Wednesday, July 2, 2008

மீண்டும் மீண்டும் மரிக்கிறேன் !!!!

.


பாலையாய் இருந்த

பாதையில் சருகுகள்

விரிப்பாக...

விரைவாக நடக்கிறேன்...


உறவுகள் சுமையென

உதறும் மனிதர்கள் போல

இலைகள் சுமையென

இறக்கிய மரங்கள்

வெறுமையாய் நின்று

வெய்யிலை உணர்த்த ...


கண்ணீர் இன்றி வறண்ட கண்களும்

தண்ணீர் இன்றி வறண்ட நிலங்களும்

ஒன்றை ஒன்று ஒப்பீடு செய்ய ...


உயிரின் கடைசி துளி

ஈரப்பதத்தில்

இழுத்துக் கொண்டிருந்த

ஒரு உயிர்...

உயிர்த்தது

உன்னை கண்டு

உலகமே சோலையானது

உயிர் வசமானது


மரங்கள் பூத்தது

மனமும் குளிர்ந்து

மரணமும் இனித்தது

ஆம் உனது மடியில்

மரணம் கூட இனிக்கும்.


ஒவ்வொரு முறையும்

உன் மடியில் சாய்வதர்க்க்காகவே

மீண்டும் மீண்டும் மரிக்கிறேன் !

கவிதை எழுதியவருக்கு நன்றிகள்