எந்த நட்சத்திரமும் தெரியாத கான்க்ரீட் வானத்தில்
எதையோ தேடியவனாக
வீட்டுப் படுக்கையில் சயனித்திருந்த போது
ஒரு மூலையில் இருந்து அது வெளியேற ஆரம்பித்து
சின்னதாய்.. வெறும் தோலாய்..
கணிணி மானிட்டரின் மெல்லிய வெளிச்சத்தில்
ராக்கெட் எஞ்சினின் பாதையைக் கணக்கிடும்
விஞ்ஞானி போல அதைப் பின் தொடர்ந்தேன்.
எரிச்சலாக இருந்தது.. வழக்கம் போல்
தமிழ் மணத்தில் F5 தட்டி பார்த்த போது
இன்னும் எரிச்சல் கூடி இருந்தது..
இப்போது மீண்டும் மோட்டு வளையில் பார்வை
எருமையை விட பெரும் பொறுமை தேவைப்பட்டது
மெல்ல மெல்ல அது நகர்ந்தது
என் படுக்கையை ஒட்டி சுவரில் ஊறியது.
ஆங்காங்கே ஒட்டி இருந்த
மாஸ்க்கிங் டேப் தடைகளைக் கடந்து
200 அடித்த சச்சின் போல பொறுமையாக
என் படுக்கைக்கு அருகில் வந்து இருந்தது
ஏனோ சுவாரஸ்யம்.. அதிகமாகி இருந்தது
அதை ஈர்க்க ஏனோ மனம் துடித்தது.
கையை மெதுவாக நகர்த்தி
அழுக்காகி இருந்த சுவற்றின் அருகே வைத்தேன்.
மிக மெதுவாக இறங்கி என் கையை முகர்ந்தது
வெள்ளையாய் இருந்த தோள்களில் சிவப்பு நிறம்
எந்த சிக்கலும் இல்லாமல் இரத்தம் உறிஞ்சுதல்
மகிழ்வில் உடம்பு புடைத்த அந்த அறைவாசி
தன் பாதை வழியே திரும்பிப் போனது.
டிஸ்கி: ஒரு முட்டைப்பூச்சி கடித்ததை கவிதையா எழுத நினைத்தேன்... ஹிஹிஹி இப்படி தான் வருது.. நான் என்னசெய்யட்டும். நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்கன்னா திரும்ப இது மாதிரி நடக்காது.. நல்லா இல்லைன்னு சொன்னா அப்புறம் கரப்பான் பூச்சி, பல்லி, பாச்சான், தேள், பூரான் எல்லாத்தையும் கவிதையில் வர வைக்க வேண்டி இருக்கும். பூனை மட்டும் பி.ந.வாதிகளுக்கானது என்பதால் விட்டு வைப்போம்.



