Showing posts with label எரிச்சல். Show all posts
Showing posts with label எரிச்சல். Show all posts

Friday, May 8, 2009

எங்கள் ஓட்டு ‘ஈழத் தாரகை’ அம்மா(ஜெ.)விற்கே!... வாசகர் கடிதம்.

கடந்த சில வாரங்களாக பதிவு ஏதும் எழுதவில்லை. ஏன் பதிவு எழுதவில்லையென்று கேட்டு, விசாரித்து இதுவரை 18 மொழிகளில் 14,28,332 கடிதங்கள் வந்த கடிதங்களைப் பற்றி இங்கு பேச வேண்டிய அவசியம் இல்லா விட்டாலும் 14,28,333 வது கடிதமாக கூட்டுத் தொகை 9 ஆக வந்த ஒரு கடிதத்தை உங்களுக்கு அப்படியே அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

திமுக அடிவருடி தமிழ் பிரியன் அவர்களுக்கு,


வருகின்ற 2009 மே 13 ந்தேதி இந்திய பாராளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள சூழலில் உங்களது பொன்னான வாக்குகளை தமிழக மக்களின் ஒரே இறுதி நம்பிக்கை ஜெ.விற்கு அதிமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடும்படிகேட்டுக் கொள்கின்றோம்.

அம்மா... இந்த பெயரைச் சொன்னதும் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு உயிருக்கும் அம்மா ஜெ. அவர்கள் தான் நினைவுக்கு வருவார்கள். அன்றும், இன்றும், என்றும் ஈழ மக்களின் மேல் அக்கறை கொண்டுள்ள அம்மா அவர்கள் தற்போதைய தேர்தலுக்குப் பின் சில முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளார்.

அதன்படி தேர்தல் முடிந்ததும் அம்மாவிடம் இருக்கப் போகும் 40 எம்.பி சீட்டுக்களை வைத்து அம்மா இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பார். அம்மாவின் பாசத்திற்குரிய ஒருவர் மட்டுமே இனி இந்தியாவில் பிரதமராக முடியும் என்ற தலையெழுத்து அமையும்.



புதிய இந்தியத் தலைமை அம்மாவின் காலடியில் அமைந்ததும், உடனே இந்திய ராணுவம் இலங்கையை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் களம் இறக்கப்படும். முழு இலங்கையும் இந்தியாவிம் காலடியில், அம்மாவின் ஆணைக்காக காத்திருக்கும். அம்மா ஆணையிட்டால் முச்சந்ந்தி முனுசாமி கூட பிரதமர் நாற்காலியில் அமர முடியும்.

அவ்வாறு அம்மாவின் காலடியின் கீழ் மத்திய அரசு அமைந்ததும், அம்மாவின் முதல் செயல்பாடே இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்புவது தான். இலங்கையில் சரிவை சந்தித்து வரும் விடுதலை போராட்ட வீரர்களுடன் இந்திய ராணுவம் இணைந்து முழு இலங்கையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அம்மா ஏற்பாடு செய்வார்கள். ராஜபக்‌ஷே சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டு புழல் சிறையில் அம்மாவால் அடைக்கப்படுவார்கள்.

இலங்கையில் ஜனாதிபதியாக மிஸ்டர் கிளீன் ஓ.பன்னீர்செல்வத்தை அம்மா நியமிக்கப்பார். அம்மாவால் தேசிய தலைவர், இலங்கையின் இராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டு நாடு முழுவதும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவார். இளைய தளபதி கருணாவை, ஐரோப்பா கண்டத்திற்கான இலங்கைத் தூதராக நியமித்து எங்கிருந்து அடிவாங்கிக் கொண்டு வந்தாரோ அங்கேயே சிவப்பு கம்பள வரவேற்பு கிடைக்க அம்மா வழி செய்வார்கள்.

இலங்கையில் கிழக்கு மண்டலத்திற்கு ரவுப் ஹக்கீமையும், வடக்கு மண்டலத்திற்கு பிள்ளையானையும் முதல் மந்திரியாக நியமித்து அம்மா அழகு பார்ப்பார்கள். அம்மாவின் ஆசியால் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வெறும் 50 ரூபாயில் இரயில் பயணம் செய்ய சட்டம் இயற்றப்படும். A9 பாதை வழியாக செல்லும் தமிழர்களுக்கு எந்த சோதனையும் செய்யாமல் அம்மா பார்த்துக் கொள்வார்கள்.மலையக மக்களின் வசதிக்காக அனைத்து போகுவ்ரத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். அங்கு உற்பத்தியாகும் பொருட்களுக்கு முழு வரி விலக்கும், மானியமும் வழங்கப்படும்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே அம்மா ஏற்படுத்திய ஒற்றுமையைக் குலைக்க அம்மாவின் எதிரி அரசான மைனாடிரிட்டி திமுக அரசு முயற்சி செய்த காரணத்தால் அவ்வாட்சி கலைக்கப்படும். ஏழைகளின் உற்ற தோழி அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் மலரும். ஈழம் மற்றும் தமிழக மக்களிடையே உள்ள உறவை பிரிக்கவே சேது சமுத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதை அம்மா அவர்கள் உணர்ந்துள்ளார்கள். எனவே மைனாரிட்டி கருணாந்தி அரசால் ஆழம் செய்யப்பட்ட சேது சமுத்திரம் முழுவதும் மணலால் நிரப்பட்டு இலங்கைக்கும், தமிழகத்துக்கும் இடையே பஸ், இரயில் போக்குவரத்து அம்மாவால் விடப்படும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து 90 களில் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு மீண்டும் மறுவாழ்வு அளிக்கப்படும். அவர்களின் பழைய உடைமையான அவர்களின் வீடு, நிலம், வியாபாரம் அனைத்தும் அம்மாவின் பொற்கரங்களால் மீண்டும் வழங்கப்படும் . ஈழத்தில் உள்ள விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், இலவச உரம் போன்றவை அம்மாவின் கட்டளையின் கீழ் வழங்கப்படும். கரும்புக்கு டன்னுக்கு 10,000 ரூபாயும், நெல்லுக்கு கிலோவுக்கு 50 ரூபாயும் அம்மாவின் ஒப்புதலின் கீழ் வழங்கப்படும்.

புலம் பெயர்ந்து வறுமையில் வாடும் ஈழத் தமிழர்கள் மீண்டும் இலங்கைக்கு வர விரும்பினால் இலவசமாக வீடும், 5 ஏக்கர் நிலமும், 10 லட்சம் ரூபாயும் அம்மாவின் கருணையால் வழங்கப்படும்.

இலங்கைக்கான ஐ.நா. தூதராக வைகோவும், இந்தியத் தூதராக ராமதாஸூம் அம்மாவால் நியமிக்கப்படுவார்.

மேற்கண்ட நன்மைகளை செய்ய அம்மா முடிவு செய்து இருப்பதால் உங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஓட்டுக்களை அதிமுகவின் கூட்டணிக்கு தரும் படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும் ஈழத்தில் நீதியை நிலை நாட்டி தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கித் தந்து, ஈழ மக்களின் மனதிலும், சரித்திர புத்தகங்களிலும் நீங்கா இடம் பிடிக்கப் போகும் அம்மாவின் சீரிய பணியைப் பாராட்டி பெரியார் புத்தகங்களின் காவலர், கல்வி நிறுவனங்களின் தளபதி தமிழினத்தின் இளைய தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் அம்மாவுக்கு ஈழத் தாரகை என்ற பட்டத்தை வழங்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளார்.

வாழ்க அம்மா! வளர்க அதிமுக! ஓங்குக எம்.ஜி.ஆர் புகழ்!

இவண்
தலையைச் சொறிய எரியும் கொள்ளியைப் பயன்படுத்துவோர் சங்கம்.
Pirates of graveyard Nager AIADMK கிளை
Somalia.

டிஸ்கி 1 : கடிதத்தை படித்து விட்டு இது மண்டபத்தில் எழுதியது என்று பின்னூட்டம் போட்டால், அவர்கள் வைகோ விடம் தேம்பி தேம்பி முந்தானையில் மறைந்து அழுவது எப்படி என பயிற்சி அளிக்க அனுப்பப்படுவார்கள்.

டிஸ்கி 2 : மண்டபம் என்றால் என்ன? இராமேஸ்வரம் பக்கத்தில் இருக்கும் ஊரா? என்று கேட்பவர்கள் சில வினாடிகளில் நிறம் மாறுவது எப்படி என்று பயிற்சி எடுக்க மருத்துவர் ஐயாவிடம் அனுப்பப்படுவார்கள்.

படம் நன்றி : கீற்று இணைய தளம்

Saturday, November 15, 2008

காலை ஆட்டிக் கொண்டே பதிவு போடுவோம்ல

என் இனிய தமிழ் மக்களே! ஒரு வாரமா இன்டர்நெட் சரியா வேலை செய்யலை.... (உலகில் இந்திய தொலைத் தொடர்புத் துறை எவ்வளவோ மேல் என்று தோன்றுகின்றது.. STC காரனுக பைத்தியம் பிடிக்க வச்சிட்டானுக..) மண்டை காய்ஞ்சு போச்சு.. நிறைய பதிவு எழுதும் ஐடியா கிடைத்தும் பதிவு போட முடியலை... அதனால் மக்கள் நம்மை மறந்துடக் கூடாது என்பதால் இந்த பதிவு...
(காலை ஆட்டிக் கொண்டே தூங்கவில்லையென்றால் செத்துடான்னு தூக்கிடுவாங்களாமே.... அதனால இந்த பதிவு,.. :))) )

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பூம்பாவாய் ஆம்பல் படித்ததில் இருந்து ஆர்குட் மேல ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால் இங்க (சவுதியில்) ஆர்குட் தடை செய்யப்பட்டது என்பதால் உள்ளே நுழைய முடியாமல் இருந்தது. இணைய உலகில் நண்பர் ஒருவர் ஆர்குட்டுக்குள் நுழைய ஒரு குறுக்கு வழியைக் கூறினார். உடனே உள்ளே நுழைந்தாச்சு.... ஆனால் ஒரு சிறு தவறும் நிகழ்ந்து விட்டது. ஆர்குட்டில் இருக்கும் நண்பர்கள் அனைவரையும் சேர்க்கவா என்று கேட்கப்பட்டது போது, அனைவரையும் ஒரே கிளிக்கில் செலக்ட் செய்து ஆம் என்று தட்டி விட்டேன். பார்வேர்ட் மெயிலில் வந்த மின்னஞ்சல்களுக்கும் என் அழைப்பு சென்று விட்டது. அதனால் சிலர் டென்சனில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.

ஆர்குட்டில் நாம வாங்கிய ப்ளாட் இது தான்..

http://www.orkut.com/Main#Profile.aspx?uid=3060450896209263868

வாங்க மக்களே! ஆர்குட் ஒன்றும் நம்மை அதிகமாக கவரவில்லை... அண்ணன் TBCD சொல்வது போல் எதா இருந்தாலும் ஜிடாக்கில் பேசுவது தான் நல்லா இருக்கு... :) ஆனால் ஆர்குட் போனதில் ஒரு பயனும் இருந்தது... அதுக்கும் இந்த பதிவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குன்னு சொல்லலாமான்னு தெரிய்லீங்ண்ணா... ;)))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

போன வாரம் முழுவதும் இங்கிருந்து 35 கி.மீ தூரத்தில் ஒரு மலைப் பிரதேசத்தில் வேலை.... அது ஒரு அரச குடும்பத்து மாளிகை. அங்கு நமது நிறுவன ஆட்கள் வேலை செய்கின்றனர். முக்கியமான வேலைக்கு மட்டும் சென்று வேலையை முடித்து விட்டு ஓடி வந்து விடுவோம். செப்டம்பர் முதல் மார்ச் வரை அங்கு செல்லவே மாட்டேன். ஆனால் சில அவசர வேலைகளுக்காக செல்ல வேண்டி வந்து விட்டது. கடும் குளிர்... ஸ்வெட்டர்.. மங்கி குல்லாய் என்று ஓட்டி விட்டேன். .. இப்ப சொல்ல வந்தது அந்த கதை அல்ல....

மாலை நேரங்களில் மலை முகடுகளில் நின்று வேடிக்கை பார்ப்பேன்... மேகம் நம்மை நகர்ந்து செல்லும் போது கிடைக்கும் சிலிர்ப்பு அலாதியாக இருக்கும். அந்த மலையில் நிறைய குரங்குகள் இருக்கும்... அவைகளையும் வேடிக்கை பார்ப்பேன்... குரங்கு குழுக்களாக இருக்கும். பெரிய குரங்கு தான் தலைவர். சில பெண் குரங்குகள், சில ஆண் குரங்குகள் குட்டிகள் எல்லாம் அந்த குழுவில் இருக்கும்.. அன்றும் அப்படித்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தேன். திடீரென்று ஒரு தலைமைக் குரங்கு ஒரு சிறு குரங்கைத் துரத்தத் தொடங்கியது. சிறு குரங்கு அலறி அடைத்துக் கொண்டு இங்கும் அங்கும் தப்பி ஓடியது.

தமிழ் பட சேஸிங் போல இருந்தது.. சில நேரங்களில் பெரிய குரங்கின் கைகளில் சிக்கியும் தப்பியது... இறுதியில் பெரிய குரங்கு கடைசியில் வெற்றி பெற்றது. சிறு குரங்கை கதற கதற ***** செய்தது... ஓரிரு நிமிடங்களில் அந்த சிறு குரங்கு ஒரு மரண ஓலத்துடன் நடக்க இயலாமல் நடந்து சென்றது. மிகவும் சிறிய குரங்கு அது... மனதுக்கு கஷ்டமாக இருந்தது... மனிதர்களிலுல் இதை விட மோசமான மிருகங்கள் சில இருக்கின்றன... அவர்கள் நடு ரோட்டில் வைத்து தலை வெட்டப் பட வேண்டியது ஏன் என்ற அவசியத்தை அந்த நிகழ்ச்சி உணர்த்தியது.



குரங்குகள்.... தெரியாதவர்கள் கண்ணாடி போட்டுக் கொள்ளவும்..ஹிஹிஹி

பள்ளத்தாக்கு... :) மேகம் இல்லாத ஒரு மதிய வேளையில்...


அங்கு வளரும் பூனை... ஒரிஜினல் பட்டரும், சீஸூம் தான் சாப்பிடுமாம்... ;))

கேம்ப்பில் உள்ள தபால் பெட்டி... ஒவ்வொரு பகுதியினருக்கும் ஒரு பெட்டி.... குளிருக்கு சொகுசாக பூனையார் தூங்குகின்றார்.. :)))

ஜன்னல் மேல் ஏறி நிற்கும் பூனைகள்... ரோட்டிற்க்கு கீழே மலைகளால் சூழப்பட்ட சிறு கிராமம் மேக மூட்டத்திற்கு இடையே தெரிகின்றதா? என்று பாருங்கள்...

அலுவலகத்தில் உள்ள மீன் தொட்டி... :))

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தமிழ் மணத்தில் சூடான இடுகையை எடுத்து விட்டார்களாம்.. அதனால் தமிழ் மண கருவிப்பட்டையில் மேல் நோக்கி இருக்கும் (Thumps up) கையை அழுத்தி விட்டு செல்லுங்கள்.... இல்லையென்றால் நானே மோடத்தை ரீ ஸ்டார்ட் செய்து மீண்டும் மீண்டும் ஓட்டுப் போடும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

Saturday, November 1, 2008

US Election 08 - ஒபாமா தோற்கடிக்கப்பட பிரார்த்திக்கலாம்! வாருங்கள்!

முதலில் அனைவரும் ஒரு நிமிடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா தோல்வியடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்!

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

__/\__

உங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி!]

ஏன் ஒபாமா தோற்கடிக்கப்பட வேண்டும்?

விபத்தில் அடிபட்டு கோரமாகி கோமாவில் இருக்கும் போது, அவரைப் பார்க்க வருபவர்கள் கூறுவார் “ இதுக்கு பேசாமல் அந்த விபத்துலயே ஒரேயடியாய் போய் இருந்தாலாவது நிம்மதியா ஆகி இருக்கும்” ஊரில் சில நேரங்களில் இது போல் விரக்தியில் சொல்வார்கள்.

இதே நிலையில் தான் அமெரிக்காவின் பொருளாதார சூழல் இருக்கின்றது. கடந்த 8 ஆண்டுகளாக புஷ் என்ற மனித குல எதிரி செய்த லூசுத்தனமான செயல்களால் உலகம் முழுவதும் அமைதியின்மை நிலவுகின்றது. அதே போல் விவேகமில்லாத போர் முன்னெடுப்புகளாலும், பொருளாதார கொள்கைகளாலும் உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்ததிலும் முக்கிய பங்கு அவருக்கு உள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் நாளை (நவம்பர் 4) அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் சார்பில் பராக் ஒபாமாவும், ஜான் மெக்கய்னும் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு அமோக ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் கடைசி கட்டத்தில் முடிவு செய்யும் வாக்காளர்களின் முடிவைப் பொறுத்தை இறுதி வெற்றி அமையும்.

ஒபாமா தோற்கடிக்கப்பட ஏன் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்:

1. ஒபாமா வெற்றிபெற்றால் ஈராக், ஆப்கன் போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறும் என்று அறிவித்துள்ளார். இதனால் உலகில் இருக்கும் ஆயுத வியாபாரிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அந்த கொடியவர்கள் தங்களது ஆயுத வியாபாரத்திற்காக எவரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள்.

2. பிற நாடுகளில் தனது ஆளுமையை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என் ஒபாமாவின் பேச்சின் மூலம் தெரிய வருகின்றது. இவ்வாறு செய்தால் அமெரிக்காவுக்கு அடி வருடுவதையே தொழிலாகக் கொண்ட பல நாட்டு அரசியல் தலைவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் வாய்ப்பு ஏற்று விடும். குறிப்பாக இந்தியா போன்ற நாட்டு தலைவர்களை மேற்கத்திய வழக்கத்தின் படி நடத்த ஆள் இல்லாததால் திக்குத் தெரியாமல் திணறக் கூடும். பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது நாட்டின் ஜனாதிபதியாக இதுவரை விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இது உலகிற்கு பேராபத்தாக முடியும்.

3.அமெரிக்க பொருளாதாரம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. உயரக் கூடிய எதும் ஒருகட்டத்தில் கீழே வந்தே தீரும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பது போல் உள்ளது. இந்த நிலையில் ஒபாமா அதிபராவதன் மூலம் பொருளாதாரம் மேலும் சீரழிந்தால், ஒபாமா போன்ற கறுப்பர் ஒருவர் வந்ததே இதற்கு காரணம் என அமெரிக்க மக்களிடம் விஷம பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இனி அமெரிக்க அரசியலில் மீண்டும் ஒரு கறுப்பர் அதிபராகும் வாய்ப்பு நிரந்தரமாக பறி போக வாய்ப்பு உள்ளது.

4. ஒபாமாவில் ஸ்லோகமே மாற்றம் என்பது தான். ஆனால் அமெரிக்க செனட் என்பதே மாற்றங்களை விரும்பாத மாமாக்களைக் (வடிவேலுவை புஷ்ஷூடன் ஒப்பிட்டு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல) கொண்டதே... இதனால் ஒபாமாவுக்கும், செனட்டுக்கும் இடையே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. ஒரு கட்டத்தில் ஒபாமா காம்பரமைஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது.

5. ஒபாமாவுக்கு கப்பலில் ஏற்படும் ஓட்டையை அடைக்க மட்டுமே தெரியும். ஆனால் அடித் தளமே ஓட்டையாகிப் போன கப்பலை காப்பாற்ற வழி தெரியாது. (மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாவதில் எந்த பயனும் இல்லை)


6.ஒபாமா நிறத்தால் கறுப்பரானாலும், அதை பயன்படுத்தி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடாத போதும், அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் இந்த நிறவெறியை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் இது ஒரு கறுப்பு - வெள்ளையருக்கு இடையேயான பிரிவை மேலும் அதிகரிக்க விரும்புகின்றனர். ஒபாமா வெற்றி பெறுவதன் மூலம் இந்த வெறி அதிகமாகி விடும்.




டிஸ்கி : மக்களே உங்கள் ஓட்டுக்களை பராக் ஒபாமா மற்றும் பிடேனுக்கே செலுத்துங்கள். (மனசாட்சி என்ற மண்ணாங்கட்டி : நீ சொல்லித் தான் ஓட்டுப் போடப் போறாங்களாக்கும்?) என்னடா ஒபாமா தோற்க வேண்டும் என்று சொல்லி விட்டு ஒபாமாவுக்கு ஓட்டு கேட்டு வருகிறான் என்று யோசிக்காதீர்கள். நமது ஓட்டு வீணானால் நம்மை இந்த வரலாறு மன்னிக்காது. அதே சமயம் அந்த ஓட்டு மெக்கெய்னுக்கு போய் விட்டால் அவர் அடுத்து செய்யப் போகும் அனைத்து படுகொலைகளுக்கும் நீங்களே பொறுப்பு.

புஷ்ஷூக்கு ஓட்டுப் போட்ட பாவம் தான் அமெரிக்காவின் பொருளாதார சீரழிவுகளும், வேலையில்லா திண்டாட்டங்களும் அதிகமாக காரணம் என கஞ்சாக்குடி சித்தர் தனது ஞான திருஷ்டியில் பார்த்து கூறியுள்ளார்.