Showing posts with label பா.கே.ப. Show all posts
Showing posts with label பா.கே.ப. Show all posts

Thursday, February 11, 2010

வேங்கையின் மைந்தன், Apocalypto, கீரைக்காரன்

கேட்டது.

என்னுடன் வேலை செய்யும் ஒரு பணியாளர் இந்திய-நேபாள எல்லையைச் சேர்ந்தவர். அவர்களது மொழி மைதிலி எனப்படும் ஒருவகை ஹிந்தி.. போஜ்பூரி போல... ஆனா போஜ்பூரியை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். ஆனா மைதிலி கஷ்டம்.. :( அது இருக்கட்டும்.... கொஞ்சம் கிராமத்து ஆள் மாதிரி.. விவசாயம், ஆடு,மாடு மேய்ப்பது என்று இருந்தவன். பால்ய விவாகம் செய்யும் வழக்கம் உள்ள கிராமங்கள் அவை. அவனுக்கும் சிறு வயதில் திருமணம் வேறு ஆகி இருக்கின்றது.

ஒரு முறை வழக்கம் போல் மாடு மேய்க்கச் சென்று இருக்கின்றான். ஊருக்கு வெளியே காட்டுப்பகுதிகளில் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வயலில் நல்ல கீரை(பாலக்) விளைந்து இருந்திருக்கின்றது. பையனுக்கு பார்த்ததும் கை அரிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நைசாக தோட்டத்திற்குள் இறங்கி கீரையை பறிக்க ஆரம்பித்து இருக்கின்றான். திடீரென்று எங்கிருந்தோ ஒரு இளம்பெண் வந்து இவனை வளைத்துக் கொண்டாள். அவள் அந்த தோட்டத்தின் உரிமையாளரின் மகள்.

இவனைப் பிடித்துக் கொண்டு கூச்சல் போட மாடுகளை விட்டு விட்டு ஓட முடியாத சூழலால் அமைதியாக இருந்து விட்டான். அவளது கூச்சலைக் கேட்டு பலரும் ஓடி வர இவன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டான். அங்கு வந்த உரிமையாளர் இவனைக் குறித்து விசாரிக்க தனது கிராமத்தின் பெயரை சொல்லி இருக்கின்றான். வரிசையாக தெரு, வீடு, அப்பா பெயர் , தன் பெயர் எல்லாம் சொல்ல அந்த தோட்டக்காரர் அவன் பறித்த கீரையுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து அவனை நல்லபடியாக வழி அனுப்பி வைத்தாராம்.. ஏன் என்று யோசிங்க பார்க்கலாம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&


படித்தது:

வரலாற்று நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு அலாதி இன்பம் இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் படித்தது அகிலன் எழுதிய ‘வேங்கையின் மைந்தன்’.

இது இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது. பதிவிறக்கி படித்துக் கொள்ளலாம். http://www.scribd.com/document_downloads/24812602?extension=pdf
நன்றி : பிகேபி வலைப்பதிவு

இதுவும் வழக்கமான ஒரு சோழப் புகழ் பாடும் நாவல்தான். பொன்னியின் செல்வனின்(இராஜராஜ சோழன்) மகனான வேங்கையின் மைந்தன்(இராஜேந்திர சோழன்) பற்றியது. பொன்னியின் செல்வனோடு ஒப்பிடும் அளவில் இல்லையென்றாலும், படிக்க சுவாரஸ்யமாகத் தான் இருந்தது. பொன்னியின்செல்வனில் வந்தியதேவன் கதாநாயகன் என்றால் இங்கு இளங்கோவேள் என்ற கொடும்பாளூர் இளவரசன்.

இராஜேந்திரரும் கொஞ்ச வயசானவராக இருக்கின்றார். வழக்கமான தமிழ் ஹீரோ போன்ற அதி புத்திசாலி அரசர்.. அவருக்கு உறுதுணையாக சில அரசியல் வீர வீத்தகர்கள். வந்தியதேவன் இருக்கிறார். ஆங்காங்கே வந்தியதேவன், குந்தவையின் காதல் காட்சிகளை பொன்னியின் செல்வனில் இருந்து மனக்கண்ணில் ரசிக்க முடிகின்றது. திடீர் திருப்பங்கள் இல்லாத ஒரு நாவல். சில நேரங்களில் காலம் செல்லும் வேகத்திற்கு பயணிக்க இயலாமல் போய் விடுகின்றது.

இரண்டு கதாநாயகிகள். ரோகினி என்ற இலங்கைப் பெண், அருள் மொழி என்ற இராஜேந்திரரின் மகள். காதல், வீரம் இரண்டும் தான் வேங்கையின் மைந்தனை இட்டுச் செல்கின்றது. ரோகிணி தோல்வியைத் தழுவும் இலங்கை மன்னரின் மகள். முதலில் இருந்தே ஒரே அழுக்காச்சி காவியம். சில இடங்களில் காதலன் மற்றும் நாட்டுப்பாசத்திற்கு இடையில் கிடந்து உழல்கின்றாள்.

வீர தீர பிரதாபங்களும், அதன் வர்ணனைகளும் சுமார் தான். பாண்டிய நாட்டின் மணி முடியையும், இந்திரனின் ஆரத்தையும் தனி ஒருவனாக சண்டையிட்டு கொண்டு வருகின்றார் கதாநாயகன். கொஞ்சம் பில்டப்புடன் தெலுங்கு சினிமா பார்த்த பாதிப்பு வருகின்றது.

மற்றபடி படிக்க வேண்டிய வரலாற்று நாவல்களில் ஒன்று.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

பார்த்தது :

சமீபத்தில் பார்த்த ஒரு படம் அபகலிப்டோ... ஒரு சமூகத்தின் அழிவை கண் முன் கொண்டு வந்த படம். அற்புதமான காட்டுப்பகுதியில் படம் படமாக்கப்பட்டு இருக்கின்றது.கிராபிக்ஸ் உறுத்தல்கள் இல்லாமல் இயற்கையாக இருப்பது போன்ற தோற்றமே படம் முழுவதும்.. தென் அமெரிக்க காட்டுகளுக்குள் நடக்கும் இன மோதல்களின் வழியே தங்களுக்குள் எப்படி அழித்துக் கொண்டனர் என்பதை சிம்பிளாக சொல்லும் படம்.

பொதுவாக ஸபானியர்கள் அமெரிக்க கண்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பழங்குடியினரை அழித்ததாகத் தான் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.. இதில் பல கருத்து வேறுபாடு இருந்தாலும், இப்படம் அப்பழங்குடியினர் தங்களுக்குள் சண்டையிட்டு அழித்துக் கொண்டனர் என்பதை நாசூக்காக சொல்லும் முயற்சியோ என்ற தோற்றம் கூட வந்தது. ஆனாலும் சிறு குழுக்களுக்கு இடையே இது போன்ற மோதல்கள் இருந்ததை ஒத்துக் கொள்ள வேண்டி தான் வரும்.

இப்படத்தில் ஒரு அதி அற்புதமான காட்சி கண்டிப்பாக காண வேண்டியது. கதாநாயகியின் பிரசவக் காட்சி.. ஒரு கிணற்றுக்குள் அவளும், அவளது சிறு மகனும் இருக்க மழை காரணமாக கிணற்றுக்குள் தண்ணீர் நிறைய ஆரம்பிக்கின்றது. அவ்வேளையில் பிரசவ வலியில் அவள் துடிக்க, தண்ணீருக்குள் குழந்தை பிறக்கின்றது. இதை வர்ணிப்பதை விட நேரடியாகப் பார்த்தால் அதை அனுபவிக்கலாம்... இது சாதாரணமாக எல்லாரும் பார்க்க வேண்டிய காட்சி தான்... திட நெஞ்செமெல்லாம் வேண்டாம்.


இதன் 1:50 வினாடிகளில் இருந்து 2:45 வரை பாருங்கள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

கீரைக்காரனுக்கு விடை... அந்த பெண் அவன் சிறு வயதில் திருமணம் முடித்திருந்த பெண். அவர் அவனது மாமனாராம்.. சிறு வயதில் திருமணம் முடிந்து விட்டு மாப்பிள்ளையும், பொண்ணும் அவரவர் வீட்டில் இருப்பார்களாம். பெரியவர்களானதும் இருவரையும் இணைத்து வைப்பார்களாம். இதை அடிக்கடி சொல்லி சக பணியாளர்கள் அவனை கலாய்ப்பார்கள்.

Tuesday, August 11, 2009

பாரி ஒரு நிஜமான வள்ளலா? பா.கே.ப

கேட்டது:

இரண்டு நண்பர்களின் விவாதத்தைக் கேட்க நேர்ந்தது. விவாதம் WI-FI எனப்படும் கம்பி இல்லாத இணைய தொடர்பு பற்றியது. இங்கு WI-FI தொழில்நுட்பம் பெருமளவு பயன்படுத்தப் படுகின்றது. இப்போது கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான DSL மோடம்களில் ஒயர்லெஸ் வசதியும் இணைந்தே இருக்கின்றது.

WI-FI மூலம் பெரிய ஹோட்டல்களில், ஷாப்பிங் மால்களில், விமான நிலையங்களில் இலவசமாக இணைய இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகின்றது. அதே நேரம் ஒயர்லெஸ் வசதியுள்ள மோடம்களை வாங்கி பயன்படுத்தும் சாமானியர்களில் இணைய வசதியும் வெளியே கசிகின்றது. இதன் அலைநீளம் அவர்களை சுற்றி சில மீட்டர்கள் தூரம் வரை செல்கின்றது. இதை தடை செய்வது பற்றி விவரம் குறைவானவர்களில் இணைய வசதியை அவரது வீட்டைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

விவாதம் பெரிய அளவில் WI-FI வசதியை அளிப்பதைப் பயன்படுத்துவதைப் பற்றி அல்ல. தனது சுய பயன்பாட்டுக்கு மற்றவர்கள் வைத்து இருக்கும் இணையத்தை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்துவது குறித்து தான். ஒருவர் “இலவசமாக நம்மைத் தேடி காற்றில் வருகின்றதைத் தான் பயன்படுத்துகின்றோம். ஊரில் கசியும் கேபிள் டீவி சிக்னலை பயன்படுத்திக் கொள்வது போல் தான். இதில் தவறேதுமில்லை” என்கின்றார்.

மற்றவர் “இது சரியாகாது. அவர்களது இணைய இணைப்பிற்கு அவர் பணம் செலுத்துகின்றார். அவரது இணைய பயன்பாட்டு அளவில் கணிசமானதை நீங்கள் பயன்படுத்திக் கொள்கின்றீர்கள். நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அவரது இணைய இணைப்பின் வேகமும் பாதிக்கபடும்.” என்று விவாதம் செய்தார்.

இரண்டாமவர் சொல்லும் கருத்தோடு நான் ஒத்துப் போனேன். மற்றவர்களில் இணைய Bandwith ஐ அவருக்கு தெரியாமல் பயன்படுத்துவது, வீடு திறந்திருக்கின்றது என்பதற்காக அதனுள் நுழைந்து திருடுவது போன்றது.

படித்தது….

சீரியஸா அதை யோசிச்சுக்கிட்டே இருங்க… நான் உங்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்கின்றேன். வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் என்னோடு கற்பனைக் குதிரையில் பிரயாணித்து பின்னோக்கி வாருங்கள். (நன்றி:கல்கி) நாம் இப்போது ஒரு மலையடிவாரத்தில் இருக்கின்றோம். மலை தெரிகின்றதா? கரடு முரடான மலை. அங்காங்கே தேனடைகள் தெரிகின்றதா? நாம் இருக்கும் இடம் பறம்பு மலை என்று சொல்லப்படும் பிரான்மலை. மேலே தெரிகின்றதே அந்த கோட்டையில் தான் பாரி என்று சொல்லப்படும் கடையேழு வள்ளல்களில் ஒருவர் இருக்கின்றார்.

மலையேறி அவரைப் பார்க்க முடியாது நம்மால.. எப்படியும் 7, 8 மி.மீ தூரம் நடக்கனும். அதெல்லாம் கவைக்கு உதவாது... இருங்க.. ஏதோ சத்தம் கேட்கிறதே.. என்னது? அட ஆமா.. குதிரைகளின் கனைத்தல்களும், யானைகளின் கேட்கின்றனவா? பாரியின் இந்த பறம்பு மலையை மூவேந்தர்களும் முற்றுகை இட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. பாரியை முற்றுகை இட்டு, எந்த உணவுப் பொருளும் மேலே செல்ல விடாமல் அக் குறிஞ்சி நில மக்களை பட்டினியால் அடக்க நினைக்கின்றனர்.

சரி.. மலையைப் பார்த்தது போதும். வாங்க நிகழ்காலத்திற்கு செல்லலாம். நம்ம கணிணியை திறந்து இணையத்திற்குள் தேடலாம். இது பற்றி.. நம்ம கூடல் குமரன் ஐயாவோட உடுக்கை இழந்தவன் கை என்ற பாரியின் கதையைப் படிக்கலாம். இது புறநானூற்றின் ஒளியில் எழுதப்பட்டுள்ளது. அதில் கபிலர் இதைப் பற்றி என்ன சொல்றாருன்னா…

அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே


இன்னா சொல்ல வருகிறார்ன்னா.. நீங்க மூவேந்தரும் என்ன செஞ்சாலும் இந்த மலையில் இருந்து அவர்களை கீழே வர வைக்க முடியாது. அதே போல் நீங்களும் இந்த மலை மேல ஏறிப் போய் போரிடவும் முடியாது. மலை முற்றுகை பட்டினிக்கும் வழி வகுக்காது. ஏன்னா இந்த மலையில் உழவர்களால் உழாமலேயே கிடைக்கக் கூடிய நான்கு உணவுப் பொருள் சுலபமா கிடைக்குது. 1. சிறிய இலையை உடைய மூங்கில் மரத்தில் வளர்க்கப்படும் நெல் 2. பலாப் பழங்கள் 3. வள்ளிக் கிழங்கு 4. தேன்.

இத்தோட முடிச்சிக்கலாம்… இப்ப என்ன பிரச்சினைன்னா வேற சில மேற்கோள்களில் முற்றுகையின் போது கபிலர் பழக்கப்படுத்த கிளிகளைப் பயன்படுத்தி விவசாய நிலங்களில் இருந்து தானியங்களை கொய்து வரச் செய்து, உணவு உண்டாதாக வருது. நிறைய இடங்களில் இது மாதிரி படித்து இருக்கேன். கபிலரே தெளிவாக சொல்லி இருக்கிறார். இந்த நான்கு வகை உணவுகளை வைத்து வாழ்கிறோம் என்று..

பாரி அள்ளி அள்ளித் தரும் வள்ளல். அவன் தனது கோட்டை மக்களுக்கு கிளிகள் திருடி வரும் உணவை எப்படி வழங்கி இருப்பான்? லாஜிக் உதைக்குதே… கபிலர் சொன்னது சரின்னா… இந்த கிளி மேட்டரு தப்பு. கிளி மேட்டரும் சரின்னா பாரி செய்தது ஏமாற்று வேலை அல்லது திருட்டுத்தனம். (கிளி மேட்டருக்கு தரவு இருந்தா கொடுங்க மக்களே)

கிளிகள் திருடி வருவது பாரியின் ஆளுகைக்கு உட்பட்ட நிலம்ன்னு யாரும் ஜால்ஜாப்பு சொல்ல முடியாது. ஏன்ன அது பற்றி கபிலர் இப்படிச் சொல்கிறார்.

கடந்தடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினர் செலினே"


அவனது ஆளுகையில் இருந்த 300 ஊர்களையும் ஏற்கனவே பரிசிலர்களுக்கு பாரி தானமாக வழங்கி விட்டான். மிச்சம் இருப்பது இந்த மலையும், நானும், பாரியும் தான் என்கிறார் கபிலர்.

கிளி மேட்டர் பலர் மேற்கோள் காட்ட படித்து இருக்கிறேன். இணையத்தில் தேடியதில் கிடைத்ததில் எடுத்துக்காட்டு இரண்டு.

http://www.nilacharal.com/tamil/research/tamil_literature_233.asp


http://www.dinamalar.com/siruvarmalar/smrjuly_0407/minithodar.asp


இது குறித்து தெரிந்தவர்கள் விளக்குங்கள்...

பார்த்தது:

லக்! (Luck)செம லக்குங்க.. உலகத்தில் சிலருக்கு தான் அதிர்ஷ்டக் காத்து எப்பவுமே அடிக்கும். அப்படிப்பட்ட சிலரை தேர்ந்தெடுத்து மோத விடுவது தான் படம். சும்மா ஜெட் வேகத்தில் போகுது. வழக்கம் போல நம்ம சஞ்சூ பாபா கலக்கி இருக்கார். சிக்ஸ் பேக், செவன் பேக் எல்லாம் காட்டல.. ஆனா கலக்குறார். சும்மா குர்தா, பைஜாமா, கோட் போட்டுக்கிட்டு நடந்து வருவதைக் காண கண் கோடி வேண்டும்.



இம்ரான் கானுக்கு பதிலா வேற யாருக்கு அந்த கதாபாத்திரத்தைக் கொடுத்து இருக்கலாம். சொதப்பிட்டார். ஸ்ருதி ஹாசன். நம்ம கமல் பொண்ணு. முக சாயலைத் தவிர வேற ஒன்னும் கமலிடம் இருந்து வரவில்லை. முக்கியமா நடிப்பு.

ஸ்ருதி நீச்சல் குளத்தில் இருந்து வரும் போதும், இன்னும் சில காட்சிகளிலும் பார்க்கும் போது ஏனோ பரிதாப உணர்ச்சி தான் வந்தது. வேற ஏதும் தோணலை.

லக்கியின் விமர்சனத்தையும் படிக்கலாம்.