Thursday, November 29, 2012

சுழல் மோகினி

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் என் நெஞ்சை நோக்கி இறங்கிக் கொண்டு இருந்த அந்த பளபளப்பான கத்தியைத் தடுக்க இயலாமல் கத்த மட்டுமே எனக்கு முடிந்தது. அவள் கோரமான சிரிப்போடு எனது இடது பக்கத்து நெஞ்சில் கத்தியை இறக்கினாள்..
ஏதோ தொண்டையில் அடைப்பது போல் இருந்தது. நெஞ்சில் இரத்தம் தனது பீரிடும் அளவைக் காட்டிக் கொண்டு இருந்தது.
 “டேய் எவ்ளோ நேரம்டா.. தூங்குவா எந்திரிடா..”
அவள் தனது கர்ண கொடூரமான குரலில் கத்திக் கொண்டு இருப்பது காதில் கேட்டது. சட்டென்று முழிப்பு வந்தது..
 “சே.. கனவு”
இளம் குளிரான நவம்பர் மாதத்து குளிரிலும் உடல் வேர்த்து இருப்பதை உணர முடிந்தது. கண்களில் எரிச்சலும், தொண்டையில் ஒரு கரகரப்பும் சேர்ந்து இருந்தது. இடது பக்க நெஞ்சில் ஏதோ கூர்மையானதை வைத்து அழுத்திய தடம் இருந்தது.. ஆனால் இரத்தக் கறை ஏதும் இல்லை..

காலையிலேயே கொடூரமான கனவு என்னை உலுக்கி இருந்தது
“டேய்.. உன் பிரண்ட்ஸ் எல்லாம் வெளியே வெயிட் பண்றானுகடா.. எங்கேயோ அருவிக்கு போகனும்னு சொன்னீயே.. ஞாயிற்றுக் கிழமை சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க.. மதியம் சோறாக்கி வைக்கிறேன்.. இங்க சாப்பிட வந்துடுங்க” அம்மா மீண்டும்
அம்மாவுக்குத் தெரியும்.. கூட வந்து இருப்பவர்கள் இந்த ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடுவார்கள் என்று.. வேகமாக கிளம்பி கொண்டு வெளியே வந்தேன். நண்பர்கள் மூவரும் காரில் தயாராக இருந்தனர்.
“ஏண்டா தூங்குமூஞ்சி நாங்க தான் நேத்தே சொன்னம்ல.. இங்க வந்து உன்னை எழுப்ப வேண்டியதாப் போச்சு”
 “சாரிடா.. நைட் தூங்க லேட்டாகிடுச்சு.. காலையில் ரொம்ப டயர்டு வேற.. கெட்ட கனவு வந்து தூக்கத்தை கொடுத்துடுச்சு.”
கண் எரிச்சலுடன், கத்தி இறங்கிய இடத்தைத் தொட்டுப் பார்த்தேன்.. லேசாக வலிப்பது போல் இருந்தது. வண்டி வேகமாக சென்று கொண்டு இருந்தது.. அப்போது தான் திறந்து இருந்த டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கிக் கொண்டார்கள் கூடவே தீவனங்களும்...
எங்கள் ஊரில் இருந்து 20 கி.மீ தூரத்தில் மலையடிவாரத்தில் அந்த அருவி இருக்கின்றது. அவ்வளவாக ஆட்கள் வர மாட்டார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அருவியிலும், அதை ஒட்டி இருந்த தண்ணீர் கிடங்குகளிலும் குளியல் ஆரம்பமாகி இருந்தது. அதைத் தொடர்ந்து அனைவரும் மது அருந்த ஆரம்பித்து இருந்தனர்.. எனக்கு மது பழக்கம் இல்லாததால் தீவனங்களை தின்று கொண்டு இருந்தேன். கூத்தும் கும்மாளமுமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.. விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக் கொண்டு வந்தது. நல்ல மழை பெய்வதற்கான அறிகுறி இருந்தது.
நல்ல போதையில்  இருந்த நண்பர்கள் மூவரையும் தள்ளிக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றுவதற்குள் போதும் போதுமென்றாகி இருந்தது. வண்டியில் ஏறியதும் மூவரில் சரிந்து விட்டிருந்தனர். ப்ளாட்.. வழக்கமாக நடப்பது தான் என்பதால் காரை ஓட்டிக் கொண்டு வந்தேன்.
வண்டி கிளம்பியதும் மழை சடசடவென அடிக்க ஆரம்பித்து இருந்தது. மலையை விட்டு சிறிது தூரம் இறங்கி சமதளத்திற்கு வந்ததும் மழை இன்னும் வெளுக்க ஆரம்பித்து இருந்தது. திடீரென்று படார் என்ற சத்தத்துடன் பின்பக்க டயர் வெடித்திருந்தது. மழையில் நனைந்து கொண்டே இறங்கிப் பார்த்தேன். டயர் பணாலாகி இருந்தது.
சட்டையை தலைவழியே கழட்டிவாறே வைத்துக் கொண்டு டிக்கியைத் திறந்தால் ஸ்டெப்னி மட்டுமே இருந்தது. ஜாக்கி உள்ளிட்டவைகளைக் காணவில்லை. கடன்கார நண்பன்.. எவனுக்காவது அவசரத்துக்கு கொடுத்து இருப்பான்.
மழை இன்னும் வலுத்து இருந்தது. போன் சிக்னல் அனைத்தும் கட்டாகி இருந்தது. நவம்பர் மாதக் குளிரில் அருவிக்கு ஆட்கள் வருவது அபூர்வம்.. அதுவும் இப்போது திடீரென்று மழை வேறு கொட்டுகின்றது. கவ்விய இருட்டில் மின்னல் வெட்டிச் சென்றது. எங்கோ தென்னை மரத்தில் விழுந்து இருக்க வேண்டும் அருகிலேயே.. அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த தோட்டத்திற்குள் வீடும், வீட்டின் முன் காரும் தெரிந்தது.

நேரத்தை வீணாக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டே தட்டுத் தடுமாறி அந்த வீட்டை நோக்கிச் சென்றேன். மழையினால் பாதை முழுவதும் சகதிக்காடாகி இருந்தது. வீட்டில் இருந்த காலிங்பெல்லை அழுத்தினாலும் உள்ளே பெல் அடிக்கும் ஓசை ஏதும் கேட்கவில்லை. கரெண்ட் கட்டாகி இருக்கலாம் என்ற எண்ணியவாறே கதவைத் தட்டினேன்.

உடனே திறந்த கதவின் வழியே அந்த அபூர்வ தேவதையைக் கண்டேன். மன்மதனின் காதலியாக இருக்கும் சகல லட்சனங்களையும் பொருந்திய காந்தர்வி பார்த்த பார்த்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.. “ஹலோ.. என்னங்க.. யார் நீங்க. என்ன வேணும்?..இவ்ளோ மழையில் இங்க வந்து இருக்கீங்க”
அந்த பைங்கிளி தனது இதழ் திறந்து பேசியது.. இல்லை இல்லை நாதம் இசைத்தது..
 “டயரோட கார் வெடிச்சிருச்சு.. இல்லையில்லை.. ஸ்டெப்னியோட டயர் வெடிச்சிடுச்சி”
உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தேன். ஒரு பெண்ணின் அழகு இப்படி மயக்கும் என்று இன்று தான் கண்டுகொண்டேன்..
“என்னதாங்க வேணும்.. சொல்லுங்க” அந்த குயில் கிணிகிணியென ஓசை எழுப்பியது... இப்போது நிதானத்திற்கு வந்து இருந்தேன்
 “அருவிக்கு வந்தோம்ங்க.. வழியில் கார் டயர் வெடிச்சிடுச்சு.. ஸ்டெப்னி மாத்த ஜாக்கி இல்லை வண்டில.. இங்க உங்க வீட்டைப் பார்த்தேன். முன்னாடி காரும்.. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்ன்னு”
”ஓ அப்படியா.. சரி சரி உள்ளே வாங்க.. நல்லா நனைஞ்சு போய் இருக்கீங்க” அவள் வழி விட நான் உள்ளே சென்றேன். நல்ல விசாலமான ஹாலாக இருந்தது. அவள் மாம்பழ நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த சேலை அணிந்து இருந்தாள்.. வயது 25 க்குள் இருக்கும் போல் தோணியது..
அழகாக வாறிய தலை முடி. திருத்தமாக இருந்த புருவம். அழகான சிறிய பொட்டு. சோபாவில் இருந்த துண்டை எடுத்து நீட்டினாள். அதை வாங்கும் போது அவளது விரலில் என் விரல் உரச ஒரு மின்னல் அடித்தது போல் இருந்தது.
 “முதல்ல தலையை துவட்டுங்க.. ஒரு டீ போட்டுத் தர்ரேன்.. குடிங்க.. அதுக்குள் ஜாக்கி எடுத்து தர்ரேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். தலையை துவட்டிக் கொண்டே சோபாவில் அமர்ந்தேன்..
நல்ல பெரிய வீடு தான்.. வெளியே இருந்து பார்க்கும் போது பழையதாக இருந்தாலும் உள்ளே மார்டனாக இருந்தது. சிறிது நேரத்தில் அவள் டீ கோப்பையுடன் வந்தாள். டீயை வாங்கும் போது தான் கவனித்தேன். அவளது முந்தானையின் அகலம் குறைந்து போய் இருந்தது. அதோடு இடுப்புப் பகுதி இப்போது நன்றாக தெரிவது போல் மாற்றிக் கட்டியும் இருந்தாள். உள் மனதில் ஒரு சலனம் ஓடியது.
“இங்க வேறு யாரும் இல்லீங்களா?”
“என்னோட கணவர் வேலை விஷயமா மதுரை வரை போய் இருக்காங்க.. ஒரு 5 வயது மகன் இருக்கான்.. இன்னைக்கு லீவுங்கறதால அவங்க பாட்டி வீட்டுக்கு போய் இருக்கான்.. நைட் அவர் வரும் போது கூட கூட்டிட்டு வந்துடுவார்” ஒரு மோகனப் புன்னகையுடன் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள். நானும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
“டீயை முதல்ல சாப்பிடுங்க. அப்புறமா... ” என்று இழுத்தாள்..
 “கண்ணா லட்டு திங்க ஆசையா” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டே டீயை உறிஞ்சினேன். சட்டென்று கண்களைக் கொண்டு செருகியது.. கொஞ்ச நேரத்திற்கு நினைவே இல்லை. கண் எரிச்சலுடன் கண்ணைத் திறந்த போது தலை விரிகோலமாக அவள் என் மீது அமர்ந்து இருந்தாள்.

  இக்கதையில் தொடர்ச்சியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

Monday, November 5, 2012

Klueless 8 - 2012 -Ahvan - Hints, clues, spoilers

Klueless is the annual online puzzle designed by IIM indore students.

 After competing in Hunt for hint from terror kummi last aug .. It was a loooong wait for klueless 8.. But when it arrived I could not  find a time to solve the puzzle.... reasons are Bakrith and Diwali busy in our shop.. + as usual AMMA's exceptionally well organized Electricity dept. so it took me 8 days to  complete..
And Finally Klueess 8 finished..
Special Thanks to Dinnath Baskaran sir, arun prasath .. They both helped me with useful hints in some levels
So now the time to help others.. If u are struck in some level.. just let me know in comments.. I will try to help you as soon as possible.. If u are new.. Just go play. No one can describe you that experience. you can feel when you start playing.

 

Tips and Hints
Level 1 :Level 1 : Just click and go

Level 2 :Do a image search*.. find  meanings of  the symbols.. from the URL cue  find the other name of that....change the url.. if u can finish.. i LOVE u so much.. ;-)

 (e.g) changing URL
 http://ahvan.in/ahvan/ahvan12/klueless8/mojojojo/tamil.asp
http://ahvan.in/ahvan/ahvan12/klueless8/mojojojo/english.asp

* Download the picture in your computer, go to google image search page..click the Camera icon.. give your image  location and search.. Some time you need to split the images with paint or Photoshop.

Uploaded with ImageShack.us

Level 3 : Just google the images you are seeing.. all names must be in general term.. find a game name.

Level 4 : What is the relationship between the both in page title?.. no.. no... don't go that way.. Just take the ralationship with u.. find the person in image and found the other person.

Level 5 : google the images.. you will get some kind of characters.. go with them.. if u can't  find in earth.. .. leave it.. go to moon.. your Grandma wait there to give you a vada.. ;-)


There may be answers which lead you down the wrong path so watch out! Please note: Not every one of these might be a clue. We promise to make a conscious effort to mislead you.

Enjoy the game

 

Sunday, October 14, 2012

Hunt for hint... நன்றிகள்!

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது எப்போது எப்படி இருக்குன்னு சொல்ல முடியாது. இந்த நிமிடம் மகிழ்ச்சியா இருப்பவன் அடுத்த நிமிடம் துன்பப்படலாம்... vice-versa ..

ஆனால் வாழ்க்கையில் உட்சபட்ச மகிழ்ச்சி என்பது எப்போது வரும்ன்னு யாருக்கும் சொல்ல முடியாது.. அப்படியான ஒரு மகிழ்வான கணத்தை ஏற்படுத்திக் கொடுத்த டெரர்கும்மி குழுவினருக்கு என்னுடைய நன்றிகள் பல..

இந்தூர் ஐ.ஐ.எம் நடத்தும் Klueless போன்ற ஒரு முயற்சியை Hunt for Hint என்ற பெயரில் டெரர்கும்மி குழுவினர் முயற்சி செய்து அற்புதமாக வெற்றி அடைந்திருக்கிறார்கள். அதில் ஏனோ சுவாரஸ்யமின்றி தான் கலந்து கொண்டேன். செப்டம்பர் 12 ல் தொடங்கிய போட்டி.. அடுத்த நான்கு நாட்களும் பைத்தியம் பிடிக்காத குறை தான்.. கடைசியில் இரண்டாவதாக வெற்றி பெற்ற போது அடைந்த மகிழ்ச்சியை அளக்க கருவியே இல்லை.. :)

அதுவும் நான் இருந்த நிலையில்...
1. மொபைல் இண்டர்நெட் மூலம் மொபைலை மோடமாக பாவித்து இணையத்தில் தொடர்பு
2. எப்போதாவது இருக்கும் மின்சாரம்
3. எப்போது வேண்டுமானாலும் தொடர்பு அறுந்து விடும் இணைய இணைப்பு
 4. கூகுள் திறக்கக் கூட ஒரு நிமிட ஆகும் மொபைல் இணைப்பு
5. பிரவுசரில் ப்டங்கள் வருவதை டிஸேபிள் செய்து தான் பயன்படுத்த இயலும் 6. அடிக்கடி வந்து தொல்லை(?) தரும் கடை வாடிக்கையாளர்கள். (கடையில் தான் கணிணி.. வீட்டில் தடா)

இப்படியெல்லாம் இருக்கும் சூழலில் HFH 2 வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று செக்கை வாங்கி காசும் பார்த்தாகி விட்டது. அந்த அனுபவத்தை உணர அந்த வேளையில் அனுபவத்தால் தான் தெரியும்.


ImageShack.us

HFH 2 குழுவினருக்கு மிக்க நன்றிகள்!

டிஸ்கி : IIM இந்தூர் நடத்தும் Klueless போட்டி வரும் 19 ந்தேதி ஆரம்பமாகின்றதாம்.. அம்மாவினுடைய பொற்கால ஆட்சியில் மின்சாரம் தங்கத்தை விட உயர்வானது.. இதில் கலந்து கொள்வது எல்லாம் கனவில் தான் நடக்கும்.. :-(

Klueless 8 போட்டிக்கான இணைப்பு
IIM Indore முகநூல் பக்கம்


 

Friday, August 10, 2012

கொஞ்சமா எழுதிக்கிறேன்... :)

சென்ற வாரம் தமிழக முதல்வர் தந்தத் தாரகை அம்மா ஒரு அறிவிப்பு வெளியிட்டு நிறைய பொதுமக்களின் வயிற்றிற்கு பால் வார்த்து கண்களுக்கு குளிர்ச்சியை வழங்கினார். இனி எங்கும் ப்ளக்ஸ் பேனர்களில் அம்மா, எம்.ஜி.ஆர், அண்ணா படத்தைத் தவிர வேறு இருக்கக் கூடாது என்று.. மட்டற்ற மகிழ்ச்சியை அளித்தது. தெருக்களை அடைத்து, கடைகளை மறித்து அமைக்கப்பட்ட பேனர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன.. அம்மா இந்த கொள்கையில் ‘வழக்கம் போல்’ உறுதியா இருக்கட்டுமாக.. அதோடு இன்னொரு நல்லதும் செய்தால் மக்கள் மிக மகிழ்வார்கள்... இனி கல்யாண ப்ளக்ஸ்களில் மணப்பெண்-மணமகள் போட்டோக்களைப் போடக் கூடாது என்று.. கல்யாண சீசனில் தெருக்களை அடைத்து 15 , 20 அடி அகல நீளங்களில் வாழ்த்து பேனர்... மணமக்கள் ஜோடியாக.. பார்ப்பதற்கே பயமாக இருக்கின்றன... அதை பார்த்து வாழ்த்த மனம் வரா விட்டாலும் திட்ட வைக்காமல் இருக்கலாம்... சில இடங்களில் விரசமான மேக்கப் ஆடை அலங்காரங்களுடன்.. பார்க்கவே அருவருப்பாக இருக்கின்றது.
உன் கிட்ட லட்டையே ஒப்படைக்கிறோம். அது எப்பவும் ஸ்வீட்டாகவே இருக்கனும்
இது ஒரு திருமண வாழ்த்து போஸ்டர்... பஸ்ஸில் என்னுடன் அமர்ந்து இருந்த ஒரு சகபயணி சொன்னார்... காராச்சேவு மாதிரி இருக்கு... இது லட்டாம்ல... ஒய் திஸ் கொலவெறி... :-) &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& உலகம் இயங்குவதே உணவைக் கொண்டு தான்.. அந்த உணவைத் தயார்படுத்த விவசாயம் முக்கியம்.. விவசாயம் செழிக்க மழை அத்தியாவசியம்.. நம் முன்னோர்களின் இயற்கையான நீர்ப்பாசன முறைகளை நாம் சிதறடித்து விட்டதால் இன்று மழை பெய்தால் தான் விவசாயம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றோம்.. அது பொய்க்கும் போது ஏற்படும் விளைவுகள் கொடூரமாக இருக்கின்றன. மழை இல்லையென்பதால் விவசாயம் செய்ய முடியாத நிலை.. விலைச்சலும் இல்லை... விலையும் இல்லை எனும் போது பணப்புழக்கம் குறைகின்றது... இந்த ஆண்டு எங்கள் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை முழுவதும் பொய்த்து போய் விட்டது. வைகை, பெரியார் அணைகளில் தண்ணீர் இல்லை.. விவசாயம் தொழில்கள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளன. குடிக்கும் தண்ணீருக்கே பஞ்சம் வரும் சூழல்.. கொஞ்சம் ஆதரவாக இந்த வாரம் மழை சிறிது பெய்யத் துவங்கி உள்ளது. இறைவனிடம் வேண்டிக் கொள்வோம். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ஆகஸ்ட் 6 ந்தேதியை உலகம் மறந்து இருக்கலாம்.. அணு ஆயுத தாக்குதலால் உலகமே அதிர்ந்த நாள்... அதைப் பற்றிய எந்த பிரஞ்யையும் இல்லாமல் இந்திய ஜனநாயக நாடு அணு உலைகளை அமைத்து வருகின்றது. மக்களின் எதிர்ப்புகளை எல்லாம் காமெடியாக்க சில காமெடி அமைச்சர்களை அதற்க்காகவே வைத்து இருக்கின்றது. அணு ஆயுதங்கள் தயாரிக்கும் நோக்குடன் வெளிப்படையாக அணு மின்சாரம் என்ற அஜெண்டாவை வைத்து இருக்கும் இந்த ஜனநாயக அரசுக்கு எதைப்பற்றியும் கவலை இல்லை... கூடங்குள மக்களின், இயற்கை ஆர்வலர்களின் எதிர்ப்பை மீறி அங்கு அணு மின்சாரம் தயாரிக்கும் ஆர்வம் அழிவை நோக்கி செல்லாமல் இருக்கனும்.. இன்னும் 15 நாளில் மின்சாரம் தயாரிக்க ஆரம்பிப்போம் என்று கடந்த ஒரு வருடமாக வாய்தா வாங்கிக் கொண்டு இருக்கும் நாராயணசாமி போன்ற மாண்புமிகுக்கள் இருக்கும் வரை எதுவும் அரசு இயந்திரங்களால் சாத்தியப்படும். &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Wednesday, March 28, 2012

தண்ணீர் - ஒரு சர்வரோக நிவாரணி

சர்.சி.வி.ராமன் (1888-1970) இந்தியாவில் பிறந்த ஒரு சிறந்த அறிவியல் அறிஞர். இயற்பியலுக்கான நோபல் பரிசினை வென்றவர்.. காடுகளை அழித்து, சுற்றுப்புறச் சூழலை நாமே கெடுத்துக் கொள்ளும் இன்றைய நவீன யுகத்தில் தண்ணீரின் முக்கியத்துவம் கொடுத்து எழுதிய புத்தகம் தான்.. (Water - The Elixir of life) இதில் தண்ணீர் இன்றைய காலகட்டத்தில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் தாவரங்கள் வாழ்வதற்கும் பெரிய அடிப்படை என்பதாலேயே அதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்... இனி அவரது பார்வையில் இந்த புத்தகத்தில் உள்ளவற்றை சிறிது பார்க்கலாம்.

பொதுவாக பழைய காலங்களில் பார்கடலில் கடைந்து கிடைக்கப்பட்ட அமிர்தமே நமது வாழ்வில் கிடைக்கதற்கரிய பொருளாக, சர்வரோக நிவாரணியாக நம் முன்னோர்களால் பார்க்கப்பட்டது. ஆனால் கிடைக்காத ஒன்றையே நாம் தேடியுள்ளோம். ஆனால் தண்ணீரே உலக வாழ்வின் அடிப்படையான ஒன்றாக இருக்கின்றது. தண்ணீரே உலகின் முன்னேற்றத்தையும், அதன் வளர்ச்சியையும் நிர்ணயித்துள்ளது எனச் சொன்னால் மிகை இல்லை.

தண்ணீர் இருக்கும் பகுதிகளே பூமிக்கு அதிக வனப்பைத் தருகின்றன, அது ஓடுகின்ற வெள்ளமாக இருந்தாலும் சரியே, குளம் குட்டைகளாக இருந்தாலும் சரியே.. அவைகளில் கால்நடைகள் தங்கள் தாகங்களை தீர்த்துக் கொள்கின்றன. பொதுவாக தென்னிந்தியப் பகுதிகளில் நீர்த்தேக்கங்களை அதிகமாகக் காணலாம். அவை எப்போதும் பார்வைக்கு விருந்தாகவே அமையும். ஆனால் அவை சுகாதாரமான முறையில் பாதுகாக்கப்படுவதில்லை என்பது ஒரு பெரும் குறை.

ஆழம் குறைவான ஏரிகளும், கண்மாய்களுமே அங்கு விவசாயத்திற்கு பெரிதும் உதவுபவையாக இருக்கின்றன. அப்பகுதிகளில் இருந்து சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையும் காண்பது என்பது அழகான அனுபவம். மனிதனின் கண்ணுக்கு ஒப்பாக இயற்கையில் அமைந்த நீர்நிலைகளை ஒப்பிடலாம். சூரியன் உதிக்கும் போது தண்ணீரில் தெரியும் ஜொலிஜொலிப்பும், மறையும் போது இருக்கும் மந்தகாசமும் அற்புதம்.

தான் ஓடும் இடத்திற்குத் தகுந்தாற் போல் நிறத்தை மாற்றிக் கொள்வது தண்ணீருக்கு இருக்கும் ஆற்றலே.. மழையின் காரணமாக ஓடி வரும் தண்ணீர் அந்த மண்ணுடைய நிறத்தை வாங்கி கொண்டு அதன் நீறத்திலேயே நீர்நிலைகளை நிறைக்கின்றன. புழுதி நிறமும், செம்மண் நிறமுமாக ஓடும் தண்ணீர் கடலை அடைந்தால் மட்டும் நீல நிறத்தை அடைந்து விடுகின்றது. நீரோடும் நிலப்பகுதி முழுவதும் வளமானதாக மாறி விடுகின்றது.

மண்ணரிப்பு என்பது கவனிக்காமல் விட்டுவிடும் போது நமக்கு பெரும் அழிவையேத் தருகின்றது. அதிகப்படியான மழை, நிலச்சரிவு, நிலத்தை பாதுகாக்கும் மரங்களை வெட்டுவது போன்றவையே நிலச்சரிவுக்கு காரணமாக அமைகின்றன. தண்ணீரின் ஓட்டத்தின் காரணமாக மண்ணரிப்பு ஏற்படுவதை நாம் தடுக்க வேண்டும். ஒரு வெற்றிகரமான விவசாயத்தினை மேற்கொள்ள மண்ணரிப்புகளில் நாம் நிலத்தைக் காக்க வேண்டும். மண்ணரிப்பு ஏற்படக் கூடிய இடங்களில் பாதுகப்பு அரண்கள், நீரோட்டப் பாதைகளில் தடுப்பை ஏற்படுத்தாமல், கரையோரங்களில் மரங்களை நட்டு தடுக்கலாம்.

தண்ணீரே மனித, மிருக, தாவரங்களின் வாழ்வியலுக்கு அடிப்படையாக இருக்கின்றது. இவைகளின் உடலில் பெரும்பகுதி நீரினால் ஆனது. தண்ணீர் இல்லாமல் வளர்ச்சி என்பது நடக்கவே இயலாதது. மண்ணில் இருக்கும் நீரே தாவர வளர்ச்சிக்கும், மனிதனுக்கு அடிப்படைத் தேவை.

தண்ணீர் சிக்கனம் மூலம் வருங்காலத்திற்கான நீரை சேமிப்பது என்பது நமது வாழ்வின் அடிப்படை பண்பாக இருக்க வேண்டும். நீர் ஊற்றுக்களே நம்மை காக்கக் கூடியவைகளாக அமையும். ஆனாலும் மழை நீரும், மழைகளில் இருந்து வரும் நீருமே நமக்கு கிடைக்கின்றன. இன்னும் பருவமழையை நம்பியே இன்றைய இந்தியாவின் அடிப்படை விவ்சாயம் இருக்கும் சூழலில் பருவமழை பொய்த்துப் போகும் போது கடும் நஷ்டங்களை எதிர் கொள்ள நேரிடுகின்றது.

நதி நீரை தேவையான பகுதிகளை எடுத்துச் செல்வது என்பது இன்றைய இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று. சரியான திட்டமிடல் மூலம் இதைச் செய்தால் வனாந்திரங்களும், பாலைவனமும் சோலைவங்களாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

மரங்கள் அழிவதும், அழிக்கப்படுவதும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம். மரம் நடுவதை திறம்பட செய்வதும், தேவையான அளவு காடுகளை உருவாக்குவதும், இன்றைய இந்தியாவின் அவசரத் தேவைகளில் ஒன்று. காடுகள் அதிகமானால் மண்ணரிப்பு தடுக்கப்படுவதுடன், மழை நீரை பூமியில் சேமித்து வைக்கவும் உதவும்.

நதி நீர் ஓட்டத்தை செம்மைப்படுத்துவதன் மூலம் நீரை சேமித்து விவ்சாயத்தைப் பாதுகாக்கலாம். நதி நீரை தேக்கி வைத்து அதன் மூலம் நீர் மின்சார உற்பத்தியை அதிகரிக்கலாம். இன்றைய காலத்தில் கிராமப்புற வளர்ச்சிக்கு மின்சாரம் ஒரு அடிப்படைத் தேவையாக இருக்கின்றது.

ஆழ்துளைக் குழாய்கள் மூலம் நீர் உறிஞ்சப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டிய முக்கிய விஷயம். பூமிக்குள் தேங்கி இருக்கும் நீரே ஜீவராசிகள் அனைத்திற்கும் அடிப்படையானது. தண்ணீர் பற்றிய ஆராய்ச்சிகளும், தண்ணீரின் குணாதிசயங்களும் என்றென்றும் ஆய்வுக்கு உட்படுத்தக் கூடியதாகவே என்றென்றும் இருக்கும்.

சர்.சி.வி. ராமனின் எழுத்தும் மிகவும் சுருக்கமானவைகளாகவும், படிப்பதற்கு மிகவும் புரியக் கூடியவைகளாகவும், கருத்தைப் பாமரரும் விளங்கிக் கொள்ளும் வண்ணமாகும் இருக்கும்.

பின்குறிப்பு: இது ஒரு கல்வி சம்பந்தமான தேவைகளுக்காக எழுதிக் கொண்டிருப்பது. புத்தகத்தை எழுதியவரின் பார்வை இதில் வரவில்லை என்றால் எம் மொழிபெயர்ப்பின் தவறே.




Monday, March 26, 2012

சொல் கலை புதிர் - 1

இது ஒரு வித்தியாசமான தமிழ் புதிர்.. ரொம்ப சுலபம் தான்.

1. முதலில் கலைந்து இருக்கும் ஆறு வார்த்தைகளை ஒழுங்கு செய்ய வேண்டும். அவை ஆறு அர்த்தமுள்ள வார்த்தைகளைத் தரும்.

2. Refresh Final Answer Boxes என்பதைக் கிளிக் செய்தால், ஆறு வார்த்தைகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட (அவை நிறம் மாற்றப்பட்டிருக்கும்) எழுத்துக்கள் கீழே வரும்.

3. கீழே உள்ளவைகளை ஒழுங்கு செய்தால் ஒரு வரி கிடைக்கும். அது தான் கடைசி விடை. இப்போது Completed என்பதைக் கிளிக் செய்தால் அருகில் உள்ள பாக்ஸில் விடை முழுவதும் வரும். அதை காப்பி பேஸ்ட் செய்து கமெண்ட் பாக்ஸில் அல்லது dginnah@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

4. எழுத்துக்களை மாற்ற கட்டத்தில் மவுஸால் லேசாக தட்டி அடுத்த கட்டத்துக்கு மாற்றி விடலாம்.

மிக சுலபமான புதிரே இருக்கின்றது. விளையாடுவது சுலபம்.. சுவாரஸ்யத்திற்கு உத்திரவாதம்.
வாழ்த்துக்கள்!

அறிமுகப்படுத்திய நண்பர் யோசிப்பவருக்கு நன்றிகள்.

1.
2.
3.
4.
5.
6.


அட ராமான்னு சொல்லிடுவீங்களோ?



Thursday, February 16, 2012

அஸ்மாவுக்கு நிக்காஹ்

”ஒழுங்கா சொல்றதைக் கேட்கனும்.. இல்லைன்னா பிச்சுப்போடுவேன்..இன்னும் ஒரு மாசத்தில் நிக்காஹ்.. நீ சம்மதிச்சே ஆகனும்” அஸ்மாவின் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது. வாப்பாவின் கோபமான கர்ஜனையையும், அடியையும் பொறுக்காத அஸ்மா ஆடிப் போய் விட்டாள்...கண்களில் தாரைதாரையாக தண்ணீர் கொட்டியது. எப்போதும் அதிர்ந்து பேசாத வாப்பாவா இப்படி என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அஸ்மாவின் அம்மா ஜூபைதாவின் அதிர்ச்சியோ அதை விட அதிகமாக இருந்தது. கணவன் இதுவரை குழந்தைகளை அடித்ததே இல்லை... ஜூபைதா அடித்தால் கூட குழந்தைகளை அடிக்கக் கூடாது என்று கண்டிப்பவர்.. இன்று இப்படி நடந்ததும் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விட்டாள்..


“தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை இப்படி கை நீட்டி விட்டீர்களே?” என்று கண்களின் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே ரசூல் பாயைப் பார்த்து கொஞ்சம் கோபமாகவே கேட்டு விட்டாள்... ரசூல் பாய் ஒரு வெறுமையான சூடான பார்வையை ஜூபைதா மீது வீசி விட்டு, வேகமாக செருப்பை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

ரசூல் பாய் என்றால் மயிலம்பட்டி கிராமத்தில் மட்டுமின்றி அதைச் சுற்றி உள்ள பல ஊர்களுக்கும் தெரியும். பலசரக்கு மொத்த வியாபாரம்... நாணயமான மனுசன், வியாபார நெளிவு சுழிவு தெரிந்தவர்... வரவு செலவில் தாமதம் என்றால் கூட மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து தவணை தரக் கூடியவர். சொன்ன நேரத்தில் சரியாக சரக்கு கிடைக்கும், பணமும் கிடைக்கும் என்பதால் இவரிடம் வியாபாரம் செய்பவர்களுக்கும், இவர் வியாபாரம் செய்பவர்களுக்கும் ரசூல் பாயை ரொம்ப பிடிக்கும்.

இவ்வளவு அமைதியான ரசூல் பாய் தான் இன்று கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். ரசூல் பாய்க்கு அஸ்மா ஒரு மகள்.. இரண்டு மகன்கள்.. மூவரையும் 20 கி.மீ தூரம் தள்ளி இருக்கும் கல்லூரி அனுப்பி படிக்க வைத்தவர். மஹல்லாவில் முதல் பட்டதாரி பெண்ணாக அஸ்மா இருந்தாள். இரண்டு மகனில் ஒருவன் பைசல் சென்னையின் ஒரு பன்னாட்டுக் குழுமத்தில் உயர்பதவியில் இருக்க... இன்னொருவன் அய்யூப் வாப்பாவுடன் வியாபாரத்தைப் பார்த்துக் கொள்கின்றான்.

அஸ்மா கடைக்குட்டி என்பதால் வீட்டில் எல்லோருக்கும் செல்லம்.. வாப்பாவிடம் செல்லமும், அன்பும் அதிகம்.. அதே போல் உம்மாவும், அண்ணன்மார்களும் அஸ்மாவை உள்ளங்கையில் வைத்து தாங்குவார்கள். 20 கி.மீ தூரம் தள்ளி தினசரி சென்று வரும்வகையில் கல்லூரி என்றபோது உம்மா ரொம்பவே தயங்கினாள். ஆனால் ரசூல் பாய் மஹல்லாவாசிகளின் முதுகுக்கு பின்னான பேச்சுக்களையும் மீறி அவளைக் கல்லூரி அனுப்பி இளங்கலை பட்டம் வாங்க வைத்தார்.

மகன்களுக்கு திருமணம் முடிப்பதற்கு முன்னே மகளுக்கு மணம் முடித்துக் கொடுத்து விட வேண்டும் என்ற சராசரி தகப்பனின் மனம் தான் ரசூல் பாயை பல இடங்களில் அலைந்து மணமகன்களைத் தேட வைத்தது. ஆரம்பம் முதலே அஸ்மாவிற்கு இது பிடிக்கவில்லை. ஒவ்வொரு வரனுக்கு ஒரு காரணம் கூறி தட்டிக் கழித்தாள்.. சென்னையில் இருந்த அண்ணன்காரனும், ஊரில் இருந்த அண்ணன்காரனும் கூட சில நல்ல வரன்களைக் கொண்டு வந்தனர்... வரதட்சணை தரும்/வாங்கும் பழக்கம் இல்லாததால் அப்படியான குடும்பங்களில் இருந்தே அனைத்து வரன்களும் இருந்தன... எல்லாரின் உழைப்பும் அஸ்மாவினால் ஒரு நிமிடத்தில் கலைக்கப்பட்டுக் கொண்டு இருந்தது.

கல்லூரி சென்ற பெண்ணாயிற்றே ஏதும் காதல், கீதல் என்று அகப்பட்டு விட்டாளோ என்று கூட ஜூபைதாவிற்கு சந்தேகம் வந்திருந்தது... ஆனால் அப்படி ஏதுமில்லை என்று அஸ்மா அழுத்தம் திருத்தமாக இருந்தாள்... அஸ்மாவின் தோழிகளிடம் கேட்ட போதும் இதையே தான் சொன்னார்கள். ஒரு கட்டத்தில் அஸ்மா அல்லாஹ்வின் மீதே சத்தியமிட்டும் கூறி விட்டாள். இதை எல்லாம் ஜூபைதா தன் கணவரிடம் சொல்லி விட்டிருந்தாள்... எந்த குறையும் இல்லாத வரன்களை தட்டிக் கழிப்பதைப் பார்க்க பொறுக்கமாட்டாத ரசூல் பாய் இன்று ஒரு முடிவு தெரிய வேண்டும் என்று தான் காலை டிபனை முடித்தவுடன் பிரச்சினையை ஆரம்பித்தார்.

வாப்பாவை எதிர்த்துப் பேசி பழக்கமே இல்லாத அஸ்மாவே “நிக்காஹ்வும் வேணா... ஒரு மண்ணும் வேணா “ என்றதும் கோபம் எல்லை மீறி சென்று விட்டது ரசூல் பாய்க்கு... அருமை மகளை அடித்து விட்டு கடைக்கு சென்று விட்டார். சின்ன அண்ணன் அய்யூபும் உம்மாவிடம் “ஏதா இருந்தாலும் இன்னைக்கு கேட்டு வைங்க உம்மா... வாப்பா இப்படிக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லை” என்று சொல்லி விட்டு கடைக்கு சென்றான்... அழுது கொண்டு இருந்த அஸ்மாவிற்கும் இது நன்றாகவே கேட்டது.

ஜூபைதாவால் மகள் அழுவதைக் கண்டு சும்மா இருக்க இயலவில்லை.. அழுதவளை தேறுதல் சொல்ல அருகில் சென்றது தான் தாமதம்.. அஸ்மா உடைந்து கதறி அழ ஆரம்பித்து விட்டாள்.. உம்மாவின் மடியில் படுத்துக் கொண்டு ரொம்ப நேரம் அழுதாள்... ஜூபைதாவும் மகளின் அதிர்ச்சி குறையட்டும் என்று சிறிது நேரம் தலையை தடவிக் கொடுத்துக் கொண்டு இருந்தாள்.

சிறிது ஆசுவாசம் அடைந்த அஸ்மா மெல்ல
“உம்மா, எனக்கு பயமா இருக்கும்மா”
“அடி.. பயப்படாதே.. என்றைக்கா இருந்தாலும் பொண்ணுன்னா நிக்காஹ் பண்ணித் தான் ஆகனும்”

“அது நிக்காஹ் பண்ணினா மாப்பிள்ளையோட இருக்க வேண்டி இருக்குமே?”

“அதுவா உன் பிரச்சினை... உங்க வாப்பாவை நிக்காஹ் முடிக்கும் போது 16 வயசு தான்... நானெல்லாம் நல்லா தானே இருக்கேன்.. இப்பமே உனக்கு 22 ஆச்சு.. ஒண்ணும் ஆகாதும்மா... நிக்காஹ் ஆகி கொஞ்ச நாள் ஆச்சுன்னா எல்லாப் பிரச்சினைகளும் தீர்ந்துடும்மா”


“அதில்லை உம்மா... எனக்கு கொஞ்ச நாளாவே மாரில் ஒரு மாதிரி வலி இருக்கு.. அதோட சின்னதா கட்டிக இருக்க மாதிரி இருக்கு... என்னோட பிரண்ட்ஸ்க கிட்ட கேட்டா இதெல்லாம் ஒண்ணுமில்லைன்னு சொல்றாளுக... அங்க அழுத்தினா லேசா வலி இருக்கு”

“யா அல்லாஹ்.. ” என்று அதிர்ச்சியுடன் மடியில் இருந்து மகளை இறக்கு விட்ட ஜூபைதா... “இதெல்லாம் நீ முன்னமே சொல்றது இல்லியா... இந்த மாதிரி பிரச்சினைகள் வந்தா உடனே உம்மாகிட்ட சொல்லிடனும்ல... இது மாதிரி தான் இருந்த எங்க உம்மாவோட பெரிய லாத்தா அதை அப்படியே விட்டுட்டாங்க... அப்புறம் அதுனாலயே வபாத்தாயிட்டாங்கன்னு எங்க உம்மா சொல்லி இருக்காங்க.. நாளைக்கே டாக்டரைப் போய் பார்க்கலாம்”

அடுத்த சில நாட்களில் எல்லாம் வேகமாக நடந்தது. சென்னையில் இருந்த பைசல் தனது டாக்டர் நண்பனை அணுகி இது குறித்து விசாரிக்க.. உடனே எல்லாரும் சென்னை விரைந்தனர். அனைத்து சோதனைகளுக்கும் பிறகு இது புற்று நோயின் ஆரம்ப அறிகுறி எனத் தெரிய வந்தது. தேவையான சிகிச்சைகளுக்குப் பிறகு அடுத்த சில மாதங்களில் அஸ்மா முழுவதுமாக குணமாகி இருந்தாள்.. பைசலின் டாக்டர் நண்பனே அஸ்மாவை நிகாஹ் முடித்துக் கொள்வதாக ரசூல் பாயிலிடம் கூற, நிக்காஹ்வும் சிறப்பாக நடைபெற்றது..

அதோ கையில் சாப்பாட்டு பாத்திரத்துடன் ”ஓடாதே.. ஒழுங்கா சொல்றதைக் கேட்கனும்.. இல்லைன்னா பிச்சிப் போடுவேன்” என்று கத்திக் கொண்டு தன் 3 வயது மகனை விரட்டிக் கொண்டு இருக்கிறாளே அவள் தான் அஸ்மா என்பது தெரிகின்றதா? நிக்காஹ்குக்குப் பிறகு சந்தோசத்தில் ஒரு சுற்று பெருத்து விட்ட அஸ்மாவை நமக்கு அடையாளம் தெரியாமல் போனதில் தவறேதுமில்லை.

நேசம் - யுடான்ஸ் புற்றுநோய் விழிப்புணர்வு போட்டிக்காக எழுதப்பட்டது. கால அவகாசம் முடிந்து விட்ட பிறகு வெளியிடப்படுகின்றது.

அன்புடன்
தமிழ் பிரியன்