சமீபத்தில் வந்த அங்காடித் தெரு படம் குறித்து பதிவுலகம் முழுவதும் நிறைய பதிவுகள்.. அவைகளை எல்லாம் படித்து விட்டு படம் பார்த்த போது வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.... சமூக அவலங்களை எடுக்கப்பதாக.. அதுவும் மூணு வருடமாம்... சொல்லி ஒரே சோகமயம்... முதன் முறையாக சாரு நிவேதிதாவின் இந்த விமர்சனத்துடன் ஒத்துப் போகின்றது எனது எண்ணங்கள்..
இப்படத்தில் காட்டப்பட்டது தான் துன்பியலின் உச்சமாக இருக்கின்றது போன்ற எண்ணங்களையே பதிவுலகம் காட்டியது... இப்படத்தைப் பார்த்த பின் தான் தெரிந்தது.. இவர்கள் எல்லாம் ஒயிட் காலர் வேலையில் ஏசி கோச்களில் பயணம் செய்யும், சமூகத்தை சீர்தூக்கிப் பார்க்கும் பார்வையாளர்கள் என்று... இவர்கள் உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக துன்பத்திற்கு உள்ளாகும் அடிமட்டத்தைப் பற்றி செவி வழிச் செய்திகளை மட்டுமே கேட்டிருப்பது புலனாகின்றது.
இப்படம் பற்றி முதலாளித்துவ சிந்தனை கொண்ட... ஆனால் பதிவுகளில் அலட்டல் செய்யும் சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தப் போதே இந்த நெருடல் இருந்தது.. இன்னும் அப்படிப்பட்ட சில பதிவர்கள் எந்த பதிவும் எழுதாததும் சந்தேகத்தை மிகைப்படுத்தியது.
இப்படம் பார்க்கும் அடிமட்ட, அல்லது நடுத்தர மக்களின் மனத்தில் இந்த வியாபார விஷ ஜந்துக்கள் குறித்த நல்ல எண்ணமே உருவாகுமே தவிர வேறு எதும் உருவாகாது என்பது எனது எண்ணம்..
# கடையில் ஒழுங்கா இருக்க வேண்டியது தானே? எதுக்கு சீட்டு எல்லாம் பிடிச்சிக்கிட்டு?
# வேலைக்கு வந்த இடத்தில் எதுக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டிக்கிடக்கு
# அவ செத்ததுக்கு அண்ணாச்சி என்ன பண்ணுவார் ? நல்லவனா எனத் தெரியாமல் எதுக்கு இவ காதலிச்சா?
# சாப்பாட்டுக்கே வழி இல்லாம தானே அங்க போறாங்க... அண்ணாச்சி தான் நிறைய (?) சாப்பாடு போடுறாரே?
# பிரச்சினை என்றதும் அண்ணாச்சி ரெண்டு பேரையும் தான் வெளியே போகச் சொல்லிட்டாரே?
# படத்துக்கு சம்பந்தம் இல்லாம.. எதுக்கு அந்த உயரம் குறைந்த மனிதனை இகழனும்?
# கால் இழந்த பெண்ணை பெத்த அப்பனே விட்டுட்டு போறான்... அப்புறம் என்ன காதல் எழவு எல்லாம் வேண்டிக்கிடக்கு?
. ஜெ.மோவின் பங்களிப்பு மிக அருமை.. ஆனால் வசனங்களுக்காக மட்டும் படம் ஓட முடியுமென்றால் இந்தியில் நானே பட்டேகரின் படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி இருக்க வேண்டும்.. ;-) பின்னணி இசை.. வேணாம்.. இதுக்கு மேல கேட்காதீங்கப்பு... :(
இந்த படத்தை ஒரு 15 நிமிட குறும்படமாக எடுத்து இருந்திருக்கலாம். அதுக்கு தான் கதை இருக்கு. இந்த காதலை எல்லாம் பல படங்களில் பார்த்து சீனை பார்வேர்ட் செய்யும் நிலையில் தான் இருக்கு...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இதைப் படிச்சிட்டு கோபம் வந்தா துபாய் பதிவுலக சிறப்பு பிரதிநிதி வில்பர் சறுக்கனராஜ் துபாய் வந்த வீடியோ பாருங்க
Showing posts with label கோபம். Show all posts
Showing posts with label கோபம். Show all posts
Friday, April 2, 2010
Thursday, December 11, 2008
என்ன செய்ய? நானும் புலம்பி விட்டு செல்கிறேன்.
மும்பையில் நடந்த பயங்கரவாதச் செயல அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது மீடியாக்களும், அரசியல் வியாதிகளும் அடித்த கூத்துக்கள் மக்களிடையே ஒரு அதிருப்தியையே ஏற்படுத்தின. இதனைக் குறித்து அவந்திகா பதிவிட்டு இருந்தார். அதன் தொடர்பதிவாக முத்துலக்ஷ்மி அக்கா தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
வன்முறைகளும், பயங்கரவாதச் செயல்களும் இந்த உலகிற்கு புதிதல்ல. கொஞ்சம் உற்றுக் கவனித்தோமேயானால் இது விளங்கும். கற்காலம் தொட்டு இது இருந்து வருகின்றது. முன்பு தனி மனிதன் தனது தேவைக்காக வன்முறையில் இறங்கினான். உணவு, பெண், இடத்திற்காகவே சக மனிதனுடன் தனது சண்டையைத் துவக்கினான்.
அதை அடுத்து மனிதன் கூட்டாக சமுதாயமாக வாழத் தொடங்கியதும், சமூகங்களுக்கு இடையேயும் சண்டை சச்ச்ரவுகள் ஆரம்பித்தன. இவைகள் இன்று வரைத் தொடர்கின்றன. கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனால் ஒரு தனி மனிதனை அழிக்கவே கஷ்டப்பட வேண்டி இருந்தது. துப்பாக்கி உள்ளிட்ட அழிவு ஆயுதங்கள் மனிதனிடம் வந்ததுமே இந்த அழிவு வேலை அதிகமானது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மக்கள் போர்க்களங்களில் மண் என்ற ஒரு ஆசைக்காக கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து மனிதனுக்கு மதம் என்ற மதம் பிடிக்க ஆரம்பித்ததும் இந்த படுகொலைகள் தொடர்கின்றன. அமைதியையும், சகிப்புத் தன்மையையும் போதிக்கும் மதங்களில் இருந்தும் கொலைகாரர்கள் உருவாக ஆரம்பித்தனர். இக்காலகட்டத்தில் மனிதன் தனது உணவுக்காக போராடுவது குறைந்து நம்பிக்கையின் அடிப்படையில் போராட ஆரம்பித்து விட்டான்.
இந்த போராட்டங்களில் நீட்சியை உற்றுக் கவனித்தால் எந்த சமூகம் அதிக அதிகாரமோ அல்லது அதிக நிராசையோ அடைகின்றதோ அது அடுத்தவர்களை துன்புறுத்தியதைப் பார்க்கலாம். கோவில் இடிக்கப்பட்டதும், சர்ச்கள் தகர்க்கப்பட்டதும், மசூதிகள் தரை மட்டமானதும் இதற்கு உதாரணங்கள். இந்தியாவில் சமணர்கள் அழிக்கப்பட்டதும், ஹிட்லரால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதும் இதற்கு மற்றொரு வடிவம்.
இப்போதைய சூழலில் நம் முன் இருக்கும் பயங்கரவாதம் மதத்தின் பெயரால் இருப்பவையே. தனி மனிதனுக்குள் இருக்கும் குரோதங்கள், சில வினாடி உந்துதலால் ஏற்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்த இயலாது. ஆனால் திட்டமிட்ட படுகொலைகள் வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டியவை.

எடுத்துக்காட்டுக்காக மும்பை கொடூரத்தையே எடுத்துக் கொண்டால் அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள். அவர்களின் நோக்கம் தெளிவாக இருந்தது. இயன்ற அளவு மக்களை அழிக்க வேண்டும். தாம் அழிவதைப் பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை. ஒரு மனிதனுக்கு உயிரை விட பெரிய விடயம் எதுவுமில்லை. அதை துச்சமாக நினைக்கும் நிலையிலேயே இந்த மிருகங்கள் இருந்திருக்கின்றன.
அதே போல் சமீபகால தீவிரவாத செயல்களுக்கு அச்சாணியாக கருதப்படும் 9/11 இரட்டைக் கோபுர தகர்ப்பையும் உற்று நோக்கினால் அதன் பிண்ணனியில் இருந்தவர்களும் இதே போன்ற மனநிலையில் இருந்தது விளங்கும். ஏன் இவர்கள் மாறினார்கள்? அல்லது மாற்றப்பட்டார்கள்.
நம் மக்கள் பொதுவாக எந்த விஷயத்தையும் மேலோட்டமாகவே பார்க்கின்றோம். அதன் அடித்தளங்களை ஆராய்வதில்லை. ஏதாவது நடந்ததும் காச் மூச் என்று கத்தி விட்டு அதை மறந்து விடுகின்றேன். விஷச் செடிகள் ஒன்று முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். வளர்ந்து விட்டது என்றால் அதை வேருடம் பிய்த்து எறியப்பட வேண்டும்.
இப்போதைய உலக மீடியாக்களில் டிரெண்டான So called தீவிரவாதத்தையே எடுத்துக் கொண்டாலும், பயங்கரவாதிகளின் செயல்கள் மட்டுமே கணக்கில் இருக்கின்றன. அவர்களின் உருவாக்கத்தை விட்டு விடப்படுகின்றன. மேலே கூறியது போல் மனிதன் இரண்டு நிலைகளில் தான் பயங்கரங்களில் இறங்குகின்றான்.
முதலாவது தன்னிடம் அதிகாரம் இருக்கும் போது.. எடுத்துக்காட்டுக்கு ஹிட்லர் முதல் சிங்கள பேரினவாதம் வரை தொடரலாம். இவர்கள் தங்களுக்கும், தங்களது தலைமைக்கும் அதிகாரம் இருப்பதால் இது போன்று தாண்டவமாடுகின்றனர். இரண்டாவது வகை இந்த அதிகார வர்க்கத்தால் பாதிப்புக்குள்ளானவர்களின் பயங்கரவாதம். இவ்வகையினருக்கு எதிராளியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே இருக்கும். தங்களது பாதிப்புகள் மட்டுமே இவர்களின் உள்ளங்களில் இருக்கும்.
முதல் வகையினர் தங்களது பயங்கரவாத செயல்களுக்கு பலப்பல நியாயங்களைக் கற்பிப்பார்கள். அவர்களுக்கு புதிய தலைமுறை நாடுகள் பூம்பூம் மாடு போல ஆமா சாமி போடும். அவர்களது செயல்கள் அனைத்திற்கும், அப்போதைக்கு அங்கீகாரம் பெரிதாகத் தரப்படும். கால ஓட்டத்திலேயே அதைப் பற்றிய கொடூரங்கள் வெளியே வரும். இதற்கு அமெரிக்கா நடத்தும் பயங்கரவாதங்களைக் கூறலாம்.
சரி.. .சரி.. புலம்பல் எங்கங்கோ உலக ரீதியில் போய்கிட்டே இருக்கு..இனி இந்தியாவுக்கு வரலாம். இந்தியாவுக்கு பயங்கரவாத செயல்கள் ஒன்றும் புதிதல்ல..... இந்த மண்ணுக்காக வரிசையாக நிற்க வைத்து இந்தியர்கள் கொல்லப்பட்ட காலமும் உண்டு. என்ன அப்போது ஒரு வாளால் ஒரு மனிதனைக் கொல்ல முடிந்தது. இன்று துப்பாக்கிகளும், Cyclotrimethylenetrinitramine, டெட்டர்னேட்டர்களும் வந்த பிறகு ஒரே தாக்குதலில் பலரைக் கொல்ல முடிகின்றது. தற்கொலைப்படை தாக்குதல்களும் அதிகமாக நடத்தப்படுகின்றது.
ஏன் இவைகள் என்று யோசித்தால் வரும் விடை தெளிவாக இருக்கின்றது... அது மக்களிடையே அரசியல் வியாதிகள் ஏற்படுத்தும் சில காரியங்களின் விடயம் தான். நாட்டுக்காக உயிரையும் கொடுக்க துணிவாக இருக்க வேண்டும் என்பது நம் இரத்ததில் ஏற்றப்பட்டுள்ளது. இதையே அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தங்களது சமூகத்திற்கு செய்யப்பட்ட அநீதிகளைக் கூறி வெறி ஏற்றி மூளைச் சலவை செய்யப்பட்டு தான் இது போன்ற தீவிரவாதிகள் உருவாகின்றனர். இதன் மூலம் இரண்டு புறமும் பலன் அடைபவர்கள் அரசியல்வாதிகளே..... தீவிரவாதிகளின் தாக்குதல்களை தங்களது மதத்துக்கு எதிரானதாக மாற்றி அதை ஓட்டு பொறுக்கும் வேலையைத் தான் இவர்கள் செய்கின்றனர். அதே போல் தான் அங்கும். மூளைச் சலவை செய்வதற்கான மூலக் கூறுகளை அறுத்து எரிய வேண்டியது தான் இன்றைய தேவை.
அடுத்தவர்களின் இரத்தத்தில் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவன் அமைதியடைவான். அனைவருக்கும் தெரிந்தே தவறு செயதவன் சுதந்திரமாக திரியும் போது பாதிக்கப்பட்டவனும் ஆயுதம் ஏந்துகின்றான்.
இதில் மதம் தான் குற்றவாளி? என்றால் இல்லை.. மதத்தின் பெயரால் வயிற்றையும், புகழையும் வளர்க்க நினைக்கும் கேடு கெட்ட மத வாதிகள் தான் குற்றவாளிகள்.
ஆயுதம் ஏந்துவபவனும் குற்றவாளி, ஆயுதம் ஏந்த வைத்தவனும் குற்றவாளி. இருவரும் தண்டிக்கப்பட்டால் தாம் தவறு செய்வதற்கு முன் எந்த மனிதனும் யோசிப்பான். இரண்டு எம்பி சீட்களுடன் உருவான ஒரு கட்சி மனிதப் பிணங்களின் மீது நடந்தும், இரத்த ஆறில் நீந்தியும் நாட்டையே ஆளும் அளவுக்கு வந்ததற்கு காரணமும் நாம் தான். நமது ஓட்டு என்னும் ஆயுதத்தை சரியாக பயன்படுத்தாதால் தான் இது போன்ற மதத்தாலும், ஜாதியாலும் மக்களிடையே இரத்தத்தை ஓட்டக் கூடியவர்கள் வெற்றி அடைகின்றனர்.
நமது ஓட்டை கட்சி , தலைவர் என்று பார்க்காமல் நல்லவர்களுக்கு போடவும், அப்படி வந்தவர்கள் தவறு செய்யும் போது அனைவரும் இணைந்து கண்டிக்கும் போதும் தான் இது போன்றவைகள் ஒழியும்.
Cyclotrimethylenetrinitramine = RDX
படம் நன்றி : sitnews
வன்முறைகளும், பயங்கரவாதச் செயல்களும் இந்த உலகிற்கு புதிதல்ல. கொஞ்சம் உற்றுக் கவனித்தோமேயானால் இது விளங்கும். கற்காலம் தொட்டு இது இருந்து வருகின்றது. முன்பு தனி மனிதன் தனது தேவைக்காக வன்முறையில் இறங்கினான். உணவு, பெண், இடத்திற்காகவே சக மனிதனுடன் தனது சண்டையைத் துவக்கினான்.
அதை அடுத்து மனிதன் கூட்டாக சமுதாயமாக வாழத் தொடங்கியதும், சமூகங்களுக்கு இடையேயும் சண்டை சச்ச்ரவுகள் ஆரம்பித்தன. இவைகள் இன்று வரைத் தொடர்கின்றன. கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனால் ஒரு தனி மனிதனை அழிக்கவே கஷ்டப்பட வேண்டி இருந்தது. துப்பாக்கி உள்ளிட்ட அழிவு ஆயுதங்கள் மனிதனிடம் வந்ததுமே இந்த அழிவு வேலை அதிகமானது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மக்கள் போர்க்களங்களில் மண் என்ற ஒரு ஆசைக்காக கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து மனிதனுக்கு மதம் என்ற மதம் பிடிக்க ஆரம்பித்ததும் இந்த படுகொலைகள் தொடர்கின்றன. அமைதியையும், சகிப்புத் தன்மையையும் போதிக்கும் மதங்களில் இருந்தும் கொலைகாரர்கள் உருவாக ஆரம்பித்தனர். இக்காலகட்டத்தில் மனிதன் தனது உணவுக்காக போராடுவது குறைந்து நம்பிக்கையின் அடிப்படையில் போராட ஆரம்பித்து விட்டான்.
இந்த போராட்டங்களில் நீட்சியை உற்றுக் கவனித்தால் எந்த சமூகம் அதிக அதிகாரமோ அல்லது அதிக நிராசையோ அடைகின்றதோ அது அடுத்தவர்களை துன்புறுத்தியதைப் பார்க்கலாம். கோவில் இடிக்கப்பட்டதும், சர்ச்கள் தகர்க்கப்பட்டதும், மசூதிகள் தரை மட்டமானதும் இதற்கு உதாரணங்கள். இந்தியாவில் சமணர்கள் அழிக்கப்பட்டதும், ஹிட்லரால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதும் இதற்கு மற்றொரு வடிவம்.
இப்போதைய சூழலில் நம் முன் இருக்கும் பயங்கரவாதம் மதத்தின் பெயரால் இருப்பவையே. தனி மனிதனுக்குள் இருக்கும் குரோதங்கள், சில வினாடி உந்துதலால் ஏற்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்த இயலாது. ஆனால் திட்டமிட்ட படுகொலைகள் வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டியவை.

எடுத்துக்காட்டுக்காக மும்பை கொடூரத்தையே எடுத்துக் கொண்டால் அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள். அவர்களின் நோக்கம் தெளிவாக இருந்தது. இயன்ற அளவு மக்களை அழிக்க வேண்டும். தாம் அழிவதைப் பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை. ஒரு மனிதனுக்கு உயிரை விட பெரிய விடயம் எதுவுமில்லை. அதை துச்சமாக நினைக்கும் நிலையிலேயே இந்த மிருகங்கள் இருந்திருக்கின்றன.
அதே போல் சமீபகால தீவிரவாத செயல்களுக்கு அச்சாணியாக கருதப்படும் 9/11 இரட்டைக் கோபுர தகர்ப்பையும் உற்று நோக்கினால் அதன் பிண்ணனியில் இருந்தவர்களும் இதே போன்ற மனநிலையில் இருந்தது விளங்கும். ஏன் இவர்கள் மாறினார்கள்? அல்லது மாற்றப்பட்டார்கள்.
நம் மக்கள் பொதுவாக எந்த விஷயத்தையும் மேலோட்டமாகவே பார்க்கின்றோம். அதன் அடித்தளங்களை ஆராய்வதில்லை. ஏதாவது நடந்ததும் காச் மூச் என்று கத்தி விட்டு அதை மறந்து விடுகின்றேன். விஷச் செடிகள் ஒன்று முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். வளர்ந்து விட்டது என்றால் அதை வேருடம் பிய்த்து எறியப்பட வேண்டும்.
இப்போதைய உலக மீடியாக்களில் டிரெண்டான So called தீவிரவாதத்தையே எடுத்துக் கொண்டாலும், பயங்கரவாதிகளின் செயல்கள் மட்டுமே கணக்கில் இருக்கின்றன. அவர்களின் உருவாக்கத்தை விட்டு விடப்படுகின்றன. மேலே கூறியது போல் மனிதன் இரண்டு நிலைகளில் தான் பயங்கரங்களில் இறங்குகின்றான்.
முதலாவது தன்னிடம் அதிகாரம் இருக்கும் போது.. எடுத்துக்காட்டுக்கு ஹிட்லர் முதல் சிங்கள பேரினவாதம் வரை தொடரலாம். இவர்கள் தங்களுக்கும், தங்களது தலைமைக்கும் அதிகாரம் இருப்பதால் இது போன்று தாண்டவமாடுகின்றனர். இரண்டாவது வகை இந்த அதிகார வர்க்கத்தால் பாதிப்புக்குள்ளானவர்களின் பயங்கரவாதம். இவ்வகையினருக்கு எதிராளியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே இருக்கும். தங்களது பாதிப்புகள் மட்டுமே இவர்களின் உள்ளங்களில் இருக்கும்.
முதல் வகையினர் தங்களது பயங்கரவாத செயல்களுக்கு பலப்பல நியாயங்களைக் கற்பிப்பார்கள். அவர்களுக்கு புதிய தலைமுறை நாடுகள் பூம்பூம் மாடு போல ஆமா சாமி போடும். அவர்களது செயல்கள் அனைத்திற்கும், அப்போதைக்கு அங்கீகாரம் பெரிதாகத் தரப்படும். கால ஓட்டத்திலேயே அதைப் பற்றிய கொடூரங்கள் வெளியே வரும். இதற்கு அமெரிக்கா நடத்தும் பயங்கரவாதங்களைக் கூறலாம்.
சரி.. .சரி.. புலம்பல் எங்கங்கோ உலக ரீதியில் போய்கிட்டே இருக்கு..இனி இந்தியாவுக்கு வரலாம். இந்தியாவுக்கு பயங்கரவாத செயல்கள் ஒன்றும் புதிதல்ல..... இந்த மண்ணுக்காக வரிசையாக நிற்க வைத்து இந்தியர்கள் கொல்லப்பட்ட காலமும் உண்டு. என்ன அப்போது ஒரு வாளால் ஒரு மனிதனைக் கொல்ல முடிந்தது. இன்று துப்பாக்கிகளும், Cyclotrimethylenetrinitramine, டெட்டர்னேட்டர்களும் வந்த பிறகு ஒரே தாக்குதலில் பலரைக் கொல்ல முடிகின்றது. தற்கொலைப்படை தாக்குதல்களும் அதிகமாக நடத்தப்படுகின்றது.
ஏன் இவைகள் என்று யோசித்தால் வரும் விடை தெளிவாக இருக்கின்றது... அது மக்களிடையே அரசியல் வியாதிகள் ஏற்படுத்தும் சில காரியங்களின் விடயம் தான். நாட்டுக்காக உயிரையும் கொடுக்க துணிவாக இருக்க வேண்டும் என்பது நம் இரத்ததில் ஏற்றப்பட்டுள்ளது. இதையே அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.
தங்களது சமூகத்திற்கு செய்யப்பட்ட அநீதிகளைக் கூறி வெறி ஏற்றி மூளைச் சலவை செய்யப்பட்டு தான் இது போன்ற தீவிரவாதிகள் உருவாகின்றனர். இதன் மூலம் இரண்டு புறமும் பலன் அடைபவர்கள் அரசியல்வாதிகளே..... தீவிரவாதிகளின் தாக்குதல்களை தங்களது மதத்துக்கு எதிரானதாக மாற்றி அதை ஓட்டு பொறுக்கும் வேலையைத் தான் இவர்கள் செய்கின்றனர். அதே போல் தான் அங்கும். மூளைச் சலவை செய்வதற்கான மூலக் கூறுகளை அறுத்து எரிய வேண்டியது தான் இன்றைய தேவை.
அடுத்தவர்களின் இரத்தத்தில் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவன் அமைதியடைவான். அனைவருக்கும் தெரிந்தே தவறு செயதவன் சுதந்திரமாக திரியும் போது பாதிக்கப்பட்டவனும் ஆயுதம் ஏந்துகின்றான்.
இதில் மதம் தான் குற்றவாளி? என்றால் இல்லை.. மதத்தின் பெயரால் வயிற்றையும், புகழையும் வளர்க்க நினைக்கும் கேடு கெட்ட மத வாதிகள் தான் குற்றவாளிகள்.
ஆயுதம் ஏந்துவபவனும் குற்றவாளி, ஆயுதம் ஏந்த வைத்தவனும் குற்றவாளி. இருவரும் தண்டிக்கப்பட்டால் தாம் தவறு செய்வதற்கு முன் எந்த மனிதனும் யோசிப்பான். இரண்டு எம்பி சீட்களுடன் உருவான ஒரு கட்சி மனிதப் பிணங்களின் மீது நடந்தும், இரத்த ஆறில் நீந்தியும் நாட்டையே ஆளும் அளவுக்கு வந்ததற்கு காரணமும் நாம் தான். நமது ஓட்டு என்னும் ஆயுதத்தை சரியாக பயன்படுத்தாதால் தான் இது போன்ற மதத்தாலும், ஜாதியாலும் மக்களிடையே இரத்தத்தை ஓட்டக் கூடியவர்கள் வெற்றி அடைகின்றனர்.
நமது ஓட்டை கட்சி , தலைவர் என்று பார்க்காமல் நல்லவர்களுக்கு போடவும், அப்படி வந்தவர்கள் தவறு செய்யும் போது அனைவரும் இணைந்து கண்டிக்கும் போதும் தான் இது போன்றவைகள் ஒழியும்.
Cyclotrimethylenetrinitramine = RDX
படம் நன்றி : sitnews
Saturday, November 1, 2008
US Election 08 - ஒபாமா தோற்கடிக்கப்பட பிரார்த்திக்கலாம்! வாருங்கள்!
முதலில் அனைவரும் ஒரு நிமிடம் அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா தோல்வியடைய வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளுங்கள்!
__/\__
__/\__
__/\__
__/\__
__/\__
__/\__
__/\__
__/\__
உங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி!]
ஏன் ஒபாமா தோற்கடிக்கப்பட வேண்டும்?
விபத்தில் அடிபட்டு கோரமாகி கோமாவில் இருக்கும் போது, அவரைப் பார்க்க வருபவர்கள் கூறுவார் “ இதுக்கு பேசாமல் அந்த விபத்துலயே ஒரேயடியாய் போய் இருந்தாலாவது நிம்மதியா ஆகி இருக்கும்” ஊரில் சில நேரங்களில் இது போல் விரக்தியில் சொல்வார்கள்.
இதே நிலையில் தான் அமெரிக்காவின் பொருளாதார சூழல் இருக்கின்றது. கடந்த 8 ஆண்டுகளாக புஷ் என்ற மனித குல எதிரி செய்த லூசுத்தனமான செயல்களால் உலகம் முழுவதும் அமைதியின்மை நிலவுகின்றது. அதே போல் விவேகமில்லாத போர் முன்னெடுப்புகளாலும், பொருளாதார கொள்கைகளாலும் உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்ததிலும் முக்கிய பங்கு அவருக்கு உள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் நாளை (நவம்பர் 4) அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் சார்பில் பராக் ஒபாமாவும், ஜான் மெக்கய்னும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு அமோக ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் கடைசி கட்டத்தில் முடிவு செய்யும் வாக்காளர்களின் முடிவைப் பொறுத்தை இறுதி வெற்றி அமையும்.
ஒபாமா தோற்கடிக்கப்பட ஏன் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்:
1. ஒபாமா வெற்றிபெற்றால் ஈராக், ஆப்கன் போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறும் என்று அறிவித்துள்ளார். இதனால் உலகில் இருக்கும் ஆயுத வியாபாரிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அந்த கொடியவர்கள் தங்களது ஆயுத வியாபாரத்திற்காக எவரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள்.
2. பிற நாடுகளில் தனது ஆளுமையை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என் ஒபாமாவின் பேச்சின் மூலம் தெரிய வருகின்றது. இவ்வாறு செய்தால் அமெரிக்காவுக்கு அடி வருடுவதையே தொழிலாகக் கொண்ட பல நாட்டு அரசியல் தலைவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் வாய்ப்பு ஏற்று விடும். குறிப்பாக இந்தியா போன்ற நாட்டு தலைவர்களை மேற்கத்திய வழக்கத்தின் படி நடத்த ஆள் இல்லாததால் திக்குத் தெரியாமல் திணறக் கூடும். பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது நாட்டின் ஜனாதிபதியாக இதுவரை விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இது உலகிற்கு பேராபத்தாக முடியும்.
3.அமெரிக்க பொருளாதாரம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. உயரக் கூடிய எதும் ஒருகட்டத்தில் கீழே வந்தே தீரும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பது போல் உள்ளது. இந்த நிலையில் ஒபாமா அதிபராவதன் மூலம் பொருளாதாரம் மேலும் சீரழிந்தால், ஒபாமா போன்ற கறுப்பர் ஒருவர் வந்ததே இதற்கு காரணம் என அமெரிக்க மக்களிடம் விஷம பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இனி அமெரிக்க அரசியலில் மீண்டும் ஒரு கறுப்பர் அதிபராகும் வாய்ப்பு நிரந்தரமாக பறி போக வாய்ப்பு உள்ளது.
4. ஒபாமாவில் ஸ்லோகமே மாற்றம் என்பது தான். ஆனால் அமெரிக்க செனட் என்பதே மாற்றங்களை விரும்பாத மாமாக்களைக் (வடிவேலுவை புஷ்ஷூடன் ஒப்பிட்டு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல) கொண்டதே... இதனால் ஒபாமாவுக்கும், செனட்டுக்கும் இடையே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. ஒரு கட்டத்தில் ஒபாமா காம்பரமைஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது.
5. ஒபாமாவுக்கு கப்பலில் ஏற்படும் ஓட்டையை அடைக்க மட்டுமே தெரியும். ஆனால் அடித் தளமே ஓட்டையாகிப் போன கப்பலை காப்பாற்ற வழி தெரியாது. (மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாவதில் எந்த பயனும் இல்லை)
6.ஒபாமா நிறத்தால் கறுப்பரானாலும், அதை பயன்படுத்தி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடாத போதும், அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் இந்த நிறவெறியை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் இது ஒரு கறுப்பு - வெள்ளையருக்கு இடையேயான பிரிவை மேலும் அதிகரிக்க விரும்புகின்றனர். ஒபாமா வெற்றி பெறுவதன் மூலம் இந்த வெறி அதிகமாகி விடும்.

டிஸ்கி : மக்களே உங்கள் ஓட்டுக்களை பராக் ஒபாமா மற்றும் பிடேனுக்கே செலுத்துங்கள். (மனசாட்சி என்ற மண்ணாங்கட்டி : நீ சொல்லித் தான் ஓட்டுப் போடப் போறாங்களாக்கும்?) என்னடா ஒபாமா தோற்க வேண்டும் என்று சொல்லி விட்டு ஒபாமாவுக்கு ஓட்டு கேட்டு வருகிறான் என்று யோசிக்காதீர்கள். நமது ஓட்டு வீணானால் நம்மை இந்த வரலாறு மன்னிக்காது. அதே சமயம் அந்த ஓட்டு மெக்கெய்னுக்கு போய் விட்டால் அவர் அடுத்து செய்யப் போகும் அனைத்து படுகொலைகளுக்கும் நீங்களே பொறுப்பு.
புஷ்ஷூக்கு ஓட்டுப் போட்ட பாவம் தான் அமெரிக்காவின் பொருளாதார சீரழிவுகளும், வேலையில்லா திண்டாட்டங்களும் அதிகமாக காரணம் என கஞ்சாக்குடி சித்தர் தனது ஞான திருஷ்டியில் பார்த்து கூறியுள்ளார்.
__/\__
__/\__
__/\__
__/\__
__/\__
__/\__
__/\__
__/\__
உங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி!]
ஏன் ஒபாமா தோற்கடிக்கப்பட வேண்டும்?
விபத்தில் அடிபட்டு கோரமாகி கோமாவில் இருக்கும் போது, அவரைப் பார்க்க வருபவர்கள் கூறுவார் “ இதுக்கு பேசாமல் அந்த விபத்துலயே ஒரேயடியாய் போய் இருந்தாலாவது நிம்மதியா ஆகி இருக்கும்” ஊரில் சில நேரங்களில் இது போல் விரக்தியில் சொல்வார்கள்.
இதே நிலையில் தான் அமெரிக்காவின் பொருளாதார சூழல் இருக்கின்றது. கடந்த 8 ஆண்டுகளாக புஷ் என்ற மனித குல எதிரி செய்த லூசுத்தனமான செயல்களால் உலகம் முழுவதும் அமைதியின்மை நிலவுகின்றது. அதே போல் விவேகமில்லாத போர் முன்னெடுப்புகளாலும், பொருளாதார கொள்கைகளாலும் உலக பொருளாதாரத்தை நிலைகுலைய செய்ததிலும் முக்கிய பங்கு அவருக்கு உள்ளது.
இந்த சூழ்நிலையில் தான் நாளை (நவம்பர் 4) அமெரிக்காவில் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடக்கவுள்ளது. இதில் சார்பில் பராக் ஒபாமாவும், ஜான் மெக்கய்னும் போட்டியிடுகின்றனர்.
இத்தேர்தலில் போட்டியிடும் பராக் ஒபாமாவுக்கு அமோக ஆதரவு இருப்பதாகக் கருதப்படுகின்றது. ஆனாலும் கடைசி கட்டத்தில் முடிவு செய்யும் வாக்காளர்களின் முடிவைப் பொறுத்தை இறுதி வெற்றி அமையும்.
ஒபாமா தோற்கடிக்கப்பட ஏன் பிரார்த்திக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்:
1. ஒபாமா வெற்றிபெற்றால் ஈராக், ஆப்கன் போன்ற நாடுகளில் இருந்து அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறும் என்று அறிவித்துள்ளார். இதனால் உலகில் இருக்கும் ஆயுத வியாபாரிகளின் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அந்த கொடியவர்கள் தங்களது ஆயுத வியாபாரத்திற்காக எவரையும் கொலை செய்ய தயங்கமாட்டார்கள்.
2. பிற நாடுகளில் தனது ஆளுமையை அமெரிக்கா குறைத்துக் கொள்ளும் என் ஒபாமாவின் பேச்சின் மூலம் தெரிய வருகின்றது. இவ்வாறு செய்தால் அமெரிக்காவுக்கு அடி வருடுவதையே தொழிலாகக் கொண்ட பல நாட்டு அரசியல் தலைவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் வாய்ப்பு ஏற்று விடும். குறிப்பாக இந்தியா போன்ற நாட்டு தலைவர்களை மேற்கத்திய வழக்கத்தின் படி நடத்த ஆள் இல்லாததால் திக்குத் தெரியாமல் திணறக் கூடும். பாகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களது நாட்டின் ஜனாதிபதியாக இதுவரை விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி இல்லாமல் கஷ்டப்படுவார்கள். இது உலகிற்கு பேராபத்தாக முடியும்.
3.அமெரிக்க பொருளாதாரம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. உயரக் கூடிய எதும் ஒருகட்டத்தில் கீழே வந்தே தீரும் என்ற கோட்பாடு நடைமுறைக்கு வந்து கொண்டிருப்பது போல் உள்ளது. இந்த நிலையில் ஒபாமா அதிபராவதன் மூலம் பொருளாதாரம் மேலும் சீரழிந்தால், ஒபாமா போன்ற கறுப்பர் ஒருவர் வந்ததே இதற்கு காரணம் என அமெரிக்க மக்களிடம் விஷம பிரச்சாரம் செய்யும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இனி அமெரிக்க அரசியலில் மீண்டும் ஒரு கறுப்பர் அதிபராகும் வாய்ப்பு நிரந்தரமாக பறி போக வாய்ப்பு உள்ளது.
4. ஒபாமாவில் ஸ்லோகமே மாற்றம் என்பது தான். ஆனால் அமெரிக்க செனட் என்பதே மாற்றங்களை விரும்பாத மாமாக்களைக் (வடிவேலுவை புஷ்ஷூடன் ஒப்பிட்டு நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல) கொண்டதே... இதனால் ஒபாமாவுக்கும், செனட்டுக்கும் இடையே பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. ஒரு கட்டத்தில் ஒபாமா காம்பரமைஸ் ஆகவும் வாய்ப்பு உள்ளது.
5. ஒபாமாவுக்கு கப்பலில் ஏற்படும் ஓட்டையை அடைக்க மட்டுமே தெரியும். ஆனால் அடித் தளமே ஓட்டையாகிப் போன கப்பலை காப்பாற்ற வழி தெரியாது. (மூழ்கும் கப்பலுக்கு கேப்டனாவதில் எந்த பயனும் இல்லை)
6.ஒபாமா நிறத்தால் கறுப்பரானாலும், அதை பயன்படுத்தி ஓட்டு சேகரிக்கும் முயற்சியில் ஈடுபடாத போதும், அவரை எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் இந்த நிறவெறியை மறைமுகமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் இது ஒரு கறுப்பு - வெள்ளையருக்கு இடையேயான பிரிவை மேலும் அதிகரிக்க விரும்புகின்றனர். ஒபாமா வெற்றி பெறுவதன் மூலம் இந்த வெறி அதிகமாகி விடும்.
டிஸ்கி : மக்களே உங்கள் ஓட்டுக்களை பராக் ஒபாமா மற்றும் பிடேனுக்கே செலுத்துங்கள். (மனசாட்சி என்ற மண்ணாங்கட்டி : நீ சொல்லித் தான் ஓட்டுப் போடப் போறாங்களாக்கும்?) என்னடா ஒபாமா தோற்க வேண்டும் என்று சொல்லி விட்டு ஒபாமாவுக்கு ஓட்டு கேட்டு வருகிறான் என்று யோசிக்காதீர்கள். நமது ஓட்டு வீணானால் நம்மை இந்த வரலாறு மன்னிக்காது. அதே சமயம் அந்த ஓட்டு மெக்கெய்னுக்கு போய் விட்டால் அவர் அடுத்து செய்யப் போகும் அனைத்து படுகொலைகளுக்கும் நீங்களே பொறுப்பு.
புஷ்ஷூக்கு ஓட்டுப் போட்ட பாவம் தான் அமெரிக்காவின் பொருளாதார சீரழிவுகளும், வேலையில்லா திண்டாட்டங்களும் அதிகமாக காரணம் என கஞ்சாக்குடி சித்தர் தனது ஞான திருஷ்டியில் பார்த்து கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)