட குட்டி... குட்டியிலேயே எடுத்து வந்து பாலூட்டி வளர்த்து இப்போது கறி தின்னும் அளவுக்கு வளர்ந்து விட்டது. சின்னு எங்கே சென்றாலும் கூடவே அதுவும் திரியும்.

இன்று சின்னுவின் மகிழ்ச்சிக்குக் காரணம் அவர்கள் செல்லுமிடம். மாலதி, சின்னுவின் அம்மா அந்த பகுதி கவுன்சிலர் வீட்டில் வேலை செய்கின்றார். இன்று கவுன்சிலரின் ஒரே மகனுக்கு பிறந்தநாள். அதனால் ஒரு பார்ட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளார். சின்னுவின் அம்மா அங்கேயே வேலைக்கு இருப்பதால் அவளது பிள்ளைகளையும் கவுன்சிலர் மனைவி சாப்பிட வரச் சொல்லி இருந்தாள்.

சின்னு அம்மா எப்போதுமே மிச்சம் மீதிகளை கட்டிக் கொண்டு வந்து தனது பிள்ளைகளுக்கு சாப்பிடத் தருவாள். இன்று அங்கேயே சுடான சாப்பாடு கிடைக்கும் என்பதால் சின்னுவிற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. சின்னு மூன்றாம் வகுப்பு படிக்கும் சுட்டியான மாணவி. மாலதி ஆறாம் வகுப்பு படிப்பவர். இப்போது தான் கொஞ்சம் கொஞ்மாக அவளிடம் வெட்கம் குடி கொள்ள ஆரம்பித்து இருக்கின்றது.

வானம் மேக மூட்டமாக இருந்தது. கவுன்சிலரின் வீடு கலகலப்பாக இருந்தது. மாலதியும், சின்னுவுன் வீட்டுக்கு வெளியே இருந்த முற்றத்தில் அமர்ந்து இருந்தனர். இவர்களைப் போலவே இன்னும் சில சிறுவர், சிறுமிகளும், வயதானவர்களும் அங்கே இருந்தனர். விருந்தினர்கள் எல்லாம் வீட்டிற்கும் கொண்டாட்டங்களில் மூழ்கி இருந்தனர். சின்னுவின் அம்மா அவ்வப்போது வீட்டினுள் இருந்து மகள்களை ஒரு ஏக்கப் பெருமூச்சுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள். சின்னு நைசாக வீட்டிற்குள் நுழைந்து பார்த்த போது பிரியாணி அங்கே பரிமாறப்பட்டுக் கொண்டு இருப்பது தெரிந்ததால் சின்னு அவ்வப்போது மூச்சை இழுத்து வாசம் பிடித்துக் கொண்டு இருந்தாள்.

இப்போது முற்றம் பரபரப்பாக இருந்தது. அங்கிருந்தவர்கள் அனைவரும் வரிசையாக அமர வைக்கப்பட்டு இருந்தனர். மாலதியும், சின்னுவின் ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தனர். டைகரை அங்கிருந்த குரோட்டன்ஸ் செடி மறைவில் ஒளிந்து இருக்கச் செய்து இருந்தாள் சின்னு. மாலதிக்கு சின்னுவின் மீது கோபம்.. நாயைக் கூட்டி வந்தது கவுன்சிலர் மனைவிக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று.. சின்னுவிற்கு அதைப் பற்றிய கவலை இல்லை.. தனக்கு கிடைக்கும் சாப்பாட்டில் கொஞ்சம் டைகருக்கு தரப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறாள்.

வரிசையாக உட்கார்ந்து இருந்தவர்களுக்கு முன் இலை போடப் பட்டு இருந்தது. இலை போட வந்தவரிடம் நைச்சியமாக பேசி ஒரு கிழிந்த இலையை டைகருக்காக சின்னு வாங்கி வைத்து இருந்தாள். அவளுக்கும் உள்ளூர பயம் இருந்தது. அம்மா டைகரைப் பார்த்தால் கூட அடி பின்னி விடுவாள் என்று.. ஆனாலும் டைகர் ஒளிந்து இருக்கும் தைரியத்தில் இருந்தாள். எல்லாருக்கும் முன் இலை போடப்பட்டு இருந்தது.

அப்போது தான் பரபரப்பு நிகழ்ந்தது. அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்தநாள் விழாவுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி அது. கவுன்சிலரின் கைத் தடிகள் முற்றத்தில் இலை போட்டு அமர்ந்து இருந்தவர்களை விரட்டிக் கொண்டு இருந்தார்கள். அனைவரும் எழுந்து ஓரமாக நின்று கொண்டிருந்தனர். சின்னு தனது இரண்டு இலையையும் எடுத்துக் கொண்டு ஓரமாக நின்று கொண்டு இருந்தாள். அவள் கவனம் முழுவதும் டைகரின் மீதே இருந்தது. டைகர் அமைதியாக செடி மறைவிற்குள்ளேயே இருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் இடத்தைக் காலி செய்ய மீண்டும் முற்றத்தில் அவரவர் இடத்தைப் பிடித்துக் கொண்டு அனைவரும் அமர்ந்தனர். அனைவரும் முன்னும் இலை இருந்தது. ஆனால் சாப்பாடு போட யாரையும் காணவில்லை. கவுன்சிலரின் மகனே வந்து தனது கையால் சாப்பாடு போட வேண்டுமாம்... இதனை வீடியோவாக எடுக்க கேமரா மேன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு இருந்தார்..

சின்னுவிற்கு பசி வயிற்றைக் கிள்ளியது. கேமராமேன் வேறு ஏதோ ஒயரில் பிரச்சினை என்று இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருந்தான். அவனது கேமரா தயாரானால் தான் சாப்பாடு போட ஆரம்பமாகுமாம். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு கேமரா தயாராகி இருந்தது. கவுன்சிலரின் மகன் தனது சின்னக் கரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக பிரியாணியை இலையில் வைத்துக் கொண்டிருந்தான். மாலதி, சின்னு இருந்த மூலைக்கு எதிர் மூலையில் இருந்து சாப்பாடு போடும் படலம் ஆரம்பமாகி இருந்தது. சின்னு அவ்வப்போது டைகரை தனது கைகளை வைத்து குரோட்டன்ஸ் செடிக்குள் தள்ளிக் கொண்டு இருந்தாள். டைகருக்கும் பிரியாணி வாசம் வந்து விட்டது போல் இருந்தது.

மாலதிக்கு ஏனோ அங்கே இருப்பது வெட்கமாக இருந்தது. ஆனால் வேறு வழி இல்லை. இடையில் எழ முடியாது. கவுன்சிலர் மனைவி பார்த்தால் அவ்வளவு தான் பத்ரகாளியாகி விடுவாள். சின்னுவின் இலைக்கு சாப்பாடு வருவதற்கும் நகரவே நகராத 15 நிமிடங்கள் கடந்து இருந்தது. சின்னுவோடு வரிசை முடிந்ததால் கேமராமேன் அதோடு நிறுத்திக் கொண்டு திரும்ப கேமராவோடு மக்கள் கூட்டமும் திரும்பி இருந்தது.

சின்னு வேகமாக செடிக்கு அருகில் கிழிந்த இலையைப் போட்டு தனது இலையில் இருந்த பிரியாணியில் பாதியை- டைகருக்காக வைத்து இருந்தாள். டைகர் அதை முகரத் துவங்கி இருந்தது. சின்னு தனது இலையில் இருந்து ஒரு கவளம் தான் எடுத்து வாயில் வைத்து இருப்பாள். திடீரென இடித்த இடி அவளை அதிர்ச்சிக்குள் ஆக்கியது. அதோடு சடசடவென மழை கொட்ட ஆரம்பித்து இருந்தது. மழையில் தனது டைகரைக் காக்க அதை இழுத்துக் கொண்டு வீட்டு ஓரம் இருந்த சன்சேடுக்கு கீழே ஓடிக் கொண்டு இருந்தாள் சின்னு. சில வினாடிகளில் பிரியாணியும், கறியும், இலையும் மழை நீரில் மிதந்து கொண்டு சின்னுவின் காலடியில் வந்து கொண்டு இருந்தன.

டிஸ்கி : மேலே இருக்கும் படத்தில் இருப்பவர்களின் முகங்களில் தெரியும் அதீதமான உணர்வின் பாதிப்பில் எழுதியது.. :(

Tuesday, June 16, 2009

திருடி நம்பர் ஒன்

பேருந்தில் ஏறி அமர்ந்ததும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேன். ஓரளவு இருக்கைகள் நிறைந்து இருந்தன. அரை மணி நேரப் பயணம் தான். மதுரையில் இருந்து வரும் வண்டியில் தான் இருக்கை கிடைக்கும் என்பதால் அந்த தனியார் வண்டியில் ஏறி இருந்தோம். இருவர் அமரும் சீட்டில் மகளை வைத்துக் கொண்டு மனைவி ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்க நான் உள்பகுதியில் அமர்ந்து இருந்தேன். மனைவி, குழந்தையுடன் செல்லும் போது எப்போதுமே கொஞ்சம் கவனமாக இருப்பது வழக்கம்.

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தை விட்டு வண்டி கிளம்பத் தயாராக இருந்த போது தான் முன் பகுதியில் அந்த பெண்மணி ஏறினாள். வண்டி முழுவதும் இருக்கைகள் நிறைந்து இருந்தன. நேராக என்னிடம் வந்த அவள் பின்னால் இருக்கும் மூவர் இருக்கையில் இருக்கும் ஒரு காலி இடத்தைக் கை காட்டி அங்கே போய் அமரச் சொன்னார். சுற்றும் முற்றும் பார்த்தால் ஒரு பெண் அமர்வது போன்ற இருக்கை ஏதும் காலி இல்லை. அந்த மூவர் இருக்கையில் ஏற்கனவே தடியான இரு ஆண்கள் அமர்ந்து இருந்தனர். வேறு வழி இல்லை.. மனைவியிடம் சொல்லி விட்டு மூவர் இருக்கைக்கு சென்றேன். அங்கிருந்த இருவருக்கும் இடையிலேயே எனக்கு இருக்கை கிடைத்தது.

இப்போது தான் அந்த பெண்மணியை நன்றாக பார்த்தேன். வயது 35 க்குள் இருக்கும். அவளது பார்வையே சரியில்லை. ஏனோ ஒரு திருட்டு முழி இருந்தது. என் மனைவியின் அருகே அமர்ந்தவள் என் மனைவியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தாள். தெரியாவதவர்களிடம் என் மனைவி பேச மாட்டாள். அந்த பெண்மணி வம்படியாக பேச்சுக் கொடுப்பதாகவே எனக்குப் பட்டது.

அடிமனதில் பய ஓட்டம் ஆரம்பித்து இருந்தது. சென்ற வாரம் மனைவியின் ஊரில் இதே போல் பேருந்தில் அருகே அமர்ந்த பெண்ணிடம் திருடி விட்டு கம்பி நீட்டிய பத்திரிக்கை செய்தி ஏனோ நினைவுக்கு வந்தது. கழுத்தில், காதில் நகை போட்டிருக்கின்றாள். இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக மாற்றப்பட்ட வளையல்களை வேறு போட்டு இருக்கிறாள். அதை நினைத்ததும் இன்னும் டென்சன் அதிகமாக ஆரம்பித்து இருந்தது. நகையின் எடையில் எந்த மாற்றமும் இல்லாமல், மாற்றிக் கொண்டு வந்ததன் மூலம் பல ஆயிரம் ரூபாய்களை விழுங்கி இருந்தவை அந்த வளையல்கள். என் அம்மாவிடம் திட்டு வாங்க முடியாது என்பதால் நெக்லஸை வேறு போட்டுக் கொண்டு வந்து இருக்கிறாள்.

அந்த பெண்ணுடன் என் மனைவி பேச ஆரம்பித்து இருப்பது தெரிந்தது. என்ன இவள்? பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் யாரென்றே தெரியாத பெண்ணுடன் எப்படி பேசிக் கொண்டு இருக்கிறாள். எரிச்சலாக வந்தது. பேருந்து நிலையத்தை விட்டு பேருந்து வெளியேறும் நேரம் 20 பேருக்கு மேல் நின்று கொண்டு வந்தனர். அவர்கள் வேறு பார்க்க விடாமல் மறைத்துக் கொண்டு இருந்தனர்.

இடையில் கிடைத்த கேப்பில் பார்த்த போது, இப்போது அந்த பெண்மணியின் மடியில் என் மகள். பஸ்ஸில் அமர்ந்ததும் தூங்கி விடுவாள். எப்படி கொடுத்தாள் இவள்? கோபம் முட்டிக் கொண்டு வந்தது. மகள் கழுத்தில் செயினும், காலில் தங்க கொழுசும் உள்ளது.

வண்டி தேவதானபட்டியைக் கடந்து இருந்தது. ஆட்கள் இன்னும் ஏறி வண்டி நிறைந்து இருந்தது. கொஞ்சம் எழுந்தே பார்க்க முடிந்தது. நான் பார்ப்பதைக் கூட கவனியாமல் இருவரும் முழு அரட்டையில் இருந்தனர். பதற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. என்ன நடக்குமோ என்று .. எதுவாக இருந்தாலும் அந்த பெண் இறங்கும் போது மனைவியிடம் சென்று நகைகளை சரிபார்க்க சொல்ல வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு முன் உள்ள நிறுத்தத்திலேயே அந்த பெண் இறங்க நாங்கள் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டும். வேகமாக அந்த பெண் என்னை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே இறங்கிச் செல்ல என்னை அடுத்த இருந்த ஆளை முட்டித் தள்ளி மனைவியின் இருக்கையை அடைவதற்குள் அந்த பெண் இறங்கி, வண்டியும் கிளம்பி இருந்தது.

காதுக்கு அருகில் சென்று திட்ட ஆரம்பித்து இருந்தேன்.. மனைவியின் முகத்தில் ஒரே சிரிப்பு.. ”என்னங்க நீங்க... அவங்க உங்க அப்பாவோட பிரண்டு பிரான்ஸிஸ் அங்கிள் மகள்.. நம்ம கல்யாணத்து கூட வந்து இருந்தாங்களே? ”

“அப்படியா? நான் கவனிக்கலியே” என்றேன் பரிதாபத்துடன்.. “ ஆமா.. கல்யாணத்து அன்றைக்கு யாரைத் தான் பார்த்தீங்க.. பலி ஆடு மாதிரி தானே முழிச்சுக்கிட்டு இருந்தீங்க..” மனைவி சொல்ல உண்மையில் ‘ஙே’ என்று விழித்துக் கொண்டு இருந்தேன்.

Thursday, March 12, 2009

மீள்பதிவு - முறிந்த சிறகுகளில் உயிர்த்த உறவு - சிறுகதை




.
வாசி இரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது மணி மாலை 5.30 ஐ நெருங்கி இருந்தது. வானம் சிலுசிலுப்பான காற்றுடன் மழை தூறிக் கொண்டு இருந்தது. தூறல் விழுந்து கொண்டிருந்தாலும் புழுக்கம் குறையாமலேயே இருந்தது. ஞாயிற்றுக் கிழமை மாலைக்கு உரிய சோம்பல் இல்லாமல் ரெயில் நிலையம் இருப்பதை காண முடிந்தது. நவி மும்பை, மும்பை கலாச்சாரத்தை விட்டு விலகி இருப்பதாகவே பட்டது.

ஜோடியாக மகிழ்ச்சி குதுகலிப்புடன் செல்லும் காதலர்களை பார்க்கும் போது ஏனோ பவித்ராவின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. நேற்றிரவு முடிக்காமல் வைத்த முறிந்த சிறகுகளும் நினைவுக்கு வந்தது. எத்தனை முறைப் படித்திருந்தாலும் ஏனோ நிறைவு பெறாததாகவே தெரிகின்றது.

இரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த மூன்று மாடி ஷாப்பிங் மாலுக்குள் நுழையும் போது உள்ளே இருந்து வரும் குளிர்சாதன வசதி முகத்தில் அறைந்தது இதமாகவே இருந்தது. உள்ளிலும் இளசுகள் நிறைந்து காண முடிந்தது... ஓ..மனம் இளசு என்று மற்றவர்களை சுட்டும் போது, நமக்கு வயதாகி விட்டது போன்ற உணர்வு வருவதாகவே படுகின்றது.... அம்மா வேறு ‘ஏழு கழுதை வயசாகி விட்டது. சீக்கிரக் திருமணம் முடிக்க வேண்டும்’ என்று மூன்று பெண்களின் போட்டோக்களையும் அனுப்பி வைத்து விட்டிருக்கிறார்.... சிரித்துக் கொண்டேன்.

ஐஸ்கிரீம் பார்லரில் கூட்டம் அலை மோதியது. ஐஸ்கிரீம் சாப்பிடும் வழக்கம் விடுபட்டு விட்டது. அதை புன்னகையுடன் கடந்து பார்கார்ன் கடைக்கு வந்தேன். பதின்ம வயதில் சினிமா தியேட்டர் ஐஸ்கிரீமுக்காக பாக்கெட் மணி சேர்த்து வைத்த காலம் நினைவுக்கு வந்தது. இன்று பர்ஸ் நிறைய பணம் இருந்தும் ஏனோ மனம் ஐஸ்கிரீமை விரும்புவதில்லை. பவித்ராவுக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது என்பதாலோ?

வழக்கமாக பாப்கார்ன்வாங்கும் கடையிலும் கூட்டம் அலைமோதியது. கடைக்காரன் அங்கிருந்தே புன்னகை செய்தான்... “பாய் சாப்! தோ மினட் மே ஆப்கா பார்கார்ன் மிலேகா! சபர் கீஜியே”... கூட்டத்தில் நிற்காமலேயே பாப்கார்ன் கைக்கு வரும் என்பதால் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன்.... கூட்டம் ஆவலுடன் பாப்கார்ன் வாங்க நின்றிருந்தது. அந்த கூட்டத்தில்..... ஓ.... அது கல்பனா தானே... ஆமாம் அவள் கல்பனா தான்.. இப்போது கொஞ்சம் பூசினாற் போல் இருக்கிறாள்... திருமணம் ஆகி இருக்கலாம். திருமணம் ஆனாலே இந்த பெண்கள் ஏன் குண்டாகி விடுகின்றனர்... பவித்ராவுக்கு திருமணம் ஆகி இருக்குமோ? ஏன் எதற்கெடுத்தாலும் பவித்ராவையே நினைக்கிறேன்...

கல்பனா பார்கார்ன் வாங்கி விட்டு வருவது தெரிந்தது. என்னைக் கடக்கும் போது கூப்பிட்டேன் “ எக்ஸ்கியூஸ்மீ! நீங்க கல்பனா தானே?” என்னை வேகமாக கடந்தவள் சட்டென்று நின்று திரும்பி கொஞ்சம் உற்று நோக்கினாள்.

“ஹேய்! தமிழ் தானே நீ! வாட் எ சர்பிரைஸ்! பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு! இங்க என்ன செய்ற”

“இங்க தான் 5 வருசமா இருக்கேன். ஒரு மேன் பவர் கன்சல்டண்டில் அஸிஸ்டெண்ட் மேனேஜர் வேலை! அது இருக்கட்டும்! நீ எப்படி இருக்க?”

“ரொம்ப நல்லா இருக்கேன்! நீ எப்படி இருக்க! கல்யாணம் ஆச்சா”

“இன்னும் இல்லை கல்பனா! உன்னைப் பார்த்ததும் அடையாளமே தெரியலை.... முன்னெல்லாம் கட்டுப் பெட்டியா சேலையில் தான் காலேஜ் வருவ! இப்ப ஆம்பிளை மாதிரி டீ சர்ட், ஜீன்ஸோடு பார்க்கிறேன். எனக்கே சந்தேகமாயிடுச்சு”

“அதெல்லாம் இருக்கட்டும் தமிழ்! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.. நம்ம தேவகி தெரியும் தானே?”

“அந்த தேவகி மாமி தானே? நல்லாவே தெரியுமே”

“ அவள் ஒரு வருஷமா உன்னைத் தேடிக்கிட்டு இருக்கா”

“என்னையா? அவளுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே”

“தமிழ் கிண்டல் வேண்டாம்... பவித்ரா விஷயமா ஏதோ முக்கியமா பேசனுமாம்... உன் போன் நம்பர் கொடு. அவளிடம் கொடுத்து பேசச் சொல்றேன்”

பவித்ராவின் பெயரை நான் மட்டும் சொல்லி நெடுங்காலமாக கேட்டு வந்த என் காதுகள் வேறோருவர் சொன்னதும் ஏனோ காது மடல்கள் சிலிர்த்தன. என் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்டாள். ஐஸ்கிரீம் பார்லரில் இருந்து சுமாரான தொப்பையுடன், கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு அவர் அருகில் வந்தார். கையில் இருந்த குழந்தை கொஞ்சும் குரலில் “ மம்மி! உனக்கு ஐஸ்கிரீம் கிடையாது” சிரிப்புடன் கல்பனாவைப் பார்த்து கூறியது.

“தமிழ்! இவர் தான் என்னுடைய கணவர் ஆனந்த குமார்! இவள் என் மகள் ஹரிணி.. என்னங்க இவர் என்னோட காலேஜ் மேட் தமிழ் பிரியன்.. இங்க தான் இருக்காராம்”

பரஸ்பரம் இருவரும் கை குலுக்கி நலம் விசாரித்துக் கொண்டோம். ஹரிணி அதே சிரிப்புடன் “ஹாய்! அங்கிள்” சொன்னாள். மீண்டும் கல்பனாவைப் பார்த்த போது அவளது பார்வையில் இனம்பிரியாத கோபம்,பயம், மிரட்சி, சந்தேகம், சோகம் ஏதோ ஒன்றை உணர முடிந்தது.

“சரி தமிழ்! நாங்க கிளம்பறோம்... தேவகியிடம் உன் போன்நம்பரையும், இ மெயிலையும் தர்ரேன்... அடுத்த வாரம் ஹரிணிக்கு பிறந்தநாள் வருது... உன்னை போனில் அழைக்கிறேன் அப்ப மீதியைப் பேசிக் கொள்ளலாம்”.

***************************************************************

அன்றிரவு ஏனோ பவித்ராவின் நினைவு அதிகமாகவே இருந்தது. மின் விளக்குகளை அணைத்து விட்டு, ஜன்னல்களைத் திறந்து வைத்தபடி படுத்து இருந்தேன். முழு நிலவு எனக்காகவே ஆசையுடன் வானில் இருந்து இறங்கி வருவது போல் இருந்தது. நெஞ்சில் மீது பாதி படித்த நிலையில் முறிந்த சிறகுகள் கிடந்தது.இப்படியும் கவிதை எழுத முடியுமா? வர்ணனைகளைத் தொடுக்க இயலுமா? என்ற யோசனை வந்த போது, பவித்ராவால் முடியும் என்று தோன்றியது. பவித்ரா நன்றாக கவிதை எழுதுவாள்.... அவளே ஒரு கவிதை என்பது என் கருத்து. அவள் அன்புடன் பவித்ரா என்று எழுதிக் கொடுத்த முறிந்த சிறகுகளை இது வரை எத்தனை முறை படித்துள்ளேன் என்று கணக்கு பார்த்து தோல்வியே அடைந்துள்ளேன்... அவள் நினைவாக புகைப்படத்திற்கு அப்புறம் இருப்பது இது ஒன்று தான்

ஜன்னல் வழியே தெரிந்து கொண்டிருந்த நிலா மெல்ல நகர்ந்தது. இப்போது வானம் வெறுமையாக தெரிந்ததது. மணி பதினொன்றைக் கடந்து இருந்தது. கண்களை மூடி, நேற்று விட்டுப் போன பவித்ராவுடன் வாழும் கனவைத் தொடர ஆரம்பித்திருந்தேன்... செல் போன் மெலிதாக சிணுங்கியது..

அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே ....
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே...

புதிய எண்ணாக இருந்தது...
“ஹலோ! தமிழ் பிரியனா?” பெண் குரல்

“ஆமாம்! நீங்க யார் பேசிறீங்க”

“நான் தேவகி பேசறேன்... நல்லா இருக்கியா தமிழ்?”

“நான் நன்னா இருக்கேன்! நீங்கோ நல்லா இருக்கேளா மாமி”

சில வினாடிகள் தேவகியிடம் இருந்து எந்த பதிலுல் இல்லை

“ஹலோ தேவகி என்னாச்சு? சும்மா கிண்டல் பண்ணினேன்... சாரிப்பா”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை... உன்னிடம் பவித்ரா சம்பந்தமாக முக்கியமான விஷயம் பேசனும்.. ரூமில் இன்டர்நெட் இருக்கா? ”

எடுத்தவுடன் நேரடியாக பவித்ரா விஷயத்திற்கு வந்தது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. மனம் மகிழ்வும், பயமும் கலந்த ஒருவித சிந்தனையில் ஆழ்ந்தது.

”இருக்கு! முக்கியமான விஷயம்ன்னா போனிலேயே சொல்லு தேவகி!”
“இல்லை தமிழ். உன்னோட ஜி மெயில் ஐடிக்கு என்னிடம் இருந்து இன்வைட் அனுப்பி உள்ளேன். அதை அக்சப்ட் பண்ணு.. நான் ஆன் லைனில் தான் இருக்கேன். அங்கே வா!”

போனை துண்டித்து விட்டாள்.. ஏனோ மனம் கலவரமாக இருந்தது. தேவகியை பல வருடங்களாக பார்க்கா விட்டாலும் அவளது ஜாலியான குணம் மாறி இருக்காது என்றே நினைத்து இருந்தேன்... அவளது குரலில் இருந்த ஒரு சோகம் என்னை வியர்வையில் நனைய வைத்தது.... என்னவோ கெட்ட செய்தி இருப்பதாகத் தோன்றியது

கணிணியை உயிரூட்டினேன்... காலேஜில் எடுத்த பவித்ரா இருக்கும் படத்துடன் கணிணி திறந்தது. ஜி டாக்கில் நுழைந்து தேவகியின் மின்னஞ்சலை அக்சர்ட் செய்ய சிவப்பு விளக்குடன் தேவகி இருந்தாள்..தட்டச்சினேன்

“ஹாய்! தேவகி எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் தமிழ்! நீ எப்படி இருக்க”

”நல்லாவே இருக்கேன்.. எங்க வீட்லயா இருக்க”

“ஆமா தமிழ்! கணவரும், பையனும் தூங்கி விட்டார்கள்... நான் இப்பதான் வேலை எல்லாம் முடித்து நெட்டில் அமர்ந்தேன்.. உடனே உனக்கு போன் செய்தேன்”

“என்ன ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்ன்னு சொன்னியே?

தேவகி அடுத்து சொன்ன அந்த விஷயத்தைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன்.
சட்டென்று பூமி தரைக்கு கீழே நழுவது போல் இருந்தது. வெளியே இடி இடித்து, மின்னல் கீற்று ஒன்று அறைக்குள் எட்டிப் பார்த்து சென்றது...

“பவித்ரா இறந்த விஷயம் உனக்கு தெரியும் தானே?”

தேவகி தட்டச்சு செய்ததும் சுக்கு நூறாக உடைந்த கண்ணாடி போல் என்னை உணர்ந்தேன்... என்னால் கணிணியின் மானிட்டரை பார்க்கவே இயலாத அளவு கண்களில் நீர் சேர்ந்திருந்தது. மீண்டும் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்த போது தேவகி தட்டச்சு செய்து கொண்டிருந்தாள்..

“சாரி தமிழ்! உன்னிடம் எப்படி சொல்வது என்றே தெரியலை.ஆனா சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் ஆனதால் தான் நம் காலேஜ் மேட் நிறைய பேரிடம் சொல்லி வைத்திருந்தேன்”

“இன்று தான் கல்பனா உன்னைக் கண்டுபிடித்து இருக்கிறாள்”

“பவித்ரா இறந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்டது! ஸ்டவ் வெடித்து உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மூன்று மாதம் ஹாஸ்பிட்டலில் வைத்து இருந்தார்கள். பின்னர் கொஞ்சம் குணமானதும் வீட்டுக்கு கொண்டு வந்திருந்தார்கள்.. அடுத்த இரண்டு மாதத்தில் திடீரென்று ஒருநாள் இறந்து விட்டாள்.”

“தமிழ் ஆர் யூ தேர்?”

“ம் சொல்லு தேவகி”

“அவள் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னால் அவள் வீட்டுக்கு அவளைப் பார்க்க போய் இருந்தேன். எப்போதுமே அழாமல் இருப்பவள் அன்று என்னிடம் கதறிக் கதறி அழுதாள். ஏன் என்று கேட்டதற்கு ஏதும் சொல்ல மறுத்து விட்டாள்.”

“பின்னர் அவள் இறப்பதற்கு முதல் நாள் இரவு எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தாள். அதனுடன் ஒரு வேர்ட் அட்டாச்மெண்டும் இருந்தது. மெயிலில் இந்த அட்டாச்மெண்டை, உன்னைக் கண்டுபிடித்து சேர்க்கும்படிக் கூறி இருந்தாள். அதற்கு ஒரு பாஸ்வேர்டும் போட்டு இருக்கின்றாள். ஆனால் அதை கண்டுபிடித்து நீதான் திறந்து பார்க்க வேண்டுமாம்”

”நம் நண்பர்கள் அனைவரும் உன்னைத் தேடி களைத்துப் போய் விட்டோம்... பல நாட்களுக்குப் பின் நான் கூட அந்த அட்டாச்மெண்டில் உன்னைப் பற்றி ஏதாவது தகவல் இருக்கும் என்று திறக்க முயற்சி செய்தேன்... ஆனால் முடியவில்லை”

“தமிழ்! எதற்கும் கவலைப்படாதே... அந்த மெயிலை உனக்கு பார்வேர்ட் செய்கின்றேன்.... என்ன எழுதி இருக்கிறது என்று பார். அவள் கடைசி நேரத்தில் உன்னைத் தான் சந்திக்க ஆசைப்பட்டிருக்கின்றாள் போல் இருக்கு”

“தமிழ்! நேரமாச்சு... எதையும் மனசில் வைக்காம திடமா அதில் என்ன இருக்குன்னு பாரு... நாளைக்கு காலையில் உனக்கு போன் செய்கின்றேன்”

தேவகிக்கு பதில் சொல்ல கூட முடியாமல் விக்கித்துப் போய் இருந்தேன்.

“ஓகே தேவகி.. பை” என்று மட்டுமே தட்டச்ச முடிந்தது,

கண்களில் வெளியில் பெய்யத் தொடங்கி இருந்த மழை போல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. மெயில் இன்பாக்ஸில் தேவகி அனுப்பிய அட்டாச்மெண்ட் இருந்தது. இன்பாக்ஸை திறந்து பதிவிறக்க சொடுக்கினேன்... டெஸ்க்டாப்பில் பைல் வந்து விழுந்திருந்தது. அது உருவாக்கப்பட்ட தேதியைப் பார்த்த போது, ஒரு வருடமும், இரண்டு மாதங்களும் கடந்து போய் இருந்தன.

ஒரு நிமிடம் ஆயாசமாக இருந்தது... ஏனிந்த மறைமுக வாழ்க்கை வாழ வேண்டி வந்தது என எனக்கே புரியவில்லை. வேர்ட் பைலைத் திறக்க முயற்சி செய்தேன்...

முகப்பிலேயே அதற்கான பாஸ்வேர்ட் கேட்டு விண்டோ திறந்து இடைமறித்தது. சில வினாடிகள் யோசனைக்குப் பின் கை விரல்கள் தானாகவே தட்டச்ச துவங்கின.. murindhasiragukal.... எண்டரை தட்ட பைல் திறந்து கொள்ள சட்டென்று உடம்பு சிலிர்த்தது. கடிதத்தின் முகப்பில் அதே தேதி தட்டச்சியிருந்தாள்.

நானும் இப்படித்தான் கடிதம் எழுதினால் தேதி கண்டிப்பாக இடுவேன்.. பவித்ராவும் இடுவதால் தானோ?

அன்புள்ள தமிழ் பிரியனுக்கு,

நீ மிக்க நலத்துடன் இருப்பாய் என்று நம்புகிறேன்.. இந்த கடிதத்தை நீ வாசிக்கும் போது நான் உயிரோடு இருப்பேனா என தெரியவில்லை.

கல்லூரி நாட்களில் நீ என்னிடம் என்ன சொல்ல வேண்டுமென்று நினைத்தாயோ, அதையே நானும் உன்னிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். காலம் கடந்து விட்டது.

எனக்கு திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஒரு மிருகத்துடன் மூன்று ஆண்டுகள் நரக வாழ்க்கை வாழ்ந்தேன். ஸ்டவ் வெடித்ததாக வெளியில் நான் கூறினாலும், உண்மையில் தீக்குளிக்க வைக்கப்பட்டேன். ஆனாலும் விதி ஏனோ ஐந்து மாதமாக என்னை விடவில்லை. யாருக்கும் தொந்தரவாக இருக்க விரும்பவில்லை. உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கடினம் தெரியுமா? எனவே விதியை வெல்லப் போகின்றேன்.

இந்த கடிதத்தை கடவுச் சொல் இட்டு மூடி வைத்திருந்தேன். நீ இன்றும் என் நினைவில் இருந்தால் மட்டுமே இதை திறந்து பார்த்திருக்க முடியும். எனது நம்பிக்கை வென்று விட்டது. நீ இதை படித்துக் கொண்டு இருக்கின்றாய்.

நான் உன்னிடம் சொல்ல முடியாமல் போனவைகளை என் நினைவிலேயே புதைத்துச் செல்கின்றேன். நீ இன்னும் திருமணம் முடிக்கவில்லையென்றால் விரைவில் திருமணம் முடித்துக் கொள்.

உன்னிடம் ஒரு கோரிக்கை மட்டும் வைக்க ஆசைப்படுகின்றேன்.

எனது ஒரு வயது மகள் தமிழ்ச்செல்வி எனது பெற்றோருடன் எங்கள் ஊரில் இருக்கிறாள். அவளை உன்னுடன் அழைத்துச் சென்று விடு. அவளை உன்னால் மட்டுமே சிறப்பாக வளர்க்க இயலும் என நம்புகிறேன்.

மரணத்திற்குப் பின் இரண்டு தமிழையும் ஒரே இடத்தில் பார்த்துக் கொண்டு இருக்க ஆசைப்படுகிறேன்.

எனது இந்த ஆசையையாவது நிறைவேற்றி வைப்பாயா?

அன்புடன் பவித்ரா

கடிதத்தை படித்து முடித்த போது கை,கால் எல்லாம் நடுங்கிக் கொண்டு இருந்தது. வெளியே பார்த்த போது , மழை விட்டு வானம் நிறம் மாறி இருந்தது. ஜன்னல் வழியே கீழ் வானத்தில் ஒரு நட்சத்திரம் மட்டும் என்னைப் பார்த்து பிரகாசமாக கண்சிமிட்டிக் கொண்டு இருந்தது. அறையின் விளக்கை உயிர்ப்பித்து லெட்டர் பேடை எடுத்து எழுதத் துவங்கினேன்.

அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு,

மகன் தமிழ் பிரியன் எழுதிக் கொள்வது,

நான் நலமாக இருக்கிறேன். அதுபோல் அங்கு அனைவரின் நலமறிய ஆவல். உங்களது கடிதம், பார்த்து வைத்துள்ள பெண்களின் புகைப்படங்கள் கிடைத்தன.

உங்களிடம் வெகுநாட்களாக ஒரு உண்மையை மறைத்து விட்டேன். எனக்கு மும்பையிலேயே திருமணமாகி விட்டது. இரண்டு வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். என் மனைவி சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து விட்டாள். என் மகளுக்காக வேறு திருமணம் செய்ய எண்ணியுள்ளேன்.

நீங்கள் பார்த்த பெண்களின் வீட்டில் இதைக் கூறுங்கள். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்திலேயே திருமணம் முடிக்க எண்ணியுள்ளேன். விரைவில் உங்களது பேத்தி தமிழ்ச் செல்வியுடன் ஊருக்கு வருவேன்.

அப்பா, அம்மா உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளவும்.

அன்புடன் மகன்

தமிழ் பிரியன்


யூத் ஃபுல் விகடனில் வந்த பதிவு - மீள் பதிவாக இடப்படுகின்றது. பதிவு எழுத மேட்டர் கிடைக்கலைங்க மக்களே.. அதான் இந்த கொடுமை

Thursday, November 27, 2008

திருத்திய காதல் - (Caption - காதலின் கதை அல்ல... காதலர்களின் கதை)

“வசு, உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைம்மா... இந்த இரண்டு வருடமும் என் மாமியாரை உன்னோட அம்மா மாதிரி பார்த்துக்கிட்ட.... இப்ப நீ இங்க இருந்து போறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்மா”

“ஆன்ட்டி, நான் உங்க மாமியாரை பார்த்துக் கொள்ள வந்தேன். உங்க குடும்பத்துல ஒருத்தியாவே மாறிட்டேன். எதிர்பாராதவிதமா அவங்களும் இறந்ததால் நானும் கிளம்ப வேண்டி வந்துடுச்சு.. என்ன செய்ய கால ஓட்டத்தில் நாமளும் பயனிக்க வேண்டி இருக்கே... பாருங்க இந்த இரண்டு வருடத்தில் எனக்குள் தான் எவ்வளவு மாற்றங்கள்”

“ஆமாம் வசு... சரி நல்லபடியா ஊருக்கு போ.. போனதும் போன் செய்... அடிக்கடி வந்து போய் இருந்துக்க.”

“சரிங்க ஆன்ட்டி நான் கிளம்புறேன். உடம்பைப் பார்த்துக்குங்க”

வீட்டை விட்டுக் கிளம்பும் வசுவையை பார்த்துக் கொண்டு இருந்து மீனாட்சிக்கு கண்களில் கண்ணீர் வர எத்தனித்திருந்தது. முன்னே சென்று கொண்டு இருந்த வசுமதிக்கு கன்னங்களின் வழியே ஓடிக் கொண்டு இருந்தது.

--------------------------------------------------

“அம்மா! நீ என்ன சொன்னாலும் கேக்க முடியாதும்மா... எனக்கு இப்ப கல்யாணம் தேவையில்லை... நான் எப்ப கல்யாணம் பண்ணனும்னு நினைக்கிறேனோ அப்ப கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்றேன்.. இப்ப விடுங்கம்மா”

“வசு.. என்ன பேச்சுடி பேசுற.. உனக்கு எப்ப கல்யாணம் பண்ணி வைக்கனும்னு எங்களுக்குத் தெரியும். சும்மா கிட அடுத்த வாரம் திங்கட்கிழமை நல்ல நாள். அன்னைக்கு உன்னைப் பெண் பார்க்க வருகின்றார்கள்”

“அம்மா.. ப்ளீஸ்ம்மா... என்னை புரிஞ்சுக்கோயேன்.”

“என்னடி புரிஞ்சுக்க... முதல்ல கண் காணாத இடத்துக்கு வேலைக்கு போன.. அப்ப வீட்டில் கஷ்டம்.. அதனால் ஒன்னும் சொல்ல முடியலை. இப்பதான் பூர்வீகச் சொத்து எல்லாம் வந்து விட்டதே... வருமானதுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. இப்ப நல்ல வசதியான வீட்டில் இருக்கோம். தங்கச்சிக எல்லாம் நல்லா படிக்குதுக... இனி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டுத் தான் எனக்கு வேற வேலை”

சொல்லிவிட்டு சமையலறைக்குள் புகுந்த அம்மாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் வசு.
--------------------------------------------------
ஏனோ தூக்கம் வரவே மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்தது. அம்மாவின் பிடிவாதத்தை தடுக்க இயலாமல் திணற வேண்டி இருந்தது. சில நாட்களாக அருணின் நினைவு வந்து கொண்டு இருந்தது. ராஜன் அங்கிள் இறந்த பிறகு வீடும் மாற்றி சென்று விட்டார்களாம். எங்கே சென்றார்கள் என கேட்கவும் தயக்கமாக இருந்தது.

டைரியைப் புரட்டிய போது எழுதிய கவிதைகள் முத்து முத்தாக இருந்தன. அனைத்திலும் ஏனோ அருணின் வாசனை வீசிக் கொண்டிருந்தது.

பசுமரமாய் இருந்த

கவிதைகளெல்லாம்

கழுமரமாயின

இன்று

காதலின் பிரிவால்...


--------------------------------------------------
அதே நேரம்,

“அம்மா, எனக்கு கல்யாணமும் வேணாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்..கொஞ்சம் சும்மா இருக்கியா?”

“ஏண்டா சும்மா இருக்கனும்... எனக்கும் என் மகனுக்கு கல்யாணம் பண்ணிப் பார்க்கனுனு ஆசை இருக்காதா? பேரன், பேத்திகளை தூக்கிக் கொஞ்சனுன்னு ஆசை இருக்காதா? அதெல்லாம் எனக்குத் தெரியாது.. உனக்கு சீக்கிரமே கல்யாணம் நடத்தி வைத்து விட்டுத்தான் எனக்கு வேற வேலை”

--------------------------------------------------

“அக்கா! அக்கா! உன்னைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க....”

சொன்ன தங்கையை விரக்தியாய் பார்த்தாள் வசு. ஏற்கனவே அலங்காரம் முடிந்து உட்கார்ந்து இருந்தாள். ஏதோ சோளக் கொல்லை பொம்மை போல் தன்னை காட்சிப் பொருளாக ஆக்கப் போவது மட்டும் உணர முடிந்தது.

“ஏய்... மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க.. இன்னும் என்ன முழிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்க.... அந்த காப்பி தட்டை எடுத்துட்டுப் போய் எல்லாருக்கும் கொடு. அப்படியே மாப்பிள்ளையையும் ஒரு தடவை நல்லா பார்த்துக்க... அப்புறம் மாப்பிள்ளையை சரியா பார்க்கலைன்னு சொல்லக் கூடாது”

மகளுக்கு வரன் அமைந்து விடும் என மகிழ்வுடன் இருக்கும் தாயைப் பார்க்க வசுமதிக்கு ஏனோ பாவமாக இருந்தது. காப்பி தட்டை ஏந்திக் கொண்டு ஹாலுக்குள் நுழைந்த வசுவுக்கு அங்கு பேரதிர்ச்சி காத்து இருந்தது. அருணும், அருணின் அம்மா, தங்கையும் அங்கு அமர்ந்திருந்தனர்.

பின்னால் திரும்பிப் பார்க்க அம்மா புன்னகையுடன் நின்று கொண்டு இருந்தாள். அவளது கண்களில் “என் மகளுக்கு என்ன தேவை என்பது எனக்குத் தெரியாதா?” என்ற குறுகுறுப்பு ஓடிக் கொண்டு இருந்தது.

டிஸ்கி 1 : கதை புரியாதவர்கள் இங்கு சென்று முதல் 7 பகுதிகளையும் படித்து விட்டு வரலாம். சகோதரி ஸ்ரீமதியின் காதல் திருத்தத் தொடருக்கு எதிர் (அல்லது நேர்) பதிவு இது. காதல் திருத்தம்
சுலபமாக இங்கு சென்றும் படித்துக் கொள்ளலாம்.
http://docs.google.com/View?docID=df2ppmnt_16gkvxhdc2&revision=_latest&hgd=1

டிஸ்கி 2 : எப்ப எதை எழுதினாலும் அதில் சோகம் தான் வழிந்தோடும் என்பதை முறியடிக்க கொஞ்சம் சந்தோசமான முடிவு..:)) முதல்ல இரண்டு பேரையும் ஒரே ஆக்ஸிடெண்டில் கொல்லத் தான் பார்த்தேன்.... அப்புறமா முடிவை மாத்திட்டேன்.

Monday, November 10, 2008

எழுமையும் ஏமாப்புடைக்கும் குறளின் கதை


மாடியில் இருந்து வேகமாக இறங்கிக் கொண்டு இருந்தார் தொழிலதிபர் முகில்வேந்தன். நேர்த்தியான ஆடையுடன் மிடுக்காக இருந்தார். வயது 60 என்பதை சொன்னால் நம்ப இயலாத அளவு தோற்றம்.

தலைமுடி ஆங்காங்கே இப்போதுதான் வெள்ளை முடி எட்டிப் பார்க்க ஆரம்பித்திருக்கும் அளவு, இளமையாக இருந்தார். தமிழகத்தின் சிறந்த, பெரிய தொழில் நிறுவனங்களின் உரிமையாளர். மாடியில் இருந்து இறங்கி ஹாலில் வந்தவுடன் அங்கே அவரது காரியதரிசி தேன்மொழி நின்று கொண்டு இருந்தார்.

அந்த ஆலமரம் பரந்து விரிந்து இருந்தது. அதன் விழுதுகளில் முடிச்சுக்கள் போடப்பட்டு சிறுவர்களும், சிறுமிகளும் ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருந்தனர். வழிப்போக்கில் இருப்பதால் பிரயாணிகள் அதன் கீழே இளைப்பாறிக் கொண்டு இருந்தனர்.

பிரயாணிகளின் குழந்தைகளுக்காக ஆலமரத்தின் கிளைகளில் கட்டப்பட்ட தொட்டில்களில் குழந்தைகள் உறங்கிக் கொண்டு இருந்தன. சில அழும் குழந்தைகளை அவர்களது தாய்மார்கள் தாலாட்டி தூங்க வைத்துக் கொண்டு இருந்தனர்.

“காலை வணக்கம் சார்”

“தேன்மொழி! காலை வணக்கம்! சொல்லும்மா! இன்னைக்கு என்ன என்ன வேலை இருக்கும்மா?”

“காலை 10 மணிக்கு நமது அலுவலகத்தில் சீனாவில் இருந்து வந்து இருக்கும் பிரதிநிதிகளோட நம்ம பங்கு விற்பனை தொடர்பா பேசனும். 11 மணிக்கு இந்தியாவில் இருக்கும் நம் நிறுவன மேலாளர்களுடன் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு தருவதைப் பற்றி விவரிக்கனும். 12 மணிக்கு நம்ம ஆசிரமக் குழந்தைகளுடன் மதிய உணவு சாப்பிடுகிறீர்கள். 1 மணிக்கு..”

“போதும்மா! போதும்.. மிச்சத்தை அப்புறமா போற வழியில் பேசிக்கலாம்”

“நல்லது சார்! ஆனா இப்ப நாம டாக்டர் சாரங்கனைப் பார்க்கப் போறோம். அதுதான் ஒன்பதில் இருந்து பத்து மணி வரையிலான அட்டவணையில் இருக்கு”

“ஆமாம்மா! அது ரொம்ப முக்கியம். சரி நீ சாப்பிட்டியாம்மா?”

”வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுதான் வந்தேன் சார்”

“அப்ப சரி கிளம்பலாம்”

கடலின் அடி ஆழம். ... அழகான பாசி படர்ந்த பாறைகளின் அவன் அமர்ந்திருந்தான். அந்த ஆண் கடல் குதிரை கடல் நீரில் இங்கும் அங்கும் அலைந்தவனாக அமரவும் இயலாமல், மிதக்கவும் இயலாமல், முகத்தில் சொல்ல இயலாத தவிப்புகளால் தவிப்பது தெரிந்தது. பார்வையில் யாரையோ எதிர் பார்த்துக் கொண்டு இருப்பது தெரிகின்றது.


ஓ.. கண்களில் பிரகாசம்..... தனது இணையை கண்டு விட்ட மகிழ்ச்சி..


“ஏன் பெண்ணே! இவ்வளவு நேரம்?”


“கிளம்புவதில் நேரமாகி விட்டது. அதனால் தான்.. இப்போது உங்களுக்கு எப்படி உள்ளது?”


“சுமை அதிகமாக தெரிகின்றது பெண்ணே!. இன்று இரவு பிரசவம் நிகழும் என்று தெரிகின்றது. எப்படியாவது இன்றைய பொழுதைக் கழித்து விட வேண்டும்”


“எனக்கும் மிகவும் கடினமாக இருக்கிறது. என்னுள்ளும் முட்டை உருவாகி விட்டது. நாளை என் புது கணவனுக்கு அந்த முட்டையைத் தர ஆவலாக இருக்கின்றேன்”


“ஓ.. அப்படியா மிக்க மகிழ்ச்சி..”


“நாளைக் காலையும் என்னை சந்திக்க வா என் இனிய பெண் கடல் குதிரையே! அதற்குள் நம் குட்டிகளை ஈன்று இருப்பேன்”


“நல்லது சென்று வருகின்றேன். என் புது கணவர் தேடுவார். வருகிறேன்”


“வருகைக்கு மிக்க நன்றி”

“சொல்லுங்க டாக்டர்! இது முடியுமா? எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு! ”

டாக்டர் சாரங்கனின் முகத்தைப் பார்த்துக் கொண்டு கவலை தோய்ந்த முகத்துடன் தொழிலதிபர் முகில்வேந்தன்.

“நீங்க கவலைப்பட இதில் ஏதுமில்லை. நாங்க நல்லா பரிசோதனை செய்து வெற்றி கண்ட விடயம் தான் இது. ஒரு மணி நேரம் போதும். அனைத்து விபரங்களும் கிடைக்கும்”

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.. ஏதோ ஒரு ஆர்வம்.. அதான் இதெல்லாம்”

“தவறு ஏதுமில்லை”

ஒலிக்க ஆரம்பித்தது .. அதிகாரம் - அடக்கமுடைமை
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

“என்ன டாக்டர் இது.. கடிகாரம் திருக்குறள் சொல்லுது?”
“இது குறள் கடிகாரம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு குறள் சொல்லும். நமது வாழ்க்கையை செவ்வனே நடத்திச் செல்ல அவ்வப்போது குறளைக் கேட்டுக் கொண்டு இருப்பது உதவுமே”

“மிக நல்ல விடயம் டாக்டர்! எனது அலுவலக அறைக்கும் இது போல் ஒரு குறள் கடிகாரம் வாங்க வேண்டும்”

“சரி முகில் வேந்தன். இந்த படுக்கையில் படுத்துக் கொள்ளுங்கள். இனி நாம் வேலையைக் கவனிக்கலாம்”

“ராணி! ராணி! ஆபத்து! ஆபத்து”

கூக்குரலுடன் அந்த வேலையாள் அறுங்கோணங்களில் அமைந்து இருந்த அறைகளை வேகமாக கடந்து வந்து கொண்டிருந்தாள்.

“என்ன ஆகி விட்டது? ஏன் இவ்வளவு வேகமாக வருகிறாய்?” கேட்டது அந்த தேன் கூட்டை நிர்வகிக்கும் இராணித் தேனீ.

“ராணி! நம் கூட்டை கலைத்து, நாம் சேகரித்து வைத்து இருக்கும் தேனை எடுத்துச் செல்ல மனிதர்கள் நெருப்புடன் வந்து கொண்டு இருக்கிறார்கள். உடனடியாக அவர்களைத் தாக்கி நம் கூட்டை காக்க வேண்டும்”

“இல்லை பணிப்பெண்ணே! அவர்கள் மனிதர்கள் நெருப்பினால் நம்மைக் கொல்லக் கூட தயங்க மாட்டார்கள். நாம் சேமித்து வைத்த தேன் தான் அவர்களின் உணவு. இந்த ஆண்டு இங்கு மழை சரிவர பெய்யவில்லை. எனவே விளைச்சலும் குறைவு. அதனால் தான் நமக்கே உண்ண மகரந்தம் கிடைக்கவில்லை. மலைகளில் சென்று உண்டு வந்து, அதன் எச்சத்தை சேமித்து வைத்துள்ளோம். அவர்கள் நெருக்கி வந்தால் நாம் அனைவரும் இங்கிருந்து சென்று விடலாம். நமது மக்கள் அனைவரையும் விரைவில் ஒன்று திரட்டு. வேறு இடத்தில் சென்று வீடு கட்ட வேண்டும்”

“உத்தரவு ராணி! அப்படியே செய்யலாம்”


“ இப்போது நீங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றீர்கள்”

“ஆம்” ஈனஸ்வரத்தில் முகில் வேந்தன் பதிலளித்தார்.

“உங்கள் பெயர் என்னவென்பதை மறந்து விடுங்கள். உங்கள் கண்களை மூடி வைத்துள்ளீர்கள்... இனி உங்கள் மனதை திறக்கிறீர்கள்”

”சொல்லுங்கள் உங்களுக்கு என்னவெல்லாம் தெரிகின்றது?”

“நண்பா! என்ன நடந்தது ஏனிந்த சோகம்! நாம் தேவலோகத்தில் இருக்கின்றோம். நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?”

“எனக்கு பூலோகத்திற்கு செல்ல சாபமிடப்பட்டுள்ளது. அங்கு சென்று சில பிறவிகள் எடுக்க வேண்டுமாம்”

“அப்படி என்ன தவறு செய்தீர்கள்?”

“என்னை ஒரு மனிதனைக் கண்காணிக்கப் பணித்திருந்தார்கள். அவன் தவறு செய்ய நினைத்த போது அவனது பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை. அவன் தவறு செய்ய சென்ற போது பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை. அவன் தவறு செய்த போதும் பாவக்கணக்கில் ஏதும் எழுதவில்லை”

“ஏன்?”
“தவறை நினைத்து மனம் வருந்தி பாவமன்னிப்பு கேட்பான் என்று நினைத்தேன். அவனது பாவ மன்னிப்பு மூலம் அவனுக்கு நல்லதை நாட நினைத்தேன். ஆனால் அவன் கடைசி வரை தனது தவறை நினைத்து வருந்தாததால் ஒரு தீமையை மட்டும் எழுதினேன்”
“ரொம்ப நல்லவனாக இருந்திருக்கின்றாய். வேறு என்ன செய்தாய்?”
“அதே மனிதன் நல்லதை செய்ய நினைத்த உடன் அவனுக்கு ஒரு நன்மையை எழுதிக் கொண்டேன். நல்லது செய்ய கிளம்பிய போது இன்னொரு நன்மையை எழுதிக் கொண்டேன். நல்லது செய்ததும் மூன்றாவதாக மற்றோரு நன்மையையும் எழுதிக் கொண்டேன்.”

“நண்பா! இது நல்ல விடயம் தான்.... தேவ லோகத்தில் உனது இந்த சிறந்த குணத்தை பாராட்டி, மேலும் நல்ல அந்தஸ்துகளை வழங்கத்தான் உனக்கு பூலோகத்தில் சில காலம் இருக்க பணிக்கப்பட்டுள்ளது. இது சாபமல்ல. உனக்கு கிடைத்த பரிசு என்று கொள். பூலோகம் சென்று நல்ல முறையில் திரும்ப வாழ்த்துக்கள்!”

“நான் அந்தரத்தில் பறக்கின்றேன். தேவ லோகத்தில் என் நண்பனுடன் பேசிக் கொண்டு இருக்கின்றேன்”

“வேறு என்ன தெரிகின்றது?”

“இப்போது ஒரு ராணித் தேனீயாக தேன் கூட்டுக்குள் எனது பணிப்பெண்ணுடன் பேசிக் கொண்டு இருக்கின்றேன்”

“வேறு?”

“கடலின் அடி ஆழத்தில் இருக்கின்றேன்.. பாசிகளாகவும், பாறைகளாகவும் தெரிகின்றது. என்னை நோக்கி ஒரு கடல் குதிரை வருகின்றது. ஓ.. என் உடலும் அதனைப் பார்ததும் நிறம் மாறுகின்றது... நானும் ஒரு கடல் குதிரையாகத்தான் உள்ளேன்”

“ம்.. வேறு என்ன தெரிகின்றது?”

“இப்போது எனக்கு அருகில் ஒரு கன்றுக்குட்டி நின்று கொண்டு இருக்கின்றது”

“அம்மா! எனக்கு பசிக்குதும்மா”

“கொஞ்சம் பொறு கண்ணே! நம் முதலாளி இப்ப வந்திடுவாங்க.. அவங்க பால் எடுத்ததும் உனக்கு பால் தருகின்றேன்”

“பால் எனக்காகத் தானே சுரக்கிறது? ஏன் அவர்களுக்குத் தர வேண்டும்?”

“பால் உனக்கான தேவையை விட அதிகமாகவே சுரக்கிறது தான்... ஆனால் நமது முதலாளி நம்மை நன்றாகக் கவனித்துக் கொள்கின்றார். நமக்கு நல்ல உணவு தருகின்றார். குளிப்பாட்டுகின்றார். அவர்கள் வீட்டில் உன்னைப் போல் சிறு குழந்தைகளும் இருக்கின்றனர். அவர்களுக்கும் பால் தேவைப்படுகின்றது. எனவே தான் என்னிடம் கொஞ்சம் பாலை எடுத்து விட்டு, மீதியை உனக்குத் தருகின்றனர்.”

“தேன் மொழி கிளம்புவோமா?”

“ஓகே சார்! இப்போதே 10:10 ஆகி விட்டது. சீனப் பிரதிநிதிகள் நமக்காக அலுவலகத்தில் காத்துக் கொண்டு இருக்கின்றனராம்”

“சென்று விடலாம் தேன் மொழி. இப்போது ஒரு முக்கியமான மருத்துவ பரிசோதனை செய்து விட்டு வருகின்றேன். அதை உன்னிடம் சொல்ல ஆசைப்படுகின்றேனம்மா”

“விருப்பமிருந்தால் சொல்லுங்கள் சார்”

“முற்பிறவிகளில் நான் யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். டாக்டர் சாரங்கன் இரகசியமாக அதைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்து வந்தார். இன்று என்னை ஆழ் உறக்கத்திற்கு உட்படுத்தி என் முற்பிறவிகளைக் கண்டுபிடித்தார். நான் முன்பு ஒரு ஆலமரமாக, ஒரு தேவலோக மனிதனாக, ஒரு கடல் குதிரையாக, ஒரு பசுவாக, ஒரு ராணித் தேனீயாக பிறந்து இருக்கின்றேன்”

“சோதனைகள் முடிந்து பேசிக் கொண்டு இருக்கும் போது அங்குள்ள குறள் கடிகாரம் ஒலித்து, ஒரு குறளைச் சொன்னது... ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து ... டாக்டர் சாரங்கன் கூறினார்... “இந்த குறளுக்கு ஏற்றவராக ஏதோ ஒரு பிறவியில் இருந்துள்ளீர்கள். அதனால் தான் உங்களுடைய அனைத்து பிறவிகளிலும் சிறப்பான தூய வாழ்க்கை வாழ்ந்துள்ளீர்கள்” என்று”

“உண்மை தான் சார்! உங்களுடைய அடக்கமுடைமையே உங்களுக்கு இந்த பிறவியில் பல சிறப்புகளையும், மதிப்புகளையும் அளித்துள்ளது. ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவர்க்கு எழுமைக்கும் ஏமாப்புடைத்து என்ற குறளுக்கு ஏற்ப உங்களது வாழ்வை சிறந்த கல்வியைக் கொண்டு நிறைத்து இருப்பதால், உங்களது மற்ற பிறவிகளிலும் அதே சிறப்போடும், அடக்கத்தோடும் தான் இருந்து இருப்பீர்கள்!”

Friday, October 31, 2008

சிறுகதை - ஆளில்லாத தீவினிலே..... இறுதிப்பகுதி!

முதல் பகுதி
இரண்டாம் பகுதி

வீடியோ கான்பரன்ஸில் இந்தியாவில் இருக்கும் அனைத்து மேலதிகாரிகளுக்கும் முன் அமர்ந்து இருந்தேன். என் அருகில் கேப்டன் சான்சஸ் இருந்தார். சான்சஸின் முகம் வியர்வையில் குளித்து இருந்தாலும், அவருக்குள் இருக்கும் பதற்றத்தை அவரால் தவிர்க்க இயலாதது தெரிந்தது. அதிகாரிகள் கேள்விகளால் துளைத்துக் கொண்டு இருந்தனர்.

“தமிழ்! நீங்க சொல்வது உண்மையாயா?”

“கண்டிப்பாக... அந்த பெண்ணைப் பார்த்ததும், அவளை துப்பாக்கி முனையில் நிறுத்தினேன். அவளுக்கு துப்பாக்கியைப் பற்றி தெரியவில்லை. துப்பாக்கியைக் கண்டு கொள்ளாமலே இருந்தாள். அவளை மிரட்டும் தொனியில் பேசியதும் பயந்து போனாள். அவளது மொழியும் எங்களது தமிழ் மொழியும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருந்தது. அதனால் அவள் என்னுடன் பேசத் தொடங்கினாள்”

“நீங்கள் சொல்வது எனக்கு ஆச்சர்யத்தையே அதிகமாக்குகிறது தமிழ்! மேல சொல்லுங்க”

“யார் அவள் என்று விசாரித்ததில் அவள் அந்த தீவிலேயே அவர்களது குழுவுடன் வசிப்பதாகக் கூறினாள். அவர்களின் வீடுகள் மலைகளைக் குடைந்து படைக்கப்பட்டிருப்பதாகவும், அதிலிருந்து யாரும் வெளியே வரக் கூடாது எனவும் கூறினாள். மேலும் மலைக்குள் சூரிய ஒளி வரும் அமைப்பு உள்ளதாகவும், தண்ணீர் அருவிகளும் அவர்களது இருப்பிடத்திற்கு அருகில் இருப்பதாகவும் கூறினாள்.”

“உணவுப் பொருட்களை விளைவிக்கும் பள்ளத்தாக்குகளுக்கு மட்டும் இரகசிய வழி வழியாக சென்று திரும்புவது வழக்கமாம். அந்த பெண்ணுக்கு மல்லிகைப் பூவின் மீது உள்ள ஆசையின் காரணமாக அவர்களது வீட்டை விட்டு அவளுக்கு மட்டுமே தெரிந்த பாறை இடுக்கு வழியே வெளியே வந்திருக்கிறாள்”

“தமிழ்! நீங்கள் சொல்வதை எல்லாம் நம்பவே முடியவில்லை. ஏதோ பழைய காலங்களில் சொல்லப்படும் கதை போல் உள்ளது”

“இல்லை கேப்டன்! நான் சொல்வதெல்லாம் உண்மை தான்.. அவள் சொல்வதில் நம்பிக்கை இல்லாமல் அவளுடன் அவள் இருக்கும் இடத்திற்கு சென்றேன். பாறைக்குப் பின் இருந்த ஒரு சிறு வழியாக என்னை அழைத்துச் சென்றாள். என்ன ஆச்சர்யம். ஒரு அழகான சிறு கிராமம் போல் இருந்தது. வீடுகள் அனைத்தும் அழகான மரங்களால் ஆன கதவுகளாலும் செய்யப்பட்டிருக்கிறது. நான் அந்த வீடுகளை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அவள் ஓடிப் போய் விட்டாள். நான் அதிகப்படியான அதிர்ச்சியில் தட்டுத்தடுமாறி ஹெலிகாப்டரை அடைந்தேன்.”

“நீங்க சொல்வது உண்மை என்றாலும் கடந்த நான்கு நாட்களாக உங்களின் வழிகாட்டுதலில் அந்த தீவையே சல்லடை போட்டு தேடியாகி விட்டது. அல்ட்ரா சோனிக் முறையிலும் தேடி விட்டோம். நீங்கள் குறிப்பிடுவது போல் யாருமே அங்கு இல்லை. நீங்கள் சென்ற பாறை வழிப்பாதையையும் உங்களால் கண்டுபிடிக்க இயலவில்லை. இனியும் நீங்கள் சொல்லும் கதைகளை நம்ப இயலாது தமிழ்!”

“இது கதை இல்லை சார், இன்னும் சில நாட்கள் நம் சோதனையை தள்ளி வைத்து தேடலாம். நான் சென்ற நேரம் இருட்டி இருந்ததால் என்னால் அந்த பாதையைக் கண்டுபிடிக்க இயலவில்லை.”

“மன்னிக்கவும் தமிழ்! நமது இந்த ஆராய்ச்சியின் முடிவுக்காக உலகமே நம்மை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்கின்றது. உங்களுடைய இந்த பேத்தல்களுக்காக எல்லாம் நம் சோதனையை தள்ளி வைக்க இயலாது. உங்களை இந்த சோதனை முடியும் வரை தீவுக்கு செல்ல தடை விதிக்கின்றோம். ஆனாலும் கப்பலில் இருந்து ஆராய்ச்சி பணிக்கு உதவுங்கள். Best of Luck!"

தற்கு அடுத்த வந்த சில நாட்கள் என் வாழ்வில் மறக்க இயலாதவை. இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு அந்த தீவையே பார்த்துக் கொண்டிருந்தேன். ஏனோ தூங்க முயற்சி செய்தால் அந்த அப்பாவிப் பெண்ணின் முகமே நினைவுக்கு வந்தது.

இன்று ஆய்வின் கடைசி நாள். மதியம் 1 மணிக்கு உலையை வெடிக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வெடித்தும் இருந்தது. பாதுகாப்பிற்காக கப்பல் தீவில் இருந்து பல நாட்டிக்கல் தூரத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. சில மணிகளில் இந்தியாவில் இருக்கும் ஆராய்ச்சி நிலையங்களின் கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து, எந்த கதிர்வீச்சும் இல்லை என அறிவிக்கப்பட்டது. எனவே தீவை நோக்கி மேல் தகவல்களுக்காக கப்பல் சென்று கொண்டிருக்கின்றது. தீவு இருந்த இடமே தெரியாமல் இருந்தது.

கப்பல் முன்னேறிக் கொண்டு இருந்தது. கப்பலின் முகப்பில் நின்று கொண்டு இருந்தேன். என் அருகில் சான்சஸூல் எதையோ பறிகொடுத்தவர் போல் தீவு இருந்த இடத்தை நோக்கி வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தார். கடலில் ஏதோ மிதந்து வருவது போல் இருந்தது. அருகே வர வர அது என்னவென்று புரிந்தது...

“அது.. அதே தான்.. இது அந்த பெண் வைத்திருந்த பூக்கூடை”
எனது கத்தலில் அனைவரும் கப்பலின் முகப்பிற்கு வந்திருந்தனர். பூக்கடையை வீரர்கள் கப்பலுக்கு எடுத்து இருந்தனர். கப்பல் நகர நகர மரக்கதவுகளும், மரச் சாமான்களும் மிதந்து வந்து கொண்டு இருந்தன. இன்னும் தீவை நெருங்கும் போது மரங்களில் சிக்கிய வண்ணம் பிணங்கள் தெரிய ஆரம்பித்து இருந்தது. ஆதிவாசிகள் மாதிரியான ஆடைகளுடன்...

ஆளில்லாத தீவினிலே..... முழு நீள சிறுகதை - 2

ஆளில்லாத தீவினிலே..... முதல் பகுதி

காலை சூரியன் தனது செங்கிரண கைக்களை விரித்துக் கொண்டு வேகமாக உதித்துக் கொண்டு இருந்தான். கப்பலில் ஆட்கள் வேலைக்கு தயாராகிக் கொண்டு இருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. இரவில் கேட்ட சத்தங்களின் திகைப்பில் இருந்து மனம் இன்னும் மீண்டு இருக்கவில்லை.

மேலே வந்து பார்த்த போது தீவுக்கு செல்வதற்காக ஹெலிகாப்டர்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன. அதில் தேவையான தொழில் நுட்பக் கருவிகளும், உணவுப் பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இன்றைய எனது பணி கொஞ்சம் கடினமானதாக இருக்கும் என்றே தோன்றியது. எங்கள் குழுவில் முக்கிய குழு ஹெலிகாப்டர் வழியாக மலையின் உச்சியில் இருக்கும் முக்கிய ஆராய்ச்சி நிலையத்தை அடையும். அங்கிருக்கு ஆரம்பமாகும் ஆழ்துளையில் வெடிப்புப்பைத் தொடங்க வேலை நடக்கும். மற்ற சில குழுக்கள் தீவின் ஓரங்களில் உள்ள சிறு குன்றுகளில் ஏற்கனவே பொருத்தப்பட்ட டிரான்ஸ்மீட்டர்களை சரி பார்க்க வேண்டும்.

ஆழ்துளையில் வெடிப்பு நிகழும் போது தீவு முழுவதும் வெடித்துச் சிதறும் என்பதால் அதன் சக்திகளை அளவிட இந்த டிரான்ஸ்மீட்டர்கள் உதவும். இதை பல கிலோ மீட்டர் தூரத்தில் நிற்கப் போகும் எங்கள் கப்பல், தூத்துக்குடி, அந்தமான், விசாகபட்டினம் ஆகிய இடங்களில் இருக்கும் கட்டுப்பாடு அறைகள் கண்காணிக்கும்.

காலை மணி பத்தை நெருங்கிக் கொண்டு இருந்தது. எனக்கு தேவையான பொருட்களை முதுகில் சுமந்து கொண்டு தீவில் ஒரு புறத்தில் இறங்கி இருந்தேன். எங்களை இறக்கி விட்டு விட்டு ஹெலிகாப்டர் பராமரிப்புப் பணிக்காக கப்பலுக்கு வேகமாக நகர்ந்திருந்தது. என்னுடன் வந்திருந்தவர்கள் அனைவரும் தத்தமது உடைமைகளை எடுத்துக் கொண்டு தயாராக இருந்தனர். பல தடவை வந்த பழக்கமாக இடம் என்றாலும், இரண்டு நாட்களாக கண்ட கனவுகளாலும், அமானுஷ்யமான உணர்வுகளாலும் ஏனோ ஒரு கலவரமான உணர்வில் இருந்தேன்.

மா
லை ஆகிக் கொண்டு இருந்தது. வழி மாறிச் சென்றுவிட்டதால் உடன் வந்தவர்களை தவற விட்டு இருந்தேன். வழியில் இருந்த பல இடர்களால் நேரம் தாமதமாகி இருந்தது. ஒரு பாம்பு வேறு இடைமறித்து, அதை சுட்டுத் தள்ள வேண்டி இருந்தது. வேகமாக இருள் சூழ ஆரம்பித்துக் கொண்டு இருந்தது. ஹெலிகாப்டர் திரும்பி வந்து காத்துக் கொண்டிருக்கும். கையில் இருக்கும் வாக்கி - டாக்கியும் சார்ஜ் இல்லாமல் செத்துப் போய் இருந்தது.

திடீரென்று அந்த ஏகாந்தமான பாடல் பாடும் ஓசை கேட்க ஆரம்பித்து இருந்தது. அதோடு சுகந்தமாக மல்லிகைப் பூவின் வாசமும் வர ஆரம்பித்து இருந்தது. நேற்று கனவில் கேட்டது வாத்தியங்களின் ஒலியாக மட்டுமே இருந்தது. இன்று கேட்பது ஒரு பெண்ணின் குரல். இனிமையான குரல்... இதுவரை கேட்டிராத முறையில் கொஞ்சம் கடினமாக தமிழில் பாடிக் கொண்டு இருந்தாள். குரல் வந்த திசையை நோக்கி கால்கள் நகரத் துவங்கின.... சிறு குன்றுகளுக்கு இடையே இருந்த குறுகிய பள்ளத்தாக்கில் இருந்து தான் அந்த குரல் வந்து கொண்டு இருந்தது.

அங்கே மல்லிகைப் பூக்களின் செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டு இருந்தன. அதில் இருந்து ஒரு பெண் பூக்களைப் பறித்து தன்னிடம் இருக்கும் பூக்கூடையில் போட்டுக் கொண்டு இருந்தாள். வித்தியாசமான பூக்களாலும், பருத்தியாலும் ஆனது போன்ற ஆடை அணிந்து இருந்தது ஒரு பழைய நாகரீக பெண் போல தெரிந்தாள்.

மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டு அந்த பெண்ணுக்கு அருகில் செல்லத் துவங்கினேன். அழகான குரலில் பாடிக் கொண்டே இருந்தாள். மெதுவாக இடுப்பில் இருந்த பிஸ்டலைக் கையில் பிடித்தவனாக அவளுக்கு அருகில் நெருங்கி இருந்தேன்.

“அங்கேயே நில்! யார் நீ”

கையில் இருந்த பூக்கூடையை கீழே தவற விட்டவளாக அதிர்ந்து போய் திரும்பினாள். என்னைக் கண்டதும், ஏதோ இதுவரைப் பார்க்காத ஒன்றைப் பார்தது போல் விதிர்விதிர்த்து நின்று கொண்டிருந்தாள்....

இறுதிப் பகுதி

ஆளில்லாத தீவினிலே..... முழு நீள சிறுகதை - 1

எனக்கு நேரே நிற்க வைக்கப்பட்டிருந்த அந்த பத்துப் பேரையும் பார்க்கும் போது பாவமாக இருந்தது. காட்டுவாசிகள் போல் உடை அணிந்து இருந்தனர். அதில் நடுமையமாக நின்றிருந்த அந்த அழகான பெண்ணைப் பார்க்கும் போது ஏனோ மனம் அவள் பேரில் மயங்குவது போல் இருந்தது. என் கையில் இருந்த வாள் சூரிய வெளிச்சத்தில் பட்டு மின்னிக் கொண்டு இருந்தது. எனக்கு அருகில் இருந்த கேப்டன் கையைக் காட்ட என் வாள் மின்னல் வேகத்தில் சுழன்றது. சில வினாடிகளில் அங்கிருந்த பத்து பேரின் தலையும் வெட்டப்பட்டு கீழே கிடந்தது. எனது முகம், ஆடை முழுவதும் சூடான இரத்தம் பட்டு ஒழுகிக் கொண்டு இருந்தது. அந்த பெண்ணின் தலை தரையில் உருண்டு காலுக்கு கீழ் வரும் போது கலகலவென சிரிக்க ஆரம்பித்து இருந்தது.

சட்டென்று கண்ணைத் திறந்து பார்த்த போது படுக்கையில் இருந்தேன்... ஓ..கனவு.. உடல் முழுவதும் வியர்த்து ஒழுகிக் கொண்டு இருந்தது. என்ன குரூரமான கனவு... அந்த காட்டுவாசிகளை என் கையால் வெட்டிக் கொள்வது எவ்வளவு கொடுரம்...

அறையை விட்டு வெளியே வந்த போது, கப்பல் மிதமான வேகத்துடன் சென்று கொண்டு இருந்தது. மெதுவாக கப்பலின் மேல் தளத்திற்கு வந்த போது அங்கே குழுத் தலைவர் சான்சஸ் நின்று கொண்டு இருந்தார்... ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினார்

“ஹாய்! தமிழ்! என்ன இப்படி வேர்த்து விறுவிறுத்துப்போய் வந்து கொண்டு இருக்கிறாய்?”
“ஒரு கெட்ட கனவு சீப்... அதான்”
“ஓ... நான் கூட முதல் தடவை நீ கப்பலில் வந்த போது, வாந்தி எடுத்து அமர்க்களம் செய்தது நினைவுக்கு வந்து விட்டது”
கலகலவென சிரிக்கத் தொடங்கி இருந்தார். நம் நிலைமை நமக்கு தானே புரியும்? எதுவும் பேசாமல் கப்பலின் முனைக்கு சென்று நின்று கொண்டேன். தூரத்தில் வங்காள விரிகுடாவின் எல்லை முடிவே இல்லாமல் விரிந்து கொண்டே சென்று கொண்டிருந்தது. இடையிடையே சிறு சிறு தீவுக்கூட்டங்கள் தெரிந்தன.

என்னை உங்களுக்கு அறிமுகம் செய்யவில்லையே? நான் தமிழ் பிரியன்... இந்தியாவின் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பணியாளர்களில் ஒருவன். பொறியியல் முதுகலைப் பட்டம் படித்து, பின்னர் சில ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு விட்டு இந்த பணியில் இணைந்துள்ளேன். இப்போது நாங்கள் கப்பலில் ஒரு தீவுக்கு சென்று கொண்டு இருக்கின்றோம்.

இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையம் உலகில் உள்ள அவசரத் தேவையான மின்சாரத்தை புதிய முறையில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. அதில் ஒரு முக்கியமானவர்களில் நானும் ஒருவன். புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட Indionium (இண்டியோனியம்) என்ற தனிமத்தை செறிவூட்டி சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றலைக் கொண்டு அதிக அளவில் மின்சாரம் கண்டுபிடிக்க இயலும் என்று இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். யூரேனியம் மற்றும் ப்ளூட்டோனியம் போன்றவற்றை செறிவூட்டி, மின்சாரம் எடுக்கும் முறை மனித குலத்தின் அழிவுக்கு பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால் அதை இந்தியா முற்றிலுமாக கைவிட்டு இதில் இறங்கி உள்ளது.

இண்டியோனியத்தை சிதைப்பதன் மூலம் உருவாகும் ஆற்றல் சில மணி நேரங்களில் குன்றி விடும். இதனால் கதிர்வீச்சுக்கள் ஏதும் இருக்காது என்றும் கண்டுபிடித்துள்ளோம். ஓரு தீவை இண்டியோனியம் குண்டு வைத்து தகர்க்கப் போய்க் கொண்டு இருக்கிறோம்.

வங்காள விரிகுடாக் கடலில் அந்தமான் தீவுகளுக்குக் கீழே கேர்க்கஸ் என்ற தீவுக்கு செல்கிறோம். அந்த தீவைத்தான் குண்டு வைத்து தகர்க்கப் போகின்றோம். சுமார் 6 கி.மீ நீளமும், 5 கி.மீ அகலமும் உள்ள அந்த தீவு முழுவதும் கடுமையான பாறைகளைக் கொண்ட மலையினால் ஆனது. சுமார் 1000 மீட்டர் உயரம் உள்ள அந்த மலையின் மேல் இருந்து சுமார் 2000 மீட்டர் ஆழத்திற்க்கு துளை உருவாக்கப் பட்டுள்ளது. இண்டோனியம் செறிவூட்டப்படும் போது அந்த தீவு முற்றிலுமாக வெடித்து சிதறி விடும். அதன் மூலம்உலை வெடித்தால் இருக்கும் சேதாரங்களையும், கதிர்வீச்சின் வீரியத்தையும் கணக்கிட உத்தேசித்துள்ளோம்.

கப்பல் கோக்கஸ் தீவுக்கு அருகில் இருப்பது தெரிந்தது... மேற்கு திசையில் கதிரவன் தனது கைகளை சுருக்கிக் கொண்டு மறைந்து கொண்டு இருந்தான். கப்பல்தீவில் இருக்கும் அந்த நெடியாக மலை சோகமாக பார்ப்பது போல் இருந்தது. நங்கூரம் பாய்ச்சி நீர்மட்டம் அதிகமாக இருக்கும் இடத்திலேயே கப்பல் நிறுத்தப்பட்டது.

இரவு மணி 11.00 .... கடலின் மேல் தளத்தில் நின்று, கடலை ரசிப்பது ஒரு ஆனந்தமான அனுபவம். கடல் அலைகள் தீவின் பாறைகளில் மோதும் ஓசை காதுகளில் வந்து அறைந்து கொண்டு இருந்தது. அப்போது தீவில் இருந்து அந்த மெல்லிய ஒலி கிளம்பத் தொடங்கி இருந்தது..... டம்டம் என்று ஆரம்பித்த ஓசை சிறிது சிறிதாக அதிகமாகி திடீரென்று நின்று போய் இருந்தது

சான்ஸன் கப்பல் மேல் தளத்திற்கு வருவது தெரிந்தது.

“ஹாய் தமிழ்! கடல் என்ன சொல்லது? ஏதாவது கவிதை சொல்லுங்களேன்”
“இல்லை சீப்! இந்த தீவில் மக்கள் வசிக்கிறார்கள் போல தெரிகிறது.. சிறிது முன் அங்கே ஏதோ இசைக்கும் சத்தம் கேட்டது”
“ஹா! ஹா! ஹா! அதெல்லாம் அலைகளின் ஓசையாக இருக்கும்... இங்கு நான் பல மாதமாக ஆராய்ச்சி செய்து இருக்கிறேன்.இந்த தீவில் சில சிறு விலங்குகளைத் தவிர வேறு யாருமே இல்லை. இன்ப்ரா ரெட் கதிர்களை அனைத்து பகுதியிலும் செலுத்தி உறுதி செய்து விட்டோம். மனிதர்கள் யாருமில்லை.. மலையைக் குடைந்து நமது உலையை ஏற்படுத்தி விட்டோம். அனைத்து உபகரணங்களையும் பொருத்தியாகி விட்டது. அப்படி யாராவது இருந்தால் இதற்குள் தெரிந்திருக்கும்”
“இல்லை சீப்! என் மனதுக்கு உறுத்தலாக உள்ளது... இங்கு யாரோ வாழ்கிறார்கள்”
“தமிழ்! உனக்கு இதே வேலையாய் போய் வீட்டது. இரவு நன்றாக தூங்கி எழு! எல்லாம் சரியாகி விடும். காலையில் சீக்கிரம் தீவுக்கு செல்ல வேண்டும். பை.. குட் நைட்”

சான்சஸ் கீழே சென்று விட மீண்டும் தீவில் இருந்து அந்த இசை கேட்க ஆரம்பித்து இருந்தது....

இரண்டாம் பகுதி பார்க்க

இறுதிப் பகுதியைப் பார்க்க

Sunday, October 19, 2008

oru pathivarukku varan paarkkum padalam மற்றும் கணிணி முகப்பு தொடர் விளையாட்டு



நண்பர் தமிழன் வித்தியாசமான டேக்குக்கு அழைப்பு விடுத்து இருந்தார். நமது கணிணியில் இருக்கும் டெஸ்க் டாப் ஸ்கீரினை பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து காட்டனுமாம். என்னய்யா இது கொடுமயா இருக்கு.... சரி நானும் போட்டுட்டேன். இதுதான் என்னோட ஸ்கிரீன். எந்த விதமான போர்ஜரியும் பண்ணாம அப்படியே எடுத்துட்டேன்.

பொதுவாக எந்த உருவப் படங்களையும் ஸ்கிரீனில் வைக்க மாட்டேன். வீட்டில் கூட எந்த புகைப்படமும் சுவரில் இருக்காது.

ஸ்கிரீனில் காலியா தான் இருக்கனும். அப்ப தான் டெஸ்க் டாப்பில் இருப்பதை சுலபமாக தேட முடியும்

ஒரு பேச்சலர் ரூமுக்கு இருக்கும் அடையாளங்கள் எல்லாம் என் ஸ்கிரினுக்கும் இருக்கும். தேவையில்லாத எல்லாமும் கிடைக்கும். அப்பப்ப சுத்தப்படுத்துவேன். அடுத்த வாரமே திரும்ப குப்பை குடவுனா மாறி விடும். இப்ப குப்பை கொடவுனா இன்னும் மாறதப்ப எடுத்தது. இதுவே இப்படின்னா? குப்பையா இருக்கும் போது??? ;))

அடுத்து நான் அழைப்பு விடுப்பது
1. சிங்கை அண்ணன் நிஜமா நல்லவன்
2. பாசக்கார தங்கச்சி ஸ்ரீமதி
3. பிரியமுள்ள தம்பி சுடர்
4. அன்புள்ள தங்கை மது... (மச்சானோட டெஸ்க்டாப் ஸ்கிரீனை சுட்டு போட்டா கூட ஒத்துக்குவோம்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஒரு பதிவருக்கு வரன் தேடும் படலம்

காட்சி 1

“சுந்தர்! இது அதாண்டா அந்த பொண்ணோட போட்டோ! நல்ல படிப்பு படிச்சு இருக்கா! அழகாவும் இருக்கா! கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை. கை நிறைய சம்பளம் வேற வாங்கறாளாம்”

“போட்டோவைப் பார்த்து எப்படிம்மா தீர்மானிக்க சொல்றீங்க... இன்றைய மாடர்ன் உலகத்துக்கு தகுந்த பெண்ணா இருக்கனும்மா”

“என்னமோப்பா எனக்கு புரியலை. நல்ல குடும்பமா இருக்கு. நம்ம ஜாதிக்காரங்க.. தூரத்து முறையுல் உறவு கூட வருது. அவங்க குல தெய்வமும், நம்ம குல தெய்வமும் ஒன்னு தான்”

“என்னம்மா இன்னும் பட்டிக்காடா இருக்கீங்க! இந்த நவீன உலகத்துல உலக விஷயங்கள் நிறைய தெரிஞ்சு வச்சுருக்குற பெண்ணான்னு பாருங்கம்மா”

“உன்னை மாதிரி கம்ப்யூட்டரில் வேலை செய்யுற பொண்தானே? உனக்கு பிடிச்சா மாதிரி தான் இருக்கும். அண்ணா நகரில் பெரிய வீடு இருக்கு. இன்னும் இரண்டு விடு வேற இருக்காம். வாடகைக்கு விட்டு இருக்காங்களாம். கார் கூட இருக்குது. நல்ல இடமா தெரியுதுப்பா”

“அப்படியாம்மா... எனக்கும் நீங்க சொல்றதைப் பார்த்தா நல்ல இடமா இருக்கும் போல இருக்கு.”

“ஆமா சுந்தர். போட்டோவோட கம்ப்யூட்டர் அட்ரஸ் கூட கொடுத்து இருக்காங்க நீ வேணா பேசிப்ப்பாத்துக்க. அப்புறமா பொண்ணு பார்க்க போகலாம்”

“ம்ம்ம்.. இது அந்த பெண்ணோட இ மெயில் அட்ரஸ்ம்மா. பேசிப் பார்க்கிறேன்ம்மா”

காட்சி 2

sunder : வணக்கம்
Sent at 12:05 PM on Sunday
suha : hai. Who r u?
sunder: என் பெயர் சுந்தர். வரன் பார்க்கும் விஷயமா போட்டோவும், இ மெயிலும் உங்க அப்பா மூலமா கொடுத்தாங்க
Sent at 12:10 PM on Sunday
suha : O... good
sunder: m நீங்க எங்க வேலை பார்க்குறிங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?
Sent at 12:14 PM on Sunday
suha: O..sure. TCS il programmer. irandu varushma irukken. neenga?
sunder: நான் விப்ரோவில் Project Manager! ஐந்து வருடமாச்சு
suha: O.. nice job
sunder:அதென்ன அமெரிக்க தேர்தல் பற்றி ஏதோ எழுதி இருக்கீங்க?
Sent at 12:19 PM on Sunday
suha: I am a blogger. ennoda blog la american electonil Mccainukku atharavaa pathivu pottu irukken
Sunder: ஓ.. அரசியலில் எல்லாம் ஆர்வம் இருக்கா?
suha: brb
Sunder: Ok
Sent at 12:20 PM on Sunday

suha: m... sollunga... friends kooppittanga.. canteen poitten
Sunder: பரவாயில்லைங்க... அரசியல பதிவெல்லாம் போட்டு இருக்கீங்களே? அவ்வளவு ஆர்வமா?
Sent at 12:28 PM on Sunday
suha: Yes, aamaa, arasiyal, matham, samuga piracinikal patri yellaam niraya pathivu ezuthuven.
Sunder: தமிழ் ப்ளாக்ன்னா ரொம்ப பிரச்சினை எல்லாம் வருமே?
Suha: atukkaga namma karuththai sollama irukka mudiyumaa? pirachinakalai kandu odi poka koodathu. ethirthu poraadanum. aththaan innaikku namma samkukaththukku thevaiyaana onnu
Sunder: நல்லா பேசுறிங்க... சரி அப்புறமா பார்க்கலாம். கொஞ்சம் வேலை இருக்கு. ப்ளீஸ் தப்பா நினைக்காதீங்க... வணக்கம்.
suha: No problem. Bye.

காட்சி 3


“சுந்தர் என்னடா இப்படி சொல்ற? நல்ல குடும்பமா இருக்குன்னு நான் சொன்னதுக்கு நீயும் அப்படித்தாம்மா தெரியுதுன்னு சொன்ன”

“இல்லம்மா.. இந்த பொண்ணு வேணாம்மா”

“என்னடா ஆச்சு உனக்கு?. அந்த பொண்ணை பார்க்கக் கூட போகலையே. அதுக்குள்ள வேண்டாம்ன்னு சொல்ற?”

“இல்லம்மா.. இந்த பெண் வேண்டாம்மா... வேற நல்ல பெண்ணா பார்க்கலாம். கொஞ்சமா படிச்சு, வேலைக்கு போகாம இருந்தாலும் பரவாயில்லைம்மா”

“என்னவோப்பா! இந்த காலத்து பசங்களை புரிஞ்சுக்கவே முடியலை. சரி புரோக்கர் வரட்டும். வேற இடம் பார்க்க சொல்லலாம்”

Friday, October 17, 2008

சில பினாத்தல்களும், குறள் கதை, மற்றும் தமிழ் பதிவர்களின் ஆர்வமும்

.
.
ஒரு வீட்டுல இரண்டு பூனைகள் இருந்தது. ஒன்னு நம்ம துளசி டீச்சரோட கோகி மாதிரி பெருசு. ஆனா கோகி மாதிரி நல்ல கதாநாயகன் இல்ல... கெட்ட் வில்லன். இன்னொரு பூனை குட்டிப் பூனை. பார்க்க அழகா இருக்கும்.

பெரிய பூனைக்கு குட்டி பூனையைப் பார்த்தாலே ஆகாது. எப்பப் பாத்தாலும் குட்டிப் பூனையை மிரட்டி, உருட்டிக் கிட்டே இருக்கும். திடீரென்று ஒருநாள் அதோட வில்லத்தனமான மூளை வேலை செய்தது. இந்த குட்டிப் பூனை இருந்தா தானே பிரச்சினை. அதையே இல்லாம ஆக்கிட்ட?

அவங்க வீட்டுக்கு பக்கத்துலயே ஒரு பெரிய மெயின் ரோடு போகுது. எப்பப்பார்த்தாலும் நிறைய கார்கள் சர், சர்ரென்று போய்க்கிட்டே இருக்கும். ஒருநாள் பெரிய பூனை, குட்டிக்கிட்ட போய் நைச்சியமா பேசுச்சு. ரெண்டு பேரும் மெயின் ரோட்டில் போய் வேகமா போற வண்டிகளை வேடிக்கை பார்க்கலாம்னு சொல்லிச்சு.

குட்டிப்பூனையும் அதோட கள்ளத்தனம் தெரியாம சரின்னு கூட போச்சு. வண்டிக வேக வேகமா வந்துகிட்டு இருக்கு. சட்டுன்னு குட்டிப்பூனையை தூக்குன பெரிய பூனை, வேகமாக வந்துக்கிட்டு இருந்த ஒரு காருக்கு முன்னாடி தூக்கி போட்ருச்சு... கிரீஈஈஈஈஈச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் ந்னு சத்தம்... அப்புறம் என்னாச்சு... அதை கடைசில் காட்றேன்.. அதுக்கு முன்னால என்னை கொஞ்சம் பினாத்த விடுங்க... ;)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அடுத்த இரண்டு ஆண்டுகள் இங்கு வேலையை தொடர்வதற்கான ஒப்பந்ததை புதுப்பிக்க சொல்லியாகி விட்டது. மொத்தமாக இந்தியா வரும் முயற்சி தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. அடையாள அட்டையை புதுப்பிப்பதற்காக உடல் பரிசோதனை முக்கியம். இரத்தப் பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே கட்டாயம்.

மருத்துவ பரிசோதனைக்காக சென்ற போது, இரத்தம் கொடுத்த பிறகு எக்ஸ்ரே எடுக்கும் இடத்திற்கு சென்ற போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அங்குள்ள ரேடியோகிராபர் ஒரு பெண். கண்களை மட்டும் தெரியும் வண்ணம் பர்தா அணிந்து இருந்தார். எனது கோப்பை அவரிடம் கொடுத்து விட்டு, எக்ஸ்ரே இயந்திரத்தின் முன், எக்ஸ்ரே எடுக்கும் முறைப்படி நின்று கொண்டேன். சில வினாடிகளில் எக்ஸ்ரே முடிந்தது.

எக்ஸ்ரே எடுத்த அந்த பெண் அரபியில் கூறினார் “எந்த சிரமமுல்லாமல் நான் எக்ஸ்ரே எடுப்பது இதுதான் முதல் முறை. நன்றி!”. அவருக்கு சிரிப்பை பதிலாக உதிர்த்து விட்டு திரும்பினேன். பாவம் இது போன்ற ரேடியாலஜி வேலை செய்பவர்கள்.

துபாயில் இருந்த போது ஷார்ஜா Preventive Medicine Dept.. ல் வேலை செய்தேன். அங்கு தான் ஷார்ஜா விசாவில் வருபவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உலகில் பேசப்படும் அனைத்து மொழிகளைச் சேர்ந்தவர்களும் வரக்கூடிய இடமாக இருக்கும். அங்குள்ள ரேடியாலஜி பகுதியில் ஒரு மராட்டி பெண் இருந்தார். (श्रध्दा - shradhdha - தமிழில் எழுத வரவில்லை). அங்கு மருத்துவ பரிசோதனைக்கு வருபவர்களை எக்ஸ்ரே இயந்திரத்தின் முன் நிறுத்தி கையை பின்னால் கட்ட மடக்கி, நெஞ்சை நிமிர்த்தி, மூச்சை இழுத்துப் பிடிக்கச் சொல்வதற்குள் நொந்து நூலாகி விடுவார்.

இதைப் பார்க்கும் போது சில நேரங்களில் சிரிப்பாகவும், பல நேரங்களில் பாவமாகவும் இருக்கும். அங்கு இருந்து பார்த்து பழக்கமானதால் எக்ஸ்ரே எடுக்கும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பழக்கமாகி விட்டது.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

எனது பதிவில் ஹிட்ஸ் கவுண்டர் வைத்துள்ளேன். பதிவை போன வருடமே ஆரம்பித்து எழுதி வந்தாலும் ஏபரலில் ஹிட்ஸ் கவுண்டர் போட்டதாகவே நினைவு. ஹிட்ஸைப் பார்த்து, அவ்வப்போது நமது உறவுக்காரப் பதிவர்கள் வந்தார்களா என பார்த்துக் கொள்வேன். சாதாரணமாக பதிவு போடும் நாளில் 200 முதல் 300 ஹிட்ஸூல் இல்லையென்றால் 100 முதல் 150 வரை இருக்கும். தனி வருகை 200 க்குள் தான் இருக்கும். சமீபத்தில் கார்த்திகாவின் பெயரைப் போட்டு பதிவு போட்டேன். மக்கள் டீவி கார்த்திகாத்தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று. அன்று கிட்டத்தட்ட 700 ஹிட்ஸ். 550 க்கும் மேல் தனி ஹிட்ஸ்.

என்னப்பா இது நியாயம்? நல்ல பதிவு எழுதும் போதெல்லாம் காணாம போய்டுறீங்களே... ;))




&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

சமீபத்தில் நண்பர் ஒருவர் பிறந்தநாளை குறித்து வைத்துக் கொண்டு, நினைவுப்படுத்தும் வகையிலும், நண்பர்களின் பிறந்தநாட்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளும் வகையிலும் இருக்கும் ஒரு இணைய தளத்தில் இருந்து நமக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

அங்கு சென்று பதிந்தத போது, எனது நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க அங்கேயே இருந்து வசதி இருப்பதாக வந்தது. அங்கு நமது கூகுள் மெயில் ஐடி, மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்தால் அவர்களே நமது நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பார்களாம். பின்னர் தான் புரிந்தது. இதே முறையில் தான் எனக்கும் அழைப்பு வந்துள்ளது என்று.

இது போன்ற Unknown Server களில் நமது மின்னஞ்சல் முகவரியைக் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் அங்கு நமது பாஸ்வேர்டையும் கொடுப்பது சரியானதாக தெரியவில்லை. ஏனெனில் இது போன்ற இணைய தளங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். நமது மின்னஞ்சலின் பாஸ்வேர்ட்டைத் தருவதன் மூலம் அங்குள்ளவர்கள் நமது மின்னஞ்சலை தவறாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு உருவாகலாம். எச்சரிக்கை கவனத்துடன் இருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பெரிய பூனைக்கு என்ன ஆச்சி? விதி வலியது என்று சொல்வார்கள். கோட்டை கொத்தளங்களுக்குள் சென்று மறைந்து கொண்டாலும், நடப்பது நடந்தே தீருமாம். இதை சிம்பிளாக விளக்கும் இந்த GIF படத்தைப் பாருங்க... இதுதான் சொந்த செலவுல சூடு என்பதா... :))




படம் நன்றி : பிகேபியின் வலைப்பக்கம்

நீதிக்கான குறள் :
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. 208

தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப் போன்றது. 208

எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். 207
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்; ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல் பின்சென்று வருத்தும். 207

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும். 319

குறள் உதவி : கயல்விழி முத்துலக்ஷ்மி அக்கா, மற்றும் துளசி டீச்சர்.

இதே போல்(?) குறளை வைத்து கதை சொல்பவர்கள் சொல்லலாம். என்னை அழைத்த ஜீவ்ஸுக்கு நன்றி!

Tuesday, September 2, 2008

அறிவியல் கதை - இந்திய தேச பிரிவினைக்கு யார் காரணம்?

அந்த கருத்தரங்கமே அதகளமாகிக் கொண்டு இருந்தது. அறிவியல் ஆய்வாளர் தமிழ் எழிலன் அப்போது தான் மேடைக்கு வந்து இருந்தார். உள்ளே பத்திரிக்கையாளார்களும், ஆய்வாளர்களும் மிகவும் பரபரப்பாக இருந்தனர். இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப வேண்டி பல தொலைக்காட்சி சேனல்களும் தங்களது குடை தாங்கிய வாகனங்களை வெளியே நிறுத்தி இருந்தன.

புகைப்படக்காரர்களின் தொடர்ச்சியான ஒளி உமிழ்தல்களால் குளிர் சாதன வசதியையும் மீறி அந்த கருத்தரங்கம் வெப்பமாக இருப்பதை உணர முடிந்தது. ஒலி வாங்கிக்கு முன் வந்த தமிழ் எழிலன் தனது தொண்டையை செருமினார். அந்த செருமலுக்கு கட்டுப்பட்டு சலசலப்பு உடனே அடங்கியது. தமிழ் எழிலன் பேசத் தொடங்கினார்.

என் இனிய உலக மக்களுக்கு, எனது அன்பான வணக்கங்கள்! நாங்கள் மேற் கொண்டுள்ள இந்த முயற்சி ஒரு வித்தியாசமானது. முயற்சிகள் என்பது பொதுவாக புதிய விடயங்களைக் கண்டுபிடிப்பதே. ஆனால் எங்களது இந்த முயற்சி பழையவைகளை கண்டுபிடிப்பதாகும்.


பழைய விடயங்களைக் கண்டுபிடிப்பதிலும் பல வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் மண்ணில் புதைந்து போன ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போன நூற்றாண்டில் தமிழகத்தின் கீழ் பகுதியில் கடல் கோளினால் மூழ்கடிக்கப்பட்ட லெமூரியா கண்டம் கண்டுபிடிக்கப்பட்டு நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


அதே போல் எங்களது கண்டுபிடிப்பது மாயமாகி விட்ட, வரவே இயலாத என்று பல நூற்றாண்டுகளாக கருதப்பட்ட விடயங்களை கண்டுபிடித்து உங்களுக்கு தருவது தான் எங்களது ஆராய்ச்சிகள்.


உங்களுக்கு சுருக்கமாக எங்களது ஆராய்ச்சியை விளக்குகிறேன். நாம் பேசக் கூடிய பேச்சு உங்களுக்கு வந்து சென்றடைவது அறிவியல் விடயம் தான். நான் பேசும் பேச்சுக்கள் ஒலி அலைகளாக மாறி உங்களை வந்து அடைகின்றது. இது இங்கு உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியே வரும். இல்லையென்றால் ஒவ்வொருவருக்கும் நான் பேசுவது வெவ்வேறாக வந்தால் நான் பேசுவதை புரிந்து கொள்ள இயலாது.


இந்த ஒலி அலைகள் உங்களை வந்து அடைய ஒரு ஊடகம் தேவை. அந்த ஊடகமாக செயல்படுவது தான் காற்று. இங்கு பத்து பேர் இருந்தாலும், ஆயிரம் பேர் இருந்தாலும் நான் பேசும் ஒலியின் அளவைப் பொறுத்து அனைவரையும் சென்றடையும்.


இந்த ஒலி அலைகள் காற்றில் மிதந்து வந்து உங்களைச் சென்றடைகின்றன. இன்று நான் பேசிய பேச்சின் ஒலி அலைகள் பல ஆண்டுகளுக்கு இங்கு காற்றின் சுழற்சிக்கு தகுந்தாற் போல் இருக்கும். எதிரொலி என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதை வைத்து வவ்வால் போன்றவை சுவர்களில் மோதாமல் பறக்கின்றன. இனி விடயத்திற்கு வருகிறோம்.


பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் காற்றில் கலந்து கிடக்கின்றன. இவைகளை காற்றில் இருந்து பிரித்து எடுத்தால், பழைய காலத்தில் பேசிய பேச்சுக்களை நாம் அறிந்து கொள்ளலாம்.


சமீபத்தில் இது போல் பல பேச்சுக்களை நாம் பிரித்து எடுத்துள்ளோம். சென்ற இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள் செய்து கொண்ட பேரங்கள், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் நடந்த உடன்படிக்கைகளை எல்லாம் நாம் உங்களுக்கு அளித்து ஆச்சர்யமளித்துள்ளோம். பல அறிய வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் உங்களுக்கு காட்டியுள்ளோம்.


நாங்கள் பல மாதங்களாக கடும் முயற்சி செய்து இந்த விடயத்தைக் கண்டுபிடித்துள்ளோம். அதாவது 1947 க்கு முன் இந்தியா என்பது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் சீனாவிடம் இருந்து சமீபத்தில் கைப்பற்றப்பட்ட கஷ்மீரின் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பின்னர் சுதந்திர போராட்டங்களின் உச்சத்தில் அது இந்தியா, மற்றும் பாகிஸ்தான் என்ற இரண்டாக பிரிக்கப்பட்டது.


இதற்கு பலரும் பல தலைவர்களை காரணமாகச் சொல்கின்றனர். ஆனால் உண்மையான காரணங்களைக் கண்டறிய வேண்டும் என்பதற்காக காற்றில் பரவிக் கிடக்கும் கார்பன் துகள்களில் இருந்து, பிரிவினைக்கு காரணமானவர்கள் யார்? அவர்கள் பேசிய பேச்சுக்கள் என்ன? என்பதை எல்லாம் தெளிவாக எடுத்து விட்டோம்.


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒலிப்பேழையே நான் மட்டுமே கேட்டுள்ளேன். இதை உலகில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் கேட்க வேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்புக்கும், நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.


இது வரை பேசி விட்டு அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டார். தனது முகத்தில் வழியும் முத்து முத்தான வியர்வைகளை துடைத்துக் கொண்டாள். தனது அருகில் இருந்த கணிணியில் இருந்து பழைய பேச்சுக்கள் அடங்கிய கோப்பை ஒலிபரப்ப ஆரம்பித்தார். கொஞ்சம் கரகரப்பாக ஆரம்பித்த ஒலிகள் சிறிது நேரத்தில் தெளிவாக வர ஆரம்பித்தன.


இதற்குள் வெளியே துப்பாக்கிகளின் ஓசைகள் கேட்க ஆரம்பித்து இருந்தன. திமுதிமுவென உள்ளே நுழைந்த 20 பேர் அடங்கிய அந்த குழுவினரின் கரங்களில் அதி நவீன துப்பாக்கிகள் இருந்தன. வந்தவர்கள் பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் வெளியே விரட்டினர்.


அவர்களின் தலைவர் போல் இருந்தவர் நேராக தமிழ் எழிலனுக்கு முன் வந்து கைகளில் விலங்குகளை இட்டார். பின்னர் மைக்கிற்கு முன் வந்த அவர் “ அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! நாங்கள் மத்திய புலனாய்வுத்துறைச் சார்ந்தவர்கள். இதுவரை அறிவியல் அறிஞர் தமிழ் எழிலன் பல அற்புத கண்டுபிடிப்புகளைத் தந்துள்ளார்கள். ஆனால் இப்போது அவரது மூளையில் ஏற்பட்ட கோளாறுகளால் இது போன்று பிதற்றி உங்களை ஏமாற்றி விட்டார். ஆகவே இவரை கைது செய்து பைத்தியக்கார மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றோம். தடங்கலுக்கு வருந்துகிறோம்”


தமிழ் எழிலன் “நான் சொல்வது அனைத்தும் உண்மை... அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னை பைத்தியம் என்கின்றனர். விடுங்கள்! எனது அறிய கண்டுபிடிப்பை உலகுக்கு சொல்ல வேண்டும்” எனக் கதற ஆரம்பித்து இருந்தார்.


புலனாய்வுத் தலைவர் தன்னிடம் இருந்த இயந்திரத் துப்பாக்கியால் அந்த கணிணியை சரமாரியாக சுட, அதில் இருந்த வரலாற்று உண்மைகள் எரியத் தொடங்கி இருந்தன.

Monday, August 25, 2008

விஷ்ணு புரத்தானைக் காணவில்லை

.

இன்றைய எனது டைரிக் குறிப்பு

இன்றைக்கு செம வேலை. பெண்டு கழண்டு விட்டது. பூமிக்கடியில் எலக்ட்ரிக்கல் கேபிள் எரிந்து போய் விட்டது. ஆறு அடி நீளம், நான்கு அடி அகலத்திற்கு குழி வெட்டி எரிந்த கேபிளை மாற்றினோம். அவசரம் காரணமாக லெபனானி தொழில்நுட்ப பொறியாளரும், மற்றும் பாகிஸ்தானி மின்சார பொறியாளரும் கடுகடுப்பாக நடந்து கொண்டனர்.

விஷ்ணு புரத்தானைக் காணவில்லை

பிரசாத் என்னோட நல்ல பிரண்ட். ரெண்டு பேரும் ஒண்ணாவே படிச்சோம். அவனை ரொம்ப வருஷமா என்னால பார்க்கவோ, தொடர்பு கொள்ளவோ முடியலை. அதனால தான் எங்களைப் பற்றி உங்களுக்கு சொல்லப் போறேன். அவன் வீடு விஷ்ணு புரத்தில் இருந்தது. அதனால அவன நான் செல்லமா விஷ்ணுபுரத்தான்னு தான் சொல்வேன். அவங்கப்பா ஒரு டாக்டர். அவங்கம்மா பேங்கில் வேலை பார்த்தாங்க. அவங்க அண்ணன் வெங்கடேஷ் டாக்டருக்கு மெட்ராசில் படிச்சுக்கிட்டு இருந்தாங்க.

1992 ஜனவரி மாதம்...

பிரசாத் : தமிழ்! நாளைக்கு சனிக்கிழமை தானே? வாடா குரூப் ஸ்டடி பண்ணலாம்.

நான் : போடா! நாளக்கி சுள்ளான் கொளத்துக்கு பக்கத்துல ஒட மரம் நிறைய இருக்காம். எங்கம்மா விறகு ஒடிச்சிட்டு வரனும்னு சொல்லி இருக்கு. என்னால வர முடியாது.

பிரசாத் : காலையில் தான போவாய், மாலையில் வாயேன்.

நான் : பொழு சாய சும்மா தான் இருப்பேன். வர்ரேன். ஆனா உங்க வீட்டுக்குள்ள என்னை விட மாட்டாங்களே?

பிரசாத் : எங்க பாட்டி வீட்டுக்கு வெளியே திண்ணை இருக்குதே, அங்கே உட்கார்ந்து படிக்கலாம். வா

நான் : அதுவும் சரிதான். திருணையிலேயே உட்கார்ந்து படிக்கலாம். ஆனா நான் பொழுசாய கிரிக்கெட் விளையாடப் போவேனே?

பிரசாத் : கிரிக்கெட்டை எல்லாம் மூட்டை கட்டி வைச்சுட்டு படிக்கிற வழியைப் பாரு தமிழ்!

நான் : போடா! உன்னைவிட அரைப் பரீச்சையில் நான் தான் மார்க் கூட வாங்கிருக்கேன். தெரியும்ல.. நீ 440 தான் வாங்கின நான் 500 க்கு 450 வாங்கிட்டேன்

பிரசாத் : ஆனா மேத்ஸில் நான் 100 வாங்கிட்டேன். நீ 96 தான் வாங்க முடிஞ்சது

நான் : என்னடா செய்ய... கணக்கு பாடத்தை போட்டு பார்க்க ரப் நோட் கேட்டா எங்கப்பா வாங்கித் தர மாட்ராரு. அதுவுமில்லாம மத்த பாடம்ன்னா புத்தகத்தை வச்சு படிச்சிடலாம். கணக்குன்னா போட்டுப் பார்க்கனும். உட்கார்ந்து குனிஞ்சுக்கிட்டே ரொம்ப நேரம் சிலேட்டிலேயே எழுதிப் பார்க்க முடியலை. குறுக்கு வலிக்குதுடா

பிரசாத் : நான் அதுக்கெல்லாம் தனியா நோட் போட்டு வச்சிருக்கேன். எனக்கு ஸ்டடி டேபிள் இருக்கு. அதனால பேக் பெயினெல்லாம் எனக்கு வராது.

நான் : சரிடா நேரமாச்சு. இன்னைக்கு ரேஷனில் சீமத்தண்னி ஊத்துராங்களாம். எங்கம்மா வாங்கச் சொல்லி இருக்கு

பிரசாத் : ரேஷனில் மண்ணெண்ணைய் வாங்க எல்லாம் நீயா போவ? வீட்டில் அதுக்கு வேலைக்காரங்க இல்லியா?

நான் : போடா இவனே? ரேஷனில் சீமத்தண்ணி, அரிசி, சீனி, எல்லாம் நான் தான் வாங்கித் தரணும். கரண்ட் பில் கட்டுறது எல்லாம் என்னோட வேலை தான். ஆமா நீ ஒன்னும் செய்ய வேலை செய்ய மாட்டியா?

பிரசாத் : எங்கப்பா இது மாதிரி வேலை எல்லாம் செய்ய விடமாட்டாங்க. நான் நல்லா படிச்சு டாக்டராகனுமாம்

நான் : காலையில மார்க்கெட்டுல போய் காய்கறி கூட வாங்க மாட்டியா?

பிரசாத் : அதெல்லாம் எங்க வீட்டில் இருக்கும் வேலைக்கார கண்ணன் பார்த்துப்பாங்க.

நான் : என்னத்த போ! ஒரு வேலையும் செய்ய மாட்ட, விளையாடப் போக மாட்ட, படிப்பு படிப்புன்னு அலையாத, மண்டை குழம்பி பைத்தியமாகிடப் போற

பிரசாத் : அதெல்லாம் நான் இண்டோர் கேம்ஸ் தான் ஆடுவேன்

நான் : அப்படின்னா?

பிரசாத் : கேரம் போர்டு, செஸ் இதெல்லாம்....

நான் : அதெல்லாம் எனக்கு தெரியாது ஆளை விடு கிளம்பிறேன். வரட்டா!

பிரசாத் : பை சீ யூ லேடர்

நான் : சரிடா. வர்ரேன்

1996 ஜூலை

நான் எங்க பெட்டிக்கடையில் வியாபாரத்தை பெருக்கும் நடவடிக்கையில் ஈடுபட, பிரசாத் மெட்ராஸூக்கு போய் டாக்டருக்கு படித்தான்.

2008 ஜனவரி

என் நணபன் பிரசாத்தைப் பார்க்க அவங்க விஷ்ணு புரம் வீட்டிற்கு போய் இருந்தேன். பிரசாத்தோட அண்ணன் அமெரிக்காவுல கலிபோர்னியா மாகாணத்தில் ஆன்டியாச் (Antioch) என்ற ஊரில் டாக்டரா வேலை செய்வதால் அவங்க அப்பா, அம்மா அங்கேயே போய்ட்டாங்களாம். பிரசாத் தமிழகத்தின் ஒரு பெருநகரத்தில் மூன்று மாடி கட்டிடத்தில் ஹாஸ்பிடல் கட்டி, தனது டாக்டர் மனைவியோட இருக்கானாம். யாராவது என் நண்பனோட அட்ரஸ், போன் நம்பர், இ மெயில் அட்ரஸ் கிடைச்சு கொடுத்து உதவுங்க!


Monday, July 21, 2008

அறிவியல் கதை - போகாதே! போகாதே! என் கணவா!

2099 - டிசம்பர் மாதம் 30 ந்தேதி
“என்னங்க இதெல்லாம் உங்களுக்குத் தேவையா?” கண்களில் கண்ணீருடன் கணவனை நோக்கினாள் ஹேமா.

“இதுதான் என்னோட வாழ்க்கையின் லட்சியம். ஐந்து வருடமா ஆராய்ச்சி செய்து இப்பதான் எல்லாம் கைகூடி வருது. இதுக்கு பலபேர் போட்டி போட்டும் கடைசியில் நான் தான் ஜெயிச்சேன்” பெருமிதமாக கூறினான் 30 வயதே ஆன விக்னேஷ்.

“இதாங்க வெற்றி? பிள்ளைகளையும், என்னையும் நிரந்தரமாக பிரிந்து செல்வதா வெற்றி?”
”கவலைப்படாத ஹேமா! அரசாங்கம் உனக்கும், பிள்ளைகளுக்கும் தேவையான எல்லா வசதிகளையும் செய்து தரும்”

பிள்ளைகள் இரண்டும் ஒன்றும் விளங்காமல் அப்பாவையும், அம்மாவையும் பார்த்துக் கொண்டிருந்தன.

“பணமாங்க வாழ்க்கை! எனக்கும், என் பிள்ளைகளுக்கும் நீங்கதாங்க முக்கியம். நீங்க இல்லாத வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியலைங்க”

“இப்ப உனக்கு 27 வயசு தான ஆகுது? நான் போனதும் வேற ஒரு கல்யாணம் முடிச்சுக்க. உன் அழகுக்கும், அறிவுக்கும் என்னைவிட நல்ல கணவன் கிடைப்பான். கவலைப்படாதே இன்று தான் நாம் இருவரும் சேர்ந்திருக்கும் கடைசி இரவு. நிம்மதியா தூங்கு”

விளக்கை அணைத்து விட்டு விக்னேஷ் தூங்கிப் போக ஹேமாவின் விசும்பல் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.

2100 ஜனவரி 1

இந்திய ஜனாதிபதி, இந்தியப் பிரதமர், அமெரிக்கா சார்பில் இந்தியாவை கண்காணிக்கும் தூதர், முக்கிய அரசியல் தலைவர்கள், முக்கிய நபர்கள் அனைவரும் அந்த பெரிய ஹாலில் கூடி இருந்தனர். ஹேமா சிவந்த கண்களுடன் தனது இரண்டு பிள்ளைகளுடன் நின்று கொண்டிருந்தாள். அரசியல் தலைவர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஹேமாவிடம் வந்த போது விக்னேஷால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள இயலவில்லை. மனைவியையும் மகன்களையும் கட்டியணைத்து கதற ஆரம்பித்து விட்டான். மூத்த மகன் நடப்பது புரியாமல் “ அப்பா! நீங்க போய் போன் கூட பண்ண முடியாதா?”

“இரண்டு நாள் வரை போன் செய்யலாம். அதற்குப் பிறகு முடியாதுடா செல்லம்” என்று சொல்லி விட்டு மீண்டும் அழத் தொடங்கினான்.

வெள்ளைக் கோட் அணிந்திருந்த ஒரு விஞ்ஞானி மெதுவாக விக்னேஷிடம் வந்து “ விக்னேஷ் மனதைத் தேற்றிக் கொள்! நேரமாகிவிட்டது. கிளம்பலாம்” என்று கூறிய உடன் சுய நினைவு வந்தவனாய் எழுந்து, அனைவருக்கும் கை காட்டிக் கொண்டே கண்ணாடி அறைக்குள் நுழைய கதவு பூட்டிக் கொண்டது. அறைக்குள் தனக்கான ஆடைகளை அணிந்து விக்னேஷ் தயாரானான்.

ஹேமா குழந்தைகள் உள்பட அங்கிருந்தவர்கள் அனைவரும் அந்த ஹாலை விட்டு வெளியே வர அடுத்த சில மணி நேரங்களில் அந்த ராக்கெட் ஏவு தளத்தில் இருந்து ராக்கெட் புறப்பட்டுச் சென்றது. அந்த ராக்கெட்டில் விக்னேஷ் அமர்ந்திருந்தான்.

அந்த ராக்கெட் பூமியில் இருந்து பல லட்சம் மைல் தூரத்தில் இருக்கும் வேகா கிரகத்திற்கு ஆராய்ச்சிக்காக சென்று கொண்டிருக்கின்றது. நமது சூரிய குடும்பத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் அங்கு ஒளியின் வேகத்தில் செல்லும் இந்த ராக்கெட் சென்று சேரவே சில ஆண்டுகள் ஆகும். பின்னர் ஆராய்ச்சிகள் முடிந்து திரும்பும் போது விக்னேஷூக்கு 55 வயதுகள் ஆகி இருக்கும். ஆனால் பூமியின், வேகாவின் பால்வெளி மாறுபாடுகளால் பூமியில் 2310 ஆம் ஆண்டு நடந்து கோண்டிருக்கும். விக்னேஷின் கைக்கடிகாரம் 25 ஆண்டுகளை மட்டும் கடந்திருக்க பூமியில் 310 ஆண்டுகள் கடந்திருக்கும்.

இது சிறில் அலெக்ஸ் அவர்களின் அறிவியல் புனைக் கதைப் போட்டிக்காக