\\\\ துளித் துளியாய் சேகரித்து
மெழுகினில் புகுத்தி இனிமை சேர்க்கும்
அழகிய தேன் கூட்டை
சிதறித் தெளிக்கிறது ஒற்றைக் கல்!
உயிர்ப்பச்சை நீர்த்து வாடிய பயிர்களில்
எதிர்பாராமல் சூல் கொள்ளும் மேகங்கள்
இயற்கை இருப்பை நிலை நிறுத்தி
சொட்டு சொட்டாய் நிரம்பும் உயிர் நீர்!
மேகங்களின் நகர்வில் மிதந்திடும் நிலவை
விழியோர புருவங்களால் வளைத்தெடுக்க
குறும்பை கொப்பளிக்கும் இமைகள்
வரைந்திடும் எழிலோவியங்கள் விழித்திரையில்
நிறைவேறா கணங்களின்
நிறங்கள் குழைத்து
சிறகில் தெளித்து
சிறகடிக்கிறது
கனவுப் பறவை!
வண்ணங்கள் களவோடு
எண்ணங்கள் விரிய
நிறங்கள் உமிழ்ந்து
நிறமிழக்கின்றன விழிகள்
விழிநிலையில்! \\\
பாஸ்.. நீங்க பெரிய கவிஞரா இருக்கலாம்..
ஆனால் இதை எல்லாம் வாசிச்சா
எங்களுக்கு ஒன்னும் புரியல..
கண்ணுல பச்சை மிளகாயை
வச்சு தேய்ச்சு,
மூக்குல மிளகாய்
பொடியை திணிச்சு,
காதுல மிளகாய்
பொடியை நுழைச்சு,
வாயில மல்லிப்
பொடியை அள்ளிக் கொட்டி,
உடம்பு பூரா
புளிய விளாரால் விளாசி
உப்பு வச்சு தேய்ச்சு
விஜயோட மசாலா படம் பார்த்த பீலிங் தான் வருது..
நாங்க இன்னும் இலக்கிய
உலகை கரைச்சுக் குடிக்கல.
டிஸ்கி: இப்ப எல்லாம் எதிர்பதிவு காரமா இருந்தா தான் மவுசாம்.. அதனால் தான் கொஞ்சம் மசாலா தூவி இருக்கோம்.
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts
Friday, July 9, 2010
Friday, April 2, 2010
அங்காடித் தெரு என்ற பதிவுலக அங்கலாய்ப்பு
சமீபத்தில் வந்த அங்காடித் தெரு படம் குறித்து பதிவுலகம் முழுவதும் நிறைய பதிவுகள்.. அவைகளை எல்லாம் படித்து விட்டு படம் பார்த்த போது வெறும் ஏமாற்றமே மிஞ்சியது.... சமூக அவலங்களை எடுக்கப்பதாக.. அதுவும் மூணு வருடமாம்... சொல்லி ஒரே சோகமயம்... முதன் முறையாக சாரு நிவேதிதாவின் இந்த விமர்சனத்துடன் ஒத்துப் போகின்றது எனது எண்ணங்கள்..
இப்படத்தில் காட்டப்பட்டது தான் துன்பியலின் உச்சமாக இருக்கின்றது போன்ற எண்ணங்களையே பதிவுலகம் காட்டியது... இப்படத்தைப் பார்த்த பின் தான் தெரிந்தது.. இவர்கள் எல்லாம் ஒயிட் காலர் வேலையில் ஏசி கோச்களில் பயணம் செய்யும், சமூகத்தை சீர்தூக்கிப் பார்க்கும் பார்வையாளர்கள் என்று... இவர்கள் உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக துன்பத்திற்கு உள்ளாகும் அடிமட்டத்தைப் பற்றி செவி வழிச் செய்திகளை மட்டுமே கேட்டிருப்பது புலனாகின்றது.
இப்படம் பற்றி முதலாளித்துவ சிந்தனை கொண்ட... ஆனால் பதிவுகளில் அலட்டல் செய்யும் சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தப் போதே இந்த நெருடல் இருந்தது.. இன்னும் அப்படிப்பட்ட சில பதிவர்கள் எந்த பதிவும் எழுதாததும் சந்தேகத்தை மிகைப்படுத்தியது.
இப்படம் பார்க்கும் அடிமட்ட, அல்லது நடுத்தர மக்களின் மனத்தில் இந்த வியாபார விஷ ஜந்துக்கள் குறித்த நல்ல எண்ணமே உருவாகுமே தவிர வேறு எதும் உருவாகாது என்பது எனது எண்ணம்..
# கடையில் ஒழுங்கா இருக்க வேண்டியது தானே? எதுக்கு சீட்டு எல்லாம் பிடிச்சிக்கிட்டு?
# வேலைக்கு வந்த இடத்தில் எதுக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டிக்கிடக்கு
# அவ செத்ததுக்கு அண்ணாச்சி என்ன பண்ணுவார் ? நல்லவனா எனத் தெரியாமல் எதுக்கு இவ காதலிச்சா?
# சாப்பாட்டுக்கே வழி இல்லாம தானே அங்க போறாங்க... அண்ணாச்சி தான் நிறைய (?) சாப்பாடு போடுறாரே?
# பிரச்சினை என்றதும் அண்ணாச்சி ரெண்டு பேரையும் தான் வெளியே போகச் சொல்லிட்டாரே?
# படத்துக்கு சம்பந்தம் இல்லாம.. எதுக்கு அந்த உயரம் குறைந்த மனிதனை இகழனும்?
# கால் இழந்த பெண்ணை பெத்த அப்பனே விட்டுட்டு போறான்... அப்புறம் என்ன காதல் எழவு எல்லாம் வேண்டிக்கிடக்கு?
. ஜெ.மோவின் பங்களிப்பு மிக அருமை.. ஆனால் வசனங்களுக்காக மட்டும் படம் ஓட முடியுமென்றால் இந்தியில் நானே பட்டேகரின் படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி இருக்க வேண்டும்.. ;-) பின்னணி இசை.. வேணாம்.. இதுக்கு மேல கேட்காதீங்கப்பு... :(
இந்த படத்தை ஒரு 15 நிமிட குறும்படமாக எடுத்து இருந்திருக்கலாம். அதுக்கு தான் கதை இருக்கு. இந்த காதலை எல்லாம் பல படங்களில் பார்த்து சீனை பார்வேர்ட் செய்யும் நிலையில் தான் இருக்கு...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இதைப் படிச்சிட்டு கோபம் வந்தா துபாய் பதிவுலக சிறப்பு பிரதிநிதி வில்பர் சறுக்கனராஜ் துபாய் வந்த வீடியோ பாருங்க
இப்படத்தில் காட்டப்பட்டது தான் துன்பியலின் உச்சமாக இருக்கின்றது போன்ற எண்ணங்களையே பதிவுலகம் காட்டியது... இப்படத்தைப் பார்த்த பின் தான் தெரிந்தது.. இவர்கள் எல்லாம் ஒயிட் காலர் வேலையில் ஏசி கோச்களில் பயணம் செய்யும், சமூகத்தை சீர்தூக்கிப் பார்க்கும் பார்வையாளர்கள் என்று... இவர்கள் உடல்ரீதியாக, உளவியல் ரீதியாக துன்பத்திற்கு உள்ளாகும் அடிமட்டத்தைப் பற்றி செவி வழிச் செய்திகளை மட்டுமே கேட்டிருப்பது புலனாகின்றது.
இப்படம் பற்றி முதலாளித்துவ சிந்தனை கொண்ட... ஆனால் பதிவுகளில் அலட்டல் செய்யும் சில பதிவர்களின் பதிவுகளைப் படித்தப் போதே இந்த நெருடல் இருந்தது.. இன்னும் அப்படிப்பட்ட சில பதிவர்கள் எந்த பதிவும் எழுதாததும் சந்தேகத்தை மிகைப்படுத்தியது.
இப்படம் பார்க்கும் அடிமட்ட, அல்லது நடுத்தர மக்களின் மனத்தில் இந்த வியாபார விஷ ஜந்துக்கள் குறித்த நல்ல எண்ணமே உருவாகுமே தவிர வேறு எதும் உருவாகாது என்பது எனது எண்ணம்..
# கடையில் ஒழுங்கா இருக்க வேண்டியது தானே? எதுக்கு சீட்டு எல்லாம் பிடிச்சிக்கிட்டு?
# வேலைக்கு வந்த இடத்தில் எதுக்கு காதல், கத்திரிக்காய் எல்லாம் வேண்டிக்கிடக்கு
# அவ செத்ததுக்கு அண்ணாச்சி என்ன பண்ணுவார் ? நல்லவனா எனத் தெரியாமல் எதுக்கு இவ காதலிச்சா?
# சாப்பாட்டுக்கே வழி இல்லாம தானே அங்க போறாங்க... அண்ணாச்சி தான் நிறைய (?) சாப்பாடு போடுறாரே?
# பிரச்சினை என்றதும் அண்ணாச்சி ரெண்டு பேரையும் தான் வெளியே போகச் சொல்லிட்டாரே?
# படத்துக்கு சம்பந்தம் இல்லாம.. எதுக்கு அந்த உயரம் குறைந்த மனிதனை இகழனும்?
# கால் இழந்த பெண்ணை பெத்த அப்பனே விட்டுட்டு போறான்... அப்புறம் என்ன காதல் எழவு எல்லாம் வேண்டிக்கிடக்கு?
. ஜெ.மோவின் பங்களிப்பு மிக அருமை.. ஆனால் வசனங்களுக்காக மட்டும் படம் ஓட முடியுமென்றால் இந்தியில் நானே பட்டேகரின் படங்கள் எல்லாம் 100 நாட்கள் ஓடி இருக்க வேண்டும்.. ;-) பின்னணி இசை.. வேணாம்.. இதுக்கு மேல கேட்காதீங்கப்பு... :(
இந்த படத்தை ஒரு 15 நிமிட குறும்படமாக எடுத்து இருந்திருக்கலாம். அதுக்கு தான் கதை இருக்கு. இந்த காதலை எல்லாம் பல படங்களில் பார்த்து சீனை பார்வேர்ட் செய்யும் நிலையில் தான் இருக்கு...
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இதைப் படிச்சிட்டு கோபம் வந்தா துபாய் பதிவுலக சிறப்பு பிரதிநிதி வில்பர் சறுக்கனராஜ் துபாய் வந்த வீடியோ பாருங்க
Thursday, March 25, 2010
நைஜீரியாவில் இருந்து ஜெமோவும்., ஸீமமெண்டா என்கோசீயும்
தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஆயிரத்தின் ஒருவன் ஆண்டிரியா போல் ஒரு பிகருடன் ஜெமோவும் நைஜீரியாவிற்கு புதைப் பொருள் ஆராய்ச்சிக்கு கிளம்பிவிட்டதாக எண்ணி விட வேண்டாம்... இதுவும் அதுபோல் தான்.. ஆனால் ஒரு வித்தியாசமான புதிர்... புதிருக்குப் போகலாமா?
புதிர் : 1
கீழ்க்கண்ட பாராவில் இருக்கும் பின்நவீனத்துவ கூறுகளையும், ஞானமரபின் விளைவுகளையும் இரண்டு பின்னூட்டங்களுக்கு மிகாமல் விளக்கவும்..
மேலே உள்ள பாராவில் இருப்பவற்றில் ஸீமமெண்டா அடிச்சி என்ற பெயரை நீக்கி விட்டு அந்த இடங்களில் ஜெமோ என்பதை உள்ளீடு செய்து பின்னூட்டமாக இட வேண்டும். ctrl+f போட்டு கண்டுபிடிக்கக் கூடாது..
பரிசு : ஞானச்சுவடு இதழ் அடுத்த ஒரு வருடத்திற்கு இலவசமாக சந்தா இன்றி அனுப்பப்படும்.
புதிர் : 1
கீழ்க்கண்ட பாராவில் இருக்கும் பின்நவீனத்துவ கூறுகளையும், ஞானமரபின் விளைவுகளையும் இரண்டு பின்னூட்டங்களுக்கு மிகாமல் விளக்கவும்..
ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்
திங்கட்க்கிழமை திருடன் வந்தான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்கு போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீட்டுக்குப் போனான்
சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான்
திங்கட்க்கிழமை திருடன் வந்தான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்கு போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீட்டுக்குப் போனான்
சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான்
பரிசு: முந்தாநாள் சுட்ட புளித்த இட்லியும், கெட்டி சட்னியும் ஒரு பார்சல்
புதிர் : 2
முதலில் கீழே உள்ள பாராவைக் கவனமாகப் படிக்கவும்.

ஸீமமெண்டா அடிச்சி என்பவர் எழுதிய நைஜீரியா பற்றிக் கட்டுரை உண்மையின் உரைகல் என அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர். மேலைநாடுகளுக்குரிய தொழில்நுட்பத்தேர்ச்சியுடன் மொழி செம்மைசெய்யப்பட்ட நன்கு தொகுக்கப்பட்டது அது. ஆனால் மிகமிக மேலோட்டமானது. அந்த விவரிப்பு என்பது இம்மாதிரி விடயங்களை வாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் புதிதல்ல. அதில் மானுட எழுச்சியோ, உணர்வின் நுண் கணங்களோ இல்லை. போலியான உணர்வெழுச்சிகள் மட்டுமே இருந்தன. ..................
மேலைநாடுகளைப் பொறுத்தவரை எப்போதுமே இதற்கு ஒரு பழகிய வழிமுறை உண்டு. முதலில் பல்கலைக்கழகங்கள் வழியாக ஆய்வேடுகள் உருவாக்கப்படும். அவை தேவையான கருத்தியலை போலி ஆதாரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சமைக்கும். பின்பு இலக்கியவாதிகள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவார்கள். ஸீமமெண்டா அடிச்சி மேல் நாட்டு ஊடகங்களின் தயாரிப்பு. மேற்கத்திய நாடுகளின் ஏடுகளில் சொல்லப்பட்ட, அவர்களுக்கு உகந்த கட்டுக்கதைகளை மட்டுமே வைத்து ஸீமமெண்டா அடிச்சி இதை எழுதியுள்ளார்.. நைஜீரியாவில் உள்ளவர்களே இக்கதைகளைக் கேட்டு நொந்து சிரிக்கும் நிலை தான் இருக்கின்றது.
புதிர் : 2
முதலில் கீழே உள்ள பாராவைக் கவனமாகப் படிக்கவும்.
ஸீமமெண்டா அடிச்சி என்பவர் எழுதிய நைஜீரியா பற்றிக் கட்டுரை உண்மையின் உரைகல் என அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர். மேலைநாடுகளுக்குரிய தொழில்நுட்பத்தேர்ச்சியுடன் மொழி செம்மைசெய்யப்பட்ட நன்கு தொகுக்கப்பட்டது அது. ஆனால் மிகமிக மேலோட்டமானது. அந்த விவரிப்பு என்பது இம்மாதிரி விடயங்களை வாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் புதிதல்ல. அதில் மானுட எழுச்சியோ, உணர்வின் நுண் கணங்களோ இல்லை. போலியான உணர்வெழுச்சிகள் மட்டுமே இருந்தன. ..................
மேலைநாடுகளைப் பொறுத்தவரை எப்போதுமே இதற்கு ஒரு பழகிய வழிமுறை உண்டு. முதலில் பல்கலைக்கழகங்கள் வழியாக ஆய்வேடுகள் உருவாக்கப்படும். அவை தேவையான கருத்தியலை போலி ஆதாரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சமைக்கும். பின்பு இலக்கியவாதிகள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவார்கள். ஸீமமெண்டா அடிச்சி மேல் நாட்டு ஊடகங்களின் தயாரிப்பு. மேற்கத்திய நாடுகளின் ஏடுகளில் சொல்லப்பட்ட, அவர்களுக்கு உகந்த கட்டுக்கதைகளை மட்டுமே வைத்து ஸீமமெண்டா அடிச்சி இதை எழுதியுள்ளார்.. நைஜீரியாவில் உள்ளவர்களே இக்கதைகளைக் கேட்டு நொந்து சிரிக்கும் நிலை தான் இருக்கின்றது.
மேலே உள்ள பாராவில் இருப்பவற்றில் ஸீமமெண்டா அடிச்சி என்ற பெயரை நீக்கி விட்டு அந்த இடங்களில் ஜெமோ என்பதை உள்ளீடு செய்து பின்னூட்டமாக இட வேண்டும். ctrl+f போட்டு கண்டுபிடிக்கக் கூடாது..
பரிசு : ஞானச்சுவடு இதழ் அடுத்த ஒரு வருடத்திற்கு இலவசமாக சந்தா இன்றி அனுப்பப்படும்.
Thursday, February 11, 2010
வேங்கையின் மைந்தன், Apocalypto, கீரைக்காரன்
கேட்டது.
என்னுடன் வேலை செய்யும் ஒரு பணியாளர் இந்திய-நேபாள எல்லையைச் சேர்ந்தவர். அவர்களது மொழி மைதிலி எனப்படும் ஒருவகை ஹிந்தி.. போஜ்பூரி போல... ஆனா போஜ்பூரியை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். ஆனா மைதிலி கஷ்டம்.. :( அது இருக்கட்டும்.... கொஞ்சம் கிராமத்து ஆள் மாதிரி.. விவசாயம், ஆடு,மாடு மேய்ப்பது என்று இருந்தவன். பால்ய விவாகம் செய்யும் வழக்கம் உள்ள கிராமங்கள் அவை. அவனுக்கும் சிறு வயதில் திருமணம் வேறு ஆகி இருக்கின்றது.
ஒரு முறை வழக்கம் போல் மாடு மேய்க்கச் சென்று இருக்கின்றான். ஊருக்கு வெளியே காட்டுப்பகுதிகளில் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வயலில் நல்ல கீரை(பாலக்) விளைந்து இருந்திருக்கின்றது. பையனுக்கு பார்த்ததும் கை அரிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நைசாக தோட்டத்திற்குள் இறங்கி கீரையை பறிக்க ஆரம்பித்து இருக்கின்றான். திடீரென்று எங்கிருந்தோ ஒரு இளம்பெண் வந்து இவனை வளைத்துக் கொண்டாள். அவள் அந்த தோட்டத்தின் உரிமையாளரின் மகள்.
இவனைப் பிடித்துக் கொண்டு கூச்சல் போட மாடுகளை விட்டு விட்டு ஓட முடியாத சூழலால் அமைதியாக இருந்து விட்டான். அவளது கூச்சலைக் கேட்டு பலரும் ஓடி வர இவன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டான். அங்கு வந்த உரிமையாளர் இவனைக் குறித்து விசாரிக்க தனது கிராமத்தின் பெயரை சொல்லி இருக்கின்றான். வரிசையாக தெரு, வீடு, அப்பா பெயர் , தன் பெயர் எல்லாம் சொல்ல அந்த தோட்டக்காரர் அவன் பறித்த கீரையுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து அவனை நல்லபடியாக வழி அனுப்பி வைத்தாராம்.. ஏன் என்று யோசிங்க பார்க்கலாம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
படித்தது:
வரலாற்று நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு அலாதி இன்பம் இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் படித்தது அகிலன் எழுதிய ‘வேங்கையின் மைந்தன்’.
இதுவும் வழக்கமான ஒரு சோழப் புகழ் பாடும் நாவல்தான். பொன்னியின் செல்வனின்(இராஜராஜ சோழன்) மகனான வேங்கையின் மைந்தன்(இராஜேந்திர சோழன்) பற்றியது. பொன்னியின் செல்வனோடு ஒப்பிடும் அளவில் இல்லையென்றாலும், படிக்க சுவாரஸ்யமாகத் தான் இருந்தது. பொன்னியின்செல்வனில் வந்தியதேவன் கதாநாயகன் என்றால் இங்கு இளங்கோவேள் என்ற கொடும்பாளூர் இளவரசன்.
இராஜேந்திரரும் கொஞ்ச வயசானவராக இருக்கின்றார். வழக்கமான தமிழ் ஹீரோ போன்ற அதி புத்திசாலி அரசர்.. அவருக்கு உறுதுணையாக சில அரசியல் வீர வீத்தகர்கள். வந்தியதேவன் இருக்கிறார். ஆங்காங்கே வந்தியதேவன், குந்தவையின் காதல் காட்சிகளை பொன்னியின் செல்வனில் இருந்து மனக்கண்ணில் ரசிக்க முடிகின்றது. திடீர் திருப்பங்கள் இல்லாத ஒரு நாவல். சில நேரங்களில் காலம் செல்லும் வேகத்திற்கு பயணிக்க இயலாமல் போய் விடுகின்றது.
இரண்டு கதாநாயகிகள். ரோகினி என்ற இலங்கைப் பெண், அருள் மொழி என்ற இராஜேந்திரரின் மகள். காதல், வீரம் இரண்டும் தான் வேங்கையின் மைந்தனை இட்டுச் செல்கின்றது. ரோகிணி தோல்வியைத் தழுவும் இலங்கை மன்னரின் மகள். முதலில் இருந்தே ஒரே அழுக்காச்சி காவியம். சில இடங்களில் காதலன் மற்றும் நாட்டுப்பாசத்திற்கு இடையில் கிடந்து உழல்கின்றாள்.
வீர தீர பிரதாபங்களும், அதன் வர்ணனைகளும் சுமார் தான். பாண்டிய நாட்டின் மணி முடியையும், இந்திரனின் ஆரத்தையும் தனி ஒருவனாக சண்டையிட்டு கொண்டு வருகின்றார் கதாநாயகன். கொஞ்சம் பில்டப்புடன் தெலுங்கு சினிமா பார்த்த பாதிப்பு வருகின்றது.
மற்றபடி படிக்க வேண்டிய வரலாற்று நாவல்களில் ஒன்று.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பார்த்தது :
சமீபத்தில் பார்த்த ஒரு படம் அபகலிப்டோ... ஒரு சமூகத்தின் அழிவை கண் முன் கொண்டு வந்த படம். அற்புதமான காட்டுப்பகுதியில் படம் படமாக்கப்பட்டு இருக்கின்றது.கிராபிக்ஸ் உறுத்தல்கள் இல்லாமல் இயற்கையாக இருப்பது போன்ற தோற்றமே படம் முழுவதும்.. தென் அமெரிக்க காட்டுகளுக்குள் நடக்கும் இன மோதல்களின் வழியே தங்களுக்குள் எப்படி அழித்துக் கொண்டனர் என்பதை சிம்பிளாக சொல்லும் படம்.
பொதுவாக ஸபானியர்கள் அமெரிக்க கண்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பழங்குடியினரை அழித்ததாகத் தான் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.. இதில் பல கருத்து வேறுபாடு இருந்தாலும், இப்படம் அப்பழங்குடியினர் தங்களுக்குள் சண்டையிட்டு அழித்துக் கொண்டனர் என்பதை நாசூக்காக சொல்லும் முயற்சியோ என்ற தோற்றம் கூட வந்தது. ஆனாலும் சிறு குழுக்களுக்கு இடையே இது போன்ற மோதல்கள் இருந்ததை ஒத்துக் கொள்ள வேண்டி தான் வரும்.
இப்படத்தில் ஒரு அதி அற்புதமான காட்சி கண்டிப்பாக காண வேண்டியது. கதாநாயகியின் பிரசவக் காட்சி.. ஒரு கிணற்றுக்குள் அவளும், அவளது சிறு மகனும் இருக்க மழை காரணமாக கிணற்றுக்குள் தண்ணீர் நிறைய ஆரம்பிக்கின்றது. அவ்வேளையில் பிரசவ வலியில் அவள் துடிக்க, தண்ணீருக்குள் குழந்தை பிறக்கின்றது. இதை வர்ணிப்பதை விட நேரடியாகப் பார்த்தால் அதை அனுபவிக்கலாம்... இது சாதாரணமாக எல்லாரும் பார்க்க வேண்டிய காட்சி தான்... திட நெஞ்செமெல்லாம் வேண்டாம்.
இதன் 1:50 வினாடிகளில் இருந்து 2:45 வரை பாருங்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கீரைக்காரனுக்கு விடை... அந்த பெண் அவன் சிறு வயதில் திருமணம் முடித்திருந்த பெண். அவர் அவனது மாமனாராம்.. சிறு வயதில் திருமணம் முடிந்து விட்டு மாப்பிள்ளையும், பொண்ணும் அவரவர் வீட்டில் இருப்பார்களாம். பெரியவர்களானதும் இருவரையும் இணைத்து வைப்பார்களாம். இதை அடிக்கடி சொல்லி சக பணியாளர்கள் அவனை கலாய்ப்பார்கள்.
என்னுடன் வேலை செய்யும் ஒரு பணியாளர் இந்திய-நேபாள எல்லையைச் சேர்ந்தவர். அவர்களது மொழி மைதிலி எனப்படும் ஒருவகை ஹிந்தி.. போஜ்பூரி போல... ஆனா போஜ்பூரியை கொஞ்சம் புரிந்து கொள்ளலாம். ஆனா மைதிலி கஷ்டம்.. :( அது இருக்கட்டும்.... கொஞ்சம் கிராமத்து ஆள் மாதிரி.. விவசாயம், ஆடு,மாடு மேய்ப்பது என்று இருந்தவன். பால்ய விவாகம் செய்யும் வழக்கம் உள்ள கிராமங்கள் அவை. அவனுக்கும் சிறு வயதில் திருமணம் வேறு ஆகி இருக்கின்றது.
ஒரு முறை வழக்கம் போல் மாடு மேய்க்கச் சென்று இருக்கின்றான். ஊருக்கு வெளியே காட்டுப்பகுதிகளில் மாடு மேய்த்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வயலில் நல்ல கீரை(பாலக்) விளைந்து இருந்திருக்கின்றது. பையனுக்கு பார்த்ததும் கை அரிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு நைசாக தோட்டத்திற்குள் இறங்கி கீரையை பறிக்க ஆரம்பித்து இருக்கின்றான். திடீரென்று எங்கிருந்தோ ஒரு இளம்பெண் வந்து இவனை வளைத்துக் கொண்டாள். அவள் அந்த தோட்டத்தின் உரிமையாளரின் மகள்.
இவனைப் பிடித்துக் கொண்டு கூச்சல் போட மாடுகளை விட்டு விட்டு ஓட முடியாத சூழலால் அமைதியாக இருந்து விட்டான். அவளது கூச்சலைக் கேட்டு பலரும் ஓடி வர இவன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டான். அங்கு வந்த உரிமையாளர் இவனைக் குறித்து விசாரிக்க தனது கிராமத்தின் பெயரை சொல்லி இருக்கின்றான். வரிசையாக தெரு, வீடு, அப்பா பெயர் , தன் பெயர் எல்லாம் சொல்ல அந்த தோட்டக்காரர் அவன் பறித்த கீரையுடன் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்து அவனை நல்லபடியாக வழி அனுப்பி வைத்தாராம்.. ஏன் என்று யோசிங்க பார்க்கலாம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
படித்தது:
வரலாற்று நாவல்கள் படிப்பதில் எப்பவுமே ஒரு அலாதி இன்பம் இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் படித்தது அகிலன் எழுதிய ‘வேங்கையின் மைந்தன்’.
இது இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது. பதிவிறக்கி படித்துக் கொள்ளலாம். http://www.scribd.com/document_downloads/24812602?extension=pdf
நன்றி : பிகேபி வலைப்பதிவு
இதுவும் வழக்கமான ஒரு சோழப் புகழ் பாடும் நாவல்தான். பொன்னியின் செல்வனின்(இராஜராஜ சோழன்) மகனான வேங்கையின் மைந்தன்(இராஜேந்திர சோழன்) பற்றியது. பொன்னியின் செல்வனோடு ஒப்பிடும் அளவில் இல்லையென்றாலும், படிக்க சுவாரஸ்யமாகத் தான் இருந்தது. பொன்னியின்செல்வனில் வந்தியதேவன் கதாநாயகன் என்றால் இங்கு இளங்கோவேள் என்ற கொடும்பாளூர் இளவரசன்.
இராஜேந்திரரும் கொஞ்ச வயசானவராக இருக்கின்றார். வழக்கமான தமிழ் ஹீரோ போன்ற அதி புத்திசாலி அரசர்.. அவருக்கு உறுதுணையாக சில அரசியல் வீர வீத்தகர்கள். வந்தியதேவன் இருக்கிறார். ஆங்காங்கே வந்தியதேவன், குந்தவையின் காதல் காட்சிகளை பொன்னியின் செல்வனில் இருந்து மனக்கண்ணில் ரசிக்க முடிகின்றது. திடீர் திருப்பங்கள் இல்லாத ஒரு நாவல். சில நேரங்களில் காலம் செல்லும் வேகத்திற்கு பயணிக்க இயலாமல் போய் விடுகின்றது.
இரண்டு கதாநாயகிகள். ரோகினி என்ற இலங்கைப் பெண், அருள் மொழி என்ற இராஜேந்திரரின் மகள். காதல், வீரம் இரண்டும் தான் வேங்கையின் மைந்தனை இட்டுச் செல்கின்றது. ரோகிணி தோல்வியைத் தழுவும் இலங்கை மன்னரின் மகள். முதலில் இருந்தே ஒரே அழுக்காச்சி காவியம். சில இடங்களில் காதலன் மற்றும் நாட்டுப்பாசத்திற்கு இடையில் கிடந்து உழல்கின்றாள்.
வீர தீர பிரதாபங்களும், அதன் வர்ணனைகளும் சுமார் தான். பாண்டிய நாட்டின் மணி முடியையும், இந்திரனின் ஆரத்தையும் தனி ஒருவனாக சண்டையிட்டு கொண்டு வருகின்றார் கதாநாயகன். கொஞ்சம் பில்டப்புடன் தெலுங்கு சினிமா பார்த்த பாதிப்பு வருகின்றது.
மற்றபடி படிக்க வேண்டிய வரலாற்று நாவல்களில் ஒன்று.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பார்த்தது :
சமீபத்தில் பார்த்த ஒரு படம் அபகலிப்டோ... ஒரு சமூகத்தின் அழிவை கண் முன் கொண்டு வந்த படம். அற்புதமான காட்டுப்பகுதியில் படம் படமாக்கப்பட்டு இருக்கின்றது.கிராபிக்ஸ் உறுத்தல்கள் இல்லாமல் இயற்கையாக இருப்பது போன்ற தோற்றமே படம் முழுவதும்.. தென் அமெரிக்க காட்டுகளுக்குள் நடக்கும் இன மோதல்களின் வழியே தங்களுக்குள் எப்படி அழித்துக் கொண்டனர் என்பதை சிம்பிளாக சொல்லும் படம்.
பொதுவாக ஸபானியர்கள் அமெரிக்க கண்டத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பழங்குடியினரை அழித்ததாகத் தான் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.. இதில் பல கருத்து வேறுபாடு இருந்தாலும், இப்படம் அப்பழங்குடியினர் தங்களுக்குள் சண்டையிட்டு அழித்துக் கொண்டனர் என்பதை நாசூக்காக சொல்லும் முயற்சியோ என்ற தோற்றம் கூட வந்தது. ஆனாலும் சிறு குழுக்களுக்கு இடையே இது போன்ற மோதல்கள் இருந்ததை ஒத்துக் கொள்ள வேண்டி தான் வரும்.
இப்படத்தில் ஒரு அதி அற்புதமான காட்சி கண்டிப்பாக காண வேண்டியது. கதாநாயகியின் பிரசவக் காட்சி.. ஒரு கிணற்றுக்குள் அவளும், அவளது சிறு மகனும் இருக்க மழை காரணமாக கிணற்றுக்குள் தண்ணீர் நிறைய ஆரம்பிக்கின்றது. அவ்வேளையில் பிரசவ வலியில் அவள் துடிக்க, தண்ணீருக்குள் குழந்தை பிறக்கின்றது. இதை வர்ணிப்பதை விட நேரடியாகப் பார்த்தால் அதை அனுபவிக்கலாம்... இது சாதாரணமாக எல்லாரும் பார்க்க வேண்டிய காட்சி தான்... திட நெஞ்செமெல்லாம் வேண்டாம்.
இதன் 1:50 வினாடிகளில் இருந்து 2:45 வரை பாருங்கள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கீரைக்காரனுக்கு விடை... அந்த பெண் அவன் சிறு வயதில் திருமணம் முடித்திருந்த பெண். அவர் அவனது மாமனாராம்.. சிறு வயதில் திருமணம் முடிந்து விட்டு மாப்பிள்ளையும், பொண்ணும் அவரவர் வீட்டில் இருப்பார்களாம். பெரியவர்களானதும் இருவரையும் இணைத்து வைப்பார்களாம். இதை அடிக்கடி சொல்லி சக பணியாளர்கள் அவனை கலாய்ப்பார்கள்.
Monday, August 24, 2009
"And, Now..."

எப்போது வேண்டுமானாலும் செயின் கழன்று விடும்
சைக்கிள் ஒன்று என்னிடம் இருந்தது.
பெண்கள் பள்ளிக்கு செல்லும் வழியில்
சைக்கிள் செயின் மாட்டும் தோரணையில்
சைக்கிள் கேப்பில் பிகர் வெட்டிக் கொண்டு இருப்பேன்.
வெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை!
எப்படியோ செயின் கழன்று விழுவது நின்று போனது ஒரு சுபமுகூர்த்தத்தில்
அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு
சைக்கிள் ஒன்று என்னிடம் இருந்தது.
பெண்கள் பள்ளிக்கு செல்லும் வழியில்
சைக்கிள் செயின் மாட்டும் தோரணையில்
சைக்கிள் கேப்பில் பிகர் வெட்டிக் கொண்டு இருப்பேன்.
வெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை!
எப்படியோ செயின் கழன்று விழுவது நின்று போனது ஒரு சுபமுகூர்த்தத்தில்
அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு
Monday, July 6, 2009
காதல் கறுப்பட்டியும், கறுப்பியும்.. சந்தித்த வேளையில்
ஒரு உருவம் தூரத்தே யாழ்ப்பாணத்தின் தொன்மை வாய்ந்த தெருவில் நடந்து வருவது தெரிகின்றது.. அருகே வர வர அதன் உருவம் நமக்கு விளங்குகின்றது. அடர் நீல நிறத்தில் ஜிப்பா பைஜாமாவுடன் கையில் பிரெஸ்லெட்டுல் மின்னுகின்றது. தங்கத்தின் மின்னலை ஜிப்பாவின் மின்னல் வெட்டுவது நம் கண்ணைக் கூச வைக்கின்றது... கண்களில் பச்சை நிறத்தில் கண்ணாடி அழகைக் கூட்டிக் காட்டுகின்றது. முகம் முழுவதும் முதல்வன் அர்ஜூன் போல பவுடர் கொட்டிக் கிடக்கின்றது. ஒரு கையில் ஒரு சூட்கேஸ், மற்றொரு கையில் ஒரு அட்டைப் பெட்டி.
அந்த உருவம் தெருவை ரசித்துக் கொண்டே வருவது நமக்கு மிக அருகே தெரிகின்றது. பேக் கிரெளண்டில் ஆட்டோகிராபில் வரும் “ஞாபகம் வருதே”க்கு முன்னால் வரும் தீம் மியூசிக் கேக்கின்றது. கேமரா குளோசப்பில் நெருங்கி வருகின்றது.. பார்த்தால் வருவது நம்ம தம்பி காதல் கறுப்பி . (இனி தம்பி என்று வரும்). அதற்கு மேல் குளோசப்பில் காட்டினால் மக்கள் நம்மை அடிக்க வருவார்கள் என்பதால் கேமராவின் கோணம் தம்பியின் பார்வையில் இருந்து விரிகின்றது.
தெரு ரொம்ப பிஸியாக இல்லாமல் அங்கொருவரும் இங்கொருவருமாக நடந்து செல்கின்றனர். தெரிவில் இருக்கும் நாய்கள் எல்லாம் தம்பியைப் பரிதாபமாக பார்க்கின்றனர். தூரத்தே வரும் ஒரு தாத்தா தம்பியின் சட்டையின் ஒளி வெள்ளத்தில் ஆளை சரியாகக் கணிக்க இயலாமல் திணறி நெற்றில் தனது கைகளை வைத்து கண்களைச் சுருக்கி “யாரு?” என்றும் கேட்கிறார்.
முன்னாடி பார்த்தால் சிவப்பு கலர் சுடிதாரில் ஒரு பெண் நடந்து வருகின்றார்.. கொஞ்சம் சுமாரான கலர் தான்.. (இங்கிதம் கருதி வர்ணனை தடை செய்யப்படுகின்றது.) அவர்தான் தம்பியின் கனவுக் காதலி கறுப்பி.
இதுவரை இருந்த தீம் மியூஸிக் மாறி “தந்தன தந்தன தாளம்” தீம் மியூஸிக் இசைக்கின்றது. மீண்டும் தம்பி்யின் முகம் கேமரா கோணத்தில்.. மீண்டும் மியூஸிக்கில் மாற்றம்.. பார்த்த விழி பார்த்தபடி பார்த்திருக்க... (குணா)
பிளந்த வாயை மூடாமல் விழித்துக் கொண்டிருக்கின்றார் தம்பி. கறுப்பியின் செல் பேசி இசைக்கின்றது.
“ஹலோ! யார் கதைக்கிறீயள்”
“ஹலோ அண்ணி! நான் சவுதி அரேபியாவில் இருந்து தமிழ் பிரியன் பேசுறேன்”
“என்னது அண்ணியா? உங்களை எனக்குத் தெரியாதே?”
“உங்களுக்கு என்னைத் தெரியாது.. ஆனா எனக்கு உங்களைத் தெரியும்”
“காதல் கறுப்பி தம்பி ரொம்ப நல்லவருங்க.. அவரு உங்களுக்கு கிடைக்க கொடுத்து வச்சு இருக்கனும்”
“என்னங்க ஒன்னுமே புரியல.. யாருங்க அந்த காதல் கறுப்பி?”
“உங்க முன்னாடியே நிக்கிறாரு பாருங்க.. அவர் தான் காதல் கறுப்பி.. ப்ளீஸ் அவரை லவ் பண்ணுங்க”
“எனக்கு முன்னாடி யாருமில்லயே”
“தலையைக் குனிஞ்சு தரையில் பாருங்க.. ஒரு மூணு அடியில் ஒருத்தர் இருக்காரு பாருங்க அவர் தான்”
போனைக் கட் செய்து விட்டு கீழே குனிந்து பார்க்கிறார்.. சட்டை ஒளியில் கண்கள் கூச உற்றுக் கவனிக்கிறார்.. அதிர்ச்சியடைகிறார் கறுப்பி.
“அடப்பாவி நீயா? மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க வீட்டு கொடியில் காயப்போட்ட தாவணியைத் திருடி மூணாவது தெரு மல்லிகாகிட்ட மூணு ரூபாய்க்கு வித்துட்டு, துபாய்க்கு ஓடிப் போனவன் தானே நீ?”
தம்பி தனது பழைய காதலியை வெகுநாட்கள் கழித்து சந்தித்த அதிர்ச்சியில் வாயடத்தைக் நிற்க்கிறார். மீண்டும் செல் பேசி இசைக்கின்றது. எண் +0061 ல் தொடங்குகின்றது.
“நான் ஆஸ்திரேலியாவில் இருந்து கானா பிரபா பேசுகிறேன்”
“உங்க முன்னாடி இருக்குற தம்பி ரொம்ப நல்லவரு.. வல்லவரு.. நாலும் தெரிஞ்சவரு.. மலைகளை எல்லாம் நல்லா தெரிஞ்சவரு அந்த நாலு பேரை மலைக்கு கூட்டிக் கொண்டு போன மாதிரி உங்களையும் கூட்டிக் கொண்டு போவார்”
கறுப்பி போனை கட் செய்து விட்டு கோபமா பார்க்கிறார்.
“அடப்பாவி தமிழா.. நீ இப்படியெல்லாமா செஞ்சு இருக்கா?”
தம்பி ஒன்றும் புரியாமல் விழிக்கிறார்.. மீண்டும் செல் அழைக்கிறது.. “ஹலோ நான் சிங்கையில் இருந்து நிஜமா நல்லவன் பேசுறேன்” என ஆரம்பிக்கிறது.. அதை அடுத்து சம்போ சிவசம்போ தீம்(நாடோடிகள் பட சேஸிங்) தீம் மியூஸிக் பிண்ணணியில் கறுப்பி பேசுகிறார்.. பேசுகிறார்.. பேசிக் கொண்டே இருக்கிறார். இடையில் லண்டன், பெர்லின், KL, பாரிஸ், சென்னை, டெல்லி, பெங்களூர் என்று வரிசையாக செல் பேசி அலறுகின்றது.
கறுப்பியை தம்பி காதலுடன் பார்த்துக் கொண்டே இருக்கிறார். கறுப்பியோ டென்சனில் உச்சத்தில் குமுறிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறார்.. இப்போது செல் பேசியை அணைத்து விட்டு, “ஏண்டா படுவா? இப்படி உளறுவாயா இருந்து இருக்கியே.. என் தாவணியை திருடியத்தை தவிர உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.. என்னப் பற்றி என்ன என்னவோ எழுதி வச்சு இருக்க நீ.. உன்னை.. ” கோபத்தில் பல்லை நறநறவென கடிக்கும் நேரம் மீண்டும் செல் பேசி அழைக்கிறது.. எண் +974 என்று ஆரம்பிக்கிறது.
“நான் ஆயில்யன் பேசுகிறேனுங்க...”
“ஆயில்யனா?...” கறுப்பியை பேச விடாமல் ஆயில்ஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே செல்கிறார். கறுப்பி பேசுவதற்கு மைக்ரோ வினாடி நேரம் கூட தராமல் பேசிக் கொண்டே இருக்கிறார்.. களைத்துப் போன கறுப்பி மயங்கி சரிகின்றார்.. தனது உயிர்க்காதலி மயங்குவதைக் கண்ட தம்பி அவரை தனது கரங்களில் சிறு குழந்தையைப் போல வாங்கிகின்றார்... அய்யகோ... கறுப்பியின் கனம் தாளாமல் தம்பி கீழே சரிகிறார். தம்பியின் மேலே கறுப்பி மயங்கி விழுகிறார்.. ஆயிரத்தில் ஒருவன் ஜெயலலிதா மாதிரி தம்பி கீழே கிடக்க .. அவருக்கு மேலே கறுப்பி கிடக்கிறார்.. கறுப்பியை தள்ளி எழ இயலாமல் தம்பி விழி பிதுங்கி கிடக்கிறார்.. பழைய தூர்தசனின் இரவு நேர ரீங்ரீங் மியூசிக் இசைக்கிறது.. கேமரா மெல்ல எழும்பி தூரமாகி கொண்டே செல்கின்றது... தம்பியும் கறுப்பியும் புள்ளியாகத் தெரிகிறார்கள்..
ஸ்கிரீன் ஸ்லைட் வருகிறது.. “ நீண்ட காலத்திற்குப் பின் சந்தித்த காதல் ஜோடிகள் தங்கள் பழைய கதைகளைப் பேசி மகிழட்டும்.. வாருங்கள் நாங்கள் கிளம்பலாம்.. அன்புடன் தமிழ் பிரியன்”
டிஸ்கி 1 : இது காதல் கறுப்பியைக் கலாய்ப்பவர்கள் சங்கத்திற்கான பதிவு.. (கா.க.க.ச)
டிஸ்கி 2 : தம்பியின் புகைப்படத்தை இணைக்க முடிவு செய்த போது, அதைப் பார்க்கும் ரசிகைகள் தம்பியை தொல்லை செய்வார்கள் என்பதால் முகத்தை மட்டும் கொஞ்சம் அழகு குறைந்த கமலின் முகத்தை மாற்றி வைத்துள்ளோம். இதை செய்து கொடுத்த ஆயில்யனுக்கு நன்றிகள்.
Friday, April 10, 2009
என் காதல் தோத்துப் போச்சுங்க
நான் ரொம்ப கவலையில் இருக்கேங்க... என்னோட காதல் தோற்றுப் போய் விட்டதுங்க. என்னைத் தெரியும் தானே உங்களுக்கு.. இப்ப Mcfame Robotics Company யில் அக்கவுண்ட்ஸில் வேலை செய்றேங்க... நேத்து தாங்க என்னோட தெய்வீகக் காதல் தோல்வியில் முடிஞ்சு போச்சு. அதுவும் அந்த சுந்தர் பய என் முன்னாடியே என் காதலியை..வேணாங்க..என்னால ... முடியல.... ... யோசிச்சுப் பாருங்க. அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு.. இப்பக் கூட என் சிஸ்டத்துல என் காதலே என் காதலே என்னை செய்யப் போகிறாய்? பாடல் தான் ஒலித்துக் கொண்டு இருக்கு.
நான் முழுக்கதையையும் முதலில் இருந்து சொல்கிறென்.. கேளுங்க.. நான் இங்க வந்து முழுசா 3 வருடமாகப் போகுதுங்க.. ஆபிஸில் சுமார் 50 பேர் வேலை செய்கின்றோம். பேக்டரில் 600 பேருக்கு மேல் இருக்காங்க. எனக்கு அக்கவுண்ட் என்பதால் ஆபிஸில் தான் முழு நேரமும் செலவாகும். இங்க 12 லேடீஸ் வேலை செய்றாங்க.. ஆனாலும் யாரையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை. ஏன்னா நான் என்னோட கனவு தேவதைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.
மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அந்த கனவு தேவதையை பார்த்தேன். அதுவும் எங்க ஆபிஸிலேயே புதுசா வேலைக்கு வந்து இருக்கா.. பேரு ரேவதி. நான் அழகா ரேச்சின்னு செல்லமா பேர் வச்சு இருக்கேன்.. ரேச்சி எனக்கு நீ மச்சி! நல்லா இருக்குல்ல....நல்லா அழகா இருப்பா.. (சென்சார் செய்யப்பட்ட பகுதியை இங்க நிரப்ப முடியாது... ஆர்) மொத்தத்துல நம்ம அசின், நயன் தாரா, பழைய ஐஸ்வர்யா ராய் எல்லோரையும் சேர்த்து செஞ்ச செப்புச் சிலைன்னு வச்சுக்கங்க
எங்க நிறுவனத்தின் டிசைனிங் செக்சனில் வேலைக்கு சேர்ந்தா.. எங்களுக்கும் டிசைனிங்குக்கும் எந்த டச்சும் இல்லைன்னாலும் இரண்டும் அடுத்ததடுத்த பகுதி என்பதால் அவளை அடிக்கடி பார்க்க முடியும். அவள் வந்த முதல் நாளிலேயே எனக்கு காதல் ஜூரம் ஆரம்பமாகி விட்டது.

ஆனா அவள் என்னை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. எப்போதாவது வழியில் சந்தித்தால் ஒரு ஸ்மைல் மட்டும் கிடைக்கும். நானும் பல தில்லாலங்கடி வேலை பார்த்தும் திரும்பிக் கூட பார்க்கலை. இதுல என்ன கொடுமைன்னா என்னோட அழகுக்கு முன்னாடி நிக்க கூட முடியாத இன்னும் சிலர் ஜொள்ளு வடித்தது தான்.. சேல்ஸ் செக்சனில் இருக்கும் அந்த பேக்கு இருக்கானே.. கேசவன்.. அவன் எப்ப பார்த்தாலும் என் ஆளிடம் போய் இளிக்கிறதே வேலையே இருக்கான்.
அவனாவது பரவாயில்லை... அக்கவுண்ட் செக்சன் ஹெட் இருக்காரே அந்த பாலா.. காலேஜ் படிக்கிற பசங்க இருக்காங்க அவருக்கு..அந்த ஆளும் என் ரேச்சிகிட்ட எப்பப் பார்த்தாலும் ஏதாவது டவுட்டுன்னு போய் நிக்கிறார். இது அவருக்கே ஓவரா இல்லியா? வயசானாலும் இங்கிதம் தெரியலையே?
இது எல்லாத்தையும் விடக் கொடுமை... அட்மின் செக்சனில் இருக்கும் லாரன்ஸ் பண்ணுவது தான்.. பேசுவது மாதிரி பக்கத்தில் போய் உரசுவது, நடந்து வரும் போது இடிச்சிட்டு சாரி சொல்வது..இப்படி டெய்லி தொடருது. அவள் இதை எல்லாம் சாதாரணமா எடுத்துட்டு போய்டுறாரா..ஆனா என்னால் இங்க சும்மா உட்கார முடியல...மூலம் வந்தவன் மாதிரி கேபினில் இருந்து எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு.
எப்படியாவது என் காதலை அவள்கிட்ட சொல்லனும்னு வெயிலில் போட்ட புழு மாதிரி துடிச்சேன். வேலையில் கவனம் செலுத்த முடியல..சாப்பாடு சரியா இறங்கல.. சரி.. நல்லபிள்ளையா அவளோட வீட்ல போய் பொண்ணு கேக்கலாம்ன்னு வேவு வேலையில் இறங்கினேன். அப்ப ஒரு முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. அவள் எங்க கம்பெனி MD யின் ஸ்பெஷல் காரில் தான் சென்று வருகிறாளாம். டிரைவரை பிடித்து விசாரித்த போது அதைவிட அதிர்ச்சியைக் கொடுத்தான். தினமும் காலையில் பிக்அப் செய்வது மற்றும் டிராப் செய்வது எல்லாம் பேக்டரியை ஒட்டி இருக்கும் கம்பெனி MD யின் கெஸ்ட் அவுஸில் தானாம்.
அவள் முகத்தில் தெரியும் ஒரு வித இறுக்கம் அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எனக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்திக் கொண்டு இருந்தது. அப்பதான் அந்த இறுதி முடிவை எடுத்தேன். என் ரேச்சிக்கு இந்த நரக வாழ்வில் இருந்து அவளுக்கு விடுதலை தருவது தான் அந்த முடிவு.
கம்பெனியின் இண்டர்னல் மெயில் சிஸ்டம் மூலம் அவளுக்கு என் காதலை முழுமையாகச் சொல்லி, விருப்பப்பட்டால் இந்த இயந்திர வாழ்க்கையை விட்டு எங்கள் கிராமத்திற்கு சென்று விடலாம் என்பதை சொல்லி இருந்தேன். மறக்காமல் எங்களது பூர்வீக சொத்தான 50 ஏக்கரில் விவசாயம் செய்து சந்தோசமாக வாழலாம் என்பதையும் சேர்த்து இருந்தேன்.
அன்று ஏனோ அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. ஆனால் மறுநாள் கம்பெனி MD என்னைத் தனது தனியறைக்கு அழைத்தார். சதிகாரி.. வசந்த சேனை..வத்தி வைத்து விட்டாள் என்பது மட்டும் புரிந்தது. MD யின் அறைக்கு சென்றால் அங்கே டிசைனிங் செக்சனின் சுந்தரும், மேலும் என் ரேச்சியும் இருந்தனர். இப்பவும் அவளது பார்வையில் எந்த கலங்கமும் இல்லை.
MD தான் விசாரணையைத் துவக்கினார். தயக்கமில்லாமல் எனது காதலை என் ரேச்சியிடம் சொன்னதை ஒத்துக் கொண்டேன். இது பார்வையில் ஆரம்பித்து இதயத்தில் முடியும் காதல் என்பதை விளக்கினேன். சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் சுந்தரைப் பார்க்க சுந்தர் எழுந்து வந்து என் ரேச்சியிடம் “கொஞ்சம் உன் சுடிதார் டாப்பை உயர்த்து” என்றான். டக்கென்று என் ரேச்சி டாப்பைத் தூக்க என் காதலியின் வயிற்றுப் பகுதியில் கையை செலுத்திய சுந்தர் அங்கிருந்த சிறு பின்னைப் பிடித்து இழுக்க டக்கென்று வயிற்றுப் பகுதி திறந்து கொண்டது.
நான் எட்டிப் பார்க்க உள்ளே அனைத்தும் எலெக்ட்ரானிக் போர்டுகளும் ஒயர்களுமாக இருந்தது. உள்ளே இருந்த சிறு ஸ்விட்சை அழுத்த கையைத் தூக்கியது போலவே ரேவதி நின்று கொண்டு இருந்தாள். சுத்தமான சிலிகான் மற்றும் பல வேதிப் பொருட்களின் கலவை தான் உங்கள் ரேச்சி...இவள் ஒரு ரோபாட் என்று சொன்ன சுந்தர் மீண்டும் ஸ்விட்சை அழுத்த ரேவதி கண் சிமிட்ட ஆரம்பித்து இருந்தாள். MD பெருந்தன்மையுடன் எனது தவறை மன்னிப்பதாகவும், இனி ஒழுங்காக இருக்கும் படி வார்ன் பண்னியும் அனுப்பினார். அந்த புதிய வகை ரோபாட் பெண்ணை எங்கள் கம்பெனியிலேயே டெஸ்டிங்குக்காக வைத்திருப்பதாகவும் கூறி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
தளர்ந்து போய் இருக்கையில் அமரப் போனேன். ஏதோ உந்துதலில் எட்டிப் பார்க்க அங்கே அட்மின் லாரன்ஸ் வேண்டுமென்றே உரசிக் கொண்டு செல்வது தெரிந்தது. எப்போதுமே வயிறு எரிபவன் இன்று வாய்விட்டு சிரித்தேன்.
நான் முழுக்கதையையும் முதலில் இருந்து சொல்கிறென்.. கேளுங்க.. நான் இங்க வந்து முழுசா 3 வருடமாகப் போகுதுங்க.. ஆபிஸில் சுமார் 50 பேர் வேலை செய்கின்றோம். பேக்டரில் 600 பேருக்கு மேல் இருக்காங்க. எனக்கு அக்கவுண்ட் என்பதால் ஆபிஸில் தான் முழு நேரமும் செலவாகும். இங்க 12 லேடீஸ் வேலை செய்றாங்க.. ஆனாலும் யாரையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை. ஏன்னா நான் என்னோட கனவு தேவதைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.
மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அந்த கனவு தேவதையை பார்த்தேன். அதுவும் எங்க ஆபிஸிலேயே புதுசா வேலைக்கு வந்து இருக்கா.. பேரு ரேவதி. நான் அழகா ரேச்சின்னு செல்லமா பேர் வச்சு இருக்கேன்.. ரேச்சி எனக்கு நீ மச்சி! நல்லா இருக்குல்ல....நல்லா அழகா இருப்பா.. (சென்சார் செய்யப்பட்ட பகுதியை இங்க நிரப்ப முடியாது... ஆர்) மொத்தத்துல நம்ம அசின், நயன் தாரா, பழைய ஐஸ்வர்யா ராய் எல்லோரையும் சேர்த்து செஞ்ச செப்புச் சிலைன்னு வச்சுக்கங்க
எங்க நிறுவனத்தின் டிசைனிங் செக்சனில் வேலைக்கு சேர்ந்தா.. எங்களுக்கும் டிசைனிங்குக்கும் எந்த டச்சும் இல்லைன்னாலும் இரண்டும் அடுத்ததடுத்த பகுதி என்பதால் அவளை அடிக்கடி பார்க்க முடியும். அவள் வந்த முதல் நாளிலேயே எனக்கு காதல் ஜூரம் ஆரம்பமாகி விட்டது.

ஆனா அவள் என்னை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. எப்போதாவது வழியில் சந்தித்தால் ஒரு ஸ்மைல் மட்டும் கிடைக்கும். நானும் பல தில்லாலங்கடி வேலை பார்த்தும் திரும்பிக் கூட பார்க்கலை. இதுல என்ன கொடுமைன்னா என்னோட அழகுக்கு முன்னாடி நிக்க கூட முடியாத இன்னும் சிலர் ஜொள்ளு வடித்தது தான்.. சேல்ஸ் செக்சனில் இருக்கும் அந்த பேக்கு இருக்கானே.. கேசவன்.. அவன் எப்ப பார்த்தாலும் என் ஆளிடம் போய் இளிக்கிறதே வேலையே இருக்கான்.
அவனாவது பரவாயில்லை... அக்கவுண்ட் செக்சன் ஹெட் இருக்காரே அந்த பாலா.. காலேஜ் படிக்கிற பசங்க இருக்காங்க அவருக்கு..அந்த ஆளும் என் ரேச்சிகிட்ட எப்பப் பார்த்தாலும் ஏதாவது டவுட்டுன்னு போய் நிக்கிறார். இது அவருக்கே ஓவரா இல்லியா? வயசானாலும் இங்கிதம் தெரியலையே?
இது எல்லாத்தையும் விடக் கொடுமை... அட்மின் செக்சனில் இருக்கும் லாரன்ஸ் பண்ணுவது தான்.. பேசுவது மாதிரி பக்கத்தில் போய் உரசுவது, நடந்து வரும் போது இடிச்சிட்டு சாரி சொல்வது..இப்படி டெய்லி தொடருது. அவள் இதை எல்லாம் சாதாரணமா எடுத்துட்டு போய்டுறாரா..ஆனா என்னால் இங்க சும்மா உட்கார முடியல...மூலம் வந்தவன் மாதிரி கேபினில் இருந்து எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு.
எப்படியாவது என் காதலை அவள்கிட்ட சொல்லனும்னு வெயிலில் போட்ட புழு மாதிரி துடிச்சேன். வேலையில் கவனம் செலுத்த முடியல..சாப்பாடு சரியா இறங்கல.. சரி.. நல்லபிள்ளையா அவளோட வீட்ல போய் பொண்ணு கேக்கலாம்ன்னு வேவு வேலையில் இறங்கினேன். அப்ப ஒரு முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. அவள் எங்க கம்பெனி MD யின் ஸ்பெஷல் காரில் தான் சென்று வருகிறாளாம். டிரைவரை பிடித்து விசாரித்த போது அதைவிட அதிர்ச்சியைக் கொடுத்தான். தினமும் காலையில் பிக்அப் செய்வது மற்றும் டிராப் செய்வது எல்லாம் பேக்டரியை ஒட்டி இருக்கும் கம்பெனி MD யின் கெஸ்ட் அவுஸில் தானாம்.
அவள் முகத்தில் தெரியும் ஒரு வித இறுக்கம் அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எனக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்திக் கொண்டு இருந்தது. அப்பதான் அந்த இறுதி முடிவை எடுத்தேன். என் ரேச்சிக்கு இந்த நரக வாழ்வில் இருந்து அவளுக்கு விடுதலை தருவது தான் அந்த முடிவு.
கம்பெனியின் இண்டர்னல் மெயில் சிஸ்டம் மூலம் அவளுக்கு என் காதலை முழுமையாகச் சொல்லி, விருப்பப்பட்டால் இந்த இயந்திர வாழ்க்கையை விட்டு எங்கள் கிராமத்திற்கு சென்று விடலாம் என்பதை சொல்லி இருந்தேன். மறக்காமல் எங்களது பூர்வீக சொத்தான 50 ஏக்கரில் விவசாயம் செய்து சந்தோசமாக வாழலாம் என்பதையும் சேர்த்து இருந்தேன்.
அன்று ஏனோ அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. ஆனால் மறுநாள் கம்பெனி MD என்னைத் தனது தனியறைக்கு அழைத்தார். சதிகாரி.. வசந்த சேனை..வத்தி வைத்து விட்டாள் என்பது மட்டும் புரிந்தது. MD யின் அறைக்கு சென்றால் அங்கே டிசைனிங் செக்சனின் சுந்தரும், மேலும் என் ரேச்சியும் இருந்தனர். இப்பவும் அவளது பார்வையில் எந்த கலங்கமும் இல்லை.
MD தான் விசாரணையைத் துவக்கினார். தயக்கமில்லாமல் எனது காதலை என் ரேச்சியிடம் சொன்னதை ஒத்துக் கொண்டேன். இது பார்வையில் ஆரம்பித்து இதயத்தில் முடியும் காதல் என்பதை விளக்கினேன். சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் சுந்தரைப் பார்க்க சுந்தர் எழுந்து வந்து என் ரேச்சியிடம் “கொஞ்சம் உன் சுடிதார் டாப்பை உயர்த்து” என்றான். டக்கென்று என் ரேச்சி டாப்பைத் தூக்க என் காதலியின் வயிற்றுப் பகுதியில் கையை செலுத்திய சுந்தர் அங்கிருந்த சிறு பின்னைப் பிடித்து இழுக்க டக்கென்று வயிற்றுப் பகுதி திறந்து கொண்டது.
நான் எட்டிப் பார்க்க உள்ளே அனைத்தும் எலெக்ட்ரானிக் போர்டுகளும் ஒயர்களுமாக இருந்தது. உள்ளே இருந்த சிறு ஸ்விட்சை அழுத்த கையைத் தூக்கியது போலவே ரேவதி நின்று கொண்டு இருந்தாள். சுத்தமான சிலிகான் மற்றும் பல வேதிப் பொருட்களின் கலவை தான் உங்கள் ரேச்சி...இவள் ஒரு ரோபாட் என்று சொன்ன சுந்தர் மீண்டும் ஸ்விட்சை அழுத்த ரேவதி கண் சிமிட்ட ஆரம்பித்து இருந்தாள். MD பெருந்தன்மையுடன் எனது தவறை மன்னிப்பதாகவும், இனி ஒழுங்காக இருக்கும் படி வார்ன் பண்னியும் அனுப்பினார். அந்த புதிய வகை ரோபாட் பெண்ணை எங்கள் கம்பெனியிலேயே டெஸ்டிங்குக்காக வைத்திருப்பதாகவும் கூறி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
தளர்ந்து போய் இருக்கையில் அமரப் போனேன். ஏதோ உந்துதலில் எட்டிப் பார்க்க அங்கே அட்மின் லாரன்ஸ் வேண்டுமென்றே உரசிக் கொண்டு செல்வது தெரிந்தது. எப்போதுமே வயிறு எரிபவன் இன்று வாய்விட்டு சிரித்தேன்.
Friday, December 19, 2008
Thursday, December 18, 2008
மீள் பதிவு : போங்கடா நீங்களும்.... உங்க IE 8 ம்.....
நம்ம பிரண்ட் ஒருத்தன் சும்மா இருக்க மாட்டாம இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பீட்டா வெர்ஷன் வந்திருக்கு. பதிவிறக்கி பயன்படுத்து, எழுத்துரு எல்லாம் ஆபிஸ் 2007 ல் வர்ர மாதிரி அழகா இருக்குனு சொன்னான். சரி எப்படி இருக்கும்னு பார்க்கலாமேனு சிங்கத்தோட குகைக்குள்ள நுழைஞ்சேன். பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யப் போனா வழக்கம் போல நம்மோட XP டுபாக்கூருனு சொன்னாரு நம்ம பில்கேட்ஸ். அவர் கிடக்காருனு டகால்டி வேலை காட்டி உங்களோட XP பத்தரை மாற்று தங்கம்னு சொல்ல வச்சி இன்ஸ்டால் பண்ணியாச்சு.
அப்புறம் ஆரம்பிச்சதப்பு சனியன்..... :( ஏதாவது பதிவை திறக்கப் போய் முழுவதும் திறப்பதற்குள் எலிக்குட்டியை ஸ்க்ரால் செய்தால் IE 8 படுத்து தூங்கிடுறாரு.... எங்க போய் சொல்ல... எல்லாம் நம்ம நேரம்... நமக்கு இந்த ஆசை எல்லாம் இல்லை தான்... நாம எப்பவுமே நெருப்பு நரி ஆட்கள் தான்... ஆனால் சிலரோட பதிவுல எழுதுவதை Justify பண்ணிடுறாங்க... அந்த பதிவுகளை பார்க்க மட்டும் போவது... இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்று ஆகி விட்டது.... :(

சரி அதெல்லாம் இருக்கட்டு இந்த கதையைப் படிச்சிட்டு அப்பீட்டாயிடுங்க... சரியா...
நம்மாளு பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.
‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே.. நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார்.
பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.
முதல்ல நரகம்.
ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ்க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.
ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?
கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.
அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.
ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு..
சரி.. கடவுளே.. நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,
கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.
அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.
யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியேனு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..
இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.
அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.
கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!
நன்றி: http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20504
முக்கிய டிஸ்கி : ஒரு வாரமா கொஞ்சம் எழுதும் மனநிலையில் இல்லை. ஊருக்கு போக டிக்கெட் கிடைக்காத டென்சனில் இருக்கேன். அதனால் இந்த மீள் பதிவு... இதெப்படி இருக்கு
அப்புறம் ஆரம்பிச்சதப்பு சனியன்..... :( ஏதாவது பதிவை திறக்கப் போய் முழுவதும் திறப்பதற்குள் எலிக்குட்டியை ஸ்க்ரால் செய்தால் IE 8 படுத்து தூங்கிடுறாரு.... எங்க போய் சொல்ல... எல்லாம் நம்ம நேரம்... நமக்கு இந்த ஆசை எல்லாம் இல்லை தான்... நாம எப்பவுமே நெருப்பு நரி ஆட்கள் தான்... ஆனால் சிலரோட பதிவுல எழுதுவதை Justify பண்ணிடுறாங்க... அந்த பதிவுகளை பார்க்க மட்டும் போவது... இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்று ஆகி விட்டது.... :(
சரி அதெல்லாம் இருக்கட்டு இந்த கதையைப் படிச்சிட்டு அப்பீட்டாயிடுங்க... சரியா...
நம்மாளு பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.
நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.
‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே.. நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார்.
பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.
முதல்ல நரகம்.
ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ்க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.
ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?
கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.
அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.
ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு..
சரி.. கடவுளே.. நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,
கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.
அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.
யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியேனு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..
இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.
அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.
கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!
நன்றி: http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20504
முக்கிய டிஸ்கி : ஒரு வாரமா கொஞ்சம் எழுதும் மனநிலையில் இல்லை. ஊருக்கு போக டிக்கெட் கிடைக்காத டென்சனில் இருக்கேன். அதனால் இந்த மீள் பதிவு... இதெப்படி இருக்கு
Wednesday, December 10, 2008
அச்சச்சோ! தமிழ் பிரியனை குரங்காட்டி ஆளுங்க கட்டி வச்சுட்டாங்களாமே?
வாங்க மக்கா! உங்களை கொஞ்சம் 16,17 வருஷம் பின்னோக்கி கொண்டு போறேன். இதுவும் ஒரு சைக்கிள் காலம் தான். ஆனா கொஞ்சம் சுவாரஸ்யமானது. ஏற்கனவே ஒரு சைக்கிள் கதை சொல்லி இருக்கேன். குட்டி சைக்கிளில் ஏறி ஊரை வலம் வந்து கொண்டு இருந்த காலம். அப்பத்தான் பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு பழகிட்டு சீட்டில் உட்கார ஆரம்பிச்சு இருந்தேன்.

பெடலுக்கு கால் முழுவதுமாக எட்டாததால் ஏதாவது வீட்டு திண்ணை, அல்லது கல் மீது கால் வைத்து ஏறிக் கொள்வேன். ஏதோ வேலையாய் நான் சைக்கிளில் ஒரு இடத்திற்கு போனோம். வரும் வழியில் என் பெரியப்பா மகன் தம்பி வந்து கொண்டு இருந்தான். வாடா சைக்கிளில் போகலாம் என்று ஒரு கெத்தாக சொல்ல அவனும் வந்து விட்டான். சைக்கிளில் பின்னால் கேரியர் இல்லாததால் அவனை முன்னால் உட்கார வைத்து திண்ணை துணையுடன் ஓட்ட ஆரம்பித்தேன்.
பிரச்சினை இல்லாமல் ஓடிக் கொண்டு இருந்தது. சரியில்லாத ரோடு என்பதால் குண்டும் குழியுமாக இருந்தது. நானும், தம்பியும் பேசிக் கொண்டே வந்து கொண்டு இருந்தோம். ரோட்டில் ஒரு சிறு குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் அதைக் கவனிக்க வில்லை. கடைசியில் தம்பி பார்த்து குழந்தை விளையாடுது சைக்கிளை திருப்பு என்று அவனே திருப்பியும் விட, அவன் திருப்பிய திசைக்கு மறுபுறம் நான் திருப்ப நேராக குழந்தையின் மீதே மோதி விட்டோம்.
குழந்தையை தள்ளிய சைக்கிள் அதன் மீதே ஏறி, பின்னர் கீழே விழுந்தும் விட்டது. வழக்கம் போல் சைக்கிளின் மீது நானும், தம்பியும் கிடக்க குழந்தை எல்லாத்துக்கும் அடியில் கிடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எங்களை தூக்கி விட்டனர். ஆங்காங்கே இரத்த காயம்.
ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். அந்த ஏரியா தான் எங்க ஊருக்கே கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற லாகிரி வஸ்துகளை மொத்த வியாபாரம் செய்யுமிடம். எங்களை காப்பாற்றி தூக்கியவர்கள் அனைவரும் பெரிய ரவுடிகள்.
கொஞ்ச நேரத்தில் குரங்காட்டி வந்தார். அவர் தான் அந்த ஏரியா கேங் லீடர். (வயதில் பெரிய மனிதன் என்பதால் மரியாதையாக சொல்வோம்.) குரங்காட்டி என்றால் குரங்கை காட்டி வித்தை காட்டுபவர் அல்ல... எப்போதும் தன்னுடனொரு குரங்கை வைத்துக் கொண்டிருப்பார். அது அவர் மீது எப்போதும் ஏறி விளையாடிக் கொண்டு இருக்கும். பெரிய சாராய வியாபாரி. பன்றி வளர்ப்பவர். கொஞ்சம் ரவுடித்தனமும் உண்டு(அப்பத்தைய நிலவரம்.. :) )
எங்களை தூக்கியவர்கள் சைக்கிளை ஓரமாக வைத்து விட்டு, எங்கள் இருவரையும் அங்கிருந்த வீட்டின் முன் கூரைக்காக நட்டப்பட்டு இருந்த அகத்தி மரத்தில் கட்டி வைத்து விட்டனர். குரங்காட்டி கட்டி வைத்ததால் நம்மை குரங்கு என்று சொல்லப்படாது.. ;)
விவரம் கேட்டதும் கோபத்தில் கத்த ஆரம்பித்து விட்டார். எங்கள் அப்பாவின் பெயரைச் சொன்னாலும் தெரியவில்லை. வீட்டு அட்ரஸை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நானும் தம்பியும் ஒரே அழுகை வேறு. அழுக வில்லையென்றால் அடிப்பார்களோ என்று கிரிமினல் ஐடியா வேறு.
இதற்குள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறுவன் அந்த வழியாக சென்றவன் எங்களைப் பார்த்து விட்டான். அவன் ஓடோடிப் போய் எங்கள் வீட்டில் சொல்ல, எங்கள் தாத்தா வேகமாக கிளம்பி வந்து விட்டார். தாத்தாவைப் பார்ததும் தான் போன உயிர் திரும்பியது.
தாத்தா வந்ததும், குரங்காட்டியிடம் என்னப்பா நம்ம வீட்டுப் புள்ளைகளை கட்டி வச்சு இருக்க என்றதும் அவர் ‘நம்ம வீட்டு புள்ளைகளா? பயபுள்ளைக சொல்லவே இல்லியா’ என்று கட்டுகளை அவிழ்த்து விட்டு விட்டார். ‘இனி கவனமா சைக்கிள் ஓட்டனும்’ என்று அறிவுரை வேறு... :) எங்கள் அப்பா அப்போது பிரபல்யம் அடையவில்லை என்று நினைக்கிறேன். அப்ப தாத்தாவோட இராஜ்ஜியம். இருவரும் நொண்டிக் கொண்டே சைக்கிளை உருட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
வழியில் என் தம்பியிடம் ‘வாடா, இனி சைக்கிளை ஓட்டிக் கொண்டு போகலாம்’ என்றதும் நக்கீரரைப் பார்த்த சிவாஜி மாதிரி ஒரு பார்வை பார்த்தானே பார்க்கனும். ஆங் சொல்ல மறந்துட்டேனே.. அந்த சைக்கிளில் மாட்டிய குழந்தை... அது எங்களை கட்டி வைத்தும் கை கொட்டி கெக்கே பிக்கேன்னு சிரித்துக் கொண்டு எங்கள் அருகிலேயே விளையாட்டைத் தொடர்ந்தது. அதற்கு அடி ஏதும் படவில்லை.
♥
பெடலுக்கு கால் முழுவதுமாக எட்டாததால் ஏதாவது வீட்டு திண்ணை, அல்லது கல் மீது கால் வைத்து ஏறிக் கொள்வேன். ஏதோ வேலையாய் நான் சைக்கிளில் ஒரு இடத்திற்கு போனோம். வரும் வழியில் என் பெரியப்பா மகன் தம்பி வந்து கொண்டு இருந்தான். வாடா சைக்கிளில் போகலாம் என்று ஒரு கெத்தாக சொல்ல அவனும் வந்து விட்டான். சைக்கிளில் பின்னால் கேரியர் இல்லாததால் அவனை முன்னால் உட்கார வைத்து திண்ணை துணையுடன் ஓட்ட ஆரம்பித்தேன்.
பிரச்சினை இல்லாமல் ஓடிக் கொண்டு இருந்தது. சரியில்லாத ரோடு என்பதால் குண்டும் குழியுமாக இருந்தது. நானும், தம்பியும் பேசிக் கொண்டே வந்து கொண்டு இருந்தோம். ரோட்டில் ஒரு சிறு குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் அதைக் கவனிக்க வில்லை. கடைசியில் தம்பி பார்த்து குழந்தை விளையாடுது சைக்கிளை திருப்பு என்று அவனே திருப்பியும் விட, அவன் திருப்பிய திசைக்கு மறுபுறம் நான் திருப்ப நேராக குழந்தையின் மீதே மோதி விட்டோம்.
குழந்தையை தள்ளிய சைக்கிள் அதன் மீதே ஏறி, பின்னர் கீழே விழுந்தும் விட்டது. வழக்கம் போல் சைக்கிளின் மீது நானும், தம்பியும் கிடக்க குழந்தை எல்லாத்துக்கும் அடியில் கிடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எங்களை தூக்கி விட்டனர். ஆங்காங்கே இரத்த காயம்.
ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். அந்த ஏரியா தான் எங்க ஊருக்கே கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற லாகிரி வஸ்துகளை மொத்த வியாபாரம் செய்யுமிடம். எங்களை காப்பாற்றி தூக்கியவர்கள் அனைவரும் பெரிய ரவுடிகள்.
கொஞ்ச நேரத்தில் குரங்காட்டி வந்தார். அவர் தான் அந்த ஏரியா கேங் லீடர். (வயதில் பெரிய மனிதன் என்பதால் மரியாதையாக சொல்வோம்.) குரங்காட்டி என்றால் குரங்கை காட்டி வித்தை காட்டுபவர் அல்ல... எப்போதும் தன்னுடனொரு குரங்கை வைத்துக் கொண்டிருப்பார். அது அவர் மீது எப்போதும் ஏறி விளையாடிக் கொண்டு இருக்கும். பெரிய சாராய வியாபாரி. பன்றி வளர்ப்பவர். கொஞ்சம் ரவுடித்தனமும் உண்டு(அப்பத்தைய நிலவரம்.. :) )
எங்களை தூக்கியவர்கள் சைக்கிளை ஓரமாக வைத்து விட்டு, எங்கள் இருவரையும் அங்கிருந்த வீட்டின் முன் கூரைக்காக நட்டப்பட்டு இருந்த அகத்தி மரத்தில் கட்டி வைத்து விட்டனர். குரங்காட்டி கட்டி வைத்ததால் நம்மை குரங்கு என்று சொல்லப்படாது.. ;)
விவரம் கேட்டதும் கோபத்தில் கத்த ஆரம்பித்து விட்டார். எங்கள் அப்பாவின் பெயரைச் சொன்னாலும் தெரியவில்லை. வீட்டு அட்ரஸை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நானும் தம்பியும் ஒரே அழுகை வேறு. அழுக வில்லையென்றால் அடிப்பார்களோ என்று கிரிமினல் ஐடியா வேறு.
இதற்குள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறுவன் அந்த வழியாக சென்றவன் எங்களைப் பார்த்து விட்டான். அவன் ஓடோடிப் போய் எங்கள் வீட்டில் சொல்ல, எங்கள் தாத்தா வேகமாக கிளம்பி வந்து விட்டார். தாத்தாவைப் பார்ததும் தான் போன உயிர் திரும்பியது.
தாத்தா வந்ததும், குரங்காட்டியிடம் என்னப்பா நம்ம வீட்டுப் புள்ளைகளை கட்டி வச்சு இருக்க என்றதும் அவர் ‘நம்ம வீட்டு புள்ளைகளா? பயபுள்ளைக சொல்லவே இல்லியா’ என்று கட்டுகளை அவிழ்த்து விட்டு விட்டார். ‘இனி கவனமா சைக்கிள் ஓட்டனும்’ என்று அறிவுரை வேறு... :) எங்கள் அப்பா அப்போது பிரபல்யம் அடையவில்லை என்று நினைக்கிறேன். அப்ப தாத்தாவோட இராஜ்ஜியம். இருவரும் நொண்டிக் கொண்டே சைக்கிளை உருட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.
வழியில் என் தம்பியிடம் ‘வாடா, இனி சைக்கிளை ஓட்டிக் கொண்டு போகலாம்’ என்றதும் நக்கீரரைப் பார்த்த சிவாஜி மாதிரி ஒரு பார்வை பார்த்தானே பார்க்கனும். ஆங் சொல்ல மறந்துட்டேனே.. அந்த சைக்கிளில் மாட்டிய குழந்தை... அது எங்களை கட்டி வைத்தும் கை கொட்டி கெக்கே பிக்கேன்னு சிரித்துக் கொண்டு எங்கள் அருகிலேயே விளையாட்டைத் தொடர்ந்தது. அதற்கு அடி ஏதும் படவில்லை.
♥
Subscribe to:
Posts (Atom)